உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழக இளைஞர் முன்னணி. Show all posts
Showing posts with label தமிழக இளைஞர் முன்னணி. Show all posts

Saturday, August 23, 2014

கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும்! தமிழக இளைஞர் முன்னணி கோரிக்கை!


கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும்!  தமிழக இளைஞர் முன்னணி கோரிக்கை!
 
கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு செயல்படுத்தப்படும் என்றும், அதற்கு முதல் கட்டமாக 730 மதுக்கடைகள் மூடப்படும் என்றும் பத்தாண்டுகளில் முழுமையான மதுவிலக்கு செயல்படுத்தப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகை விகிதப்படி, இந்தியாவிலேயே அதிகளவில் மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் எனப் பெயர்பட்ட, கேரளா அரசின் எடுக்கப்பட்ட இம்முடிவு, வரவேற்கத்தக்கது; பின்பற்றத்தக்கது.


தமிழ்நாட்டில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள், தமிழக இளையோரை சீரழிந்த பாதைக்குக் கொண்டு சென்றுள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்லும் இளையோர், உடலுழைப்புத் தொழிலாளர்கள் என கணிசமான அளவிலான இளைஞர்களை மது அடிமைகளாக டாஸ்மாக் கடைகள் மாற்றியுள்ளன. மது அருந்த பணம் கேட்டு கொலை, கொள்ளையில் ஈடுபடுதல், மது அருந்திவிட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தல் என மதுவினால் ஏற்படும் சட்டம் ஒழுங்குச் சிக்கல்களும், பெரும் சவாலாக உள்ளன.

மது அருந்தியதால் வாழ்க்கையை இழந்த இளைஞர்களும், குடும்பங்களும் தனிமரமாக நிற்கும் சூழலில், தமிழகத்தின் பல பகுதிகளில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி அந்தந்த பகுதிகளில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2013ஆம் ஆண்டு சனவரி 4ஆம் நாள், தமிழகமெங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப்பூட்டும் போராட்டத்தில், தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் ஈடுபட்டு, கைதாகி சிறை சென்றனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டால், தமிழக அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும், தமிழக அரசின் ‘இலவச’த் திட்டங்கள் இதன் காரணமாக பாதிக்கப்படும் என்றும் காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த வருமான இழப்பை சரிகட்ட பல வழிகள் உள்ளன.

2012ஆம் ஆண்டு, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலித்த உற்பத்தி வரி (Central Excise Duty) 9376 கோடி ரூபாய். சுங்க வரி 29875 கோடி ரூபாய். தமிழகத்தில் இருந்து இந்திய அரசு வசூலித்த நிறுவன வருமான வரி, தனி நபர் வருமான வரி, செல்வ வரி ஆகியவை மொத்தம் 34,586 கோடி ரூபாய். தமிழகத்திலிருந்து இந்திய அரசுக்கு கிடைத்த, சேவை வரி 2012ஆம் ஆண்டில் மட்டும் 5594 கோடி ரூபாய். இவ்வாறு, இந்திய அரசு, தமிழகத்திலிருந்து அள்ளிச் சென்ற வரி வருமானம் மட்டும், 79,631 கோடி ரூபாய் ஆகும். மது வருமானத்தால் கிடைப்பதாகச் சொல்லப்படும் 20,000 கோடியை விட இது மூன்று மடங்கு அதிகமானத் தொகையாகும்.

இந்த வருமானத்தை, தமிழக அரசு முழுவதுமாகவோ, பகுதியாகவோ கேட்டுப் பெற்றால், டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்து மூடவதால் கிடைக்கும் வரி வருமானத்தை, இழப்பேதும் இல்லாமல் தவிர்க்கலாம். எனவே, தமிழக அரசு இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். இதைச் செய்யாமல், வரி வருமானத்தைக் காரணம் காட்டி டாஸ்மாக் கடைகளை மேலும் மேலும் திறக்கச் செய்வதும், விழாக்காலங்களில் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கைகளில் இறங்குவதும் சரியான நடவடிக்கையல்ல! கண்களை விற்று ஓவியம் வாங்குவதற்குச் சமமாகும்!

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, கேரளாவைப் பின்பற்றி, தமிழக அரசும், படிப்படியாக மதுவிலக்கைச் செயல்படுத்தி, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழக இளைஞர் முன்னணி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இன்னணம்,
கோ.மாரிமுத்து, 
தலைவர், தமிழக இளைஞர் முன்னணி.
க.அருணபாரதி, 
பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி.


