உடனடிச்செய்திகள்
Showing posts with label கருத்தரங்கம். Show all posts
Showing posts with label கருத்தரங்கம். Show all posts

Friday, November 2, 2018

தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் நியூஜெர்சியில் கருத்தரங்கு - கலந்துரையாடல்!

ஐயா பெ. மணியரசன் அவர்களுடன்.. நியூஜெர்சியில் கருத்தரங்கு - கலந்துரையாடல்!
 “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில், வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வட அமெரிக்கத் தமிழர்கள் (NAT) அமைப்பு நியூஜெர்சி மாகாணத்தின் ஜெர்சி மாநகரத்தில் நடத்திய கருத்தரங்கில் “தமிழ்த்தேசிய வரலாறு - தமிழ்த்தேசியத்தின் அவசியம் மற்றும் தமிழ்த்தேசியத்திற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டியவை?” என்பது குறித்து 31.10.2018 அன்றிரவு கலந்துரையாடல் நடைபெற்றது.
ஐயா பெ. மணியரசன் உரை நிகழ்த்திய பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்வில், திரு. இராபர்ட் அருண் ஜேம்ஸ் (Robert Arun James ) அவர்கள் எழுதிய “அவதாரம்” என்ற கவிதைத் தொகுப்பை ஐயா மணியரசன் வெளியிட, நியூஜெர்சியில் குமாரசுவாமி தமிழ்ப் பள்ளி நடத்தி வரும் திரு. இராஜா இளங்கோவன் (Raja Elangovan ) பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழக இளைஞர்கள் நடத்தி வரும் தமிழ்த்தேசிய அறிவுசார் அமைப்பான Tamilri.com வெளியிட்ட பல்வேறு ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பை ஐயா மணியரசன் பெற்றுக்கொண்டார்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, October 26, 2018

“பறிபோகும் தமிழர் தாயகம்” மிசொரியில் கருத்தரங்கம்!

“பறிபோகும் தமிழர் தாயகம்” மிசொரியில் கருத்தரங்கம்!
“தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில், வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
இதன் முதல் கூட்டமாக, அக்டோபர் 26 அன்று மாலை அமெரிக்க நேரடிப்படி மாலை 7 மணியளவில், மிசோரி - செயிண்ட் லூயிஸ் பால்வின் பாயிண்ட் அரங்கில் “பறிபோகும் தமிழர் தாயகம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. “வட அமெரிக்கத் தமிழர்கள்” North American Tamils இக்கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளனர். கூட்டம் குறித்த தொடர்புகளுக்கு +1.314.422.3370 என்ற எண்ணை அழைக்கவும்!
 
இந்நிகழ்வில், அமெரிக்க வாழ் தமிழின உணர்வாளர்கள் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com


Thursday, June 14, 2018

மக்கள் போராட்டமும் சனநாயகமும் கருத்தரங்கம்

மக்கள் போராட்டமும் சனநாயகமும் கருத்தரங்கம்
நாள் : 16.06.2018 – காரி (சனி) மாலை 6 மணி, இடம் : சிகரம் அரங்கம், வடபழனி, சென்னை 51, குமரன் காலனி முதன்மைச் சாலை, வடபழனி பேருந்து நிலையம் பின்புறம்.

மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர், சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் பி .யோகீசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. து. அரிபரந்தாமன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன், ஊடகவியலாளர் திரு. பா. ஏகலைவன் ஆகியோர் சிறப்பரையாற்றுகிறார்கள்.

அனைவரையும் வரவேற்கிறோம்
தொடர்புக்கு : 95001 72406, 98408 48594.

Friday, May 4, 2018

காவிரி உரிமை - கருத்தரங்கம்!

காவிரி உரிமை - கருத்தரங்கம்!
“காவரி உரிமை - சிக்கலும் புரிதலும்” என்ற தலைப்பில், நாளை (04.05.2018) சென்னையில் காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை சார்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

சென்னை எழும்பூர் இக்சா அரங்கில், நாளை (மே 5) மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு, காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. செ. பூரணச்சந்திரன் தலைமை தாங்குகிறார். திரு. த. பிரபு வரவேற்கிறார்.
காவிரி குறித்த ஓவியக் கண்காட்சியை, ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. கோட்ட மேலாளர் திரு. தே. தலக்கையா தொடங்கி வைத்துப் பேசுகிறார். ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரி திரு. இரா. மூர்த்தி தொடக்கவுரையாற்றுகிறார்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், ஊடகவியலாளர் திரு. கா. அய்யநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Wednesday, April 27, 2016

“ஏழு தமிழர் விடுதலை உச்சநீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” நூல் வெளீயீட்டு விழா – கருத்தரங்கம்.

சிதம்பரத்தில் மிக எழுச்சியுடன் நடைபெற்றஏழு தமிழர் விடுதலை உச்சநீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்நூல் வெளீயீட்டு விழாகருத்தரங்கம்.
          




தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம் உயிர்வலி ஆவணப்பட திரையிடல், சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

24.04.2016 மாலை 5.30 மணிக்கு, சிதம்பரம் சபாநாயகர் தெரு, தமிழக உழவர் முன்னணி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் இரா. எல்லாளன் தலைமை ஏற்றார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா வரவேற்றுபேசினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் . முருகன், தோழர் . விடுதலைச்சுடர், பெண்ணாடம் செயலாளர் தோழர் கு. மாசிலாமணி, புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்வின் துவக்கமாக மரண தண்டனைக்கு எதிரானஉயிர்வலிஆவணப்படம் திரையிடப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் .பூ. நடராசன் வாழ்த்துரை வழங்கி படத்தை துவக்கிவைத்தார்.

கருத்தரங்கத்தின் துவக்க நிகழ்வாக தோழர் கி.வெங்கட்ராமன் எழுதியஏழுதமிழர் விடுதலை உச்ச நீதிமன்ற மறுப்புதமிழ்நாடு அரசின் அதிகாரம்நூல் வெளியீடு நடைபெற்றது. பேரறிவாளன் அவர்களின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மாள் முன்னிலைவகிக்க சந்தனக்காடு தொடரின் இயக்குனரும், திரைப்பட இயக்குநருமான .கௌதமன் அவர்கள் நூலினை வெளியிட்டுப் பேசினார்.

தமிழர் உரிமைப்போராட்டங்களில் பங்கெடுத்து ஆயுள் தண்டனை பெற்று விடுதலை ஆன பெண்ணாடம் தோழர் மாசிலாமணி (புலவர் கலியபெருமாள் தம்பி) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை பேராசிரியர் ஜா. இராசா, சீர்காழி நகர பேரியக்கச் செயலாளர் தோழர் கோ. நடராசன் , தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர்கள் திரு.வை.ரா.பாலசுப்ரமணியம், திரு.பழமலை, தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் திரு. .கோ. சிவராமன், மிட் டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் திரு. . மணிவண்ணன் ஆகியோர் சிறப்புப்படி பெற்று கருத்துரையாற்றினார்கள்.

சிதம்பரம் பகுதி மூத்த வழக்குரைஞர் .கோபாலகிருட்டிணன் , சென்னை மத்திய சட்டக் கல்லூரி சட்ட மாணவி செல்வி. .பா. வையவி ஆகியோர் நூல் குறித்து திறனாய்வு உரையாற்றினார்.

நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.



தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் . குபேரன் ஒருங்கிணைத்தார். தோழர் சோ. யாழவன் நன்றியுரையாற்றினார்.

முன்னதாக சிதம்பரம் மேலவீதி பெல்காம் அனந்தம்மாள் அரங்கில் நடைபெற இருந்த இந் நிகழ்வு தி.மு. தலைவர் கருணாநிதி சிதம்பரம் வருகையை காரணம் கூறி கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது.
எனவே, உடனடியாக இடம் மாற்றி இந் நிகழ்வு நடத்தப்பட்டாலும் அரங்கு நிறைந்த கூட்டமாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமைப்புத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும், மட்டுமல்லாது ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர்.



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT