உடனடிச்செய்திகள்
Showing posts with label கண்டன ஆர்ப்பாட்டம்!. Show all posts
Showing posts with label கண்டன ஆர்ப்பாட்டம்!. Show all posts

Tuesday, August 16, 2016

தமிழீழத்தில் 107 முன்னாள் போராளிகள் அடுத்தடுத்து புற்றுநோயால் மரணம்! சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!



தமிழீழத்தில் 107 முன்னாள் போராளிகள் 
அடுத்தடுத்து புற்றுநோயால் மரணம்!

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


2009ஆம் ஆண்டு தமிழீழத்தின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைப் பேரரின் போது, சிங்கள இராணுவத்தால் 11,786 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகள் கைது செய்யப்பட்டு, பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். பல்லாண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட போராளிகளில் 107 பேர், அண்மைக்காலமாக மர்மமான முறையில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகி இறந்துள்ளனர்.
நஞ்சு ஊசி போட்டும், உணவில் நஞ்சு கலந்தும் சிங்கள இராணுவம் தமிழீழப் போராளிகளை இனப்படுகொலை செய்ய இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக, தமிழீழ மக்களும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் ஐயப்படுகின்றனர். உடனடியாக தமிழீழ முன்னாள் போராளிகளுக்கு அயல்நாட்டு மருத்துவர்களைக் கொண்டு, சோதனைகள் நடத்த வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
முன்னாள் போராளிகளின் மர்ம மரணத்தைக் கண்டித்தும், சர்வதேச அளவில் மருத்துவக் குழு அமைத்து விடுவிக்கப்பட்ட போராளிகளை சோதனை செய்யக் கோரியும், சென்னையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், 13.08.2016 அன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி ஆர்.எம். அனீபா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தந்தை பெரியார் தி.க. வடக்கு மண்டலச் செயலாளர் தோழர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தோழர் கொண்டல்சாமி (மே17) நிகழ்வை நெறிப்படுத்தினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி பங்கேற்றக் கண்டன உரையாற்றினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தோழர்கள் செ. ஏந்தல், வடிவேலன், கோ. நல்லன், த. சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT