Friday, December 25, 2009
இந்தியத் தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் - இவ்வாண்டின் முக்கிய சம்பவமாய் ஆனந்த விகடனில்...
Wednesday, December 23, 2009
மாவீரன் முத்துக்குமார் நினைவு நாளும் நம் கடமையும் - த.தே.பொ.க. அறிக்கை!
"தமிழகத்தை ஆக்கிரமித்துள்ள மார்வாடி குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் மற்றும் வடவர்கள் உள்ளிட்ட வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ் ஈழம் அமைய துணை நிற்போம்! தமிழ்த் தேசக் குடியரசு அமைய தமிழ்த் தேசியப் புரட்சியை முன்னெடுப்போம்!
’’தமிழினத்தின் இருள் நீக்கத்
தன்னையே சுடராக்கி தீக்குளித்த முத்துக்குமார்
உன்னை வணங்குகிறோம்
திலீபனும் மில்லரும் சேர்ந்து உருவான
செல்வனே வீரவணக்கம்!
இந்தி ஆதிக்கத்தின் இருளகற்ற
செந்தீ மூட்டி உயிரீந்த
சின்னச் சாமியின் எச்சமே வீரவணக்கம்!
உன்னைப் பின்பற்றி
உடலை நெருப்பிற்குத் தந்த
பதினைந்து தமிழர்க்கும் வீரவணக்கம்
மாற்று அரசியலைக் கட்டுங்கள்
ஓட்டு அரசியலை ஓட்டுங்கள் என்று
மாணவர்க்கும் இளைஞர்க்கும்
வழிகாட்டிய விடிவெள்ளி விடிவெள்ளியே
வீரவணக்கம்!
சேட்டென்றும் சேட்டானென்றும்
வந்தவனெல்லாம் தமிழகத்தைச் சுரண்ட
சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது என்றாய்
உன் நினவு நாளில்
வெளியாரை வெளியேற்ற சூளுரைக்கிறோம்!
ஈழம் வெல்லவும்
இங்கு தமிழ்த் தேசம் மலரவும்
எங்களை ஒப்படைக்கிறோம்!
இந்தியாவும் சிங்களமும் தமிழினத்தின்
இரட்டைப் பகையென அறிந்து கொண்டோம்
உங்களை எரித்த நெருப்பு
எங்கள் பகையை எரிக்கட்டும்
எங்கள் மன அழுக்குகளை எரிக்கட்டும்
சாதி வெறி, மத வெறி மாசுகளை எரிக்கட்டும்
நெருப்புப் போராளிகளே
உங்களுக்கு எங்கள் நினைவு மலர்கள்!
வெல்க தமிழ்த் தேசியம்!’’
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Friday, November 27, 2009
Saturday, November 14, 2009
முல்லைப் பெரியாறு தீர்ப்பு: தமிழக அரசின் துரோகத்திற்கு தமிழக உழவர் முன்னணி கடும் கண்டனம்
தமிழக உழவர் முன்னணி கண்டனம்
முல்லைப் பெரியாறு வழக்கில் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான உச்சநீதிமன்ற ஆயம் (டிவிசன் பென்ச) 10.11.09 அன்று அளித்துள்ள தீர்ப்பு தமிழக உரிமையை பறிப்பதாக உள்ளது. இத்தீர்ப்புக்கு தமிழக அரசின் முன் ஒப்புதல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பிறகே இத்தீர்ப்பு உரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முல்லைப்பெரியாறு உரிமையை தமிழக அரசே கை கழுவிவிட்டது.
2006இல் உச்சநீதிமன்ற ஆயம் அளித்த தீர்ப்பு உடனடியாக 142 அடி தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு தேக்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இத்தீர்ப்பை முறியடிக்கும் தீய உள்நோக்கத்தோடு கேரள அரசு அம்மாநில அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாற அணையையும் கொணர்ந்தது. இதன் மூலம் தமிழகப் பொதுப் பணித்துறையின் கட்டு்ப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை சட்டவிரோதமாக கேரள அரசு பறிக்க முயன்றது. முல்லைப் பெரியாறு அணை சட்டப்படி கேரள அரசின் அதிகார எல்லையில் இல்லை.
ஆனால், இப்போதைய தீர்ப்பின் மூலம் நிலவும் நிலைமை செயலில் இருக்கட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் கேரள அரசின் அடாவடியான சட்டம் செயலில் இருக்கும் என்பதும், 136 அடி மட்டுமே தண்ணீர் தேக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.
முப்பது ஆண்டுகால முயற்சியில் கிடைத்த நியாயத்தை இத்தீர்ப்பு பறிக்கிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால் இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இத்தீர்ப்பு வரைவிற்கு தமிழக அரசு முன் ஒப்புதல் தந்ததின் மூலம் தமிழகத்தின் உரிமையை கைகழுவி முப்பது ஆண்டு முயற்சியால் தமிழகத்திற்கு கிடைத்த நியாயத்தை குழு தோண்டி புதைத்து விட்டது.
ஏனெனில் இப்போதைய தீர்ப்பில் மேல் ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள அரசமைப்பச் சட்டசிக்கல் அனைத்துமே 2006 ஆம் ஆண்டு நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான மூன்று நீதிபதிகள் ஆயம் தீர விவாதித்து முடியு கூறிய செய்திகள் தாம். அரசமைப்புச் சட்ட விதிகள் 3 மற்றும் 4, 131, 363 போன்ற அனைத்து பிரிவுகளின் கீழும் கேரள தீர்ப்பு எழுப்பிய ஆட்சேபணைகளையெல்லாம் அத்தீர்ப்பு நிராகரித்தது. மேலும் 1956 ஆம் ஆண்டு சட்டப்படி முல்லைப் பெரியாறு பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் பகிர்வு தகராறு இல்லை. மாறாக அணையின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையே இவ்வழக்கின் மையச் சிக்கல் என்று தெளிவுபடுத்தியது.
கேரள அரசு முன்பு எழுப்பிய ஆட்சேபணைகளைத்தான் இப்போதும் எழுப்பியுள்ளது. அன்று தமிழக அரசின் சார்பில் எல்லாவற்றிற்கும் மறுப்புரை அளிக்கப்பட்டு அது நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இன்று அதே சட்டப் பிரச்சினைகளின் மீது மறு ஆய்வுக்கு ஒப்புதல் கொடுத்ததன் மூலம் தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டை கைகழுவி விட்டது. இவ்வாறு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் போனால் ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய ஆயத்திற்கு அனுப்புவது என்ற தீர்ப்பே வர வாய்ப்பில்லை. ஏனெனில் இப்போது தீர்ப்புரைத்துள்ள உச்சநீதிமன்ற ஆயமும் மூன்று நீதிபதிகள் கொண்டது தான். சம அதிகாரம் கொண்டது தான். இவ்வாறு சம அதிகாரம் கொண்ட ஒரு ஆயம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முடிவை இந்த ஆயம் எடுப்பதற்கு தமிழக அரசின் ஒப்புதலே கதவை திறந்து விட்டுளளது.
முல்லைப் பெரியாற்றுப் பாசன உழவர்களின் முப்பதாண்டு கால முயற்சியில் கிடைத்த வெற்றியை கைகழுவிவிட்ட தமிழக அரசுக்கு தமிழக உழவா முன்னணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி தமிழக அரசையோ இந்திய அரசையோ நம்பி காத்திராமல் உழவர்களும் தமிழக மக்களும் இன உணர்வு பெற்று ஒன்றுபட்டு போராடுவது மட்டுமே முல்லைப் பெரியாறு உரிமையை நிலைநாட்ட உள்ள ஒரே வழியாகும். இதற்கு அணியமாகுமாறு அனைவரையும் தமிழக உழவர் முன்னணி அழைக்கிறது.
இடம் : சிதம்பரம்
நாள் : 12.11.09
Friday, November 13, 2009
கொடி எரித்தத் தோழர்கள் விடுதலை: சிறை வாசலில் உற்சாக வரவேற்பு
(தோழர்கள் வே.பாரதி மற்றும் பா.தமிழரசன்)
கோவை நடுவண் சிறை வாசலில், பறையடித்து தோழர்களுக்கு வரவேற்பு மட்டும் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்கள் தோழர்களை வரவேற்று உரை நிகழ்த்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், த.தே.பொ.க. பொதுக் குழு உறுப்பினர்கள் ஓசூர் வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, ஈரோடு வெ.இளங்கோவன், மதுரை இராசு, ஆனந்தன், திருச்செந்தூர் தமிழ்மணி, தமிழக மாணவர் முன்னணி அரவிந்தன் உள்ளிட்ட பலரும் தோழர்களை வாழ்த்தி, பரிசளித்து கௌரவித்தனர்.
(தோழர் பா.தமிழரசனை பாராட்டுகிறார் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன்)
(தோழர் வே.பாரதியை பாராட்டுகிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு)
(தோழர்களை பாராட்டி உரை நிகழ்த்தும் பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன்)
Thursday, November 12, 2009
முல்லைப் பெரியாறு வழக்கில் கேரளாவுடன் இணைந்து தமிழக அரசு துரோகம்: பெ.மணியரசன் கண்டனம்
துணைபோய் தமிழக அரசு துரோகம் செய்துள்ளது
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
தஞ்சை, 12.11.09
முல்லைப் பெரியாறு உரிமைச் சிக்கலை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயத்திற்கு விடுவது என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது ஏமாற்றமளிக்கிறது. அதற்குத் தமிழக அரசு இசைவுத் தெரிவித்திருப்பது, தமிழகத்தின் உரிமையைப் பலி கொடுக்கும் செயலாகும்.
2006 பிப்ரவரி 27-ஆம் நாள் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்குத் தண்ணீர்த் தேக்கிக்கொள்ளலாம. ஆணை வலுவாக உள்ளது என்று கூறியிருந்தது. அத்தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் நோக்கத்தில் உடனடியாகக் கேரள சட்டமன்றம் அணைகள் பாதுகாப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி முல்லைப்பெரியாறு அணை தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் கேரள அரசு அறிவித்தது.
அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக உள்ள இச்சட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தது. அத்துடன், உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்குவதைக் கேரளம் தடுக்கக்கூடாது என்றும் கோரியிருந்தது.
இவ்வழக்கு விசாரணை விரிவாக நடந்தது. 10.11.2009 அன்று தீர்ப்பு வழங்கவேண்டிய நிலையில், தீர்ப்பு வழங்காமல் ஐந்து நீதிபதிகள் கொண்ட ஆயம் அமைத்து அதன் விசாரணைக்கு. இவ்வழக்கை விடுமாறு மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறு ஐந்து நீதிபதிகள் ஆயத்திற்கு வழக்கை மாற்றிவிட, தமிழக அரசு வழக்கறிஞர் பராசரன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கருத்துப்படியே அவர் ஒப்புதல் தந்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு இருக்கும் 999 ஆண்டு ஒப்பந்தத்தையும் 2006 பிப்ரவரி தீர்ப்பையும் கிடப்பில் போட்டு, செயலற்றதாக்கும் கெட்ட நோக்கமுடைய கேரளாவின் நிலைபாட்டிற்குத் தமிழக அரசு உடந்தையாய்ப் போயிருப்பது ஏன்? என்ற வினா எழுகிறது. இதற்குத் தமிழக அரசு விடை சொல்லியாக வேண்டும்.
காவிரி உரிமையைப் பலிகொடுத்தது போலவே, இப்பொழுது முல்லைப்பெரியாறு உரிமையையும் பலி கொடுத்துள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் இந்தத் துரோகத்தைத் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்நிலையில் தமிழக மக்கள் கொந்தளித்து எழுந்தாலன்றி, முல்லைப்பெரியாறு அணையில் தமிழ் நாட்டிற்குள்ள உரிமையை நிலைநாட்ட தமிழக அரசோ, நடுவண் அரசோ, உச்ச நீதிமன்றமோ முன் வராது. ஐந்து மாவட்ட மக்களின் வேளாண்மை பாழாவதுடன், குடிநீர் பஞ்சம் பெரிதாக ஏற்படும். எனவே தமிழக மக்கள் போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Monday, November 9, 2009
இந்தியத் தேசியக் கொடி எரித்தத் தோழர்கள் விடுதலை
சிங்கள இனவெறி அரசுக்கு உதவிய இந்திய அரசைக் கண்டிக்கும் விதத்தில், இந்திய இலங்கை தேசியக் கொடிகளை எரித்தத் தோழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலும், கொடி எரித்த தோழர்கள் அக்கொடியை தம் வீட்டில் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை தள்ளுபடி செய்தும், இது போன்ற நிபந்தனையை இனி எந்த வழக்கிற்கும் விதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கை அரசு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுத உதவி, நிதி உதவி மற்றும் பன்னாட்டு அரசியல் உதவி ஆகியவற்றை வழங்கி அந்த இனப்படுகொலையில் பங்கு வகித்தது. இதற்கு சனநாயக வழியில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை கடந்த 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய அரசுக் கொடியையும் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டம் அறிவித்தது. கோயம்புத்தூரில் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த 8 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிணை விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. கடந்த 9.06.09 அன்று அப்பிணை மனு மீது ஆணை வழங்கிய நீதிபதி திரு. ஆர். இரகுபதி அவர்கள் மேற்கண்ட 8 பேரும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லை, அதற்கு முன்பாக அவர்களைத் தடுத்துக் காவல்துறையினர் கைது செய்து விட்டார்கள் என்ற போதிலும் அவர்களின் நோக்கம் குறித்து கடுமையாகக் கருத வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் ஒரு வாரத்திற்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்திய அரசுக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் ஒரு வாரத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இந்நிபந்தனையை மறுபரீசீலனை செய்யக்கோரி தொடுக்கப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாநகரப் பொறுப்பாளர் பா.தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு உறுப்பினர் வே.பாரதி ஆகிய இருவரும் இந்நிபந்தனைகளை ஏற்க இயலாது என தில்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவிற்காக பிரபல வழக்கறிஞரும் முன்னாள் நடுவண் சட்ட அமைச்சருமான திர. இராம் ஜெத்மலானி அவர்கள் தில்லி உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, தீபக் வர்மா ஆகியோர் அளித்தத் தீர்ப்பில் மனுதாரர்களை விடுதலை செய்யக் கோரி உத்தரவிட்டனர்.
அத்தீர்ப்பில், எரித்த கொடியை ஏற்றச் சொல்வதும், அநாதை ஆசிரமத்தில் பணியாற்றச் சொல்வதுமான நிபந்தனைகள் சட்டப்படி ஏற்பதற்குரியதல்ல என்றும் இது போன்ற நிபந்தனைகளை இனி யாரும் விதிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிணை உத்தரவு சிறையை வந்தடைந்ததை ஒட்டி, நாளை(செவ்வாய் - 10.11.09) மாலை கோவை நடுவண் சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஈழத்தமிழர்களுக்காக, கடந்த 6 மாதங்களாக சிறையில் இருந்து, ஈகம் செய்த அத்தோழர்களை, உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் திரண்டு வரவேற்போம்! வாருங்கள்!
Tuesday, October 13, 2009
சென்னையில் எழுச்சியுடன் நடந்த தமிழினப் பாதுகாப்பு மாநாடு
சென்னை மன்றோ சிலை அருகிலிலிருந்து 11.10.09 காலை 11.00 மணியளவில் "தமிழினப் பாதுகாப்புப் பேரணி" நடைபெற்றது. முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரி சென்னையில் நேற்று முன்தினம் (11.10.09) தமிழினப் பாதுகாப்பு மாநாடு நடந்தது. மாநாட்டையொட்டி, பேரணியும் நடைபெற்றது.
மக்கள் கண்காணிப்பகம் என்.ஜி.ஓ. செயலாளர் ஹென்றி திபன் பேரணியை முடித்து வைத்து உரையாற்றினார்.
தமிழக பெண்கள் செயற்பாட்டுக் களம் அமைப்பாளர் வழக்கறிஞர் கயல், காஞ்சி மக்கள் மன்றம் மகேஷ் உள்ளிட்டோர் தீர்மானங்களை வாசித்தனர். மாலையில், தமிழினப் பாதுகாப்பு மாநாடு பொதுக் கூட்டம் தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு இதழாளர் அய்யநாதன் தலைமை தாங்கிப் பேசினார்.
- இலங்கையில் வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடைத்தங்கள் முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளின்றி பன்னாட்டுச் சட்டங்களுக்குப் புறம்பாகக் கடந்த 5 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுளூள 3 லட்சம் ஈழத்தமிழர்களை உடனடியாக விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் ஐக்கிய நாடுகள் சபையும், அதன் பொதுச் செயலர் பான் கீ முனும் அவசர உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- தமிழீழ மக்களின் துயரைத் துடைப்பதற்கான முழுப் பொறுப்பையும் சர்வதேச சமூகத்தின் சார்பில் ஐ.நா.வே மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.
- இனப்படுகொலைக் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றிற்காக மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீதும், இந்தக் குற்றங்களுக்குத் துணை புரிந்த தெற்காசிய வல்லாதிக்க ஆட்சியாளர்கள் மீதும் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என இம்மநாடு வலியுறுத்துகிறது.
- உலகின் பிற பகுதிகளில் மேற்கொண்ட வழிமுறையைப் பின்பற்றி பொது சன வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத் தேசிய இனத்தின் அரசியல் வருங்காலத்தைத் தீர்வு காண ஐ.நா. முன்வர வேண்டும்.
- இலங்கையை இனவெறி அரசாக ஐ.நா.வும், உலக நாடுகளும் பிரகடனப்படுத்த வேண்டும் என இம்மநாடு கேட்டுக்கொள்கிறது.
- தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை உலக நாடுகளிடையே முன்னெடுத்துச் செல்வது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
- கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துப் போராட இம்மாநாடு தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறது.
- இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் எல்லையைத் திறந்துவிடுவதன் மூலம், அல்லது இறுக்கமற்ற எல்லை ஆக்குவதன் மூலம் தமிழக, தமிழீழ மீனவர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும்.
- இலங்கை மீது ஒரு பொருளியில் தடையை நாம் விதிப்பதோடு, உலக அளவில் இலங்கைக்கு எதிராகப் பொளியல் தடை விதிக்கும் படியும் இயக்கம் நடத்த வேண்டும்.
- இலங்கை அரசின் முக்கியமான வருமான வழிகளில் ஒன்றாக இருப்பது சுற்றுலாத் துறையாகும். மனித உரிமைகளை மதிக்கிற எவரும் இனக்கொலைகாரர்கள் ஆட்சிபுரியும் அந்த நாட்டுக்கு உல்லாசப் பயணம் செல்லக்கூடாது. இவ்வழியில் சிங்கள அரசை நெருக்கவும் இயலும். தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகத் திரைப்படத் துறையினர் எவ்வகையிலும் இலங்கையோடு கூட்டு முயற்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், குறிப்பாக இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவதை உடனடியாக கைவிட வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- தமிழகத்தில் தமிழக அரசு ஈழத் தமிழர்கள் சிலரையும், அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் தமிழகத்தின் தமிழர்கள் சிலரையும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான சிறை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டிப்பதோடு, இந்தச் சிறப்பு முகாம்களை இழுத்து மூடி முகாம்வாசிகளை விடுதலை செய்யுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- தமிழீழ அகதிகளின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதித்து, அவர்களின் மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- 2006 பிப்ரவரி 27 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 142 அடி வரை தண்ணீர் தேக்க, முல்லைப் பெரியாறு அணையின் வடிகால் மதகுகளை கீழிறக்குமாறும், தீர்ப்பின்படி தண்ணீரைத் தேக்குமாறும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
- இன உணர்வு அடிப்படையிலும், மனிதநேய நோக்கிலும் ஈழத் தமிழர்கள் உயிர் காக்க, உரிமை காக்கப் போராடியதற்காக, பேசியதற்காக, செயல்பட்டதற்காக போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் இம்மநாடு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
Saturday, October 10, 2009
இலங்கை செல்லும் தி.மு.க. கூட்டணிக் குழு இராசபட்சேவின் விருந்தினர் குழுவே - த.தே.பொ.க. குற்றச்சாட்டு
இந்தக் கொடுமைகளை அன்றாடம் மேற்கத்திய ஏடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன. பல நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசைக் கண்டித்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து ஊடகத்துறையினர், மனித உரிமை அமைப்பினர் அடங்கிய பார்வையாளர் குழுவை வன்னி முகாம்களுக்கு அனுப்பி உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர் மனதிலும் இந்தக் கோரிக்கை உள்ளது.
இப்பொழுது தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஈழம் சென்று பார்த்தனர். இந்தியப் பிரதமர் அனுமதித்துள்ளார் என்ற செய்தி வந்துள்ளது.
நாடாளுமன்றக் குழுவை அனுப்புவதெனில் அனைத்திந்திய அளவில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அனுப்புவதே சரியாக இருக்கும். தமிழ்நாட்டுக் குழுவும் அனைத்துக் கட்சிக் குழுவாக இல்லாமல் ஆளுங்கட்சியின் கூட்டணிக்கட்சிகளின் குழு என்பது உண்மை அறியும் குழுவாகத் தெரியவில்லை. பாசிஸ்ட் இராசபட்சேவின் விருந்தினர் குழுவாகத்தான் தெரிகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போருக்கு காங்கிரஸ் ஆட்சி பல வகைகளில் உதவி செய்தது. அந்த உதவிக்குத் துணை நின்றது. தி.மு.க. ஆட்சி. இக்கட்சிகளின் தோழமைக் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. இக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசின் விருந்தினர்களாகச் சென்று திரும்பும் போது எப்படிப்பட்ட அறிக்கை கொடுப்பார்கள் என்ற ஐயம் வலுவாக உள்ளது. அங்கு நடக்கும் கொடுமைகளை மூடிமறைக்கும் அறிக்கையாகவே அது இருக்க வாய்ப்புண்டு.
எனவே ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட அனைத்திந்திய நாடாளுமன்றக் குழுவை அனுப்ப வேண்டும் என்று இந்திய, தமிழக அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
Friday, October 9, 2009
சென்னையில் 11.10.09 அன்று ”தமிழினப் பாதுகாப்பு மாநாடு”
11.10.09 அன்று ஞாயிறுக்கிழமை
தமிழினப் பாதுகாப்பு மாநாடு
தோழர் பெ.மணியரசன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர், பெரியார் திராவிடர் கழகம்
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
தமிழ் உணர்வாளர்களே ஒன்றுபடுவோம்!
தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்வோம்!
Wednesday, October 7, 2009
"மண்ணின் மக்களுக்கே வேலை! வெளியாரை வெளியேற்றுவோம்" - த.தே.பொ.க. தீர்மானம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு தீர்மானம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூர் அலுவலகத்தில் 02.10.2009 அன்று தோழர் பழ. இராசேந்திரன் தலைமையில் நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் மற்றும் தோழர்கள் கி. வெங்கட்ராமன் , நா.வைகறை, குழ. பால்ராசு, கோ. மாரிமுத்து, அ. ஆனந்தன், மா.கோ.தேவராசன், ச.அர. மணிபாரதி, க. காமராசு, பி.முருகையன், வழக்கறிஞர் தனஞ்செயன், க. முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் புகுந்து, இந்திய அரசு அலுவலகங்கள், இந்திய அரசுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றி வருகிறார்கள்.
இரயில்வே, வருமானவரி அலுவலகங்கள், உற்பத்திவரி (எக்சைஸ்) அலுவலகங்கள், பி.எச்.இ.எல்., போன்ற பெருந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் வெளி மாநிலத்தவர்களையே அதிக எண்ணிக்கையில் இந்திய அரசு வேலைக்குச் சேர்க்கிறது.
தனியார் தொழில் நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும், வெளி மாநிலத்தவர்களையே அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்க்கிறார்கள். சென்னையில் உணவு விடுதிகளில் கூட பிறமாநிலத்தவரே அதிகமாக வேலை பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள தன்நிதிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்நிதிக் கல்லூரிகள் ஆகியவற்றில் வெளிமாநில மாணவர்களை அதிகமாகச் சேர்க்கிறார்கள்.
இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆண்பெண் இருபாலார்க்கும் கிடைக்கவேண்டிய தமிழக வேலை வாய்ப்புகள் பறிபோய், அவர்கள் வேலையின்றித் திண்டாடுகிறார்கள். தமிழக மாணவர்கள் உயர்கல்வி நிலையங்களில் இடம் கிடைக்காமல் கல்வி வாய்ப்பை இழக்கிறார்கள்.
மிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களை வேலை மற்றும் மாணவர் சேர்க்கையில் சேர்ப்பதால், மொழி , இன அடிப்படையில் அடிக்கடி தகராறுகள் ஏற்படுகின்றன.
அண்மையில் திருப்பூரில் வடநாட்டு முதலாளிக்குச் சொந்தமான மெரீடியன் உள்ளாடை உற்பத்தி ஆலையில் ஒரிசாவைச் சேர்ந்த தொழிலாளிகள் தமிழகத் தொழிலாளிகளைத் தாக்கிப் படுகாயப்படுத்திய நிகழ்வு செய்தி ஏடுகளில் வந்தது. அத்தொழிற்சாலையில் சிங்களர் ஒருவர் பொது மேலாளராக உள்ளார் என்பது மேலும் வேதனை தருவதாகும். அந்தச்சிங்களர், குற்றம் புரிந்த ஒரிசாத் தொழிலாளர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளார்.
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள இந்துஸ்த்தான் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் வடநாட்டு மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கியுள்ளார்கள்.
எந்த இடத்திலும் மிகை எண்ணிக்கையில் வேற்று இனத்தார் வந்து தொழில் மற்றும் கல்விக் கூடங்களில் குவியும்போது இதுபோன்ற இன மோதல்கள் வரவே செய்யும். வேடிக்கை என்னவென்றால் இதில் பாதிக்கப்படுபவர்கள் மண்ணின் மக்களாகிய தமிழர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் இனியும் இந்த அநீதிகளைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
தமிழகத் தொழில் வணிகம் ஆகியவற்றில் மார்வாரி - குசராத்தி சேட்டுகளின் ஆதிக்கம் மேலும் மேலும் மேலோங்கி வருகிறது. அண்மைக்காலமாகத் தமிழகத் தொழில் வணிகத்தில் மலையாளிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
மொழிவாரி மாநிலப் பிரிவினைச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தமிழ்மொழி பேசும் மக்களின் தாயகமாக 1956 நவம்பர் 1 -ஆம் நாள் தமிழ்நாடு வடிவமைக்கப்பட்டது. அப்போது பல்வேறு தமிழ்ப்பகுதிகளை இழந்துள்ளோம் என்பது ஒருபுறம் இருக்க, இந்தச் சட்டத்தின் நோக்கங்களைக் குப்பைக் கூடையில் தூக்கி வீசுவதுபோல் பிறமாநிலத்தவர் ஆக்கிரமிப்பு தமிழகத்தில் அன்றாடம் நடந்து வருகிறது.
தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு உருவான நாளான 2009 நவம்பர் 1-ஆம் நாள் தொடங்கி நவம்பர் 15-ஆம் நாள் வரை “தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே கல்வி, வேலை தொழில் வணிகத்தில் முன்னுரிமை” என்ற பரப்புரை இயக்கம் நடத்த தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு தீர்மானிக்கிறது.
“மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை” இயக்கத்தின்
1.தமிழகத்தில் தமிழக அரசு, இந்திய அரசு, தனியார் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்துக்கல்வி நிலையங்களிலும் 85 விழுக்காடு மாணவர் இட ஒதுக்கீடு தமிழர்களுக்கே வழங்கவேண்டும்.
2. இந்திய அரசு, தனியார் துறை, பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் அலுவலகங்கள், தொழிலகங்கள் முதலியவற்றில் 85 விழுக்காடு வேலை வாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கவேண்டும்.
3. தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்களும் வெளிநாட்டினரும் நடத்தும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் முதலியவற்றில் தமிழர்களுக்கு 51 விழுக்காடு மூலதனப் பங்கு அளித்தால் தான் உரிமம் வழங்க வேண்டும். அவ்வாறு மூலதனப் பங்களிக்காத நிறுவனங்களின் உரிமங்களை நீக்க வேண்டும்.
4. 1956 நவம்பர் 1-ஆம் நாளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய பிறமாநிலத்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளிறே;ற வேண்டும்.
5. தமிழ்நாட்டில் பிறமாநிலத்தவர்கள் நிலம் உள்ளிட்ட சொத்துகள் வாங்கத் தடைவிதிக்க வேண்டும்.
மேற்கண்ட உரிமைகளை நிலைநிறுத்த இந்திய மற்றும் தமிழக அரசுகள் உரியவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கையை முன்வைத்து பரப்புரை இயக்கம் வரும் நவம்பர் 1- முதல் 15 வரை தமிழகமெங்கும் நடத்துவதெனத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு தீர்மானிக்கிறது.
Wednesday, September 30, 2009
முல்லை பெரியாறு: தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்: மதுரை ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் பேச்சு
இந்திய அரசைக் கண்டித்த மதுரையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டை விட்டு மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்
பெ.மணியரசன் பேச்சு
மதுரை, 29.09.09.
முல்லைப் பெரியாற்று அணைக்கு பதிலாக புதிய அணையைக் கட்டுவதற்கு கேரள மாநிலத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு வனப் பகுதியில் நில அளவை செய்ய கேரள அரசிற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம், தற்பொழுதுள்ள முல்லைப் பெரியாற்று அணைக்கு பதிலாக புதிய அணைக்க கட்டுவதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது உறுதியானது. தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இச்செயலைக் கண்டித்தும், அந்த அனுமதியை இரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று 26.09.09 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று (29.09.09) மாலை 5.00 மணியளவில் மதுரை மேல மாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தோரை த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் இர.இராசு வரவேற்றுப் பேசினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
"இனிமேல் இந்திய அரசையோ உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையோ நாம் நம்பி பயனில்லை. மாநில அரசு என்பது தமிழர்களின் உரிமைப் பறிப்புகளை மறைத்து திசைத் திருப்பும் அரசாகவே உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற தேர்தல் கட்சிகளையோ நம்பிப் முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க முடியாது. கேரளத்தைப் பொறுத்தவரை முல்லைப் பெரியாறு சிக்கலை இனச்சிக்கலாகவே பார்க்கின்றனர். தமிழர்களுக்கு தண்ணீர் தரக் கூடாது என்று காங்கிரஸ், கம்யுனிஸ்ட் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் உள்ளனர். எனவே நாமும் முல்லைப் பெரியாறு பிரச்சினையை இனப்பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்" என்று அவர் பேசினார்.
மேலும், "இரண்டு நிலைகளில் நாம் போராட வேண்டும். ஒன்று தமிழ்நாட்டிலிருந்து எந்தப் பொருளும் கேரளாவுக்கு போகாமல் மறியல் செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்.மலையாளி நடத்தும் நிறுவனங்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்" என்று அவர் தனது பேச்சில் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணியின் பொதுச் செயலாளர் தெ.காசி நாதன், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.எம்.அப்பாஸ், PD-4 முல்லைப் பெரியாறு - வைகை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த இரா.இராமசாமி, PD-3 முல்லைப் பெரியாறு - வைகை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த ந.சி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் முல்லைப் பெரியாற்று அணையால் பாதிப்புக்குள்ளாகும் உழவர்களின் சிக்கல் குறித்து விளக்கிப் பேசினார்கள்.
தியாகி இம்மானுவேல் பேரவை பொதுச் செயலாளர் பு.சந்திரபோஸ், முல்லைப் பெரியாற்று அணையின் முன்னாள் செயற் பொறியாளர் சி.சுதந்திர அமல்ராஜ், தமிழர் தேசிய இயக்கம் மதுரை மாநகரச் செயலாளர் வெ.ந.கணேசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மதுரை மாநகரச் செயலாளர் கதிர் நிலவன், தமிழப் புலிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் நாகை திருவள்ளுவன். மகளிர் ஆயம் மதுரை அமைப்பாளர் மேரி உள்ளிட்டோர் இந்திய அரசைக் கண்டித்து கண்டன உரையாற்றினர்.
நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக் குழு உறுப்பினர் அ.ஆனந்தன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்க்கு நன்றி கூறினார்.
Thursday, September 17, 2009
இந்திய அரசைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரையில் ஆர்ப்பாட்டம்
ஒப்புதல் அளித்த இந்திய அரசைக் கண்டித்து
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரையில் ஆர்ப்பாட்டம்
தஞ்சை, 15.09.09.
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிதாக அணை கட்ட கேரள அரசுக்கு இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்திருக்கிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது;
தமிழகத்தின் சட்டப்படியான உரிமையை சட்டத்திற்குப் புறம்பான வழியில் பறிப்பதாகும். இந்திய அரசின் இச்செயலைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
2006-ம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இப்பொழுதுள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது; முதற்கட்டமாக 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம். சிற்றணையில் வலுப்படுத்தும் பணிகள் சிலவற்றைச் செய்தபின் முழு அளவான 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம் என்று ஆணையிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்த கேரள அரசு முரட்டுத்தனமாக மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த இந்திய அரசு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை.
இப்பொழுதுள்ள அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்குத் தடை கோரித் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கேரள அரசு முல்லைப்பெரியாற்றில் புதிய அணைகட்ட வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளலாம் என இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய ஆட்சியாளர்களே இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் உடைப்பதாக உள்ளது.
நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு.ஜெயராம் ரமேஷ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். நடுவண் அரசின் முக்கியத்துறைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே உயர் அதிகாரிகளாக உள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தமிழக உரிமைகளுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.
காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர், ஈழத்தமிழர் உள்ளிட்ட எல்லாச் சிக்கல்களிலும் இந்திய ஆட்சியாளர்களும், இந்திய அரசின் உயர் பதவிகளில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்கள் என்பதைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களும் புரிந்துகொண்டுள்ளார்கள்.
இந்தியாவுக்குள் உள்ள ஒரு மாநில மக்களை எதிரிகள் போல் இந்திய ஆட்சியாளர்களும், கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கருதுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
செயல்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணைகட்டுவது என்பது, முற்றிலுமாக முல்லைப்பெரியாறு உரிமையைத் தமிழகத்திற்கு இலல் hமல் செய்வதற்கான சூழ்ச்சித் திட்டம் தவிர வேறு அல்ல.
வெள்ளையர் ஆட்சியில் 999 ஆண்டுகளுக்கு முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் தமிழகத்திற்கு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதற்காகவே புதிய அணை என்று கேரள அரசு வலை விரிக்கிறது.
பழைய அணையை இடித்தபின், 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் பழைய அணைக்குத்தானே தவிர புதிய அணைக்கு இல்லை என்று கேரள அரசு கைவிரித்துவிடும். புதிய அணையும் உடனடியாகக் கட்டாது.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்குப் பாசன நீர் இல்லாமல் போகும் குடிநீரே இல்லாமல் போகும். தண்ணீர் வரத்தின்றி வைகை அணை முற்றிலும் வற்றி விடும்.
எனவே இந்திய அரசு உடனடியாக, கேரளத்திற்குக் கொடுத்துள்ள ஒப்புதலை இரத்துச்செய்து, செயல்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி 145 அடி தண்ணீர் தேக்க ஆணை இடவேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டும்.
முல்லைப்பெரியாற்றில் இப்பொழுதுள்ள அணையை இடிக்க வகை செய்யும் சூழ்ச்சித்திட்டமான புதிய அணைகட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த இந்திய அரசை எதிர்த்து மதுரையில் 30.09.2009 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
Monday, September 7, 2009
தமிழகத்தில் 85 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும்
85 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்
சென்னை, 06.09.09
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திலும் 1956 மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு முன்பிருந்து தமிழகத்தைத் தங்கள் தாயகமாகக் கொண்டு வசிப்பவர்களின் வாரிசுகளுக்கு 85 விழுக்காடு வேலை வாய்ப்பு ஒதுக்க வேண்டும்.
‘மண்ணின் மக்களுக்கே வேலை’ என்ற முழக்கத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பல ஆண்டுகளாக எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்கோரிக்கையை ஓர் அளவில் ஏற்கும் வகையில் இந்திய அரசின் ஊழியர் தேர்வு ஆணையத் தலைவர் திரு. என்.கே.இரவி அண்மையில் (03.09.09) சென்னையில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் அண்மைக்காலமாக மிகமிகக் குறைவாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள் என்ற உண்மையை திரு. இரவி தமது உரை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக வடநாட்டைச் சேர்ந்த இந்திக்காரர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் போன்ற மற்ற அயல் மாநிலங்களைச் சேர்த்தவர்களே தமிழ்நாட்டில் செயல்படும் வருமானவரி அலுவலகங்கள், உற்பத்தி வரி அலுவலகங்கள், தொடர் வண்டித்துறை, பி.எச்.சி.எல். நிறுவனம் போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்க்கப்பட்;டுள்ளனர். இந்த அநீதியைக் கண்டித்தும் தமிழர்களுக்கு 85 விழுக்காடு வேலைக்கு இந்நிறுவனங்களில் ஒதுக்கீடு கோரியும் 2008 மே 20-ஆம் நாள் திருச்சி பி.எச்.இ.எல். ஆலைமுன் த.தே.பொ.க. மறியல் போராட்டம் நடத்தியது.
இப்பொழுது இந்திய அரசின் ஊழியர் தேர்வாணையத் தலைவரே உரிய விகிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் உள்;ர் மக்கள் வேலையில் இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளதானது, நிலைமையின் மோசத்தை உணர்த்துகிறது. தேர்வாணையத் தலைவர் 50 முதல் 75 விழுக்காடு வரை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்;ர் மக்களுக்கான வேலை வாய்ப்பை ஒதுக்கீடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
மண்ணின் மக்களுக்குக் குறைந்தது 85 விழுக்காடாவது வேலை வாய்ப்பை ஒதுக்கீடு செய்வது தான் நீதியாகும். அவ்வாறு ஆணையிடுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஊழியர் தேர்வாணயத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
இடம் : சென்னை
Thursday, August 27, 2009
தமிழகமெங்கும் "தமிழ்த் தேசிய எழுச்சி நாள்" போராட்டங்கள் (26.08.09)
ஈழத்தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும்
தமிழகமெங்கும் "தமிழ்த் தேசிய எழுச்சி நாள்" போராட்டங்கள்
தமிழகம் தான் இழந்த உரிமைகளை மீட்கவும்,ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அத்தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தது. அதன்படி நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.
தஞ்சை
தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மேரி முனையில் மாலை 5 மணியளவில் தொடங்கிய பேரணியை த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளது இரா.சு.முனியாண்டி பேரணியை ஒருங்கிணைத்தார். பேரணி தஞ்சை மேரி முனையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஜீப்பிட்டர் திரையரங்கம் அருகில் நிறைவடைந்தது. திரளான பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்பேரணியின் முகப்பில் சிலம்பாட்டம், சுருளாட்டம் ஆகிய வீர விளையாட்டுகள் அணிவகுத்தன. சென்ற வழி நெடுகிலும் பெருந்திரளாக மக்கள் கூடி நின்று பேரணியை பார்வையிட்டனர்.
பேரணியின் நிறைவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பெருந்திரள் மக்கள் கலந்து கொண்ட எழுச்சிமிகுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, வழக்குரைஞர் நல்லதுரை, தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சிமிகு நிறைவுரையாற்றினார். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க வேண்டியதின் அவசியம் குறித்தும், முள்வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் பெ.மணியரசன் கருத்துரை வழங்கினார்.
தமிழ்த் தேசிய எழுச்சி நாள் குறித்து சரபோஜி கல்லூரி, பாரத் கல்லூரி, கரந்தை கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகள், கரந்தை முதல் வடக்கு வாசல் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், புதலூர் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்கள் என பரவலான பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகளால் நடத்தப்பட்டிருந்தன.
சென்னை
சென்னை நினைவரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பட்டத்திற்கு த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். சென்னையில் வெளியார்களின் ஆதிக்கம் பற்றியும், தமிழகமெங்கும் வெளியார்களை திட்டமிட்டு பணிகளில் அமர்த்தி வரும் இந்திய அரசின் சூழ்ச்சியையும் அவர் விளக்கிப் பேசினார்.
சந்திரசேகரன்(உலகத் தமிழர் பேரமைப்பு), சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தமிழ் வெப்துனியா இணையத்தின் ஆசிரியர் அய்யநாதன், இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்டோர் உரை வீச்சு நிகழ்த்தினர். நிறைவாக திரைப்படப்பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன், கொட்டும் மழையில் சிறப்புரை நல்கினார்.“தமிழகத்தில் வெளியாரை வெளியேற்று!முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்!” என்பன போன்ற பல்வேறு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
சிதம்பரம் பெரியார் சதுக்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். திரளான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார். மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் பா.பிரபாகரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் ஏ.அரவிந்தன், அக்னிச் சிறகுகள் அமைப்பின் ஆ.குபேரன், அண்ணாமலைத் தமிழ் மன்றத்தின் தலைவர் தோழர் கு.மதியழகன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார். முன்னதாக சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் த.தே.பொ.க.வின் கொடியை தோழர் நா.வைகறை ஏற்றி வைத்தார். இவ்வார்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி 24.08.09 அன்று விருத்தாச்சலம் தொடங்கி திட்டக்குடி வரை வழிநெடுகிலும் பெண்ணாடம் பகுதி த.தே.பொ.க. தோழர்கள் பரப்புரை மேற்கொண்டனர். சிதம்பரம் பகுதியில் 16.8.09 அன்றும் 25.08.09 அன்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஈரோடு
ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் லோகநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள் கலை நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். தங்கம் குழுவினரின் தமிழர் எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தின் அமைப்பாளர் ப.இரத்தினசாமி் வரவேற்புரை நிகழ்த்தினார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் கண.குறிஞ்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஈரோடு பொறுப்பாளர் மோகன்ராசு, பெரியார் திராவிடர் கழகம் பொறுப்பாளர் குமரகுருபரன், சாதி ஒழிப்புப் பொதுவுடைமை முன்னணி புலி.பாண்டியன், தமிழக மக்கள் உரிமைக் கழகம் தமிழழகன், தமிழகத் தொழிலாளர் முன்னணி இரா.விசயக்குமார், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் கலைவேந்தன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். ஈரோ கலைத்தாய் சிலம்பக் குழுவினரில் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பம், சுருள்கத்தி, மான்கொம்பு, வாள்வீச்சு, தீப்பந்தம் என சிலம்பாட்டக் குழுவினர் பெருந்திரள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். நிறைவாக, பரமேஸ் - சந்திரன் குழுவினரின் தமிழ்த் தேசியச் சிக்கல்கள் என்ற தலைப்பிலான காட்சி நாடகம் நடந்தது. நிகழ்ச்சியை தமிழக இளைஞர் முன்னணி தோழர் செயக்குமார் தொகுத்து வழங்கினார். தோழர் குமரேசன்(த.தே.பொ.க.) நன்றி கூறினார்.
மதுரை
மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஜான்சி ராணி புங்கா அருகில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் ரெ.இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மாவட்டப் பொறுப்பாளர் கதிர்நிலவன், பெரியார் திராவிடர் கழகப் பொறுப்பாளர் மாயாண்டி, தமிழர் தேசிய இயக்கம் மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் செல்வம், மகளிர் ஆயும் தமிழக ஒருங்கிணைப்பாளர் அருணா, புரட்சிக்கவிஞர் பேரவை அமைப்பாளர் ஐ.செயராமன்,சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கத் தலைவர் இராசேந்திரன், பெரியார் சிந்தனை இணையம் த.செந்தில் உள்ளிட்டோர் எழுச்சி நாள் நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர். த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.ஆனந்தன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
ஓசூர்
ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. நகரச் செயலாளர் இரா.முத்தாலு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து, பெ.தி.க. மாவட்டச் செயலாளர் தோழர் தி.குமார், தமிழர் தேசிய இயக்கம் மாவட்டத் தலைவர் சி.முருகேசன், த.ம.தொ.மு. ஒப்புரவாளன், பொம்மிக்குப்பம் இராதாகிருட்டிணன், தமிழக இளைஞர் முன்னணி சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உரை வீச்சு வழங்கினர். பெண்கள் உள்ளிட்டு திரளானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் பொம்மிக்குப்பம் சி.பெருமாள் வழங்கிய எழுச்சிப் பாடல்கள் பொது மக்களை வெகுவாக ஈர்த்தது. எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் குறித்து 15, 16.08.09 நாட்களில் மக்கள் குடியிருப்புகளில் த.தே.பொ.க.வினர் பரப்புரை மேற்கொண்டது.
திருச்சி
திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது. த.தே.பொ.க. திருச்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமையில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்தில் இளந்தமிழர் இயக்கத்தின் நெறியாளர் தோழர் ம.செந்தமிழன் நிறைவுரையாற்றினார். முன்னதாக, திரு. வீ.ந.சோமசுந்தரம், வழக்கறிஞர் பானுமதி, புலவர் முருகேசன்(ம.தி.மு.க.), முனைவர் சக்குபாய், பாவாணர் தமிழ் இயக்க அமைப்பாளர் பாவலர் பரணர், திருக்குறள் முருகானந்தம், தோழர் ரெ.சு.மணி, வழக்கறிஞர் பொற்கோ, தமிழர் களம் அரங்க நாடன், புலிவளம் சோழநாடன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். நிறைவில் தோழர் வே.க.லட்சுமணன் நன்றியுரையாற்றினார்.
கோவை
கோவையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு உணவகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் பா.சங்கர் தலைமை தாங்கினார்.
திருத்துறைப்புண்டி
திருத்துறைப்புண்டி காமராஜ் சிலை அருகில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் இரமேசு தலைமை தாங்கினார். வழக்குரைஞர் தமிழ்மணி, தமிழக உழவர் முன்னணி இரா.கோவிந்தசாமி, க.அரசு, திரு ஆ.சு.மணியன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினர். முன்னதாக மன்னார்படி மற்றும் திருவாரூர் கல்லூரிகளிலும் திருத்துறைப்புண்டி ஒன்றிய கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் குறித்த பரப்புரைகள் நிகழ்ந்தன.
புதுச்சேரி
புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் சுதேசி மில் முன்பு தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி தலைமை தாங்கினார். பத்திரிக்கையாளர் வெற்றி வேந்தன், கலைச்செல்வம் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
ஆத்தூர்
சேலம் ஆத்தூரில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளந்தமிழர் இயக்கம் ஆத்தூர் பொறுப்பாளர் க.ஆனந்த் தலைமை நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக ஆத்தூர் பொறுப்பாளர் சோ.மு.சண்முகம், தமிழாசிரியர் முத்துக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர். நிறைவாக, குடந்தைத் தமிழர் கழகம் அமைப்பாளர் ச.பேகன் சிறப்புரையாற்றினார். தோழர் அச்சியப்பன் நன்றி கூறினார்.
வேலூரில் வழக்கறிஞர் ச.ந.ச.மார்த்தாண்டம் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புலவர் குமர.தன்னொளியன் நிகழ்விற்கு முன்னிலை வகித்தார். பல்வேறு தலைவர்களும் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். காவல்துறையினரின் அனுமதி மறுப்பு காரணமாக திருச்செந்தூரில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் 28ஆம் திகதியும், புதுக்கோட்டையில் 29ஆம் திகதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Saturday, August 22, 2009
Monday, July 20, 2009
“தமிழீழம் மலரும்; தமிழகமும் மலரும்!” - திருச்சியில் வெடித்த திடீர் புரட்சி
-திருச்சியில் வெடித்த திடீர் புரட்சி
(தமிழ்த் தேசியம் சிறப்பு மாநாடு குறித்து “தமிழக அரசியல்” வார இதழ் எழுதிய செய்தி)
அமெரிக்க ஏகாதிபத்தியம்’----என்ற வார்த்-தையை கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன இந்திய ஏகாதிபத்தியம்? அதற்கு விளக்கமளிக்க திருச்சியில், ‘தமிழ்த்தேசியம் சிறப்பு மாநாடு’ ஜூலை 12-ம் தேதியன்று நடந்தது.
‘தியாகி முத்துக்குமார் அரங்கம்’ என்று பெயரிடப்-பட்டிருந்த அரங்கத்தில் ‘சமர்ப்பா’ குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு மாநாடு தொடங்கியது. ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சியும் நடந்தது. இதில், இங்குள்ள தமிழர்களின் பிரச்னையைவிட, ஈழம் குறித்து வைக்கப்பட்டிருந்த படங்களே அதிகமாக இடம்பெற்றிருந்தன. காலையில் தமிழ்த் தேசிய அரங்கில், ‘தமிழர் இழந்த நில -நீர் உரிமைகள்’, ‘மொழிக்கொள்கை’, ‘தமிழ்த் தேசியமும் உலக-மயமும்’ ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தப்-பட்டது. பேசியவர்கள் அனைவரும், இந்திய அரசு தமிழர்களுக்குச் செய்த துரோகங்களையும் அதற்குத் துணைபோன திராவிட கட்சிகளின் செயல்பாடு களையும் கிழித்துத் தோரணம் கட்டினர். இதற்கு பெயர் தான், இந்திய ஏகாதிபத்தியம் என்று சொல்லாமலே வந்திருந்தவர்களுக்கு விளங்கியது.
தொடர்ந்து தமிழீழ ஆதரவு திரைப்பட உதவி இயக்குனர்கள் சார்பில், ‘கருப்புக்குரல்’ என்ற நாடகம் நடத்தப்பட்டது. மாலையில் தமிழீழ அரங்கில் ‘ஈழமும் உலக நாடுகளும்’, ‘இந்தியமும் ஈழமும்’, ‘ஈழத்தின் எதிர்காலம்’ ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசினர்.
தேசியக் கொடி எரிப்பில் சிறை சென்றவர்களுக்குப் பாராட்டு விழா, வரும் ஆகஸ்டு 20-ம் தேதி தமிழ்த் தேசிய எழுச்சி நாள் கடைப்பிடித்தல், தமிழ்நாட்டில் மூன்று வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க-வேண்டும், ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் ஆதரித்துப் பேசியவர்கள் மேல் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறை-வேற்றப்பட்டன.
பாவணர் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பரணர், “தமிழில் நாற்றம் என்றால் மணம் என்றுதான் பொருள். ஆனால் நாம் அதைப் பொருள் மாற்றி கெட்ட வாடை (துர்நாற்றம்) என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தி வருகிறோம். அதுபோல், ‘கலைஞர்’ என்ற வார்த்தையும் தவறானவர்கள் பெயரில் இருப்பதால் இனிமேல் திரைப்படத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் நம்மவர்களை ‘திறனாளர்கள்’ என்று அழைப்போம். ‘கலைஞர்’ என்ற வார்த்தைகூட தமிழுக்கும், தமிழர்களுக்கும் வேண்டாம்” என்று அவர் கூறியபோது, அரங்கமே அதிர்ந்தது. உளவுத்துறை கவனமாகக் குறித்துக்-கொண்டது.
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு பேசுகையில்தான் இன்னும் விறு-விறுப்பாக இருந்தது. “குருவி என்றால்கூட அதற்-கென்று கூடு இருக்க வேண்டும். குடும்பம் என்றால் வீடு இருக்க வேண்டும். இனம் என்றால் நாடு இருக்க வேண்டும். இது சாத்தியமா? என்று கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் சாத்தியம் ஆகாது. சாத்தியம் ஆகும் என்று நம்பி களத்தில் இறங்கினால் சாத்தியமாகாமல் போகாது. தேவை என்று தீர்மானித்து அதற்கான தேடுதலை நடத்தினால் கிடைத்தே தீரும்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் உணர்வு இழக்காதவர்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காக ராஜபக்ஷே மனம் குளிரும்படி, இங்கிருப்பவர்கள் பேச வேண்டியதில்லை. இலங்கை-யில் தமிழ் இனத்தின் போரை அடுத்த தலைமுறையும் முன்னெடுக்கும். அந்தப் போர், சிங்களவன் களைத்துப் போகும் வரையும், அவனுக்கு உதவி செய்யும் இந்தியன் களைத்துப் போகும் வரையும் தொடரும்.
தமிழ்த் தேசியம் என்றால் வெறும் தமிழ் ஈழம் மட்டுமோ, தமிழ்நாடு மட்டுமோ கிடையாது. ஓர் அரபு மொழிக்கு 21 நாடுகள் இருக்கும் போது, தமிழ் மொழிக்கு இரண்டு நாடுகள் இருக்கக் கூடாதா? இந்தியா முப்பது நாடுகளாகச் சிதறும்போது, தமிழீழம், தமிழகம் என இரண்டு நாடுகளும் உருவாகும். இந்தியக் கொடியை எரித்தது அவமரியாதை-யாம். இதில் என்ன அவமரியாதை இருக்கிறது?
அந்தக் கொடிக்கு உரிய தத்துவங்கள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல் வெறும் சடங்காகக் கருதப்-படும் கொடியை எரித்தது எப்படி அவமரியாதை-யாகும்? பிணங்களை எரிக்கிறோம் என்றால் அது இறந்தவர்களுக்குச் செய்யப்படும் அவமரியாதையா? இந்திய தேசியம் பிணம் ஆகிவிட்டது. அதைத் தகனம் செய்தோம். அதற்கு வழக்கு போடுவதா?” என்று பேசி சூட்டை அதிகப்படுத்தினார் தியாகு.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “இந்திய தேசியம் தமிழகத்தை ஒவ்வொரு துறைகளிலும் எவ்வளவு வஞ்சகம் செய்கிறது என்பதை அறிஞர்கள் திறனாய்வு நூல் எழுதி விளக்க வேண்டும். உலக நாடுகளில் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைபோல் இந்தியாவில் உள்ள மற்ற இனத்தவருக்குப் பிரச்னை என்றால் இந்திய அரசு இப்படி அலட்சியமாக இருக்குமா? தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா என எந்த மாநிலத்தோடு பிரச்னை என்றாலும், தமிழகத்தின் எதிரிகளோடு அல்லவா இந்தியா கைகோத்துக் கொள்கிறது.
இதற்கு எதிராக வீரியமான போராட்டம் நடத்த மக்களைப் பழக்க வேண்டும். இலங்கைப் போரை நிறுத்த நாம் எவ்வளவோ முயன்றும் மத்திய அரசு அசையவில்லை என்றால் நமது போராட்டத்தில் தீவிரம் இல்லை. நமது இளைஞர்கள் மனத்தில் அமைதி வருவதற்காகத் தியானம் கற்க வேண்டியதில்லை. ஆவேசம் வருவதற்கான தியானம் இருந்தால் அதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். முதலிலாவது தமிழ்த் தேசியம் குறித்துப் பேசினால் விடுதலைப்-புலிகள் ஆதரவு என்று வழக்கு போடு-வார்கள் என்ற பயம் பலருக்கு இருந்தது. இப்போதுதான் புலிகளே இல்லையே. இனிமேல் அந்தப் பயமும் தேவை இல்லை” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்த் தேச பொது-வுடமைக்கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன் இறுதியாகப் பேச வந்தார். “தமிழர்களில் பலரும் இனி ஈழம் அவ்வளவுதான் என்று நினைத் துக்கொண்டிருக்கின்றனர். அப்படி எல்லாம் இல்லை. சர்வதேச சதியின் காரணமாகச் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. காலம் சுழலும், ஆனாலும் ஈழம் வெல்லும். ஈழப்-போருக்கு ஆதரவாக நாம் இங்கு மக்களைத் திரட்ட வேண்டுமானால் இந்த மண்ணுக்கு உரிய சிக்கலை மக்கள் முன் வைக்க வேண்டும். நாம் இழந்த உரிமை-கள் குறித்த தெளிவை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
கர்நாடகத்தில் ஹொய்சால நகரில் உள்ள திபெத்திய அகதிகள் முகாமில் உள்ள வசதிகளைப்-போல் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஏன் இல்லை? என்ற சிந்தனையை மக்களிடையே விதைக்க வேண்டும். இந்த அடிப்படையிலான வேறுபாடுகள் ஏன்? என்ற சிந்தனை மக்களுக்கு வந்துவிட்டால், நமது போராட்டம் எளிதாகிவிடும். பணம், பதவி, புகழுக்கு ஆசைப்படாத இரண்டாயிரம் இளைஞர்கள் வந்தால் போதும் நமது இலக்கை அடைய முடியும். இவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் ஊக்கம் அளித்தால் போதும், தமிழ்த் தேசியம் சாத்தியம்” என்றார்.
இவ்வாறு “தமிழக அரசியல்” வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அக்கட்டுரையில், இம்மாநாட்டில் இறையாண்மைக்கு எதிராக பலரும் பேசியதால் அதனை யாரும் விரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறு.
ஈழத்தமிழர் படுகொலைக்கு முழு முதற் காரணம் இந்தியாவே என்பதால் அதன் இறையாண்மை குறித்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யாரும் கவலைப்படவில்லை.