உடனடிச்செய்திகள்

Friday, December 25, 2009

இந்தியத் தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் - இவ்வாண்டின் முக்கிய சம்பவமாய் ஆனந்த விகடனில்...




ஈழத்தமிழர் மீது இனவொழிப்புப் போரை தொடுத்த இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவளித்து, பண உதவியும் ஆள் உதவியும் செய்த இந்திய அரசைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் இணைந்து “இந்திய - இலங்கை தேசியக் கொடிகள் எரிப்புப் போராட்ட”த்தை மே 25 2009 அன்று நடத்தியது.


சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சை, ஓசூர் ஆகிய முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பலரும் கைது செய்யப்பட்டனர்.


கோவையில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பா.தமிழரசன்(த.தே.பொ.க.), வே.பாரதி (த.தே.வி.இ.) உள்ளிட்ட தோழர்கள் 200 நாட்களுக்கும் மேலாக கோவை நடுவண் சிறையில் சிறைவைக்கப்பட்டு கடந்த மாதம் தான் விடுதலையாயினர்.


கடந்த ஆண்டு நடந்த 50 முக்கிய சம்பங்களில் இப்போராட்டமும் ஓர் முக்கிய சம்பவமாக “ஆனந்த விகடன்” வார இதழ் வெளியிட்டுள்ளது. அச்செய்தி வருமாறு:


Wednesday, December 23, 2009

மாவீரன் முத்துக்குமார் நினைவு நாளும் நம் கடமையும் - த.தே.பொ.க. அறிக்கை!

மாவீரன் முத்துக்குமார் கடந்த ஆண்டு, 2009 சனவரி 29ஆம் நாள் தமிழீழ மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தித் தீக்குளித்து மாவீரரானார். அவர் நினைவைப் போற்றும் வகையிலும் அவர் அளித்த இறுதி அறிக்கையின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதியெடுக்கும் வகையிலும் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை 2010 சனவரி 28, 29, 30, 31 ஆகிய நாட்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகமெங்கும் வீரவணக்கச் சூளுரை நாளாகக் கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கிறது.
இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழகத்தை ஆக்கிரமித்துள்ள மார்வாடி குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் மற்றும் வடவர்கள் உள்ளிட்ட வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ் ஈழம் அமைய துணை நிற்போம்! தமிழ்த் தேசக் குடியரசு அமைய தமிழ்த் தேசியப் புரட்சியை முன்னெடுப்போம்!
- ஆகிய சூளுரைகள் ஏற்கும் வகையில் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு நடத்தப்படும் நிகழ்வுகளில் கீழ்க்கண்ட வாசகங்களை முழக்கங்களாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

’’தமிழினத்தின் இருள் நீக்கத்
தன்னையே சுடராக்கி தீக்குளித்த முத்துக்குமார்
உன்னை வணங்குகிறோம்
திலீபனும் மில்லரும் சேர்ந்து உருவான
செல்வனே வீரவணக்கம்!

இந்தி ஆதிக்கத்தின் இருளகற்ற
செந்தீ மூட்டி உயிரீந்த
சின்னச் சாமியின் எச்சமே வீரவணக்கம்!

உன்னைப் பின்பற்றி
உடலை நெருப்பிற்குத் தந்த
பதினைந்து தமிழர்க்கும் வீரவணக்கம்

மாற்று அரசியலைக் கட்டுங்கள்
ஓட்டு அரசியலை ஓட்டுங்கள் என்று
மாணவர்க்கும் இளைஞர்க்கும்
வழிகாட்டிய விடிவெள்ளி விடிவெள்ளியே
வீரவணக்கம்!

சேட்டென்றும் சேட்டானென்றும்
வந்தவனெல்லாம் தமிழகத்தைச் சுரண்ட
சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது என்றாய்

உன் நினவு நாளில்
வெளியாரை வெளியேற்ற சூளுரைக்கிறோம்!

ஈழம் வெல்லவும்
இங்கு தமிழ்த் தேசம் மலரவும்
எங்களை ஒப்படைக்கிறோம்!

இந்தியாவும் சிங்களமும் தமிழினத்தின்
இரட்டைப் பகையென அறிந்து கொண்டோம்

உங்களை எரித்த நெருப்பு
எங்கள் பகையை எரிக்கட்டும்
எங்கள் மன அழுக்குகளை எரிக்கட்டும்
சாதி வெறி, மத வெறி மாசுகளை எரிக்கட்டும்

நெருப்புப் போராளிகளே
உங்களுக்கு எங்கள் நினைவு மலர்கள்!
வெல்க தமிழ்த் தேசியம்!’’

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT