உடனடிச்செய்திகள்
Showing posts with label பெ. மணியரசன் இரங்கல்!. Show all posts
Showing posts with label பெ. மணியரசன் இரங்கல்!. Show all posts

Wednesday, August 25, 2021

தமிழ்த்தேசியப் போராளி தோழர் கோவேந்தனுக்கு வீரவணக்கம் - ஐயா பெ. மணியரசன் இரங்கல்!


தமிழ்த்தேசியப் போராளி 
தோழர் கோவேந்தனுக்கு வீரவணக்கம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
 ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், தமிழர் கண்ணோட்டம் மாத இதழ், அலுவலகப் பொறுப்பாளருமான தோழர் வி.கோவேந்தன் என்கிற கோபிநாத் அவர்கள் உடல் நலம் இன்றி தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று (25.08.2021) பிற்பகல் காலமான பெரும் துயரச் செய்தி பேர் இடியாய் விழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த தோழர் கோவேந்தன் காலமானது தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்குப் பேரிழப்பாகும்.
முதுகலைப்  பட்டம் பெற்ற கோவேந்தன் கணிப்பொறி செயல்பாடுகளிலும் போராட்ட ஒருங்கிணைப்புகளிலும் சிறந்து விளங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பணியாற்றினார். தோழருடைய இழப்பு சொல்லொணாத் துன்பம் தருகிறது.
தோழர் கோவேந்தன் அவர்களுடைய இறுதி ஊர்வலம் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம் ஒன்றாவது வார்டு சிவ சண்முகம் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து நாளை (26.08.2021) வியாழக்கிழமை பகல் 12.00 மணிக்குப் புறப்படும் என்பதைத் துயரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்த்தேசிய உணர்வு நிரம்பிய தோழர் கோவேந்தன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய பெற்றோருக்கும் அன்பு உடன் பிறப்புகளுக்கும் ஆருயிர் துணைவியார் செந்தாமரை அவர்களுக்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ. மணியரசன்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Monday, August 9, 2021

கடல்தீபன் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது ஐயா பெ. மணியரசன் இரங்கல்!




கடல்தீபன் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது

தமிழ்த்தேசியப் பேரியக்கத் 
தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!


நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தம்பி கடல்தீபன் காலமான செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. தமிழீழத்தில் நம் இனம் மக்கள் கூட்டம் கூட்டமாக சிங்கள பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்த போது அந்தத் துயரம் பொறுக்காமல் வெளிநாட்டில் வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் தாயக மக்களைத் திரட்டுவதற்கு களப்பணியில் இறங்கியவர் தம்பி கடல் தீபன்.

நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் கடலூரில் நடத்தினார். அதனால் ஆத்திமுற்ற ஆட்சியாளர்கள் ஏதேச் சதிகார குண்டர் சட்டத்தில் கடல் தீபனை சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் வாதாடி 72 நாள் சிறைவாசகத்திற்கு பிறகு விடுதலை ஆனார்.

புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டபோது மக்களைக் காப்பாற்றக் களம் இறங்கியவர். தானே புயலில் அவர் ஆற்றிய  மக்களைப் பாதுகாக்கும் பணியை அனைவரும் பாராட்டினர். அதே போல் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றக் குருதிக்கொடை கொடுப்பதில் சாதனைப் படைத்தவர். அதற்கான பாராட்டுகளைப் பெற்றவர். நாம் தமிழர் கட்சியில் துடிப்புமிக்க தமிழ்த்தேசியராய் ஆற்றல் மிகு களப்பணி வீரராய் பணியாற்றிய தம்பி கடல் தீபனின் மறைவு வேதனை மிக்கது. கடல் தீபன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Sunday, December 20, 2020

"புது தில்லி முற்றுகைப் போராட்டத்தில் உயிரீகம் செய்த வேளாண்மைக் காப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம்!" ஐயா பெ.மணியரசன் உரை!

"புது தில்லி முற்றுகைப் போராட்டத்தில் உயிரீகம்  செய்த  வேளாண்மைக் காப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம்!"



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, July 7, 2020

தமிழின வரலாற்றில் தடம் பதித்தவர் மன்னர்மன்னன் பாரதிதாசன்! பெ. மணியரசன் இரங்கல்!


தமிழின வரலாற்றில் தடம் பதித்தவர்
மன்னர்மன்னன் பாரதிதாசன்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகன் மன்னர்மன்னன், பாவேந்தரின் தொடர் அடையாளமாய் வாழ்ந்தவர். பாவேந்தர் வரலாற்று நூலும் பல்வேறு இலக்கிய நூல்களும் எழுதியவர். பாவேந்தருக்கு இருந்த பரந்த செல்வாக்கு மண்டலத்துடன், தொடர்ந்து தொடர்பு வைத்து உயிரோட்டமாக பாவேந்தரின் தொடர்ச்சியை எடுத்துச் சென்றவர்.
தமிழ் – தமிழினம் இரண்டுக்கும் முதன்மை கொடுத்து சிந்தித்தவர்; செயல்பட்டவர். தன் மகனுக்கு கோபதி என்று இருந்த பெயரை மன்னர்மன்னன் என்று தூயதமிழாக்கியவர் பாவேந்தர். அதன்பிறகு, தமிழ் கூறும் நல்லுலகில் மன்னர்மன்னன் என்று பெயர் வைப்பது இயல்பாயிற்று!
இவ்வாறு, பல்வேறு வகைகளில், தமிழின வரலாற்றில் தடம் பதித்த மன்னர்மன்னன் அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. ஐயா அவர்களின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT