![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBtiVAXoHyngsi7jGKumW49mumAna1MEJLHba20YUTeizNllcmBKy_QtDDQn03lVxxR_yXLqCtwrW0LwJ8g4W186lf6ulnrXPf3BFYKNylAN-rjCBH5b4J1eZD7Bve3VX-2KShjiyq26nP/s320/new1.jpg)
ஈழத்தமிழர் மீது இனவொழிப்புப் போரை தொடுத்த இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவளித்து, பண உதவியும் ஆள் உதவியும் செய்த இந்திய அரசைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் இணைந்து “இந்திய - இலங்கை தேசியக் கொடிகள் எரிப்புப் போராட்ட”த்தை மே 25 2009 அன்று நடத்தியது.
சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சை, ஓசூர் ஆகிய முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பலரும் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பா.தமிழரசன்(த.தே.பொ.க.), வே.பாரதி (த.தே.வி.இ.) உள்ளிட்ட தோழர்கள் 200 நாட்களுக்கும் மேலாக கோவை நடுவண் சிறையில் சிறைவைக்கப்பட்டு கடந்த மாதம் தான் விடுதலையாயினர்.
கடந்த ஆண்டு நடந்த 50 முக்கிய சம்பங்களில் இப்போராட்டமும் ஓர் முக்கிய சம்பவமாக “ஆனந்த விகடன்” வார இதழ் வெளியிட்டுள்ளது. அச்செய்தி வருமாறு:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcFgAYVia0S7GdUhpOKyGoaKDMWPKH9oGvZL6wM2pCDCQpQnjm0SkJNhOQRost8x0s-XNYIsWZR2QeUp3LL2a6TESw9oRTLqaIwKJj45i9hsXe7VvfPUOBBvrKWeKqjUrP6WcgqCHQ8_GA/s320/new2.jpg)
Post a Comment