அறிக்கை வெளியீடு;

செய்தித் தொடர்பகம்,
தமிழக இளைஞர் முன்னணி
பேச: 7667077075

Wednesday, March 20, 2013

தமிழகம் எங்கும் : அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது

தமிழகம் எங்கும் : அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது

IMG_9612 - Copy copy

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைத்தும், ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பதாகவும் உள்ள வகையில், அமெரிக்கா முன்வைத்துள்ள ஐ.நா. தீர்மானத்தையும், இலங்கை அரசைப் பாராட்டி இந்திய அரசு ஜெனீவாவில் அளித்துள்ள அறிக்கையும், இன்று(19.03.2013) தமிழக இளைஞர் முன்னணி சார்பில், பாடையில் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 

சென்னை


சென்னை நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வாயிலிருந்து, தமிழக இளைஞா முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையில் துவங்கிய பேரணியில், அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டது.
நுங்கம்பாக்கம் சுடுகாடு வரை சென்ற பேரணியின் முடிவில், சுடுகாடு வாயிலில் அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசுக் கொடியும், சிங்களப் பேரினவாத அரசின் கொடியும் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத், தாம்பரம் தலைவர் தோழர் இளங்குமரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் அகத்தாய்வன் உள்ளிட்ட த.இ.மு. நிர்வாகிகளும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், கொண்டல்சாமி உள்ளிட்டவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். 

ஓசூர்
Hosur2


ஓசூரில், இன்று காலை பேருந்து நிலையம் முன்பு 10.30 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில், மோசடியான அமெரிக்கத் தீர்மானமும், இந்திய அரசின் அறிக்கையும் பாடை கட்டி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. போராட்டத்தில், கிருட்டிணகிரி நகர அமைப்பாளர் தோழர் பெ.ஈசுவரன், தோழர் செம்பரிதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில், திரளான உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை

IMG_9622 copy

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி – தமிழக இளைஞர் முன்னணி சார்பில், அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் செனீவா அறிக்கையைக் கண்டித்தும் இவ்விரு அறிக்கைகளும் பாடையில் கொண்டு செல்லப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது.

IMG_9689 copy


நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, த.இ.மு செயலாளர் தோழர் தட்சிணாமூர்த்தி, புலவர் இரத்தினவேலவர், ம.தி.மு.க. ஒன்றீயச் செயலாளர் இரா.நந்தகுமார், விடுதலைத் தமிழ்ப் புலிகள் அமைப்புச்செயலாளர் தோழர் அருண்மாசிலாமாணி, புதியத் தமிழகம் ஒன்றியச் செயலாளர் இராசமோகன், நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் அர்புதராசு உள்ளிட்ட திரளான முன்னணியாளர்களும், பொது மக்களும் இதில் திரளாகப் பங்கேற்றனர்.

IMG_9717 copy


தமிழக இளைஞர் முன்னணித் துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் தலைமையிலான தோழர்கள், இந்திய அரசின் அறிக்கை மற்றும் அமெரிக்கத் தீர்மானத்தை இராசபக்சே உருவபொம்மையுடன் கட்டி பாடையில் கொண்டு வந்து, எழுச்சி முழக்கங்களுக்கிடையேத் தீயிட்டுக் கொளுத்தினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேரணியை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.

சிதம்பரம்
Chid1


சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், இன்று காலை தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் மோசடி அறிக்கையையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திரளான இளைஞர்களும் பங்கேற்றனர். தமிழக இளைஞர் முன்னணி மூத்தத் தோழர் நா.வைகறை , ஐ.நா. மன்ற அமெரிக்கத் தீர்மானம் மற்றும் அதில் இந்திய அரசு முன்வைத்த அறிக்கை ஆகியவை ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் வஞ்சக செயல் என்பதை விளக்கிப் பேசினார்.
அப்போது இந்திய – சிங்கள அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுக்கு இடையே ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய -அமெரிக்க தீர்மானத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பெண்ணாடம்
பெண்ணாடம் பேருந்துநிலையம் அருகில் மாலை 5 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு த.இ.மு.நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு தலைமையேற்றார்.
தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சித் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், ஆசிரியர் மாசிலாமணி, தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் இராமகிருட்டிணன், மனித நேயப் பேரவை பஞ்சநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அமெரிக்கத் தீர்மானம் தீயீட்டுக் கொளுத்தப் பட்டது, இதில் திரளான தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.

திருச்சி

திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழக இளைஞர் முன்னணி சார்பில் உண்ணாப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. உண்ணாப்போராட்டத்தை தமிழக இளைஞர் முன்னனி திருச்சி அமைப்பாளர் தோழர் த.தியாகராசன் தொடக்கி வைத்தார்.
தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பாவலர் முவ.பரணர், ம.தி.மு.க. அரசியல் ஆலோசகர் புலவர் முருகேசன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்.
தமிழ் கலை இலக்கியப் பேரவை செயலாளர் தோழர் இராசாரகுநாதன், தலைவர் இரெ.சு.மணி, மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் தோழர் பானுமதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் கவித்துவன், தோழர் இனியன், தூவாக்குடி த.தே.பொ.க. பொறுப்பாளர் தோழர் வி.க.லெட்சுமணன்,ம.தி.மு.க. திருச்சி மாவட்டச் செயலாளர் மலர்மன்னன், தேசிய முற்போக்குத் திராவிட கழகம் சட்டமன்ற உறுப்பினர் திரு செந்தில் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திரளான தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Tuesday, March 19, 2013

அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது




தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைத்தும், ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பதாகவும் உள்ள வகையில், அமெரிக்கா முன்வைத்துள்ள ஐ.நா. தீர்மானத்தையும், இலங்கை அரசைப் பாராட்டி இந்திய அரசு ஜெனீவாவில் அளித்துள்ள அறிக்கையும், இன்று(19.03.2013) தமிழக இளைஞர் முன்னணி சார்பில், பாடையில் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

சென்னை




சென்னை நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வாயிலிருந்து, தமிழக இளைஞா முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையில் துவங்கிய பேரணியில், அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டது.

நுங்கம்பாக்கம் சுடுகாடு வரை சென்ற பேரணியின் முடிவில், சுடுகாடு வாயிலில் அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசுக் கொடியும், சிங்களப் பேரினவாத அரசின் கொடியும் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத், தாம்பரம் தலைவர் தோழர் இளங்குமரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் அகத்தாய்வன் உள்ளிட்ட த.இ.மு. நிர்வாகிகளும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், கொண்டல்சாமி உள்ளிட்டவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.  

ஓசூர்



ஓசூரில், இன்று காலை பேருந்து நிலையம் முன்பு 10.30 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில், மோசடியான அமெரிக்கத் தீர்மானமும், இந்திய அரசின் அறிக்கையும் பாடை கட்டி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. போராட்டத்தில், கிருட்டிணகிரி நகர அமைப்பாளர் தோழர் பெ.ஈசுவரன், தோழர் செம்பரிதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில், திரளான உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்



சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், இன்று காலை தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் .குபேரன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் மோசடி அறிக்கையையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திரளான இளைஞர்களும் பங்கேற்றனர். தமிழக இளைஞர் முன்னணி மூத்தத் தோழர் நா.வைகறை , .நா. மன்ற அமெரிக்கத் தீர்மானம் மற்றும் அதில் இந்திய அரசு முன்வைத்த அறிக்கை ஆகியவை ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் வஞ்சக செயல் என்பதை விளக்கிப் பேசினார்.

அப்போது இந்திய - சிங்கள அரசுகளுக்கு  எதிரா முழக்கங்களுக்கு இடையே ஈழத்தமிழர்களுக்கு எதிரான  இந்திய -அமெரிக்க தீர்மானத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக  மாணவர்கள், சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

Wednesday, March 6, 2013

“ஆந்திர மதுக்கான் நிறுவனத்தை விரட்டியடிப்போம்” - புதுக்குடி ஆர்ப்பாட்டத்தில் சூளுரை!


ஆந்திர மதுக்கான் நிறுவனத்தை விரட்டியடிப்போம்
புதுக்குடி ஆர்ப்பாட்டத்தில் சூளுரை!


திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்குடிவளம்பக்குடிதிருமலைசத்திரம் உள்ளிட்டகிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தராத ஆந்திர மதுக்கான் நிறுவனத்தைக் கண்டித்தும்அதற்கு துணை போகும் இந்திய அரசுதேசிய நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்தும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் நேற்று (05.03.2013) புதுக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேசிய தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் .காமராசுபுதுக்குடி பேருந்துநிறுத்தத்தில் மதுக்கான் நிறுவனத்தால் மின் விளக்குகள் அமைக்கப்பட்டும் கூட அவை கடந்த ஓராண்டிற்கும் மேலாக எரியாத நிலையில்,இருட்டில் சாலையை கடந்து இதுவரை பத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதையும்பலர் உடல் அங்கங்களை இழந்தது குறித்தும்ஆதாரங்களுடன் பேசினார்.

தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் .தேவதாசு பேசும் போதுஇங்கே போடப்பட்டுள்ள விளக்குகள் ஓராண்டாகஎரியவில்லையென்றால் எதற்காக மின்கம்பங்களை நட்டிருக்கீறீர்கள் எனக் கேட்டார்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சைமாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு பேசும் போதுமதுக்கான் நிறுவனத்திடம் கையூட்டுப் பெறுகின்ற காவல்துறை அதிகாரிகளுக்குகடுமையான எச்சரிக்கை விடுத்தார்

தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் பேசும் போதுஇவ்வார்ப்பாட்டம் ஓர் எச்சரிக்கை தான் என்றும்,அடுத்துமதுக்கான் நிறுவன அலுவலகத்தை மக்களைத் திரட்டிச் சென்று முற்றுகையிடுவோம் என்றும் பலத்த கரவொலிக்கிடையேஅறிவித்தார்.

.தே.பொ.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை பேசும் போதுஇந்திய அரசின் தமிழின விரோதச் செயல்களையும்,மதுக்கடைகளை வைத்து தமிழ்நாட்டு இளைஞர்களை சீரழிக்கும் தமிழக அரசையும்இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் ஏற்படுகின்றவிபத்துகள் பற்றியும் விரிவாகப் பேசினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதிமகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மீனா,மேலத்திருவிழாப்பட்டி ..முசெயலாளர் தோழர்  .கணேசன் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினர்ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்துபேசிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் .அருணபாரதிஇந்திய அரசு நெடுஞ்சாலைகளை தனியாரிடம்விற்றுவிட்டதையும்அத்தனியார் நிறுவனங்கள் கிராம மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அடிப்படை வசதிகளைக் கூட செய்துத் தரமறுப்பதையும் எடுத்துரைத்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில்புதுக்குடிவளம்பக்குடிநரிகுறவன்பட்டிசெங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.









(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT