உடனடிச்செய்திகள்

Tuesday, April 28, 2009

இந்திய இலங்கை கொடி எரிப்பு போராட்டம் : நாளிதழ் செய்தித் தொகுப்பு

ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் இந்திய சிங்கள அரசுகளை அம்பலப்படுத்தும் வகையில் இந்திய இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் கூட்டாக அறிவித்தது.

25.04.09 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. தோழர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு:











Saturday, April 25, 2009

இந்திய - இலங்கை கொடி எரிப்பு : தோழர்களுக்கு சிறை

ஈழத்தமிழர்களை ஈவிரக்கிமின்றி நாள் தோறும் கொன்று குவிக்கும் இந்திய சிங்களக் கூட்டுப்படையின் அட்டூழியத்தை கண்டிக்கும் வகையில் இந்திய இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டத்தை நடத்தப்படும் என கடந்த 23.04.09 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு ஆகியோர் விடுத்த கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களில் கைது செய்யப்பட்ட தோழர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை






தஞ்சை நகரப் பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய இலங்கைக் கொடிகளை எரித்தத் தோழர்கள் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் இரு குழுவினராக பிரித்து கீழவாசல் காவல்நிலையத்திலும், அரண்மனை காவல் நிலையத்திலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


கோவை




கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம் காலை 10.30 மணியளவில் நடந்தது. இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பியபடி கொடிகளை எரிக்க முயன்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாநகர அமைப்பாளர் தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வே.பாரதி, தமிழர் தேசிய இயக்கம் திருவள்ளுவன், சீனிவாசன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு ரேஸ் கோர்ஸ் காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் நீதிபதி முன் நேர்நிறுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு

ஈரோடு நகரத்தின் காளைமாடுச் சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இந்திய இலங்கை அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு இந்திய இலங்கைக் கொடிகளை எரித்த தோழர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து ஈரோடு நகரக் காவல்நிலையத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் நீதிபதி முன் நேர்நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர்

ஓசூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இன்று காலை 10.45 மணியளவில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்க மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து தலைமை தாங்கினார். இந்திய இலங்கை அரசுகளை அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய இலங்கைக் கொடிகளை எரித்த தோழர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து ஓசூர் நகரக் காவல்நிலையத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். மாலை தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை




சென்னையில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகமான சாஸ்திரி பவனில் காலை 10.45 மணியளவில் நடந்த போராட்டத்தில் த.தே.பொ.க., த.தே.வி.இ. தோழர்கள் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் க.முருகன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சிவ.காளிதாசன் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்திய - இலங்கைப் படைகளின் கொடுங்கோன்மைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு இந்திய - இலங்கைக் கொடிகளை எரிக்க முயன்ற தோழர்கள் 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் ஏ.பி.சி. திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மற்ற ஊடகங்களில் போராட்டம் தொடர்பான செய்திகள்...


இந்திய இலங்கை கொடி எரிப்பு : த.தே.பொ.க. - த.தே.வி.இ. தோழர்கள் கைது

இந்திய இலங்கை கொடி எரிப்புப் போராட்டம்
தமிழகம் முழுவதும் தோழர்கள் கைது
 
    ஈழத்தமிழர்களை ஈவிரக்கிமின்றி நாள் தோறும் கொன்று குவிக்கும் இந்திய சிங்களக்  கூட்டுப்படையின் அட்டூழியத்தை கண்டிக்கும் வகையில் இந்திய இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டத்தை நடத்தப்படும் என கடந்த 23.04.09 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு ஆகியோர் விடுத்த கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இப்போராட்டம் இன்று நடத்தப்பட்டது.

சென்னை

    சென்னையில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகமான சாஸ்திரி பவனில் காலை  10.45 மணியளவில் நடந்த போராட்டத்தில் த.தே.பொ.க., த.தே.வி.இ. தோழர்கள் கலந்து   கொண்டனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் க.முருகன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சிவ.காளிதாசன் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்திய - இலங்கைப் படைகளின் கொடுங்கோன்மைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு இந்திய - இலங்கைக் கொடிகளை எரிக்க முயன்ற தோழர்கள் 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் ஏ.பி.சி. திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
 
தஞ்சை
 
   தஞ்சை நகரப் பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய இலங்கைக் கொடிகளை எரித்தத் தோழர்கள் 9 பேரை காவல்துறையினர் கைத செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் இரு குழுவினராக பிரித்து கீழவாசல் காவல்நிலையத்திலும், அரண்மனை காவல் நிலையத்திலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.    

கோவை

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம் காலை 10.30 மணியளவில் நடந்தது. இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பியபடி கொடிகளை எரிக்க முயன்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாநகர அமைப்பாளர் தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வே.பாரதி, தமிழர் தேசிய இயக்கம் திருவள்ளுவன், சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ரேஸ் கோர்ஸ் காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு
 
       ஈரோடு நகரத்தின் காளைமாடுச் சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இந்திய இலங்கை அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு இந்திய இலங்கைக் கொடிகளை எரித்த தோழர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து ஈரோடு நகரக் காவல்நிலையத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
   
ஓசூர்
 
    ஓசூர் தாலுக்கா அலுவலகம்  முன்பு இன்று காலை 10.45 மணியளவில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்க மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து தலைமை தாங்கினார். இந்திய இலங்கை அரசுகளை அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய இலங்கைக் கொடிகளை எரித்த தோழர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து ஓசூர் நகரக் காவல்நிலையத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
 

Thursday, April 23, 2009

இந்திய - இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம் :: பெ.மணியரசன் - தியாகு கூட்டறிக்கை

இந்திய - இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம்  
பெ.மணியரசன் - தியாகு கூட்டறிக்கை
 
    வருகிற 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய - இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு ஆகியோர் இன்று விடுத்துள்ள கூட்டறிக்கை:
 
    இந்திய - இலங்கைக் கூட்டுப் படையினர் ஈழத்தமிழினத்தைக் கொன்று குவிக்கின்றனர். தாங்கள் வாழ்ந்த தாயக மண்ணில் நாதியற்ற பிணங்களாகத் தமிழர்களின் உடல்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக நூறு, இருநூறு பேர் என கொல்லப்பட்ட நிலை மாறி, இப்பொழுது ஆயிரம் இரண்டாயிரம் பேர் என்று கொல்லப்படுகிறார்கள். பாதுகாப்பு வலையம் நோக்கி வந்த 46,000 தமிழர்களைக் காணவில்லை என்ற செய்தி நம் நெஞ்சத்தை ஈட்டி போல் குத்துகிறது. ஈழத்தமிழர்களை இவ்வாறு கொன்றழிப்பதற்கும், பல்லாயிரக்கணக்கானோரின் உடல் உறுப்புகளைத் துண்டித்து ஊனப்படுத்தியதற்கும் இந்தியா மூல காரணமாக உள்ளது. இராணுவ உதவியும் நிதி உதவியும் செய்ததற்காக இந்திய ஆட்சியாளர்களுக்கு இராசபட்சேயும், சிங்களப் படைத் தலைவன் பொன்சேகாவும் நன்றி கூறி இருக்கிறார்கள்.

    22.04.09 இரவு புதுதில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய அமைச்சரவைக் குழுவினர், 'அப்பாவி மக்களைப் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிக்கிறோம்' என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
 
    இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி ஒரே நாளில் மூவாயிரம் தமிழர்களைக் கொன்றதையும், நிவாரண முகாம்கள் என்ற பெயரில் சிறை முகாம்களில் இலட்சக்கணக்காண தமிழர்களை அடைத்து வைத்திருப்பதையும் இவர்கள் மூடி மறைக்கின்றார்கள். இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை நோக்கி மென்மையாக ஒப்புக்குக் கூறியிருக்கிறார்கள்.
   
    பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய அரசிடம் கடந்த ஏழு மாதங்களாக போர் நிறுத்தம் கோரி எத்தனையோ வழிகளில் போராடி வருகிறோம். ஆனால் இந்திய அரசு மேலும் மேலும் கூடுதலாக இராணுவ உதவியும் நிதி உதவியும் சிங்கள அரசிற்கு செய்து தமிழின அழிப்புப் போரை தீவிரப்படுத்தி வருகின்றது.

    இந்திய - இலங்கை அரசுகளின் இந்த இனப்படுகொலையைக் கண்டித்து இந்திய - இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டம் நடைபெறுகிறது. தற்காப்பு உணர்ச்சியும் தமிழின உணர்வும் மனித நேயமும் கொண்ட அனைவரும் அங்கங்கே கொடி எரிப்புப் போராட்டத்தை நடத்துமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 9, 2009

”இந்திய அரசை தமிழகத்தில் செயல்பட விடாமல் முடக்குங்கள்” - பெ.மணியரசன

"போரை நிறுத்து" : தமிழகமெங்கும் நடந்த ஆர்ப்பாட்டங்கள்
 
"இந்திய அரசை தமிழகத்தில் செயல்பட விடாமல் முடக்குங்கள்"
 
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்
பெ.மணியரசன் சென்னை ஆர்ப்பாட்டத்தில் உரைவீச்சு
 
ஈழத்தமிழர் மீதான இனவெறிப் போரை சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா அளித்த நச்சு வாயுக்களைக் கொண்டு தமிழர்களை அழித்தது சிங்கள இராணுவம். இந்தியாவின் முழு ஆதரவோடும் உதவியோடும் நடக்கும் இப்போரை இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் பாராளுமன்றம் தமிழர்களால் முடக்கப்பட்டது. நார்வே, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் தமிழர்கள். பிரிட்டனில் இருவர் சாகும் வரை உண்ணாப் போரில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஓசூரில் தமிழர் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து தலைமை தாங்கினார்.
சேலம், கோவை போன்ற நகரங்களில் பெ.தி.க.வினர் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தினர்.
 
நேற்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளது தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளது வைகோ, பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு, இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், நல்லக்கண்ணு, பா.ச.க. தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
 
"தமிழகத்தில் இந்திய அரசின் அலுவலகங்கள் செயல்பட முடியாத வகையில் முடக்குங்கள்!" என்பதை முழக்கமாக வைத்து உடனடியாக செயல்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசினார். "பிரபாகரன் மீது ஒரு துரும்புப் பட்டால் கூட தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். இந்தியா என்றொரு தேசமெ இருக்காது" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. பேசினார். "தமிழின துரோகத்தில் ஈடுபட்டதற்காக கருணாநிதி உலகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என மருத்துவது இராமதாசு பேசினார்.
 
ஆர்ப்பாட்டத்தில், த.தே.பொ.க., த.தே.விஇ., ம.தி.மு.க., இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி, பா.ம.க., இளந்தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும் திரளான தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
 
தஞ்சை : தஞ்சை ரயிலடி அருகில் காலை 11.00 மணியளவில் நடந்த ஆர்ப்பட்டத்தில் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பழ.இராசேந்திரன், செங்கிப்பட்டி பகுதி அமைப்பாளர் குழு.பால்ராசு,  தஞ்சை வழக்கறிஞர் சங்கச் செயலாளரும் இளந்தமிழர் இயக்க நிர்வாகக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் நல்லதுரை உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
 
கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், சிதம்பரம் நகர அமைப்பாளர் க.சிவப்பிரகாசம், தமிழக உழவர் முன்னணி, தமிழக மாணவர் முன்னணி தோழர்கள் உட்பட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
 
மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் த.தே.பொ.க., த.தே.வி.இ., பெ.தி.க., தோழர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

Tuesday, April 7, 2009

அழிவின் விளம்பில் ஈழம் :நாளை சென்னை கண்டன ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. பங்கேற்பு

ஈழத்தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்றக் கோரி
நாளை(08.04.09) சென்னையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பு

சென்னை - 17, 07.04.09.

இலங்கை அரசு இரசாயனக் குண்டுகள் வீசி ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கிறது. அடுத்து நச்சுப் புகைக் குண்டுகளை வெடித்து பல்லாயிரம் மக்களைக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
 
ஐ.நா.மன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள இரசாயன மற்றும் நச்சுப்புகைக்குண்டுகளை ஈழத் தமிழ்ப் பொதுமக்கள் மீது இலங்கை அரசு வீசுவது மனித குலத்திற்கு எதிரான கொடிய குற்றச்செயலாகும்.
 
இக்கொடிய குற்றச்செயலைச் செய்திட இலங்கை அரசுக்கு எல்லா வகை உதவிகளையும் இந்திய அரசு செய்து வருகிறது. தமிழினத்திற்கும் மனிதகுலத்திற்கும் எதிரான இந்திய அரசின் இந்தத் துரோகச் செயலைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
08.04.2009 புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஈழத்தமிழர்களைக் காக்கவும் போர் வெறியர்களை கண்டிக்கவும் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. கலந்து கொள்கிறது. மனிதநேயர்களும் தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி



போராட்டங்கள்

செய்திகள்

 
Design by FBTemplates | BTT