உடனடிச்செய்திகள்
Showing posts with label தோழர் முகிலனை விடுதலை செய்க. Show all posts
Showing posts with label தோழர் முகிலனை விடுதலை செய்க. Show all posts

Tuesday, October 3, 2017

சிறையிலுள்ள சூழலியல் போராளி தோழர் முகிலனை விடுதலை செய்க! சென்னையில் கண்டனக் கூட்டம்!

சிறையிலுள்ள சூழலியல் போராளி தோழர் முகிலனை விடுதலை செய்க! சென்னையில் கண்டனக் கூட்டம்!
காவிரி ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க அறவழிப்போராட்டங்களையும், சட்டப் போராட்டத்தையும் நடத்தி வந்த - காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் அவர்களை பொய்க் குற்றச்சாட்டுகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ள தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெறுகின்றது.

சென்னை நிருபர்கள் சங்கத்தில் (Chennai Reporters Guild) நாளை (04.10.2017) மாலை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ. நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி - இயக்கத் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி பங்கேற்றுப் பேசுகிறார்.

கூட்டத்தில், தமிழின உணர்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT