Thursday, October 23, 2008
தஞ்சையில் ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
Thursday, October 16, 2008
ஈரோட்டில் இந்து நாளேடு தீவைத்து எரிப்பு - செய்தி
Tuesday, October 14, 2008
ஈரோட்டில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg94BsHyaTNArtVlvlWRuLLMR9eUXNF8ttmrudauz8O_lCDBPyDQhn3BqK3UsZua_e1n9qBmaCpRuij_8bU1lXMWZnCS3b0i1OVbkjgVmYtFcOcsLxqKESUO7MwwfVPTyYD3uLKvQJ_nRlP/s320/14_001.jpg)
ஈரோடு, 14-10-௨00௮
ஈரோட்டில் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி தலைமை தபால் நிலையம் முன்பு வந்தடைந்தனர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் மோகன்குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இவ்வார்ப்பாட்டத்தில் தோழர் கணேசமூர்த்தி (ம.தி.மு.க), தோழர் இராம.இளங்கோவன்((பெரியார் திராவிடர் கழகம்) தலைமைக்கழக உறுப்பினர்), தோழர் சா.அர.மணிபாரதி( தமிழ்த் தேச பொதுவுடைமைக்கட்சி), தோழர் சேதுபதி (விடுதலைச்சிறுத்தைகள் ஈரோடு மாவட்ட செயலாளர்), தோழர் புலிப்பாண்டியன் (சாதி ஒழிப்பு பொதுவுடமை முன்னணி), தோழர் கலைவேந்தன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), தோழர் விஜயகுமார் (தமிழக தொழிலாளர் முன்னணி), தோழர் பொன்னுச்சாமி (ஆதித்தமிழர் பேரவை) ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் பொழுது கொட்டும் மழையினை பொருட்படுத்தாமல் தோழர்கள் அனைவரும் கட்டுப்பாடோடு கொட்டும் மழையின் வேகத்தை விட அதிகமாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமழையிட்டனர். இரவு 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMglWzE5tmf_BBmvpS2iq4hsDrN89MS5JE_rvWG7Oe0XwiF0DQsGFaLf8kQOfJqgVAWpSNuterQqV3vDONRRmVTMYnWShekE_VtMCpPcb3b48cVh7B4GrHIJgApctPiZV7cdDUfuzCilQX/s320/14_002.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW4kGAAdIECO4_L6Uw0G6UzPOnHXlFvhpSZV6qk41r5uYNF6hub3oAZs0ckYj27Yn0bwhU5NWYWA2cFwKlgX7QB-DFa3iVpqr8akcvdA9rCJC2sxR26xw-lUbzHgNVHZhf2C6EFnntp4Wn/s320/14_003.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjChB217cpBCmfirOJg6xhsg2FbPQuojAlqnc_6C9aROoM6HA0mgR17NEWRfu4F_cJnLHTcFNhRqJuVyl3u_yc4Kmdw3qcNHfUhb-VDL2homVx5qZryWS-ZEmdVW4bYEQ60I715HilcSioG/s320/14_004.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhNav8bjQFmv4hA03IXdF37Sj0E3xdNBZvmW7uAhRNAHSQJdM7pGoZCgTyLMf08lGHM3A-1jenDXQDnL5DnWq0wn4KQmd0VxeqEIqewaDUtBbq_EFIeI_P1u6nWN282lFKlXvk3vEZpioV/s320/14_005.jpg)
இப்போராட்டத்தினை பெரியார் திராவிடர் கழகம் , தமிழர் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போன்ற அமைப்புகள் ஈரோட்டில் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 100க்கும் மேற்ப்பட்ட தமிழ் உணர்வாளர்களும் இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
சேலத்தில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம், 14-௧0-2008
சிங்கள அரசிற்கு உதவி வரும் நயவஞ்சக இந்திய அரசைக் கண்டித்து சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிங்கள பங்காளி தமிழன் பகையாளியா? என்ற கேள்வியோடு நேற்று 13-10-2008 அன்று இந்திய அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் பங்கேற்க மாபெரும் பேரணியும் ஆர்ப்பாட்டமும் சேலத்தில் நடைபெற்றது.
இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்வதை உடனே நிறுத்தக் கோரியும், கொடுத்த படைக் கருவிகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழீழம் மலரட்டும், ஈழத் தமிழர்களுக்கு துணை நிற்போம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcXK8hA7n3ID6258kNN17_FeOzjP39QkZ48QQXyR24i6PB_TUg0eS_njmnIm6YuGN6t98kotiS_dJb1wFEGtxRLAN15EK2n7IPp9miiCuK_szQpIvNJAhGfgOqFcdPf4M_QRN-YCdf0I_p/s320/1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJnfgATmkJqGBNMNWqPFiMT7scI1U50jVgzLQuolujhSusYAWQ0f62ajYqvcZYwtr3YxE37G81QQTZE8WOIxcyCYNQK20HrAnlwclPCJ7x-eN6rmW7ujc_Cy0poSYZlxyivFhbBaVLmhHc/s320/3.jpg)
பெண்கள் குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் இயக்கம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், மனித உரிமை பாதுகாப்பு மய்யம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் ஆகிய இயக்கங்களைச் சார்ந்தத் தோழர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
தூத்துக்குடியில் இந்திய அரசைக் கண்டித்து த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 07:21.09 AM GMT +05:30 ]
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpoOF8mzh-xjYUIdbQMZc0qCDrQlkAiKrlfD0kLoS5F1HYyWSW9KsiVzwsrHU11wusUrBpeEkzx6XtteYL7Ha4edMqF7s1WAZvEIWj8ELuh3rb_jkb1kKiyoERt-yv6L8_8H2gOh5yK2Ea/s320/tamilnaduDSC_0009.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகரில் தேரடி திடலில் பெரியார் திராவிடர்கழகத்தின் ஒருங்கிணைப்பில் மாலை 5 மணியளவில் தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
தோழர் மு.தமிழ்மணி தலைமையேற்க தோழர் கி.வெங்கட்ராமன்(த.தே.பொ.க) , தோழர் துரை.அரிமா(தமிழர் தேசிய இயக்கம்) , தோழர் மனோகர் ஆகியோர் மற்றும் தோழர் சத்தியா(த.ஒ.வி.இ) ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையினை பதிவு செய்தனர். பின்னர் பெரியார் திராவிடர் கழக தலைமை கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்திற்கான விளக்கவுரையினை சிறப்பாக மக்களுக்கு எடுத்துக்கூறினார். தோழர் பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றும் பொழுது பெய்த கடும்மழையினைப் பொருட்படுத்தாது தோழர்களும் தமிழின ஆதரவாளர்களும் ஆர்வத்தோடு கேட்டனர். இரவு 7.30 மணியளவில் மழை பெய்துகொண்டிருக்கும் பொழுதே தோழர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடும் முழக்கமிட்டுக்கொண்டு கலைந்து சென்றனர்.
நிகழ்வில் இந்நிகழ்வில் பெரியார் திராவிடர்கழக நகரத்தலைவர் தோழர் கோ.அ.குமார், மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு, பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன்,மாவட்ட துணைச்செய்லாளர் தோழர் க.மதன், நகரச்செயலாளர் பால்.அறிவழகன் , மாணவரணி தோழர்கள் வ.அகரன், தோழர் சி.அமிர்தராசு, பெரியார் தி.க.வின் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வே.பால்ராசு தலைமைக்கழக உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன், நெல்லை இராசா, நெல்லை அரியமுத்து . ஆதித்தமிழர் பேரவையின் தோழர்கள் அருந்ததியரசு, சண்முகவேல் , அ.அன்புசெல்வன் மற்றும் பொதுமக்களும் தமிழின ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
சென்னையில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - படங்கள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF1y9bk9WCtzjuKQ_NIhBhaP4WJPK1KSOJvGXmiOUjAG5gOIMILBddw5w6K6ktxRH04bul9xBN_v9uXPiw09sTW18pTdC-3n-rYqwF1LK_Bm9VH0POBqFVcMrA-KfeZjsossTl5Yi37So3/s320/IMG0206A.jpg)
மாலை நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் சிங்கள அரசுக்கான இந்திய அரசின் உதவிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என ஆதாரங்களுடன் விளக்கினார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஒருங்கிணைத்தார். அவர் பேசுகையில், சிங்கள அரசுக்கு இந்தியா கொடுத்துள்ள இராணுவத் தளவாடங்களை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை முதல் முதலாக முன்வைப்பதாகவும் இக்கோரிக்கையை அனைவரும் உரக்க வலியுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். தமிழ் உணர்வாளரும் தமிழ்த் திரை இயக்குனருமான சீமான் பேசும் போது இந்திய அரசு நாங்கள் கொடுத்த வரிப்பணத்தில் எங்கள் உறவுகளை சுட்டுக் கொல்கிறது என்றால், நாங்கள் இனி இந்திய அரசுக்கு வரிக் கட்டமாட்டோம் என்று கூறினார். பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவிப்பதாக வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புப் பற்றிய தகவலைத் தெரிவித்து, சிங்கள அரசிற்கு உதவும் இந்திய அரசின் பார்ப்பனியச் சார்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9J_sAzviPyDH1E6xART8PQStAax9K37dpRgT4XTuoHMZgvtDMZ4zhOX4QVNVI2G_n9rP8ovOFETxDTCxo5Fl-S0mOAzY_UBBkTuJ8QecNo7qxFDQ8750cRuiZRwa7cIyF4WeU9JQUdHLo/s320/IMG0203A.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmg6lOPuDe8Znl0zZ4VJ6t69x8zYZl9e2N98NQ1doZ7QVwhpmP8aUbq2ChcdZ2W0OPYfcskDLl38GvgN0Jk8BvBB08vZaZhkGgDSbefqI5ynb8wa8srMKcWo7bUyGqoJkQEqDFQs2Q91g9/s320/IMG0204A.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipriDFPDhoZ8UQbAW1pe48QufVDJf8unWFUWfnn7DiD2tf4hV77HSq62kzNGEwAHuOQQr2hXoJCJ0n6PiFO1dxsvkwi_HgKgQe5u5vkJe_BXSTjTCxodwLO4lZhPyT4WMhTIeg_qBEJIZ_/s320/IMG0204A_1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuyFRemOBdK198hoAPrKi4kEJopsQy4JAvgjrnRKjciLwj6KSz0CcJ_FtkS_X72WbUctSmR0DiAovXRdgCjQCXSu1afTvgEKpRPwLbodm-rA1igMTWHh4ipJ-XgNdEWuO4kDUb2LiMKbrt/s320/IMG0207A.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFCzgp6eRBzpB3ynsjR4NN6lwa4KsFSr8yk5xSYx0BOtKFyUcSdsR6TxcqQEVifReRe2g2UzHra8SGtEFYnVBXGzqEmRQS1YYXyh1xx5SBPt5eKP9Ho73jOfJvuBddb5Hk4HlWL7JZr4Mh/s320/IMG0205A.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS78efyu9vjAffmmZYx4cGGaow5nslthfQhGySYh280BP80KhCxeopjvhjTKv05fzWn0wqeG1PVy6HBrGU2CFYearvaa1xuSAy35Dvi8ntbtWDAdpcvgZRislIsxbFebF_qnKgilFAztO2/s320/IMG0208A.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjESKpk5hHhtnvEcmhtiNSjCsCBj3qlMwrpfHeOqu1EYCU-0WPN9MTccpdTOGdurUknQEkd2MTpWa3UCHf5YwexM3SZJaTNhzcQ7fIggQia27DOtDSbi4C_p6hLOsoBTFnUWC_uvllCPqK3/s320/3party1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtsssF0f5Jyd5R22EmreH8LegGa4GBdug_aFBqjES63oetLdlRpm7bIQ-8gd5KILJYdbsG6GwxbWOSECZ-5dIw-ncsN0ot4T3Amfk8TCY8xn4vc7zv3UOayncQ4pSbh7g7MN8FP8R0A3W5/s320/3party6.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpk-77WUmAXF0Ju2Een3rhYfKEb9hbzXNe0pI-Ttznw5xlbfC9auVBHdsF8J4un-lirsN5ueksI1q7lyRZhM1oWPHXjtigbROPj11XyEyUx8PbINsD_FQFxGb7wQIIjo1l8-Vz9ObIdCFF/s320/3party7.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOZVlNztKT9kqTKrzZAFbxhWn1br-2kA2br42abpRRCgBGm6iRDC8urG9bcxWau4QxDtwiDiVdcx13ZpiAFNdoUGZ34F8qGkL39K6jrW0fXp7PJftRhVY9KNw0WEPy9snG-i26uv-bbGNG/s320/3party8.jpg)
இவ்வார்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த சோழன் நம்பியார், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர் எழுத்தாளர் செயப்பிரகாசம், புலவர் புலமைப்பித்தன், ஓவியர் புகழேந்தி, எழுத்தாளர் ஒவியா, கவிஞர் தாமரை, வழக்கறிஞர்கள் அஜிதா, சேசுபாலன்ராஜா, எழுகதிர் இதழ் ஆசிரியர் அரு.கோபாலன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தமிழக மீனவர்கள் வலைகளுடன் குண்டு காயம் பட்டது போன்ற காட்சியை அமைத்து காண்போர் கவனத்தை ஈர்த்தனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
Monday, October 13, 2008
இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - இன்று (13-10-2008)
சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?
இந்திய அரசைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம்
இடம் : மெமோரியல் அரங்கு, சென்னை.
காலம் : இன்று - 13-10-2008, திங்கள், மாலை 4 மணி
இந்திய அரசே...
சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத்தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்கவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்!
ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு, உடை, மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத்தடை போட்டாய்!
இந்திய அரசே..
சிங்களப் படைக்;குப் போர்க்கப்பல், நவீனப்படைக்கருவிகள், ரேடார் கருவிகள், வெடிமருந்துகள் வழங்கியதுடன் பயிற்சி அளிக்கவும் 256 படைத்துறையினரை அனுப்பி உள்ளாய்!
ஈழத்தமிழர்களைக் கொல்வதற்குத் தானே இவை அனைத்தையும் கொடுத்தாய்!
சிங்களன் உனக்குப் பங்காளி; தமிழன் உனக்குப் பகையாளியா?
இப்பொழுது, வன்னிப்பகுதியில் சிங்கள அரசு விமானக்குண்டு வீச்சு நடத்தி அன்றாடம் தமிழர்களை இனப்படுகொலை செய்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும்; உயிர்காக்க வீடுகளை விட்டு வெளியேறி காடுகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
வீறுகொண்டு எழுங்கள்; வீதிக்கு வாருங்கள்;
- 1. சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக்கருவிகள் அனைத்தையும் திரும்பப் பெறு
- 2. சிங்களபடைக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத்துறையினர் அனைவரையும் திரும்ப அழை.
- 3. இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப்படையினர்க்கும காவல்துறையினர்க்கும் பயிற்சி கொடுக்காதே.
- 4. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிங்கள அரசுக்கு அரசியல், பொருளியல், படைவகை உதவி எதுவம் செய்யாதே!
தோழர் பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
பொதுச் செயலாளர்,
தோழர் சி.மகேந்திரன்,
இணைச் செயலாளர்,
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
இவண்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,
Friday, October 10, 2008
இந்திய அரசைக் கண்டித்து த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்
சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?
இந்திய அரசைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம்
இடம் : மெமோரியல் அரங்கு, சென்னை.
காலம் : 13-10-2008, திங்கள், மாலை 4 மணி
இந்திய அரசே...
சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத்தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்கவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்!
ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு, உடை, மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத்தடை போட்டாய்!
இந்திய அரசே.
சிங்களப் படைக்;குப் போர்க்கப்பல், நவீனப்படைக்கருவிகள், ரேடார் கருவிகள், வெடிமருந்துகள் வழங்கியதுடன் பயிற்சி அளிக்கவும் 256 படைத்துறையினரை அனுப்பி உள்ளாய்!
ஈழத்தமிழர்களைக் கொல்வதற்குத் தானே இவை அனைத்தையும் கொடுத்தாய்!
சிங்களன் உனக்குப் பங்காளி; தமிழன் உனக்குப் பகையாளியா?
இப்பொழுது, வன்னிப்பகுதியில் சிங்கள அரசு விமானக்குண்டு வீச்சு நடத்தி அன்றாடம் தமிழர்களை இனப்படுகொலை செய்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும்; உயிர்காக்க வீடுகளை விட்டு வெளியேறி காடுகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
வீறுகொண்டு எழுங்கள்; வீதிக்கு வாருங்கள்;
- 1. சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக்கருவிகள் அனைத்தையும் திரும்பப் பெறு
- 2. சிங்களபடைக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத்துறையினர் அனைவரையும் திரும்ப அழை.
- 3. இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப்படையினர்க்கும காவல்துறையினர்க்கும் பயிற்சி கொடுக்காதே.
- 4. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிங்கள அரசுக்கு அரசியல், பொருளியல், படைவகை உதவி எதுவம் செய்யாதே!
தோழர் பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
பொதுச் செயலாளர்,
தோழர் சி.மகேந்திரன்,
இணைச் செயலாளர்,
இவண்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,
தொடர்புக்கு: 20/7, முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை -17.
பேச : 044 - 24348911