உடனடிச்செய்திகள்

Tuesday, February 20, 2018

பிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர் தற்காப்பு அரசியல்” பொதுக்கூட்டம்!

பிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர் தற்காப்பு அரசியல்” பொதுக்கூட்டம்!
இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையறுப்புகளோடு முன்வைக்கப்பட்டது. 

அம்மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய திசைவழியைக் காட்டியது!

அந்நாளை “தமிழ்த் தேசிய நாள்” என ஒவ்வொரு ஆண்டும் பேரியக்கக் கொடியேற்றம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளின் வழியே கடைபிடித்து வருகின்றோம்.
இன்று, தமிழ்நாட்டு அடிப்படை அரசியலின் நிகழ்ச்சி நிரலை முன் வைப்பதாக “தமிழ்த்தேசியம்” வளர்ந்து வரும் சூழலில், வரும் 25.02.2018 அன்று தமிழ்த்தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வுகளும், சிறப்புப் பொதுக் கூட்டங்களும் “தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளன.
காவிரி உரிமை மறுப்பு, வெளியார் திணிப்பு, அணுஉலை - மீத்தேன் - நியூட்ரினோ - கெயில் - சாகர் மாலா - நீட் திட்டங்கள் திணிப்பு என பறிக்கப்பட்டுக் கொண்டுள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் குறித்து பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஜி.ஆர். நகரில், வரும் ஞாயிறு (25.02.2018) மாலை 5.30 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் உள்ளிட்டொர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், தமிழ்த்தேசிய ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Monday, February 19, 2018

காவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையில் விடுதலை!

காவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையில் விடுதலை!
தமிழினத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள அநீதித் தீர்ப்பு, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆங்காங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன.


தீர்ப்பு வெளியான 16.02.2018 அன்று, தீர்ப்பைக் கண்டு கொதித்துப்போன தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், தருமபுரி இந்திய அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், காவிரித் தீர்ப்பு நகலை எரித்ததாகக் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய தருமபுரி த.தே.பே. செயலாளர் தோழர் க. விசயன், தோழர் ஜெ. முருகேசன் ஆகியோரை, 16.02.2018 அன்று நள்ளிரவு வீடு தேடிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

நள்ளிரவு 11.30 மணியளவில் தோழர் விசயன் வீட்டுக் கதவு சாத்தப்பட்டிருந்த நிலையில், அவரைக் கைது செய்யச் சென்ற தருமபுரி பி-1- காவல் நிலைய ஆய்வாளர் திரு. இரத்தினக்குமார் வீட்டிற்குள் சுவரேறி குதித்தார். தம்மைக் காவல்துறையினர் கைது செய்ய வந்திருப்பது தெரிந்து தோழர் விசயன் வழக்கறிஞருக்குக் கைப்பேசி வழியே தகவல் சொல்வதைப் பார்த்தவுடன், இரத்தினக்குமார் கதவை வேகமாகத் தட்டிக் கூச்சலிட்டுள்ளார். அதன்பிறகே தோழர் விசயனையும், காரிமங்கலத்திலிருந்த தோழர் ஜெ. முருகேசனையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 147, 188, 290, 293, 285 ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பி-1- காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து விடியற்காலை 5.30 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார். பின்னர், தோழர்கள் இருவரையும் தருமபுரி மாவட்ட குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜீவா பாண்டியன் அவர்கள் முன் காவல்துறையினர் நேர் நிறுத்தியபோது, தோழர்கள் இருவரையும் சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார். காவல்துறையினர் மீண்டும் மீண்டும் என நான்கு முறைக் கோரிய போதும் சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார்.
காவல்துறையினர் மிகவும் நெருக்கடி கொடுக்கவே, தோழர்கள் இருவருக்கும் நீதிபதி அவர்கள் அங்கேயே பிணை வழங்கியதோடு பிணை தாரர்களை திங்கள்கிழமை (19.02.2018) நேர் நிறுத்தும்வரை சிறையில் வைத்திருக்கும்படி ஆணையிட்டார். இதனையடுத்து, தோழர்கள் இருவரும் தருமபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்று (19.02.2018), வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் இருந்த நிலையில், தோழர் விசயனின் மனைவியும், தோழர் ஜெ. முருகேசனின் தம்பியும் நீதிபதியிடம் தாங்களே முறையிட்டு, பிணைதாரர்களையும் நேர் நிறுத்தி தோழர்களை பிணையில் விடுவதற்கான ஆணையைப் பெற்றனர். பா.ம.க. வழக்கறிஞர் வேல்முருகன் இதற்கான உதவிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்தார்.
இதனையடுத்து, இன்று மாலை தருமபுரி கிளைச் சிறையிலிருந்து விடுதலையான தோழர்கள் விசயன் - ஜெ. முருகேசன் ஆகியோரை எழுச்சி முழக்கங்களுடன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் வரவேற்று, மலர் மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, ஐயா தங்கவேலு, தோழர்கள் கோ. பிரகாசம், கனகராசு, வனமூர்த்தி, தங்கவேலு சங்கர் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு முறையும் கர்நாடகத்தில் காவிரிக்கானப் போராட்டங்கள் நடக்கும் போது, தமிழ்நாட்டு முதல்வர் படத்தையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் படத்தையும், தீர்ப்புகளையும், ஆணைகளையும், பொதுச் சொத்துகளையும், தமிழர்களின் நிறுவனங்களையும், தமிழர்களின் பேருந்துகளையும் கன்னட இனவெறியர்கள் எரித்துப்போராடுகின்றனர். அம்மாநிலக் காவல்துறையினர், அவர்கள் அருகில்கூட வருவதில்லை! ஆனால், தமிழ்நாட்டிலோ தமிழர் உரிமைக்காகப் போராடுவோரை நள்ளிரவில் வீடு தேடிச் சென்று தமிழகக் காவல்துறையினரே கைது செய்த செயல், தமிழின உணர்வாளர்களிடம் கடும் கண்டனத்தை எழுப்பியது. சமூக வலைத்தளங்களில் இக்கைது நடவடிக்கையைப் பலரும் கண்டித்து எழுதினர். அவர்கள் அனைவருக்கும் எமது நன்றி!
காவிரி உரிமை மீட்புக்கான நமது போராட்டம் இன்னும் வீரியமாகத் தொடரும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Sunday, February 18, 2018

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இன்று (17.02.2018), காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று மாலை புதுச்சேரியில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு - புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளருமான தோழர் இரா. வேல்சாமி தலைமையேற்றார்.

உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கத் தலைவர் திரு. த. இரமேசு, தமிழர் தேசிய முன்னணி புதுச்சேரி தலைவர் ஐயா இளமுருகன், தமிழ் தமிழர் இயக்கப் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேசு, யாவரும் கேளிர் அறக்கட்டளை திரு. ஏ. கேசவன், தை நிமிர்வு அன்புநிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசுக்கு எதிராகவும், தமிழர் உரிமையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, February 17, 2018

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இன்று (17.02.2018), காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று மாலை கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் கு. மாசிலாமணி தலைமையில் நடந்த போராட்டத்தில், மாந்த நேயப் பேரவை தோழர் பெ.ச. பஞ்சநாதன், அப்துல் கலாம் இலட்சிய பேரவை திரு. சிவத்திருநாதன், திரு. பாண்டியன், தமிழக உழவர் முன்னணி தோழர் மு. இராமகிருட்டிணன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி தோழர் தி.ஞானப்பிரகாசம், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அ.ரா.கனகசபை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிறைவாக துறையூர் கிளை தோழர் தே.இளநிலா நன்றி கூறினார்.
இந்திய அரசுக்கு எதிராகவும், தமிழர் உரிமையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! தமிழ்நாடு அரசுக்கு - தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! தமிழ்நாடு அரசுக்கு - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகிய மூன்று பேரையும் கொண்ட அமர்வு, தமிழ்நாடு – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நடுநிலையைக் கடைபிடிக்கவில்லை!

கர்நாடகத்தின் நீர்த் தேவை அதிகமென்று பலவாறாக வர்ணிக்கும் தீர்ப்புரை, தமிழ்நாட்டின் நீர்த் தேவை பற்றி கண்டுகொள்ளவே இல்லை! எடுத்துக்காட்டாக, பெங்களூரு நகரத்தின் மூன்றில் ஒரு பகுதிதான் காவிரிப்படுகையில் வருகிறது, அந்தப் பகுதிக்கு மட்டும் காவிரி நீரை வழங்குவதே சரி என்று காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதி முடிவில் கூறியுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் முழு பெங்களூருவுக்கும் காவிரித் தண்ணீர் தேவை என்றும், பெங்களூரு உலக நகரம் என்றும் கூறி, அதற்கான கூடுதல் தண்ணீரை தமிழ்நாட்டிற்குரிய 192 ஆ.மி.க.விலிருந்து 14.75 ஆ.மி.க.வை எடுத்து வழங்கியிருக்கிறது!

இந்த 14.75 ஆ.மி.க.வில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் கிடைக்கக் கூடிய 20 ஆ.மி.க. நிலத்தடி நீரிலிருந்து 10 ஆ.மி.க.வை எடுத்துக் கொடுக்கிறோம் என்று தீர்ப்புரை கூறுகிறது. அந்த 10 ஆ.மி.க.வையும் கர்நாடகம் தர வேண்டிய 192இல் கழித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. அத்துடன், பெங்களூரு “உலக நகரம்” என்று கூறி, மேலும் 4.75 ஆ.மி.க. தண்ணீரை தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் தர வேண்டிய நீரிலிருந்து கொடுக்கிறது.

பெங்களூரு நகரத்திற்கு கூடுதலாகத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ள 270 ஆ.மி.க.விலிருந்து ஏன் எடுக்கவில்லை? பெங்களூருவைவிட தொழில் துறையிலும், மக்கள் தொகையிலும் பெரிய நகரமாகவும், பன்னாட்டுத் தொழிலகங்கள் நிறைந்த நகரமாகவும் சென்னை இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை மாநகருக்குக் குடிநீரைக் கூடுதலாக ஒதுக்க உச்ச நீதிமன்றம் அக்கறைப்படாதது ஏன்?

அடுத்து, தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972ஆம் ஆண்டு UNDP என்ற ஐ.நா. நிறுவனம் கொடுத்த கணக்கையும், அதன் பின்னர் 1980இல் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது! பாகுபாடான அணுகுமுறை!

உண்மையில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் 1972 – 80க்குப் பிறகு, இன்றைய நிலையில் நிலத்தடி நீர் பல பகுதிகளில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயன்படாத உப்பாகிவிட்டது. கர்நாடகம் காவிரியைத் தடுத்துவிட்ட நிலையில், தொடர்ந்து நிலத்தடி நீரை எடுத்து சாகுபடி செய்ததால் நிலத்தடி நீரின் ஆழம், பல நூறு அடிகளுக்குக் கீழே போய்க் கொண்டே இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட வழக்கு என்பது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) சிக்கல்தானே தவிர, காவிரிப்படுகை நிலத்தடி நீரைப் (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான சிக்கல் அல்ல!

இவ்வழக்கில், இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செய்த வஞ்சக வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல! எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6A – தண்ணீர்த் தீர்ப்பாயம், தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த – அதற்குரிய தனிப் பொறியமைவை (SCHEME) நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் “May” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், “அமைக்கலாம்” என்ற பொருள் தருவதால், அதை மாற்றி “அமைக்க வேண்டும்” எனப் பொருள் தரும் ‘Shall’ போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் (Sollicitor General) இரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், “மே” அப்படியே இருக்கட்டும், நடுவண் அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இது தீர்ப்புரையில் வந்துள்ளது.

இதிலிருந்து இந்திய அரசின் – பா.ச.க.வின் மோடி அரசின் தமிழ்நாட்டிற்கெதிரான வஞ்சக நெஞ்சம் தெரிய வருகிறது! ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வு, பொறியமைவு அமைப்பது கட்டாயம் என்ற வகையில் தனது தீர்ப்பில் ‘Shall’ போட்டுள்ளது.

அதே வேளை உச்ச நீதிமன்றம், இன்னொரு குழப்பத்தை வைத்துள்ளது! காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன், அதற்கான அதிகாரக் கட்டமைப்பு, தலைமை, உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணி போன்றவற்றை வரையறுத்துக் கூறியுள்ளது தீர்ப்பாயம்! எனவே, உச்ச நீதிமன்ற அமர்வு இந்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றுதான் குறிப்பாகக் கூறியிருக்க வேண்டும்!

அதைவிடுத்து, ஒரு பொறியமைவு (A SCHEME) அமைக்க வேண்டுமென்று, பொத்தாம் பொதுவில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஏன்? இதைப் பயன்படுத்தி, இந்திய அரசு பல் இல்லாத – அதாவது அதிகாரமில்லாத காவிரிப் பொறியமைவு ஒன்றை அமைக்கும் அபாயம் இருக்கிறது! இந்தக் குழப்பத்தை உச்ச நீதிமன்றம் உருவாக்கி இருப்பது ஏன்?

காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கோ - கர்நாடகத்திற்கோ சொந்தமில்லை, அது “இந்தியத்தேசிய சொத்து” என்று தீர்ப்புரையில் கூறியதன் மர்மம் என்ன? காவிரி ஆறு, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உரிமையுள்ள ஆறு! இந்த உரிமை இருப்பதால்தான், தண்ணீர்ப் பகிர்வு அளவுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டு அதைத் தீர்த்து வைக்க நீதித்துறையை நான்கு மாநிலங்களும் நாடியுள்ளன. 
ஹெல்சிங்கி உடன்பாட்டின்படி, ஓடிவரும் ஆற்று நீரில் மரபுரிமை அடிப்படையிலான நீர் உரிமை, நாடுகளின் எல்லை கடந்து இருக்கிறது. அதன் பெயர் தண்ணீர் மரபுரிமை (Riparian Right). இந்த உரிமையை இந்த நான்கு மாநிலங்களிலிருந்தும் பறிக்கின்ற வகையில், காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை – “தேசிய சொத்து” என்கிறது. இதன் பொருள், காவிரி – இந்திய அரசின் சொத்து என்பதாகும்! அதாவது, மாநில அதிகாரப்பட்டியில் உள்ள காவிரியை – இந்திய அரசு அதிகாரப்பட்டியலில் உச்ச நீதிமன்றம் சேர்ப்பதாகும்.

உச்ச நீதிமன்ற தீபக் மிஸ்ரா அமர்வுக்கு இந்த கருத்து இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தீர்ப்புரையில், திரும்பத் திரும்ப இந்திய அரசின் “தேசிய நீர்க் கொள்கை” என்ற பழைய சட்டத்தையும் புதிய வரைவையும் கூறுகிறது. “தேசிய நீர்க் கொள்கை” என்பது, ஆறுகளை மாநில அரசுகளிடமிருந்து பிடுங்கி இந்திய அரசின் கையில் வைத்துக் கொண்டு, அவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவது என்பதுதான்! உழவர்கள் பாசனத்திற்கோ, மக்கள் குடிநீருக்கோ அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டுமெனில் “மீட்டர்” பொருத்தி, அந்த அளவுக்குக் கட்டணம் செலுத்தும் முறை என்பதுதான் “தேசிய நீர்க் கொள்கை”!

புதிய வரைவு நிலையில் 2012இலிருந்து இருக்கும் “தேசிய நீர்க் கொள்கை”யை உச்ச நீதிமன்ற அமர்வு, சட்டம்போல் எடுத்துக் கொண்டு அதை முதன்மைப்படுத்தி தீர்ப்புரையில் கூறுவதன் மர்மம் இதுதான்!

எந்த வகையில் பார்த்தாலும், காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது! மனச்சான்று அற்றது! கட்டப்பஞ்சாயத்துத் தன்மையுள்ளது! கடைசியில், பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காவிரியை ஒப்படைக்கும் தன்மையுள்ளது! எனவே, இந்த இழப்புகளிலிருந்து தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க காவிரி வழக்கை – ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மேல் முறையீடாக நாம் இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை! ஒன்றிய அரசு அதிகாரப்பட்டியல், மாநில அரசு அதிகாரப் பட்டியல், பொது அதிகாரப் பட்டியல் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. எனவே, இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிக்கலாக உள்ளது. மேலும், தகுந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு கலந்தாய்வு செய்து, காவிரி வழக்கை விசாரித்துத் தீர்ப்புரைக்க உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வை (Constitutional Bench) உருவாக்கித் தருமாறு தமிழ்நாடு அரசு, இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை உரியவாறு அணுக வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அதேவேளை, அரசமைப்பு அமர்வு தீர்ப்பளிக்கும் வரை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்திடுமாறு இந்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

அங்கும் இங்கும்!

அங்கும் இங்கும்!
காவிரி உரிமைப் போராட்டம் நடத்தியதற்காக தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதா? உண்மை என்ன?
காவிரி குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென ஆணையிட்டிருப்பதாக சில விவசாய சங்கத் தலைவர்களும், சில ஊடகங்களும் பொய்யாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

சென்னையில் இன்று காலை நடந்த காவிரி உரிமைப் போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன், உண்மை என்ன என்பதை விளக்கினார்.

காவிரித் தீர்ப்பின் 457ஆவது பக்கத்திலுள்ள 403ஆவது பத்தியில், தெளிவாகக் காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடாமல் - ஆறு வாரங்களுக்குள் ஒரு திட்டம் ( A SCHEME) நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதையும், அதையே, தமிழக முதல்வர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையின் பக்கம் 11இல் உறுதிப்படுத்தியுள்ளதையும் தோழர் பெ.மணியரசன் அம்பலப்படுத்தினார்.

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் இந்திய அரசு, அதிகாரமில்லாத ஒரு மன்றத்தை ஏற்படுத்திவிட்டு, ஒரு போலித் திட்டத்தை முன்வைத்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாகத் காவிரித் தண்ணீர் கிடைக்காமலிருக்க முயற்சிக்கலாம் என்றும் அவர் ஐயம் வெளியிட்டார். தெரிந்தோ தெரியாமலோ தீர்ப்பை மொட்டையாக வரவேற்பது இனத்துரோகம் என்றார்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

பறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்!

பறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்!

 காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.



இன்று (17.02.2018), சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன், அகில உலக வள்ளலார் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் திரு. அண்ணாதுரை, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, மாணவர்கள் இலயோலா மணி, பார்வைதாசன், செம்பியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இன்று மாலை கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது!

காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்  தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது!
காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்க செயலாளர் தோழர் க. விசயன், தோழர் முருகேசன் ஆகியோரை, தமிழகக் காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

காவிரிச் சிக்கிலில் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் நேற்று (17.02.2018) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் தருமபுரி இந்திய அரசுத் தொலைப்பேசித் தொடர்பகம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்ட தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்க செயலாளர் தோழர் க. விசயன், தோழர் முருகேசன் ஆகியோர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் படத்தை எரித்ததாகக் குற்றம் சாட்டி நேற்று நள்ளிரவில் தருமபுரி பி-1- காவல் நிலையக் காவலர்களால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டனர்.

பாரதிபுரத்திலுள்ள தோழர் விசயனின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்ததுடன், மண்ணாடிப்பட்டிலுள்ள தோழர் முருகேசனையும் கைது செய்தனர். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 147, 188, 290, 293, 285 ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது காவல் நிலையத்தில் சிறையிலுள்ள இவ்விருவரையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து இன்று அதிகாலை நேரில் சந்தித்தார். இருவரையும் நீதிபதி முன் நேர்நிறுத்தி சேலம் சிறையில் அடைக்கப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

தமிழர் மீதான இனவெறியே காரணம்!

தமிழர் மீதான இனவெறியே காரணம்!
காவிரிச் சிக்கலில் தமிழினம் துரோகத்தை மட்டுமே சந்திப்பதற்குக் காரணம், தமிழர் மீதான இனவெறியே தவிர தேர்தல் கணக்கு அல்ல!

கர்நாடகத்தைவிடக் கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட - மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டைப் பகைத்துக் கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் அதைவிடக் குறைவாகவுள்ள கர்நாடகத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என இந்திய அரசும், இந்தியக் கட்சிகளும், இந்திய ஊடகங்களும், இந்திய நீதிமன்றங்களும் கருதுவதற்கு அடிப்படைக் காரணம் - தமிழர் மீதான இனவெறியே ஆகும்!
இந்திய - கர்நாடக இனவெறியை மறைக்க வேண்டும் என்பதற்காக, தேர்தலே இதற்குக் காரணம் என்று மடைமாற்றும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலே இல்லாத போது தமிழர் மீது தாக்குதல்களும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து அடாவடித்தனத்திலும் இந்திய - கர்நாடக அரசுகள் ஈடுபட்டன; ஈடுபட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம், கார்ப்பரேட்டுகள்தான் காரணம் என்று மடைமாற்றம் செய்கின்றனர். சென்னையை சூழ்ந்துள்ள கார்ப்பரேட்டுகளைவிடவா பெங்களுருவில் கார்ப்பரேட்டுகள் இருக்கின்றனர்?
இக்காரணங்களையெல்லாம்விட முதன்மைக் காரணம் - தமிழர் மீதான இந்திய - கர்நாடக இனவெறிப் பகையே! அதுவே, காவிரிச் சிக்கலில் நாம் சந்திக்கும் துரோகங்களுக்கு அடிப்படைக் காரணம்!
இனியும் இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழர்கள் ஏமாறக் கூடாது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

பறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்!

பறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்!


காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாட்டு உரிமையைப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடெங்கும் தமிழர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சை

தஞ்சையில் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11.30 மணியளவில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சிமியோன் சேவியர்ராஜ், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான தோழர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.


தருமபுரி

தருமபுரி இந்திய அரசுத் தொலைப்பேசித் தொடர்பகம் முன்பு, நண்பகல் 12.30 மணியளவில் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. விசயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


குடந்தை

குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில், பகல் 1 மணியளவில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், குடந்தை நகரச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன் உள்ளிட்ட தோழர்களைக் காவல்துறையினர் வலுவந்தமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.


திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில், 16.02.2018 மாலை 4 மணியளவில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியச் செயலாளர் தோழர் செந்தில்குமார் தலைமையில் அண்ணா சிலை அருகில், ஒன்று கூடிய தோழர்கள், அங்கிருந்து முழக்கங்கள் எழுப்பியபடி புதிய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்து காவிரி உரிமைப் பறிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் சை. செயபால், கோட்டூர் செயலாளர் தோழர் தனபாலன், நகரச் செயலாளர் தோழர் இரமேசு, தமிழக உழவர் முன்னணி தோழர் கோவிந்தசாமி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


ஓசூர்

ஓசூர் – இராம் நகர் – அண்ணா சிலை முன்பு, மாலை 5 மணியளவில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஓசூர் செயலாளர் தோழர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூருவாசன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, தமிழக மாணவர் முன்னணி தோழர் ம.சு. தமிழ்மாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர். திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். காவிரித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு அநீதியாக தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டிக்கும் வகையில், 177 ஆ.மி.க. என எழுதப்பட்ட தாள்களை தோழர்கள் எரிக்க முயன்றபோது, காவல்துறையினர் அதைத் தடுத்து நிறுத்தவே தள்ளுமுள்ளு ஆனது.


திருச்சி

திருச்சியில், மாலை 5.30 மணியளவில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழக உழவர் முன்னணி திருச்சி அமைப்பாளர் திரு. நகர் ஆ. செல்லையன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இனியன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் வெள்ளமாள் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்களும், உணர்வாளர்களும் பங்கேற்றனர்.


இதேபோல், இன்று (17.02.2018) காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலும், மாலை 5 மணிக்கு, கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டங்கள் நடக்கின்றன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Friday, February 16, 2018

பறிபோகும் காவிரி உரிமை ! நாளை (17.02.2018) காலை சென்னையில் ஆர்ப்பாட்டம்!

பறிபோகும் காவிரி உரிமை ! நாளை (17.02.2018) காலை சென்னையில் ஆர்ப்பாட்டம்!
காவிரிச் சிக்கலில் தமிழ்நாட்டு உரிமை கேள்விக்கு உள்ளாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், நாளை (17.02.2018) காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட தோழமை அமைப்பினர் பங்கேற்கின்றனர்.

தமிழின உணர்வாளர்களும், தமிழ் அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்கும்படி அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

மீண்டும் பாரத மாதாவால் பலிவாங்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமை!

மீண்டும் பாரத மாதாவால் பலிவாங்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமை!
தொடர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்து வரும் இந்திய அரசு, இந்தியத் தேசியக் கட்சிகள், இந்திய உச்ச நீதிமன்றம் ஆகியவை, இப்போது காவிரிச் சிக்கலில் மிகப்பெரும் துரோகத்தை தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ளது!


1934லிருந்து 1970வரை மேட்டூருக்கு வந்த ஆண்டுச் சராசரி காவிரி நீர் - 372.8 ஆ.மி.க.
1984ஆம் ஆண்டு மேட்டூர் அணை பொன் விழாவின்போது 50 ஆண்டுகளில் வந்த காவிரி நீர்.. - 363.4 ஆ.மி.க.
1990 இடைக்காலத் தீர்ப்பில் அளிக்கப்பட்ட நீர்.. - 205 ஆ.மி.க.
2007 இறுதித் தீர்ப்பில் அளிக்கப்பட்ட காவிரி நீர்.. - 192 ஆ.மி.க.
2018 மேல் முறையீட்டில் அளிக்கப்பட்ட காவிரி நீர்.. - 177 ஆ.மி.க.

இந்திய அரசு, இந்தியக் கட்சிகள், இந்திய நீதிமன்றங்கள், இந்திய ஊடகங்கள் என அனைத்தும் தமிழினத்திற்கு எதிராக இருக்கும்போது, தமிழர்கள் இன்னும் “இந்தியன்” என்று ஏமாந்து கொண்டிருக்கலாமா?


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, February 15, 2018

இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஈழத்தமிழர்கள் இனத்துரோகிகளைப் புறந்தள்ள வேண்டும்! உண்மையான இன உரிமை அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்! தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஈழத்தமிழர்கள் இனத்துரோகிகளைப் புறந்தள்ள வேண்டும்! உண்மையான இன உரிமை அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சிங்கள மக்களிடம் இனத் தீவிரவாதம் கூடுதலாக வளர்ந்துள்ளதையே காட்டுகின்றன. மொத்தமுள்ள 341 உள்ளாட்சி சபைகளில் 239-ஐ இராசபட்சேயின் சிறீலங்கா பொதுசன பெரமுனா வென்றுள்ளது. தலைமை அமைச்சர் இரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, மிகக் குறைவாக 41 சபைகளில்தான் வென்றுள்ளது.

குடியரசுத் தலைவர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திக் கட்சி வெறும் 10 இடங்களில் தான் வென்றுள்ளது.

இதனால் இப்போது இலங்கை கூட்டணி ஆட்சியாளர்களிடையே உறுதியற்ற தன்மையும் - பிளவுகளும் ஏற்பட்டுள்ளது. இது நல்லது.

இராசபட்சே வருங்காலத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் புதிதாக பேராபத்து வரப் போவதில்லை! எல்லா அழிவு வேலைகளையும் உரிமைப் பறிப்புகளையும தமிழரகளுக்கெதிராக ஏற்கனவே செய்து முடித்து விட்டார்கள்.

இராசபட்சே, சிங்களர்களுக்கிடையே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் சிங்களர்கள் இராசபட்சேவுக்குத்தான் பெரும்பான்மையான வாக்குகளை கொடுத்தார்கள். தமிழர்களின் எதிர்ப்பு வாக்குகளால்தான் அவர் தோற்றார். அன்றிலிருந்து இன்று வரை சிங்களர்களிடம் தமிழர்களை அரவணைத்துச் செல்லும் சனநாயக நோக்கு பெரும்பான்மை பெறவே இல்லை. ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிராக இருந்த இனவெறி நீடிக்கிறது அல்லது சற்றுக் கூடுதலாகி இருக்கிறது என்று கணிக்கலாம்.

அடுத்து சிறீசேனா - இரணில் இருவரும் தமிழர்களை அரவணைத்துச் செல்லும் பண்பாளர்களோ, பன்மைவாதிகளோ அல்லர். தமிழின எதிர்ப்பில் முகமூடி அணியாத பகைவன் இராசபட்சே - முகமூடி அணிந்த பகைவர்கள் சிறீசேனாவும் - இரணிலும்!

சிறீசேனா - இரணில் அரசு, இராசபட்சேயின் சாரமான தமிழின எதிர்ப்புக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து படையை விலக்கிக் கொள்ள மறுத்து விட்டது. படையாட்கள் வன்கவர்தல் செய்த தமிழர் காணிகளைத் திருப்பித் தரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே மிகச் சில காணிகள் தமிழர்களுக்கு மீண்டும் கிடைத்தன.

வடக்கு கிழக்கு மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் தரவில்லை. விடுதலைப்புலிகள் என்று குற்றம் சாட்டி கொடுஞ்சிறைகளில் அடைத்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்ய புதிய அரசு மறுத்து விட்டது. காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படும் தமிழர்களுக்கான பொறுப்பு (Accountability) எதையும் செயல்படுத்த வில்லை. ஐ.நா. மனித உரிமை மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி சிங்கள அரசும் படையாட்களும் செய்த “போர்க்குற்றங்கள்” குறித்த விசாரணை எதையும் செய்யவில்லை. இன அழிப்புக் கயவர்கள் யாருமே தண்டிக்கப்படவில்லை!

இப்பொழுது நடைமுறையில் உள்ள சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி முறைக்கு மேலும் கூடுதல் அதிகாரம் தரவும், வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை நிரந்தரமாக மறுக்கவுமான புதிய அரசமைப்பு யாப்பை சிறீசேனா அரசு கொண்டு வருகிறது. எனவே இராசபட்சே மீண்டும் வருவதால் தமிழர்கள் புதிதாக இழப்பதற்கு ஏதுமில்லை!

மாறாக தமிழர்களுக்கிடையே புதிய விழிப்புணர்ச்சி வளர்ந்து வருகிறது. சம்பந்தர் தலைமையிலான தமிழினத் துரோகக் கூட்டணியைப் புறக்கணிக்க தமிழர்கள் முன்வந்துள்ளார்கள். கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சாவகச்சேரி, பருத்தித்துறை நகராட்சிகளை வென்றுள்ளது. மேலும் உள்ளாட்சி உறுப்பினர்கள் பலரைப் பெற்றுள்ளது.

சம்பந்தரின் இனத்துரோகம் பளிச்சென்று தெரியும் வகையில், எதிரிகளோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தனிப்பெரும்பான்மை யாருக்கும் இல்லாத நிலையில், யாழ்ப்பாணம் நகராட்சியில் நிர்வாகம் அமைக்க, இன எதிரி இரணில் கட்சியுடனும், இராசபட்சேயின் கூட்டாளி டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சு நடத்நடத்துகிறார். டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சிறு வளர்ச்சி உள்ளது.

கஜேந்திரகுமாரின் முன்னேற்றம் வரவேற்கத்தக்கது. சம்பந்தர் கூட்டணியிலிருந்து விலகியுள்ள பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமாரும் கூட்டுச் செயல்பாடுகளுக்கு முயன்றால் நல்லது!

சிங்கள இனவாதம் அதே தீவிரத்துடன் இருப்பதால், தமிழர்களிடையே இன உணர்ச்சியும், சந்தர்ப்பவாதத்தைப் புறந்தள்ளி ஒருங்கிணையும் புதிய போக்கும் போர்க்குணமும் வளரும்!

எனவே இராசபட்சே வளர்ச்சியைக் கண்டு அச்சப்படாமல், தமிழர் சனநாயகப் போராட்டங்களை விரிவுபடுத்தவும் விரைவுபடுத்தவும் கிடைத்த புறநிலை ஊக்கமாக இச்சூழ்நிலையைப் பயன்படுத்த வேண்டும்! அதேபோல், உண்மையான தமிழீழ தேசிய ஆற்றல்கள் கூட்டு நடவடிக்கைகளை வளர்க்க வேண்டும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Wednesday, February 14, 2018

தமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

தமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
அனைத்திந்திய அளவில் நடைபெறும் வேலை வாய்ப்புத் தேர்வுகளில் வடநாட்டை மையப்படுத்தி வினாக்கள் இருக்கும். அவற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படும். ஆனால் தமிழ்நாடு அரசு நடத்திய 4ஆம் பிரிவுக்கான 9,351 பணி இடங்களுக்கான தேர்வில் தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு, மரபு, நிலம், நிகழ்ச்சி கள் புறக்கணிக்கப்பட்டு வடநாட்டை மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டுக் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை எழுத்தர்கள் போன்ற பணிகளில் சேர்வோர்க்கு, வடநாட்டு வரலாறு, பண்பாடு, நிலம், நிகழ்ச்சிகள் பற்றி வினாக்கள் கேட்பது எதற்காக?

“இந்தியா - மாலத்தீவு இடையிலான ஒத்திகைக்கு என்ன பெயர்?”, “இந்திய விமானப் படையிலிருந்து கழற்றி விடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன?”, “2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது?”, “மத்திய அரசு அறிவித்த பல்வேறு யோஜனாக்கள் தொடங்கப்பட்ட ஆண்டுகள் என்ன?”, “இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தேதி எது?” (இக்கேள்விக்குக் கட்டங்களில் கொடுக்கப்பட்டிருந்த விடைகள் அனைத்துமே தவறு என்பது வேறு செய்தி!).

தமிழ்நாடு அரசு, விடைத்தாள்கள் அணியம் செய்யும் பொறுப்பை யாரிடம் விட்டது? அதற்கு என்ன வழி காட்டியது? தமிழ்நாட்டுத் தேர்வர்களின் எதிர்காலத்தையே சிக்கலாக்கிவிட்ட இந்தக் கேள்வித்தாள்கள் தயாரிப்புக்கான பொறுப்பானவர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சிறப்புப் புலனாய்வுக் குழுவை தமிழ்நாடு அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

அடுத்து, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த மையத்தில் எவ்வளவு பேர் தேர்வு எழுதினார்கள் என்ற செய்தி மர்மமாக இருக்கிறது. இராமேசுவரம் தங்கச்சிமடம் தேர்வு மையத்தில் மட்டும் மத்தியப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் தேர்வெழுதியதாகத் தமிழ் நாட்டுத் தேர்வர்கள் கூறுகிறார்கள். கோவை உள்ளிட்ட பல இடங்களில் மலையாளிகள் தேர்வெழுதியதாகக் கூறுகிறார்கள். மொத்த மையங்களில் வெளி மாநிலத்தவர் தேர்வெழுதிய விவரத்தைத் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

மராட்டியம், கர்நாடகம், குசராத் மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும், மாநில அரசுப் பணி களில் 100 விகிதம் தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதவும், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுப் பணிகளில் 90 விழுக்காடு பேர் தமிழர்களாக இருக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும், மக்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் 03.02.2018 அன்று சென்னையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

பிப்ரவரி 25 அன்று தமிழ்நாடெங்கும்... “தமிழர் தற்காப்பு அரசியல்” தமிழ்த்தேசிய நாள் சிறப்புக் கூட்டங்கள்!

பிப்ரவரி 25 அன்று தமிழ்நாடெங்கும்... “தமிழர் தற்காப்பு அரசியல்” தமிழ்த்தேசிய நாள் சிறப்புக் கூட்டங்கள்!
இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையறுப்புகளோடு முன்வைக்கப்பட்டது. அம்மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய திசைவழியைக் காட்டியது! 

அந்நாளை “தமிழ்த் தேசிய நாள்” என ஒவ்வொரு ஆண்டும் பேரியக்கக் கொடியேற்றம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளின் வழியே நினைவு கூர்ந்து வருகின்றோம். 

இன்று, தமிழ்நாட்டு அடிப்படை அரசியலின் நிகழ்ச்சி நிரலை முன் வைப்பதாக “தமிழ்த்தேசியம்” வளர்ந்து வரும் சூழலில், வரும் 25.02.2018 அன்று தமிழ்த்தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வுகளும், சிறப்புப் பொதுக் கூட்டங்களும் “தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளன.

காவிரி உரிமை மறுப்பு, வெளியார் திணிப்பு, அணுஉலை - மீத்தேன் - நியூட்ரினோ - கெயில் - சாகர் மாலா - நீட் திட்டங்கள் திணிப்பு என பறிக்கப்பட்டுக் கொண்டுள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் குறித்து பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. 

இந்நிகழ்வுகளில், தமிழின உணர்வாளர்களும், தமிழ்த்தேசிய ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Monday, February 12, 2018

தஞ்சை பெரிய கோவிலில் சி.சி.டி.வி. கேமரா ஊழல் அம்பலப்படுத்துகிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தஞ்சை பெரிய கோவிலில் சி.சி.டி.வி. கேமரா ஊழல் அம்பலப்படுத்துகிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!


தஞ்சை பெரிய கோவிலில் சி.சி.டி.வி. வாங்கியதில் நடைபெற்றுள்ள ஊழலை தமிழ்த்தேசியப் பேரியக்கம் அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி, 14.02.2018 நாளிட்ட “தமிழக அரசியல்” வார ஏட்டில் வெளியாகியுள்ளது.

அச்செய்தியில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கூறியுள்ளதாவது :

“தஞ்சை பெரிய கோவில் பெருமைகளை நாம் சொல்லி யாரும் அறிய வேண்டியதில்லை. தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் அது தெரியும். உலகப் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் நம் மக்களும் வெளி நாட்டினரும் வந்து செல்கின்றனர். அது மட்டுமல்ல சமீப காரமாக புகழ்பெற்று வரும் பிரதோஷம், சிவன் ராத்திரி போன்ற விழாக்களு்கு ஒரே நாளில் கோவிலின் உள்ளே இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். இந்நிலையில், இப்போது உள்ள பிரச்சினை என்னவென்றால் இங்கு பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட சி.சி.டி.வி. கேமரா வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2013 – 2015 ஆம் ஆண்டுகளில் கோவில் பாதுகாப்பிற்காக இரண்டு கோடியே பத்து இலட்சத்திற்கு மைசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டு கேமரா மற்றும் மின் சாதன பொருட்களை வாங்கியுள்ளனர். அதில் பாதுகாப்பிற்கு சி.சி.டி.வி. கேமராக்கள் மொத்தம் 31 கேமராக்கள் வாங்கியிருக்கின்றனர்.

அப்போது இங்கு தொல்லியல் துறை பராமரிப்பாளராக இருந்த வாசுதேவன் என்பவருடைய மேற்பார்வையில்தான் அனைத்தும் நடந்துள்ளது. வாங்கிய அனைத்து பொட்ருகளுமே தரமானதாக இல்லாமல் இருந்துள்ளது. ஒவ்வொரு கேமராவிற்கும் தனித்தனியாக இணைப்புகள் கொடுக்காமல், மூன்று அல்லது நான்கு கேமராக்களுக்கு சேர்த்து ஒரு வை-பையோடு இணைப்பு செய்திருக்கிறார்கள். ஒரு வை-பை பழுதானால் மூன்று கேமராக்கள் இணைப்பு துண்டிக்கப்படும். அதேபோல் தான் மொத்த கேமரா இணைப்பும் எந்த பராமரிப்புமில்லாமல் மொத்தம் 31 கேமராக்களில் ஒரு கேமரா மட்டும்தான் ஒா்க் செய்கிறது. மற்ற மீது இருக்கும் 30 கேமராக்கள் பழுதாகி முடங்கிக் கிடக்கிறது. இங்கு இருக்கும் கேமராவின் அதிகபட்ச தொகை சிறிய கேமரா 1,500 பெரிய கேமரா 65,000 இருக்கும், பெரிய கேமரா கோவிலில் மொத்தம் பத்து இருக்கும். மீதி சிறிய கேமரா. அப்போது பார்த்துக் கொள்ளுங்கள், இதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும் எவ்வளவு ஏப்பம் விட்டு இருப்பார்கள் என்று.

ஒரு உலகப் புகழ்பெற்ற கோவிலில் இதுபோல் எந்த கேமராவும் வேலை செய்யவில்லை என்றால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எப்படி கண்டு பிடிக்க முடியும்? ஏற்கெனவே பல கோவில்களில் ஆங்காங்கே விலை உயர்ந்த சிலைகள் பகலிலேயே காணாமல் போகிறது. இந்த 30 கேமராக்களும் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக வேலை செய்யவில்லையாம். இதில் என்ன நடந்தது, மொத்தம் எவ்வளவு செலவானது, யார் எவ்வளவு மோசடி செய்தனர், எவ்வளவு நாளாக கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டுபிடிக்க வேண்டும். இப்பிரச்சினையை சாதாரணமாக நினைக்காமல் முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை வேண்டும்”.

இவ்வாறு தோழர் நா. வைகறை தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு, உடனடியாக சி.சி.டி.வி. கேமரா ஊழல் குறித்து முறையாக விசாரித்து, தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Friday, February 9, 2018

வெளி மாநிலத்தவருக்கு பணி வழங்கிய தேர்வு இரத்து - புதிய தேர்வில் தமிழ்நாட்டு தேர்வர்களை அனுமதிக்க வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

வெளி மாநிலத்தவருக்கு பணி வழங்கிய தேர்வு இரத்து - புதிய தேர்வில் தமிழ்நாட்டு தேர்வர்களை அனுமதிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாகவுள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு, இரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் பணித் தேர்வாணையம் அறிவித்துள்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது!

கடந்த 16.9.2017 அன்று விரிவுரையாளர் பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத்தேர்வின் முடிவுகள் 07.11.2017 அன்று வெளியானபோது, அம்முடிவுகளில், வெளி மாநில மாணவர்கள் பெருமளவில் தேர்ச்சி பெற்றிருந்தது அம்பலமானது. இதனையடுத்து, 23.11.2017 அன்று சென்னையில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, பல இலட்சம் தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் வேலை இன்றி தவிக்கும் சூழலில் - தமிழ்நாட்டு அரசுக் கல்லூரிகளிலேயே வெளி மாநிலத்தவர்களை பணியமர்த்தக் கூடாது என்று சுட்டிக்காட்டி, சான்றிதழ் சரிபார்ப்பு முகாமை அறவழிப் போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்துவோம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 11.12.2017 அன்று தேர்வெழுதியோரின் விடைத்தாளை ஆசிரியர் தேர்வாணையம் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டபின், பலர் மோசடியான மதிப்பெண்கள் பெற்றிருந்தது அம்பலமாகி, அதன் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டனர். அதில் முதன்மையானவர்கள் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, 12.12.2017 அன்று அறிக்கை வெளியிட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கம், அத்தேர்வை முழுவதுமாக இரத்து செய்ய வேண்டுமெனக் கோரியது! பலரும் அவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இன்று (09.02.2018) அத்தேர்வு முழுவதுமாக இரத்து செய்யப்படுவதாகவும், மே 2018இல் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் பணித் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது!

மே மாதம் அறிக்கப்படவுள்ள தேர்வில், வெளி மாநிலத்தவரை அனுமதிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே பணியிடங்கள் கிடைக்கும் வகையில், அவர்களது வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவெண், இருப்பிடச்சான்று போன்றவற்றை கட்டாயமாக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இனியாவது முறைகேடுகள் ஏதுமின்றி தேர்வுகள் வெளிப்படையாக நடைபெறுவதை, தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, February 8, 2018

“தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்காதீர்” தமிழக முதல்வரிடம் தோழர் பெ. மணியரசன் வலியுறுத்தல்!

“தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்காதீர்” தமிழக முதல்வரிடம் தோழர் பெ. மணியரசன் வலியுறுத்தல்!
தமிழ்நாடு அரசின் 9,351 பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம், வரும் 11.02.2018 அன்று நடத்தவுள்ள பொதுத் தேர்வில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு முதலமைச்சரின் இல்ல அலுவலகத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (08.02.2018) மனு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதால், முதலமைச்சரின் தனிச் செயலாளர் அவர்களிடம் இம்மனுவை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், இயக்குநர் வ. கௌதமன் ஆகியோர் நேரில் சென்று கையளித்தனர். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர் சி. பிரகாசு பாரதி ஆகியோர் உடன் சென்றனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு இந்தியாவின் பிற மாநிலத்தவர் மட்டுமின்றி, நேப்பாளம், பூட்டான், பாக்கித்தான், மியான்மர் உள்ளிட்ட வெளி நாட்டவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய அறிவிப்பின் அடிப்படையிலேயே வரும் 11.02.2018 தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில், தமிழர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், இன்று (08.02.2018) பகல் அடையாறிலுள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் இல்ல அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 3 (2018) அன்று, சென்னை அண்ணா அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்ற “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்க்கு அல்ல!” – சிறப்பு மாநாட்டின் தீர்மானங்களும், இந்தியாவெங்கும் அந்தந்த மாநிலங்களில் செயலில் உள்ள மண்ணின் மக்களுக்கே வேலை அளிக்கும் சட்டங்கள், ஆணைகள், தீர்மானங்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவுச் சட்டம் ஆகியவையும் முதலமைச்சர் மனுவுடன் இணைத்து அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசே! 
தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கான தேர்வில் வெளியாரை அனுமதிக்காதே!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: WWW.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT