இந்திய - சிங்கள இனப்பகையை முறியடிப்போம்!
இந்திய - சிங்கள இனப்பகையை முறித்தெறிந்து, தமிழ்த்தேசம் - தமிழீழம் தனியரசுகள் வென்றெடுப்போம்!
அனைவருக்கும் தமிழ் வழிக்கல்வி கோருவோம்!
தமிழ்வழிக் கல்வியை அழிக்கும் செயலலிதா அரசின் நடவடிக்கை எதிரான ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க.!
மூவர் உயிர் பறிக்க முனையும் இந்தியத்தின் இனப்பகையை முறியடிப்போம்!
மூவர் உயிர் பறிக்க முனையும் இந்தியத்திற்கு கண்டனம் தெரிவித்து 19.08.2011 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டம்!
தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம்!
சிங்களப் பேரினவாத இலங்கைக் கட்டமைப்பை உடைத்தெறிந்து தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம்!
காவிரி உரிமையை மீட்டெடுப்போம்!
காவிரி - முல்லைப் பெரியாறு - பாலாறு உரிமைகளை மீட்க, தமிழ்த் தேசியக் களம் அமைப்போம்!
கூடங்குளம் - கல்பாக்கம் அணுஉலைகளை இழுத்து மூடுவோம்!
ஆரிய இனவெறியுடன் இந்திய அரசால் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் - கல்பாக்கம் அணுஉலைகளை இழுத்து மூடுவோம்!
தமிழக நரிமணம் பெட்ரோல் தமிழருக்கே!
தமிழக நரிமணம் பெட்ரோலை தமிழகத்திற்கே வழங்கக் கோரி, 29.05.2012 அன்று தமிழகமெங்கும் த.தே.பொ.க. நடத்திய ஆர்ப்பாட்டம்!
தர்மபுரி சாதிய வன்கொமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க.!
தர்மபுரி சாதிய வன்கொமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் தோழர் பெ.மணியரசன்!
அடியக்கமங்கலம் பெட்ரோல் கிணறு முற்றுகைப் போராட்டம்!
த.தே.பொ.க. அங்கம் வகிக்கும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 26.02.2013 அன்று நடைபெற்ற போராட்டம்!
டாஸமாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம்!
தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் 04.01.2013 அன்று டாஸ்மாக் கடைகள் முற்றுகையிடப்பட்டன!
வெளியாருக்கு வாக்காளர் அட்டை வழங்கக்கூடாதென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடதென வலியுறுத்திப் போராட்டம்!
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக 19.09.2011 அன்று சென்னையில் த.தே.பொ.க. நடத்திய ஆர்ப்பாட்டம்!
Monday, June 17, 2013
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாடடம்!
Saturday, June 15, 2013
“கோபுரம் சாய்ந்தது” - இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு தோழர் பெ.மணியரசன் வீரவணக்கம்!
Wednesday, June 12, 2013
“காவிரி உரிமை மீட்க தமிழக அரசு காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!
"காவிரி உரிமை மீட்க தமிழக அரசு காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்"
தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டத்தில் திரு. கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்.
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை 10.30 க்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் திரு, சி. ஆறுமுகம் தலைமையேற்றார்.
காவிரி நீரை மறுத்துவரும் கர்நாடக அரசுக்கு எதிராகவும், காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்ககள் எழுப்பப்பட்டது. தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட தலைவர் திரு அ.கோ.சிவராமன், முன்னிலை வகித்தார். பொறுப்பாளர்கள், திரு தங்க.கென்னடி, பொறியாளர் என்.ஜெயபாலன் , கோ.பொன்னுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாக தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு, கி. வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி பேசினார். அப்போது அவர், "தமிழகத்துக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. உலக ஆற்று நீர் சட்டங்களையோ நீதிகளையோ, நீதிமன்ற உத்தரவுகளையோ மதிக்காத கர்நாடக அரசின் அடாவடித்தனத்துக்கு இந்திய அரசு துணை நிற்கிறது. தமிழகத்துக்குரிய காவிரி நீரை இழந்து தமிழக உழவர்கள் கையறு நிலையில் உள்ளனர். தொடர்ந்து காவிரி நீரின்றி நிலத்தடி நீர் குறைந்து வருவதால் காவிரி மாவட்ட மக்களின் குடிநீரும் கேள்விக்குறியாய் உள்ளது.
இந்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி அணைகளின் நீர் நிர்வாகப் பொறுப்பை அதனிடம் ஒப்படைத்து, தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க தனது சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கு மன்றம் செல்வதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. உடனடியாக தமிழகத்தில் அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்தக் கருத்தை உருவாக்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். முதலமைச்சரே முன் முயற்சி எடுத்து காவிரி எழுச்சி நாள் அறிவித்து உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டும் "என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக திரு,அ.மதிவாணன் நன்றி கூறினார்.
Sunday, June 9, 2013
அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றாதே என வலியுறுத்தி 17.07.2013 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்!
Tuesday, May 28, 2013
தமிழ்வழிக் கல்விக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய 300க்கு மேற்பட்டோர் சென்னையில் கைது!
சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன்பு காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை எதிரொலித்தனர்.
Thursday, May 23, 2013
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!





















































