உடனடிச்செய்திகள்
Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

Sunday, April 14, 2019

பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் தமிழர்களுக்குத் தடை! வடவர்க்கே வேலை! திருச்சி, பொன்மலை பணிமனையில் த.தே.பே. நடத்தும் தமிழர் மறியல் போராட்டம்!

பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் தமிழர்களுக்குத் தடை! வடவர்க்கே வேலை! திருச்சி, பொன்மலை பணிமனையில் த.தே.பே. நடத்தும் தமிழர் மறியல் போராட்டம்!
#TamilnaduJobsForTamils

தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் அளவில் வெளி மாநிலத்தவர்கள் குடியேறிக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் - அலுவலகங்கள் - தொழிற்சாலைகள் அனைத்திலும் இந்திக்காரர்களை இந்திய அரசு திட்டமிட்ட முறையில் பணியமர்த்தி வருகின்றது.

அண்மையில் திருச்சி பொன்மலையில் தென்னகத் தொடர்வண்டித் துறையில் பழகுநர் பணியிடங்களுக்காக எடுக்கப்பட்ட 1765 பேரில் 1,600 பேர் வடமாநிலத்தவர் ஆவர். அவர்களில் 300 பேர், திருச்சி பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் பணியில் சேர்ந்துள்ளனர்.

இவர்களை வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தி, வரும் தி.பி. 2050 சித்திரை 20 - 3.5.2019 வெள்ளி காலை 11 மணிக்கு, திருச்சி, பொன்மலை பணிமனை (ஒர்க்சாப்) முன்பு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில், தமிழர் மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.

தொடர்வண்டித்துறை (இரயில்வே) நிர்வாகமே!
பொன்மலைப் பணிமனையில் புகுத்தப்பட்டுள்ள வெளியாரை வெளியேற்று! புதிதாகப் புகுந்துள்ள 300 பழகுநர் (அப்ரண்டீஸ்) அனைவரையும் வெளியேற்று! அந்த வேலைகளைத் தமிழர்களுக்குக் கொடு!

இந்திய அரசே!
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 10 விழுக்காட்டிற்கு மேல் பணியில் உள்ள வெளிமாநிலத்தார் அனைவரையும் வெளியேற்று! 90 விழுக்காடு வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்கு! தமிழர் தாயகமான தமிழ்நாட்டை அயல் இனத்தார் மண்டலம் ஆக்காதே!

உனது சதித்திட்டத்தைத் தகர்ப்போம்! தமிழர் தாயகம் காப்போம்!

தமிழ்நாடு அரசே! 
தமிழர்களுக்குரிய வேலைகளை அயலார் பறிக்கத் துணைப்போவதேன்? தமிழ்நாட்டை அயலார் மண்டலமாக்கும் தில்லியின் சதியை அனுமதிப்பதேன்? மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கு கர்நாடகம், குசராத், மராட்டியம், சதீசுகட் மாநிலங்களில் 
உள்ளது போல் தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற மறுப்பதேன்?

தமிழ்நாட்டு ஆளுங்கட்சி - ஆண்டகட்சித் தலைவர்களே!
உங்கள் பணி தமிழர்களைக் காப்பதா? தில்லிக்குக் கங்காணி வேலை பார்ப்பதா?

தமிழர்களே,
உங்கள் உரிமைத் தாயகம் அயலார் மண்டலமாவதை அறிந்தீர்களா? ஒரு கோடித் தமிழ் இளையோர் வேலை இன்றி 
வீதிகளில் அலைவதை உணர்ந்தீர்களா? “அறிந்தோம்; உணர்ந்தோம்” என்பது உங்கள் விடையானால் வாய்ப்புள்ளோர் மறியலுக்கு வாருங்கள்; வாய்ப்பில்லாதோர் இச்செய்தியைப் பரப்புங்கள்!

#TamilnaduJobsForTamils

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, September 5, 2018

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு வீரவணக்கம்!

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கம்!
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய வீரத்தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளையொட்டி, திருச்சியில் இன்று (05.09.2018) வ.உ.சி. திருவுருவச் சிலைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் இனியன், வெள்ளம்மாள், பொறியாளர் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
வீரத்தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு வீரவணக்கங்கள்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Monday, September 3, 2018

தடை நீங்கி - மதுரை உயர் நீதிமன்ற அனுமதியுடன் திருச்சியில் சனநாயகம் காத்திடும் ஒன்றுகூடல்!

தடை நீங்கி - மதுரை உயர் நீதிமன்ற அனுமதியுடன் திருச்சியில் சனநாயகம் காத்திட தமிழர் ஒன்றுகூடல்!!
தமிழ்நாட்டில் சனநாயக மறுப்புச் சூழல் நிலவி வரும் நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் “சனநாயகம் காத்திட தமிழர் ஒன்று கூடல்” என்ற தலைப்பில், வரும் 09.09.2018 - ஞாயிறு அன்று மாலை திருச்சியில் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.
 
கடந்த சூலை மாதம் நடத்தப்படவிருந்த இப்பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுகுறித்து முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, உயர் நீதிமன்றம் கூட்டத்திற்கான தடையை நீக்கி அனுமதி வழங்கி ஆணையிட்டது.
 
இதனையடுத்து, தடை நீங்கி - வரும் 09.09.2018 - ஞாயிறு மாலை 6 மணியளவில் திருச்சி உறையூர் குறத்தெருவில் இப்பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகர் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமை தாங்குகிறார். தோழர் வே.க. இலட்சுமணன் வரவேற்கிறார். பெண்ணாடம் திருவள்ளுவர் தப்பாட்டக் கலைக்குழுவினரின் எழுச்சிமிகு கலை நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
 
தமிழர் தேசிய முன்னணி துணைத் தலைவர் வழக்கறிஞர் த. பானுமதி, நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் பெரியார் சரவணன், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை, பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இரா. பிரபு, சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் அ. இரவிக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். தோழர் வே.பூ. இராமராசு நன்றி கூறுகிறார்.
 
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, July 6, 2017

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியில் 07.07.2017 அன்று காலை.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியில் 07.07.2017 அன்று காலை.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!
கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும், திருச்சியில் வரும் வெள்ளியன்று (07.07.2017) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

திருச்சி - சிந்தாமணி அண்ணா சிலை அருகில், 07.07.2017 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இவ் ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்பினரும் தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

கதிராமங்கலத்தைக் காப்பதற்கான போராட்டம், அதோடு நின்று விடாமல், ஒட்டுமொத்தக் காவிரிப்படுகையையும் காப்பதற்கான போராட்டமாக விரிவடைய வேண்டும்.

எனவே, தமிழின உணர்வாளர்களும் சனநாயக ஆற்றல்களும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, March 9, 2017

மீனவர் பிரிட்சோ படுகொலை :திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மீனவர் பிரிட்சோ படுகொலை :திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழர்களின் கச்சத்தீவை சிங்கள இனவெறி அரசுக்குத் தாரை வார்த்ததாலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாததாலும் இதுவரை சற்றொப்ப 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இராமேசுவரத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர், சிங்கள இனவெறிக் கடற்படையினரால் கடந்த 07.03.2017 அன்றிரவு நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இன்னொரு மீனவர் சரோன் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
மீனவர் பிரிட்சோ படுகொலையைக் கண்டித்து, நேற்று (08.03.2017) மாலை, திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் முகிலினியன் தலைமை தாங்கினார். மீனவர் துயரத்தை உருவகப்படுத்தும் வகையில் அருட்திரு. மனுவேல் அவர்கள் உணர்ச்சிமிகுப் பாடலைப் பாடி எழுச்சியூட்டினார். மீனவர் பிரட்சோ படுகொலையைக் கண்டித்தும், சிங்கள - இந்திய அரசுகளின் தமிழர் விரோதச் செயல்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகர்ச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் கண்டன உரையாற்றினார். மகளிர் ஆயம் தோழர் வெள்ளம்மாள், வேலுநாச்சியாரின் ஆட்சியின் போது பெண் போராளியாகச் செயல்பட்ட தற்கொடைப் போராளி குயிலியையும் இன்றைய மகளிர் நாளையும் ஒப்பிட்டு, இப்படிப்பட்ட தமிழ் இனத்திற்கு நேர்ந்துள்ள துயரங்களை வெளிப்படுத்தி உரையாற்றினார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி அமைப்பாளர் பாவலர் நா. இராசாரகுநாதன், பைந்தமிழ் இயக்க இயக்குநர் புலவர் தமிழாளன், தமிழர் தேசிய முன்னணி துணைத் தலைவர் வழக்கறிஞர் த. பானுமதி, தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை, பொறியாளர் முத்துக்குமாரசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மு. தியாகராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT