உடனடிச்செய்திகள்

Tuesday, August 31, 2021

எரியும் வினாக்கள்! இதமான விடைகள்! | மறுபக்கத்தின் மர்மங்கள்! - ஐயா பெ. மணியரசன் உரை!

எரியும் வினாக்கள்! இதமான விடைகள்! | மறுபக்கத்தின் மர்மங்கள்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

இந்தியாவை ஏலம் விடுகிறார் மோடி தமிழ்நாடு மிஞ்சுமா? - ஐயா பெ. மணியரசன் உரை!

இந்தியாவை ஏலம் விடுகிறார் 

மோடி தமிழ்நாடு மிஞ்சுமா? 


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, August 27, 2021

இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியச் சட்டங்கள்! - ஐயா பெ. மணியரசன் உரை!

இந்திய ஏகாதிபத்தியத்தின்

 காலனியச் சட்டங்கள்! 


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, August 25, 2021

தமிழ்த்தேசியப் போராளி தோழர் கோவேந்தனுக்கு வீரவணக்கம் - ஐயா பெ. மணியரசன் இரங்கல்!


தமிழ்த்தேசியப் போராளி 
தோழர் கோவேந்தனுக்கு வீரவணக்கம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
 ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், தமிழர் கண்ணோட்டம் மாத இதழ், அலுவலகப் பொறுப்பாளருமான தோழர் வி.கோவேந்தன் என்கிற கோபிநாத் அவர்கள் உடல் நலம் இன்றி தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று (25.08.2021) பிற்பகல் காலமான பெரும் துயரச் செய்தி பேர் இடியாய் விழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த தோழர் கோவேந்தன் காலமானது தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்குப் பேரிழப்பாகும்.
முதுகலைப்  பட்டம் பெற்ற கோவேந்தன் கணிப்பொறி செயல்பாடுகளிலும் போராட்ட ஒருங்கிணைப்புகளிலும் சிறந்து விளங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பணியாற்றினார். தோழருடைய இழப்பு சொல்லொணாத் துன்பம் தருகிறது.
தோழர் கோவேந்தன் அவர்களுடைய இறுதி ஊர்வலம் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம் ஒன்றாவது வார்டு சிவ சண்முகம் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து நாளை (26.08.2021) வியாழக்கிழமை பகல் 12.00 மணிக்குப் புறப்படும் என்பதைத் துயரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்த்தேசிய உணர்வு நிரம்பிய தோழர் கோவேந்தன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய பெற்றோருக்கும் அன்பு உடன் பிறப்புகளுக்கும் ஆருயிர் துணைவியார் செந்தாமரை அவர்களுக்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ. மணியரசன்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Thursday, August 19, 2021

"தாலிபான்கள் ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து! மோடி விரும்பும் இசுலாமியக் குடியரசு!" - 'மசாலா விஷன்' ஊடகத்துக்கு.. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"தாலிபான்கள் ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து! மோடி விரும்பும் இசுலாமியக் குடியரசு!"



'மசாலா விஷன்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன்  நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, August 16, 2021

ஸ்டாலின் பெருமிதமும்! சித்தராமையாவின் சீற்றமும்! - ஐயா பெ.மணியரசன் உரை!

ஸ்டாலின் பெருமிதமும்! 

சித்தராமையாவின் சீற்றமும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, August 13, 2021

ஊழல் சாக்கடையின் ஒரு கிளை வேலுமணி - ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்!

ஊழல் சாக்கடையின் ஒரு 

கிளை வேலுமணி


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, August 12, 2021

தேர்தலைப் புறக்கணிப்போர் கோரிக்கை மனு கொடுக்கலாமா? ஐயா பெ. மணியரசன் உரை!

தேர்தலைப் புறக்கணிப்போர் கோரிக்கை மனு கொடுக்கலாமா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"இராசேந்திர சோழன் உட்பட தமிழ் மன்னர்களுக்கு சாதி கிடையாது - இனமே உண்டு!" "பேரவை" ஊடகத்துக்கு..ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"இராசேந்திர சோழன் உட்பட தமிழ் மன்னர்களுக்கு சாதி கிடையாது 

- இனமே உண்டு!" 


"பேரவை" ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, August 10, 2021

"திமுகவின் வெள்ளை அறிக்கை இலாபமா? நஷ்டமா?" 'ழகரம்' ஊடகத்துக்கு..ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"திமுகவின் வெள்ளை அறிக்கை

 இலாபமா? நஷ்டமா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆவதை எதிர்ப்போரை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்! - ஐயா பெ.மணியரசன் அறிக்கை!



அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆவதை எதிர்ப்போரை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்!

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் 
ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

கடந்த 6.7.2021 அன்று இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த பல்வேறு கோயில்களின் நிர்வாக அதிகாரிகள் அந்தந்த கோயிலுக்குத் தேவையான அர்ச்சகர், ஓதுவார், இசைக் கலைஞர்கள், தட்டச்சர்கள், சமயல்கார ர்கள் உட்பட பல்வேறு பணிகளுக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு தனித்தனியே விளம்பரங்கள் கொடுத்திருந்தனர். விண்ணப்பங்கள் வந்து சேர்வதற்கான கடைசி நாள் 7.8.2021 ஆகும். விளம்பரங்களை எதிர்த்தும் தடைசெய்யக்கோரியும் அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் அவர்களிடம் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு மனுவில், முத்துக்குமார் தவறான தகவல்களைத் தந்துள்ளார். 

அர்ச்சகர் பணிக்குக் குறைந்தது 10ஆம் வகுப்புத் தேர்ச்சி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் கையொப்பமிட்டு தனித்தனியே கொடுத்துள்ள விளம்பரங்களில் அர்ச்சகர் பணிக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்றும் வேத ஆகம பயிற்சிப் பள்ளிகளில் படித்துச் சான்று பெற்றிருக்க வேண்டும் என்றும், வேத மந்திரங்கள் நன்கு உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும், 18 வயதில் இருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 

மேற்படி விளம்பரங்களில் 10 ஆம் வகுப்புத் தகுதி தட்டச்சர் போன்ற பணிகளுக்கு மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. வேத ஆகமப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மேற்படி விளம்பரங்களில் கூறவில்லை  என்றும் மனுதாரர் தவறாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை; குறிப்பிட்ட சாதியினரைத் தவிர இந்து மதத்தில் பயிற்சியும் தகுதியும் உள்ள பிற சாதியினர் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று தடை கோருவது, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 14 வழங்கும் சமத்துவத்துக்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் 1972 ஆம் ஆண்டு சேஷம்மாள் வழக்கில் அளித்த தீர்ப்பிலும் 16.12.2015 அன்று மீண்டும் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் ஆணை குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பிலும் அந்தந்த கோயிலுக்கு உரிய இந்து சமயப்பிரிவில் பிறந்தவர்கள் உரிய பயிற்சி பெற்றிருந்தால், சாதி நிபந்தனையின்றி அனைவரும் அர்ச்சகர்ராகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வதையும், அனைத்து சாதியினரை அர்ச்சகராக்குவதையும் தடை செய்யக்கோரி ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் மனுதாக்கல் செய்து அந்த மனுவை ஏற்றுக் கொண்டு உயர்நீதிமன்றம் விசாரனைக்கு தேதி குறித்துள்ளது. 

ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்க சார்பில் போட்டுள்ள இந்த புதிய மனு தவறானத் தகவல்களை கொண்டிருப்பதால் இதை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் வழங்கறிஞர் வாதாடியிருக்க வேண்டும். மேலும் இதே கருத்துகளைக் கொண்ட ஒரு வழக்கு இதே உயர்நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் விசாரணையில் உள்ள நிலையில் இதே காரணங்களுக்காக இன்னொரு வழக்கை தனி நீதிபதி ஏற்க கூடாது என்றும் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் வாதாடியிருக்க வேண்டும். ஆனால் அவர் வழக்கு விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுள்ளார். தனி நீதிபதியும் 25.8.2021 தேதிக்கு இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போர்க்கால அவசரத்துடன் இவ்வழக்குகளை கவனித்து தனது வழக்கறிஞர்களை சரியாக வழி நடத்த வேண்டும். அதன் முதல் கட்டமாக சிவாச்சாரியார் சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்துகுமார் போட்ட வழக்கைத் தனி நீதிபதி உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இரு நீதிபதிகள் அமர்வில் ஏற்கெனவே உள்ள வழக்கில் அவர் சேர்ந்துகொள்ளலாம் என்றும் கோரிக்கை வைத்து உயர்நீதிமன்றத்தை விரைவாகத் தமிழ்நாடு அரசு அணுக வேண்டும்.

1972 மற்றும் 2015 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறியுள்ள படி தகுதியுள்ள அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்பதை நிலைநாட்டிச் செயல்படுத்த வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப்பேரவை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தெய்வத் தமிழ்ப் பேரவை

முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095


Monday, August 9, 2021

"தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை: இனி என்ன செய்ய வேண்டும்?" ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை..!

"தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை:

இனி என்ன செய்ய வேண்டும்?"



தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை..!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

கடல்தீபன் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது ஐயா பெ. மணியரசன் இரங்கல்!




கடல்தீபன் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது

தமிழ்த்தேசியப் பேரியக்கத் 
தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!


நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தம்பி கடல்தீபன் காலமான செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. தமிழீழத்தில் நம் இனம் மக்கள் கூட்டம் கூட்டமாக சிங்கள பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்த போது அந்தத் துயரம் பொறுக்காமல் வெளிநாட்டில் வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் தாயக மக்களைத் திரட்டுவதற்கு களப்பணியில் இறங்கியவர் தம்பி கடல் தீபன்.

நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் கடலூரில் நடத்தினார். அதனால் ஆத்திமுற்ற ஆட்சியாளர்கள் ஏதேச் சதிகார குண்டர் சட்டத்தில் கடல் தீபனை சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் வாதாடி 72 நாள் சிறைவாசகத்திற்கு பிறகு விடுதலை ஆனார்.

புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டபோது மக்களைக் காப்பாற்றக் களம் இறங்கியவர். தானே புயலில் அவர் ஆற்றிய  மக்களைப் பாதுகாக்கும் பணியை அனைவரும் பாராட்டினர். அதே போல் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றக் குருதிக்கொடை கொடுப்பதில் சாதனைப் படைத்தவர். அதற்கான பாராட்டுகளைப் பெற்றவர். நாம் தமிழர் கட்சியில் துடிப்புமிக்க தமிழ்த்தேசியராய் ஆற்றல் மிகு களப்பணி வீரராய் பணியாற்றிய தம்பி கடல் தீபனின் மறைவு வேதனை மிக்கது. கடல் தீபன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


தமிழினத்திற்கு தலைகுனிவு!| கோவை ஒட்டர்பாளையம் சம்பவம்! - ஐயா பெ. மணியரசன் உரை!

தமிழினத்திற்கு தலைகுனிவு!| கோவை ஒட்டர்பாளையம் சம்பவம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, August 7, 2021

வீடற்றவர்களாகத் துரத்தப்பட்டுள்ள சென்னை குடிசைப்பகுதி மக்களிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்டு சூறையாடாதே! ஐயா கி. வெங்கட்ராமன் கண்டனம்!



வீடற்றவர்களாகத் துரத்தப்பட்டுள்ள சென்னை குடிசைப்பகுதி மக்களிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்டு  சூறையாடாதே!

தமிழ்நாடு அரசுக்குத்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் கண்டனம்!

சென்னை புளியந்தோப்பு பகுதியில், கேசவப்பிள்ளை பூங்கா (கே.பி. பார்க்) குடியிருப்பில் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அடித்தட்டு மக்களை தமிழ்நாடு அரசு வீடற்றவர்களாக மாற்றியுள்ளது. இந்த கே.பி. பார்க் குடியிருப்பு என்பது, கேசவப்பிள்ளை என்ற நல்லெண்ணம் கொண்ட செல்வந்தர் அரசுக்குக் கொடையாக வழங்கிய மனையில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம், வீடற்ற மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்பாகும். இதில் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த மக்கள் மிகப்பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

கடந்த அ.தி.மு.க. அரசு, 2016 சூலையில் கே.பி. பார்க் மைதானத்தில் குடிசையமைத்துத் தங்கயிருந்த இம்மக்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரப் போவதாகக் கூறி, அதிரடியாக காவல்துறையின் உதவியோடு அம்மக்களை காலி செய்தது. போராட்டம் நடத்திய மக்களிடம் 18 மாதங்களில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு வழங்குவதாக அ.தி.மு.க. அரசு அறிவித்தது. அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்ட பின்னும் அவர்களுக்கு வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு 2021 பிப்ரவரியில் யார் யாருக்கு எந்தெந்த வீடு என டோக்கன் கொடுப்பதாக அறிவித்தார்கள். 

டோக்கன் வாங்க முயலும்போது தான், இது இந்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் என்றும், ஒவ்வொரு குடும்பத்தினரும் 1.5 இலட்சம் ரூபாய் பங்குத் தொகை செலுத்தினால்தான் வீடு ஒப்படைக்கப்படும் என்றும் திடீர் நிபந்தனை விதித்தனர். 

அந்த நிபந்தனையின் கீழ் குடியேறிய மக்கள் அரசு கூறிய பங்குத் தொகையை செலுத்த முடியாததால், அந்த ஒன்பது மாடிக் குடியிருப்புக்கு லிப்ட்டுக்கான இணைப்பையும், தண்ணீர் இணைப்பையும் துண்டித்தனர். ஒவ்வொரு குடம் தண்ணீர் பிடிப்பதற்கும் பல மாடிகளிலிருந்து கீழறங்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்ட மக்களில் பெரும்பாலோர், அந்தப் பகுதிகளிலேயே தகரக் கொட்டைகளிலோ, வாய்ப்புள்ள சிலர் வேறு இடங்களில் வாடகை வீடுகளிலோ குடியேறினர். இவ்வாறு 864 குடும்பங்கள் அடிப்படை வாழ்வுரிமை மறுக்கப்பட்டு தத்தளிக் கின்றனர். 

இதுபோதாதென்று, இப்போது கடந்த வாரம் அரும்பாக்கத்திலிருந்து அகற்றப்பட்ட குடிசைப்பகுதி மக்கள் ஏறத்தாழ 100 குடும்பத்தினர் இதே கே.பி. பார்க் குடியிருப்புப் பகுதிக்கு விரட்டப் பட்டுள்ளனர்.  
“சிங்காரச்சென்னை” என்ற பெயராலும், “எழில்மிகு சென்னை” என்ற பெயராலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு நகரின் அழகைக் கெடுப்பதாகக் கருதும் ஆட்சியாளர்கள், இவர்களை மட்டுமே நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்துகின்றனர். ஊரறிய உலகறிய சென்னையின் முக்கிய நீர்வழித் தடங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் கட்டடங்களையும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் கட்டியிருக்கிற பெரிய ஆக்கிரமிப்பாளர்களை கண்டு கொள்ளாமல் அந்த ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவதற்கு பல்வேறு விதித் தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள். 

தாராளமய – உலகமயத்தின் இன்னொரு சூறையாடலாக இது நிகழ்ந்து வருகிறது. இதனை இனியும் அனுமதிக்க முடியாது! மார்வாடிகள், குசராத்திகள், பனியாக்கள் என தமிழ்நாட்டிற்கு வந்தவர்களெல்லாம் இதே சென்னையில் வளமாய் வாழ்ந்து கொண்டிருக்க, சொந்த மண்ணின் தமிழ் மக்களோ தமிழ்நாடு அரசாலேயே இப்படி அலைக்கழிக்கப்படுவது வேதனையானது!

எனவே, தமிழ்நாடு அரசு ஏற்கெனவே குடியிருப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள கே.பி. பார்க்கின் 864 குடும்பங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும். இந்தியத் தலைமையமைச்சரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு மக்களிடமிருந்து தலா 1.5 இலட்சம் பங்குத் தொகை என்ற நிபந்தனையை இரத்து செய்ய வேண்டும். அதை வழங்கிய வேண்டிய சட்டநிலைமை இருந்தால், அந்தப் பொறுப்பை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். துண்டிக்கப்பட்ட லிப்ட் மற்றும் குடி தண்ணீர் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை குடிசை மாற்று வாரியத் திட்டத்தோடு இணைக்கக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Friday, August 6, 2021

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! - ஐயா கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!



உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை 
விடுதலை செய்ய வேண்டும்! 

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
ஐயா கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!


உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ள புதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 03.08.2021 அன்று உச்ச நீதிமன்றம் அரியான மாநில அரசு – எதிர் – இராசுகுமார் என்ற வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கிருக்கிறது.

“அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போது ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏமந்த் குப்தா மற்றும் ஏ.எஸ்.கோபண்ணா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு உறுதிப்பட கூறுகிறது. 

இதற்கு முன்னர் மாருராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் (1981, 1, SCC, 107) உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் “ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்கெழுத்து வடிவம். அவர் மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். ஒரு மாநில அரசு தண்டனைக் குறைப்பு ஆணையை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் கூட நேரடியாக அறிவித்துவிடலாம் ஆயினும் பணி விதிகள் மற்றும் அரசமைப்புச் சட்ட இங்கிதம் காரணமாக அமைச்சரவையின் முடிவு ஆளுநரின் வழியாக செயலுக்கு வரவேண்டிருக்கிறது” என்று அரசமைப்பு ஆயம் கூறியிருப்பதை தங்களது முடிவுக்கு அடிப்படையாக நீதிபதிகள் ஏமந்த் குப்தாவும், ஏ.எஸ். கோபண்ணதாவும் மேற்கோள் காட்டுகிறார்கள்

அதுமட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசு – எதிர் – சிறிகரன் என்ற முருகன் எனும் ஏழு தமிழர் வழக்கில் (2016, 7, SCC, 1) உச்ச நீதிமன்றம் இதே போன்று கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டிய நீதிபதிகள் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு முன் விடுதலை வழங்குவது அவரது நீங்கா கடமை எனத் தெளிவுப்படுத்துகிறார்கள்.

இந்த புதிய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து புதிய பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாருராம் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன் விடுதலை மற்றும் மன்னிப்பு வழங்கும் செயலில் உறுப்பு 72ன் படியான குடியரசுத் தலைவரின் அதிகாரமும் உறுப்பு 161ன் படியான ஆளுநரின் அதிகாரமும் ஒத்தவலு உள்ளவை, ஒரே நேரத்தில் செயல்பட கூடியவை என்று தெளிவுபட கூறியிருக்கின்றன. 

எனவே இச்சிக்கல் குறித்து தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதை ஒரு தடையாக கருதாமல் புதிய பரிந்துரையை உருவாக்கி அதனை ஆளுநருக்கு அனுப்பலாம். எந்த சட்டைத் தடையும் இல்லை.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உரிய பரிந்துரையை ஆளுநருக்கு உடனடியாக அனுப்பி ஏழு தமிழர் விடுதலைக்கு வலுவாக முயலவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுகொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

"மேகத்தாட்டு அணை: துரைமுருகன் - அண்ணாமலை நாடகம்" 'மசாலா விசன்' ஊடகத்துக்கு.. -ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"மேகத்தாட்டு அணை: துரைமுருகன் - அண்ணாமலை நாடகம்"


'மசாலா விசன்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, August 3, 2021

"மிஸ்டர் அண்ணாமலை, துரைமுருகன் பதில் சொல்லுங்க" 'ழகரம்' ஊடகத்துக்கு.. - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"மிஸ்டர் அண்ணாமலை, துரைமுருகன் 

பதில் சொல்லுங்க"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, August 1, 2021

மேக்கேதாட்டை எதிர்க்கும் பா.ச.க. - ஒப்புதல் வழங்கிய நீராற்றல் துறையை எதிர்க்குமா? - பெ. மணியரசன் கேள்வி!



மேக்கேதாட்டை எதிர்க்கும் பா.ச.க. - ஒப்புதல் வழங்கிய நீராற்றல் துறையை எதிர்க்குமா?

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி!


“கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்; ஒரு செங்கல் வைக்கக் கூட விட மாட்டோம்; அங்கு அணை கட்டுவதை எதிர்த்துத் தஞ்சாவூரில் பா.ச.க. 05.08.2021 அன்று 10 ஆயிரம் பேருடன் உண்ணாப் போராட்டம் நடத்தும்” என்று பா.ச.க.வின் தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார். 

மேக்கேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக ஆளும் பா.ச.க.வும், தமிழ்நாட்டு பா.ச.க.வும் எதிர் எதிரான நிலை எடுத்திருப்பதன் மூலம், இந்தியா முழுமைக்கும் ஒரே இந்துத்துவா, ஒரே பண்பாடு, ஒரே அரசியல் கொள்கை, ஒரே மொழி என்று பேசி வந்த அதன் ஏகத்துவ நிலைபாடு தவறானது என்று அக்கட்சியே வெளிப்படுத்தி விட்டது. 

அடுத்து, தமிழ்நாடு பா.ச.க. உண்மையாகவே மேக்கேதாட்டு அணையை எதிர்க்கிறதா அல்லது தமிழ்நாட்டு உரிமைக்காக நிற்பது போல் நடிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 

அண்ணாமலை உண்மையாகவே, மேக்கேதாட்டு அணையை எதிர்க்கிறார் என்றால், அவர் முதலில் எதிர்க்க வேண்டியது இந்திய அரசின் நீராற்றல் துறையைத்தான்! ஏனெனில், பா.ச.க. ஒன்றிய அரசின் நீராற்றல் துறை (ஜல்சக்தித் துறை)தான், கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை (DPR – Detailed Project Report) தயாரித்து அனுப்புமாறு 24.10.2018 அன்று கர்நாடகத்திற்கு அனுமதி அளித்தது. அந்த விரிவான திட்ட அறிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முன்வைத்து அதற்கு ஒப்புதல் பெறுமாறு அறிவுறுத்தி, அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 20.01.2019 அன்று அனுப்பியும் வைத்தது. 

இந்த உண்மைகளை ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத் பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பிய வினாவுக்கு 26.07.2021 அன்று அளித்த விடையில் கூறியுள்ளார். 

தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பல தடவை ஒருமித்து, அந்த அணைத் திட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டுள்ள நிலையில் – இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்தறை அந்த அணைக்கு அனுமதி தராத நிலையில் – பா.ச.க. ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அந்த அணைக்கான அனுமதியை மேற்கண்டவாறு வழங்கியுள்ளது. 

தமிழ்நாடு பா.ச.க.வும் அதன் தலைவர் அண்ணாமலையும் மேக்கேதாட்டு அணையை அரசியல் நாடகமாக அல்லாமல் உண்மையாக எதிர்க்கிறார்கள் என்றால், அந்த அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு நீராற்றல் துறை கொடுத்த அனுமதியை இரத்துச் செய்து, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அது அனுப்பி வைத்த அறிக்கையை திரும்பப் பெற்று, அதைக் கர்நாடக அரசுக்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். இக்கோரிக்கையை இந்திய நீராற்றல் துறைக்கு பா.ச.க. தலைவர் கே. அண்ணாமலை முன்வைக்க வேண்டும். 

கர்நாடக அரசைக் கண்டிப்பதுடன், ஒன்றிய நீராற்றல் துறையையும் கண்டித்து கே. அ்ண்ணாமலை உண்ணாப் போராட்டம் நடத்தினால் அதுவே உண்மையான போராட்டமாகும். கர்நாடக அரசை மட்டும் கண்டித்து உண்ணாப் போராட்டம் நடத்தினால் கட்சி வளர்ப்பதற்காக தமிழ்நாடு பா.ச.க. நடத்தும் நாடகம் என்றே தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். 


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT