உடனடிச்செய்திகள்
Showing posts with label திராவிட எதிர்ப்பு!. Show all posts
Showing posts with label திராவிட எதிர்ப்பு!. Show all posts

Wednesday, September 29, 2021

"தேர்தலை புறக்கணிக்கும் மணியரசன்! சீமானோடு இணைந்தது ஏன்?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தேர்தலை புறக்கணிக்கும் மணியரசன்! சீமானோடு இணைந்தது ஏன்?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, September 25, 2021

சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன்,



சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்!

தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம். 


சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என நரேந்திர மோடி அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிடிவாதமாகக் கூறிவிட்டது. 

மராட்டிய மாநில அரசு மற்றும் சிலர் தொடுத்திருந்த வழக்கில் 23.09.2021இல் இவ்வாறு கூறிய இந்திய அரசு, “இந்தியாவில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட சாதிகள், துணை சாதிகள், சாதிக் குழுக்கள் இருக்கின்றன. இவற்றுள் பட்டியல் சமூகத்தினரைத் தவிர பிறரைக் கணக்கெடுப்பது நடைமுறை சாத்தியமற்றது. அதுமட்டுமின்றி, சாதியற்ற சமூகம் படைக்கும் இலட்சியத்திற்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பட்டியல் மாநில அரசுகளால் உருவாக்கப்படுவதாலும், கிட்டத்தட்ட ஒரே ஒலிப்புள்ள சாதிகள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலைகளில் இருப்பதாலும், பட்டியல் சாதியினர் சிலர் மதம் மாறுவதால்  சமூகநிலை மாற்றங்கள் நிகழ்வதாலும் - இவ்வாறு கணக்கிடுவது சாத்தியமற்றது” என்று காரணம் கூறி இருக்கிறது. 

ஆனால், இந்தக் காரணங்கள் எதுவுமே ஏற்கத்தக்கதல்ல, சாதிவாரிக் கணக்கெடுப்பது சாத்தியமானதுதான் என்பதற்கான விளக்கமளித்து இந்திய அரசின் “தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே” கூட கடந்த 2021 சனவரியில் அறிக்கை அளித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தியது. 

வேடிக்கை என்னவென்றால், “இந்துத்துவ” பா.ச.க. மேற்கொண்ட இதே நிலைப்பாட்டைத்தான் “மதச்சார்பற்ற” காங்கிரசுக் ஆட்சியும் இதற்கு முன் மேற்கொண்டது. 

இந்திய நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மட்டுமின்றி, மன்மோகன் சிங் ஆட்சியின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்ட காங்கிரசுத் தலைவர்கள் பலர் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தினர். அப்போது, அன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஒரு சொல்லும் மாறாமல் பா.ச.க.வின் இதே மறுப்பைத்தான் நாடாளுமன்றததில் தெரிவித்தார். அது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உள்ளடக்கிய “சமூக - பொருளியல் - சாதிவாரிக் கணக்கெடுப்பு” (Socio - Econmic - Caste Census) மேற்கொள்ள முடிவானது. அதற்கு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கி ஆய்வுக்குழுவை அமைத்தது. அதன் முடிவுகள் அரசிடம் முன்வைக்கப்பட்ட பின்பு, இந்திய ஆட்சியில் கட்சி மாற்றம் ஏற்பட்டது. 

நரேந்திர மோடி அரசு, இந்த ஆய்வறிக்கையில் சமூக, பொருளியல் விவரங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்பு பகுதியை மீளாய்வு செய்ய அன்றைய நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பங்காரியா தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை நிறுவியது. அதன் ஆய்வுமுடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆயினும், பங்காரியா குழுவின் ஆய்வறிக்கையை மேலாய்வு செய்த ஊரக மேம்பாட்டு நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை 2016 ஆகத்து இறுதியில் மக்களவை தலைவரிடம் வழங்கியது. அதில், “சமூக, பொருளியல், சாதிவாரிக் கணக்கெடுப்பு 98.87 விழுக்காடு மிகச்சரியாக இருக்கிறது. காணப்படும் சிற்சில குறைபாடுகளை நாங்கள் பரிந்துரைத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீக்கி விடலாம்” என்று கூறியது. 

உண்மை இவ்வாறிருக்க, 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என மோடி அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல! ஒருவேளை, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்குமானால் ஏற்கெனவே செய்ததுபோல் தனியாக ஆய்வுக்குழு அமர்த்தி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும். 

சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குறிப்பான சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்காக திட்டமிட முடியும். பல்வேறு படிநிலைகளில் ஏற்றத்தாழ்வாக உள்ள சாதிகளிடையே உள்ள உண்மையான சிக்கல்களை தீர்த்தால்தான், சாதிகளிடையே சமநிலையை உருவாக்க முடியும். அதுதான் சாதி ஒழிப்புக்கான முக்கியமான படிநிலையாகும்! 

ஆனால், 2010லிருந்தே பா.ச.க.வின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வருகிறது. அதற்கான உண்மையான காரணம் - சாதி ஒழிப்பு நோக்கமோ, நடைமுறைச் சிக்கலோ அல்ல! பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உண்மையான தொகை தெரியுமானால், இப்போதுள்ள 50 விழுக்காடு என்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீடிக்க முடியாது என்றும், ஆதிக்கசாதியினருக்கான 10 விழுக்காடும் அடிபட்டுப் போகும் என்றும் ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ். அஞ்சுகிறது. 

இன்னொருபுறம், தாராளமயப் பொருளியலின் சந்தை விதிகள் அனைத்துச் சாதியினருக்கும் சம வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற பொய்யும் அம்பலப்பட்டுவிடும் என்று தாராளமயவாதிகள் அஞ்சுகிறார்கள். 

மோடி அரசின் உள்நோக்கமுள்ள இந்த முடிவை தமிழ்நாட்டு மக்களும், இந்தியா முழுவதுமுள்ள சனநாயக ஆற்றல்களும் வலுவாக மறுக்க வேண்டும்! ஏற்கெனவே எடப்பாடி அரசு அறிவித்த தமிழ்நாடு அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பை தி.மு.க. அரசு விரைந்து முடிக்க வேண்டும்! இச்சிக்கலில் ஒத்த கருத்துள்ள பல்வேறு மாநில அரசுகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்திந்திய அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மோடி அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். தமிழர்கள் பா.ச.க. தலைமையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்! 

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2021 அக்டோபர் இதழின் ஆசிரியவுரையாக எழுதியது).


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, September 21, 2021

"திராவிடர்களுக்கு ஸ்டாலின் தலைவரா? வீரமணி தலைவரா?" 'ழகரம்' ஊடகத்துக்கு..ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"திராவிடர்களுக்கு ஸ்டாலின் தலைவரா? வீரமணி தலைவரா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, September 17, 2021

முதன் முதல் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா? ஐயா பெ.மணியரசன்



முதன் முதல் வகுப்புரிமையைச் செயல்படுத்திய 
சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

வகுப்புரிமை இட ஒதுக்கீட்டுக்கான முதல் அரசாணை வெளியிடப்பட்டதன் நூற்றாண்டை தி.மு.க. ஆட்சி கொண்டாடுகிறது. 

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்று அதிகார வழிப் பெயர் கொண்ட நீதிக்கட்சி ஆட்சி, 1920 ஆம் ஆண்டு முதல் முதலாக நடத்தப்பட்ட சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. 1921-ஆம் ஆண்டு அக்கட்சி ஆட்சியில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட ஆந்திர மண்டலத்தைச் சேர்ந்த ராமராயநிங்கார் முதலமைசராக இருந்த போது, அப்போது வேலை வாய்ப்பில் கோலோச்சிய பிராமண ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி பிராமணர் அல்லாதார்க்கும் உரிய வாய்ப்பளிக்க வகுப்புரிமை ஆணை (Communal G.O.) 16.9.1921 அன்று பிறப்பித்தார். அந்த அரசாணை எண் 613. (MRO Public ordinary Service GO 613). 

அதன் நூற்றாண்டைத்தான் 16.9.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி சமூக நீதி உரிமைக்காக எடுத்த அந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் அந்த அரசாணை செயல்படுத்தப்படவில்லை என்ற உண்மையை முதல்வர் ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை. (முரசொலி -17.9.2021)

உண்மையில் வகுப்புரிமைக்குப் புதிய அரசாணை பிறபித்து, அதை முதல் முதல் செயல்படுத்தத் தொடங்கியது தமிழரான முதலமைச்சர் சுப்பராயன் ஆட்சியில்தான். தமிழரான அமைச்சர் முத்தையா முதலியார் தமது துறையில் அதை முதலில் செயல்படுத்தினார். இந்த உண்மையைச் சொல்லி இவர்களுக்குத் தனிச் சிறப்பான பாராட்டை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்க வேண்டும்.

1926-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமராயநிங்காரின் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் தோற்றுவிட்டது. 21 உறுப்பினர்கள் மட்டுமே நீதிக்கட்சியில் வென்றனர் ஆனால் தனிப்பெரும் கட்சியாய் வென்றிருந்த (காங்கிரசு) சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களில் வென்றிருந்தனர். ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டனர். அப்போது சென்னை மாகாண ஆளுநர், கட்சி சார்பற்ற சுயேச்சையான சுப்பராயன் (மோகன் குமாரமங்கலம்-பார்வதி தந்தையார்) அவர்களை ஆட்சி அமைக்க அழைத்தார். சுப்பராயன் அமைச்சரவையில் அவருடன் மற்றும் 4 பேர் அமைச்சர்கள். அவர்கள் முத்தையா முதலியார், ஏ.ரெங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார், எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர். சுப்பராயன் அமைச்சரவைக்கு வலுச்சேர்க்க ஆளுநர் தனக்கு இருந்த அதிகாரப் படி 34 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்தார். இவர்கள் சுப்பராயன் அமைச்சரவையை ஆதரித்தனர்.

நீதிகட்சி சுப்பராயன் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் வாக்கெடுப்பில் அது தோற்றுப்போனது.

முத்தையா முதலியார் காங்கிரசுக்காரர். ஆனால் அவர் பிராமண ஆதிக்க எதிர்ப்பாளர். 1916-இல் நீதிக்கட்சி அமைப்பதற்காக நடந்த பிராமணரல்லாதார் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர். எனவே காங்கிரசு சுயராஜ்ஜிய கட்சியின்  முடிவை மீறி, சுப்பராயன் அமைச்சரவையில் முத்தையா முதலியார் சேர்ந்தார்.

சுப்பராயன் அமைச்சரவை 4.11.1927-இல் செனை மாகாண சட்டமன்றத்தில் புதிய வகுப்புரிமை அரசாணை பிறப்பித்தது. G.O.M.S.No.1021.  இந்தப் புதிய ஆணையை 1928-இல் முத்தையா முதலியார் தமது துறையில் முதல் முதலாகச் செயல்படுத்தினார். (ராமராய நிங்கார் கொண்டுவந்த வகுப்பரிமை ஆணை செயல்பாட்டிற்கு வராமலே காலாவதி ஆகிவிட்டது.)

உண்மையில் வகுப்புரிமை வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டுமானால் சுப்பராயன்- முத்தையா முதலியார் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட அரசாணை எண் 1021 செயலுக்கு வந்ததைத்தான் கொண்டாட வேண்டும். 

அந்த சுப்பராயன் அமைச்சரவையை நீதிக்கட்சி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சுப்பராயன் அமைச்சரவை 1927-இல் கொண்டு வந்த வகுப்பரிமை இடஒதுகீடு விவரம்: 

வேலை வாய்ப்பில்: வேலை வழங்கப்பட வேண்டிய இடங்கள் மொத்தம் 12 என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த 12-இல்: பிராமணர் அல்லாத இந்துகளுக்கு 5 இடம்; பிராமணர்களுக்கு 2 இடம், முகமதியர்களுக்கு 2 இடம்; ஆங்கிலோ இந்தியர் உட்படக் கிறித்துவர்களுக்கு 2 இடம்; பட்டியல் வகுப்பார்க்கு 1 இடம்: (மொத்தம் 12 இடம்)

மொத்தம் எத்தனை இடங்கள் வேலைக்கு நிரப்பப்பட்டாலும் மேற்கண்ட விகிதத்தில் நிரப்ப வேண்டும் என்பதே ஆணை!

1948-இல் அப்போதைய காங்கிரசு முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் புதிதாகப் பின் தங்கிய வகுப்பார் என்று ஒரு பிரிவை உருவாக்கி, சுப்பராயன் ஆணையில் திருத்தம் கொண்டுவந்தார். மொத்தம் 12 இடங்கள் என்று இருந்ததை 14 இடங்கள் என்று உயர்த்தி – புதிதாக 2 இடங்களை பின் தங்கிய வகுப்பார்க்கு வழங்கினார் ஓமந்தூரார்.

சுப்பராயன் அமைச்சரவை செயல்படுத்தி – அதில் ஓமந்தூராரல் புதிய சேர்க்கை உருவாக்கப்பட்ட அதே அரசாணை 1021 (G.O.M.S. No. 1021)ஐத்தான் 1950-இல் உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது.

வகுப்புரிமை பற்றிப் பேசும் போதெல்லாம் தி.க.வினரும் தி.மு.க.வினரும் பனகல் அரசர், நீதிக்கட்சி என்று பேசுகின்றனர். புதிய ஆணை போட்டு உண்மையில் செயல்படுத்திய முலமைச்சர் சுப்பராயன் பெயரை அவர்கள் சொல்வதே இல்லை. சுப்பராயன் திராவிடர் அல்லாதவர்; தமிழர் என்பதால் புறக்கணிப்பா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கடலூர் ஏ.சுப்பராயலு பெயர் இருக்கிறது. ஆனால் சுப்பராயன் பெயர் இல்லை. அவர் ஆட்சியில்  வகுப்புரிமை ஆணை புதிதாகப் போடப்பட்டு முதல் முதலாகச் செயல்படுத்தப்பட்ட செய்தியும் இல்லை.

சமூக நீதி உணர்வாளர்கள் வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொண்டு, சமூக நீதிக்கு, வகுப்புரிமைக்கு சுப்பராயன்-முத்தையா முதலியார், ஓமந்தூரார் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதே வேளை நீதிக்கட்சி வகுப்புரிமைக்காக எடுத்த முன்முயற்சியைப் பாராட்ட வேண்டும்!

அதே போல் 19 ஆம் நூற்றாண்டில் பிராமணர் அல்லாதார் இட ஒதுக்கீட்டிற்கு முன் மொழிவு வழங்கிய ஆங்கிலேய அதிகாரிகள் டபுள்யூ.ஆர்.கார்னிஷ் போன்றவர்களையும் நாம் நன்றியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும். “நாட்டின் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செய்தியையும் பார்பனக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கக் கூடாது. அரசின் உண்மையானக் கொள்கை – அரசு அலுவலர்கள் எண்ணிக்கையில் பார்பனர்களுக்கு வரம்புகட்டுவதாகவும், பார்பனர் அல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். எந்த ஒரு சாதிக்கும் தனி முக்கியதுவம் கொடுப்பதாக இருக்க கூடாது.”

-Report on the Census of Madras Presidency 1871, Volume -1, Page 197 
(சான்று:) கி.வீரமணி ’வகுப்புரிமை வரலாறு’, மூன்றாம் பதிப்பு – 2000.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, September 16, 2021

"தமிழை இழித்தவர் தந்தை பெரியார்" "பேசு தமிழா பேசு" வலையொளிக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழை இழித்தவர் தந்தை பெரியார்"


"பேசு தமிழா பேசு" வலையொளிக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, September 7, 2021

திராவிடத் திணிப்பு: தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கவே! - ஐயா பெ.மணியரசன்



திராவிடத் திணிப்பு: 
தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கவே!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்  

பேராயர் இராபர்ட் கால்டுவெல், “திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்” ( A comparative Grammar of Dravidian or South Indian Family Languages) என்ற மொழியியல் நூல் எழுதியவர் என்பதைப் பலரும் அறிவர். ஆனால் அவர் சமற்கிருத வைதிக ஆரியப் புராணங்களைப் படித்து விட்டு, அவற்றைத் தொகுத்து “பாரதப் புராதனம்” என்ற நூலை எழுதியவர் என்பது பலருக்குத் தெரியாது. அதே கால்டுவெல் தொல்காப்பியம், மற்றும் சங்கத் தமிழ் நூல்கள் பலவற்றைப் படிக்காதவர் எனபதும் பலருக்குத் தெரியாது. அவர் சமற்கிருதம் கற்ற அளவிற்குத் தமிழ் கற்றதில்லை. அவர்தாம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர்.

“திராவிட” என்ற மூல மொழியிலிருந்து (Proto Language) தமிழ் மொழி உருவானது என்று கற்பனைக் கயிறு திருத்தவர் தாம் காலடுவெல். அவருக்கு முன்பு ஆங்கிலேயே அதிகாரியாக இருந்து தமிழ் – ஆய்வு செய்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு (1777-1819) தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல. இவை தென்னிந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை; இவற்றின் தாய் தமிழ் மொழி என்று கூறினார். தென்னிந்திய மொழிக் குடும்பம் என்று நிலவியல் அடிப்படையில் இம்மொழிகளை வகைப்படுத்தினார். 

எல்லீசு இக்கருத்துகளை, 1816-ஆம் ஆண்டு வெளியான அலெக்சாண்டர் டங்கன் காம்பெல் எழுதி வெளியிட்ட தெலுங்கு மொழி இலக்கண நூலுக்கான முன்னுரையில் வெளியிட்டார்.

எல்லீசுக்கு முன்னோர்களான சர் வில்லியம் ஜோன்ஸ், தாமஸ் கோல் புரூக் போன்றவர்கள் தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருத மொழிக் குடும்பதிலிருந்து பிறந்தவை என்று கூறி இருந்தனர். அதற்கு மாற்றாகக் ஆய்வுரை வழங்கிய எல்லீசை அவருக்குப் பின் 1850 களில் ஆய்வு செய்த கால்டுவெல் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழ் மொழிக்கு ஒரு மூலமொழி இருந்திருக்க வேண்டும்; அந்த மூல மொழி எது என்று தேடினேன்; சமற்கிருத  நூல்களான மனுதர்மத்திலும், குமாரில பட்டரின் தந்திரவார்த்திகாவிலும் கூறப்பட்ட “திராவிட” என்பதை எடுத்துக் கொண்டேன் என்கிறார்.

(Robert Caldvel: A comparative Grammar of the Dravidian or south Indian Family of Languages (ஆங்கிலம்) கவிதா சரண் பதிப்பகம், சென்னை (2008) பக்கம் 4,5). கால்டுவெல், தமது “கண்டுபிடிப்பிற்கு” அகச்சான்று – அதாவது தமிழ் மொழிச் சான்று எதுவும் காட்டவில்லை. ஆரிய சமற்கிருத நூலான மனுதர்மத்தில் சீரழிந்து  போன வடநாட்டு சமூகப் பிரிவினைக் குறிக்கும் பட்டியலில் உள்ள “திராவிட” என்ற சொல்லையும் தந்திர வார்த்திகாவில் உள்ள ஆந்திர  - திராவிட பாஷா என்ற சொல்லையும் எடுத்துக் கொண்டு கற்பனைக் கயிறு திரித்து திராவிட இனம் என்றும் திராவிட மொழி என்றும் பெயர் சூட்டிவிட்டார்.

கால்டுவெல் தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் இழிவு ஏற்படுத்தக் கூடிய வகையில் என்னென்ன தவறுகளைத் தமது ஒப்பிலக்கண நூலில் செய்துள்ளார் என்பதைப் பாவாணர் பட்டியல் இட்டுள்ளார். கால்டு வெல் தவறுகளைக் குறிப்பிட மிகவும் நாகரிமாக “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ் சறுக்கல்கள்” என்று தலைப்பிட்டுள்ளார். (நூல்: தமிழ் வரலாறு, பக்கம் 26, 27)

1. சேர, சோழ, பாண்டியர்களை அரசர்கள் என்று அறியாமல், அந்தந்தப் பகுதி மக்களின் குடிப்பெயர் என்று கருதினார் கால்டுவெல்.
2. தமிழர் நாகரிகம் கொற்கையில் தொடங்கியது என்று கூறினார்.
3. தமிழரை (அவர்பாணியில் திராவிடரை) உயர் நாகரிகப்படுத்தியவர்கள் ஆரியர்கள் என்று கூறினார்.
ஆயிரத்திற்கு மேல் தமிழர்களுக்கு எண்ணத் தெரியாது. மருத்துவ நூல் தமிழில் இல்லை; மருத்துவர் இல்லை. வெளிநாட்டு வாணிகம் தமிழர்களுக்கு இல்லை. இலங்கையைத் தவிர வேறெந்த கடல் கடந்த நாட்டுடனும் தமிழர்களுக்குத் தொடர்பில்லை.
வானநூல் , கணியம், இலக்கணம் முதலியவை பற்றி தமிழர்களுக்குத் தெரியாது.
மனம், நினைவு, மனச்சான்று போன்றவற்றைக் குறிக்கத் தமிழில் சொற்கள் இல்லை,
4. தமிழ் நெடுங்கணக்கு (எழுத்து வகைகள்) சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியது; வடவெழுத்துகளுள் வேண்டியவற்றை மட்டும் தமிழர்கள் எடுத்துக் கொண்டனர்.
5. தமிழ்ப் பெயர்ச் சொல்லின் வேற்றுமை அமைப்பு முற்றிலும் சமற்கிருத வேற்றுமை அமைப்பைப் பின்பற்றியது.
6. தமிழில் சரியானபடி செயல்பாட்டு வினையே இல்லை.
7. அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், பாண்டியன், திரு, நாழி, மனம், மாதம் முதலியவை வட சொற்கள்.
மலையாளத்தை ஓரிடத்தில் தமிழின் கிளை மொழி (Oldest offshoot) என்கிறார். இன்னோர் இடத்தில் அது தமிழின் உடன் பிறப்பு மொழி (Sister dialect) என்கிறார்.

கால்டுவெல்லின் மேற்கண்ட ஏழு குறைபாடுகளும் உண்மைக்கு மாறானவை என்று பாவாணர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட கால்டுவெல்லைத்தான் தமிழர் வரலாற்று மீட்பின் தலைமைக் குருவாக தி.மு.க. கொண்டாடுகிறது. கி.மு, கி.பி என்பது போல் கா.மு., கா.பி. என்று கொண்டு வருகிறது தி.மு.க. ஆட்சி. கால்டுவெல்லுக்குப் பின் 150 ஆண்டுகளில் திராவிடத் தலைவர்கள் எழுதியவை, பேசியவை, இட ஒதுக்கீடு, மாநில சுயாட்சி, ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா, பணி ஓய்வு அதிகாரி பாலகிருட்டிணன் ஆகியோர் படைப்புகள் முதலியற்றைத் தொகுத்துத் “திராவிடக் களஞ்சியம்” என்ற தலைப்பில் நூல்களாகக் கொண்டு வரப் போவதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2.9.2021 அன்று சட்டப் பேரவையிலும், ஊடகங்களிலும் அறிவித்தார்.

காலடுவெல் மொழியியல் ஆய்வில் செய்த அதிகப் பிரசங்கித்தனம், அவர் வெளிப்படுத்திக் கொண்ட அறியாமை ஆகியவற்றைத் திராவிடவாத சிந்தனையாளர்கள் எப்போதும் வெளிப்படுத்துவது இல்லை. காரணம், தமிழின மறைப்பு, தமிழ் மொழி மறைப்பு ஆகியவற்றுக்குத் தேவைப்படும் திராவிடத் திரை நெய்து கொடுத்தவர் கால்டுவெல். எல்லாவற்றுக்கும் மேலாக, பிறந்த இன மறப்பிற்கும் மறுப்பிற்கும் “திராவிட இனம்” என்ற மேலைநாட்டு மது தயாரித்துக் கொடுத்தவர் அவர்.

=======================================
தெலுங்கு, கன்னட, மலையாளிகள் ஏற்கிறார்களா?
=======================================

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், துளுவர், தமிழர் எல்லோரும் ஒரே மரபினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்  அந்த மரபினம் திராவிடர் என்றும் கால்டுவெல்லின் வரலாற்று வாரிசுகளாகப் பேசிவரும் திராவிடவாதிகளுக்கு நாம் விடுக்கும் அறைகூவல் (சவால்) இது தான்:

திராவிடம் என்ற பெயரில் ஓரினம், ஒரு மொழி, ஒரு தாயகம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்று தருவீர்களா? இதுவரை தந்ததுண்டா? இல்லை!

அடுத்து, தெலுங்கு, கன்னட, மலையாள தேசிய இனத்தவர்கள் தாங்களும் தமிழர்களும் திராவிட இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா? தாங்கள் திராவிடர் என்று ஒரு போதும் அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை.

நாமெல்லாம் ஓர் இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்ற உளவியல் உணர்ச்சி அவர்களிடம் உண்டா? இல்லை.

திராவிட இன அரசியல் பிதாமகர்களான பெரியார், அண்ணா ஆகியோரைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தங்கள் தலைவர்களாக ஏற்றதுண்டா? அல்லது அவ்விருவர் காலத்தில் அம்மாநில மக்கள் தி.க., தி.மு.க. கிளைகளைத் தொடங்கியதுண்டா? இல்லை. அம்மாநிலங்களில் இருந்த அல்லது இருக்கின்ற, தி.மு.க. கிளைகள் அங்கு வாழும் தமிழர்களால் தொடங்கப்பட்டவை!
பெரியார், அண்ணா காலத்திலும், இப்பொழுதும் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் திராவிடக் கருத்தியலை வளர்க்க உழைத்ததுண்டா? இல்லை! அல்லது உழைத்தோம் பயனில்லை என்றால் பொருந்தாத திராவிடக் கோட்பாட்டை வைத்திருக்கிறோமே என்ற தன்திறனாய்வு உண்டா? இல்லை. 

1956-இல் மொழி வழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைந்த பிறகு பெரியார், திராவிட நாடு என்ற இலட்சியத்தைக் கைவிட்டு, தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தைக் கைக்கொண்டார் என்கிறீர்கள். அப்புறம் ஏன் திராவிடத்திற்கு இன்றும் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

ஒன்று “திராவிடர்க்கு” உண்மையாய் இருங்கள்; அல்லது தமிழர்க்கு உண்மையாய் இருங்கள்.

=============================
இனம் இயற்கையா? மனிதத் தேர்வா?
=============================

சாதி – மத மறுப்பு, கடவுள் – மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டது திராவிடர் இனம்; தமிழ் இனத்தை அப்படிச் சொல்ல முடியாது; எனவே இவற்றிற்குரிய திராவிட இனத்தை ஏற்கிறோம் என்று திராவிடவாதிகளில் ஒரு சாரார் கூறுகிறார்கள். மேலும் திராவிடர் என்பது மரபினம்; தமிழர் என்பது மரபினம் அன்று என்றும் கூறுகிறார்கள். 

இனம் (Race) என்பது இயற்கையின் படைப்பு. மனிதர்கள் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அதில் இல்லை. எல்லா இனத்திலும் முற்போக்கு கருத்துகளும் உண்டு, பிற்போக்கு கருத்துகளும் உண்டு. அறிவியல் சார்ந்த கருத்துகளும் உண்டு; மூட நம்பிக்கைகளும் உண்டு. முற்போக்காக ஓர் இனத்தை முழுஅளவில் நாங்கள் படைத்துக் கொள்கிறோம் என்று யாராவது கூறினால் அது சமூக அறிவியல் அன்று.  மானிட வளர்ச்சிக் கோட்பாடும் அன்று.
தமிழர்களைப் பொறுத்தவரை, எமது மரபு இனமும் (Race), தேசிய இனமும் (Nationality) “தமிழர்” என்பதே.

==================================
திராவிடர்களின் தமிழர் பகை வன்முறைகள்
==================================
கர்நாடக, கேரள “திராவிட” மாநிலங்களில் கன்னடர்களும் மலையாளிகளும் தமிழர்களைத் தாக்குவது அதிகரித்து வருகிறது.

காவிரித் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் என, எது தீர்ப்புக் கொடுத்தாலும் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத்தராமல் கர்நாடகத்தில் அம்மாநில அரசும் பல தரப்புக் கன்னடர்களும் தடுத்துத் தேக்கிக் கொள்கிறார்கள்.

1991 டிசம்பரில் கர்நாடகத்தில் காலம் காலமாக வாழ்ந்து வரும் ஏரளமானத் தமிழர்களை கன்னட வெறியர்கள் இனப்படுகொலை செய்தார்கள். தமிழர்களின் வீடுகள், நிறுவனங்கள் சூறையாடப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன. இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் ஏதிலிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் காவிரிச் சிக்கலை வைத்துத் தமிழர்களைத் தாக்குகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னும் தமிழர்களைத் தாக்கி, மண்டியிடச் செய்து, காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம் என்று முழக்கமிட வலியுறுத்தி அதைக் காணொலி ஆக்கிக் கன்னடர்கள் வெளியிட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என் நிறுவனத்தின் சொகுசுப் பேருந்துகளையும் இதரத் தமிழர்களின் சரக்குந்துகளையும் 200க்கும் மேற்பட்டவற்றை பெங்களூரில் கன்னடர்கள் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சற்றொப்ப இரண்டுமாதங்கள் தமிழக –கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஊர்தி போக்குவரத்துத் தடுக்கப்பட்டு மூடி கிடந்தது.

கர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பினாலும் கூட, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட மறுக்கிறார்கள். வெள்ள காலங்களில் வெளியேறும் மிகை நீரும் மேட்டூர் அணைக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக 67.16 ஆ.மி.க. கொள்ளளவில் மேக்கேதாட்டில் அணைகட்டக் கர்நாடகம் முனைகிறது.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கின்ற நிலையில் அணை உடையப் போகிறது என்று கேரள சி.பி.எம்; காஙிகரசுக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் பீதி கிளப்பி, தமிழர்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டிவிட்டன. 2011,2012 ஆண்டுகளில் தமிழ்நாட்டு எண் பொறித்த ஊர்திகளையும் தமிழர்களையும் தாக்கினார்கள் மலையாளிகள்! சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிக் கொன்றார்கள். ஐயப்ப சாமி கோயிலுக்குப் போன தமிழர்களைத் தாக்கினார்கள். கேரள நச்சுக் கழிவுகளைத் திட்டமிட்டுத் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். தமிழ்நாட்டிற்குரிய கண்ணகி கோயில் நிலப்பகுதியை கேரளம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. கூடலூர் – பளியங்குடி வழியாகக் கண்ணகி கோயிலுக்குத் தமிழ்நாட்டு எல்லைகுள் தமிழ்நாடு அரசு சாலை அமைப்பதையும் தடுத்து வைத்திருகிறது கேரளம்.

தமிழ்நாட்டு அரசுப் பொறுப்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு, விலைக்கு மின்சாரம் தரமறுக்கிறது கேரள அரசு. மின்னாக்கியை (ஜெனரேட்டரை)ப் பயன்படுத்தித்தான் தமிழ்நாடு அவ்வளவு பெரிய அணையையும் அலுவலகங்களையும் பல பத்தாண்டுகளாக நிர்வகிக்கிறது.

ஆந்திரம், தமிழ்நாட்டிற்குரிய பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் அணைகள் கட்டி சொட்டு நீரும் வராமல் தடுத்துவிட்டது. தமிழ்நாடு அரசு பணம் செலுத்தி சென்னைக் குடிநீருக்குக் கிருஷ்ணா ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டது. ஓர் ஆண்டில் கூட ஒப்பந்தப்படி 12 ஆ.மி.க. (T.M.C.) தண்ணீரை ஆந்திரம் சென்னைக்குத் திறந்துவிட்டதில்லை. பேருந்தில் பயணம் செய்த தமிழர்கள் 18 பேரை ஆந்திரக் காவல் துறையினர் கடத்திச் சென்று, அம்மணப்படுத்தி, கைகால்களைக் கட்டி, உறுப்புகளை அறுத்து, சித்திரவதை செய்து சுட்டுக்கொன்ற செய்தி அனைவருக்கும் தெரியும்.


====================
திராவிடத் தீவிரம்
====================
இன்னும் எத்தனை எத்தனையோ வன்கொடுமைகளைத் தமிழர்களுக்கு எதிராக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் அரங்கேற்றுகின்றன. அவர்களும் தமிழர்களும் ஒரே இனம் என்ற திராவிட இனக் கொள்கையைத் தி.க.வும் தி.மு.க.வும் கடைபிடித்து, தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தமிழினத் தற்காப்பு உணர்வற்ற ஏமாளிகள் ஆக்குகின்றன தமிழர் இழப்புகளுக்கு ஆளகிறார்கள்.

இப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து திராவிட இனவாதத்தைத் தீவிரபடுத்தியுள்ளார். முதலமைச்சர் பதவி உறுதி மொழி ஏற்றவுடன் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், திராவிட இனத்தவன்” என்று தன்னை வெளிபடுத்தினார். தமிழ்நாட்டு முன்னேற்றத்தைத் “திராவிட மாடல்” என்றார். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் போது அவருக்குத் “திராவிடச் சிறுத்தை”  என்று சிறப்பு அடைமொழி கொடுத்தார். இப்போது தமிழ்நூல்கள் தொகுப்பிற்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுகிறார்.

திராவிடர் கழகத்தை விஞ்சும் அளவிற்கு இப்போது மு.க.ஸ்டாலின் திராவிட இனத்திணிப்பில் தீவிரம் காட்டுவது ஏன்?

தமிழ்நாடு என்பது தமிழர்களுக்கான மொழிவழித் தேசிய இனத்தாயகம். அவ்வாறான தேசிய இனத் தாயக அடிப்படையில்தான் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மராட்டியர்கள், குசராத்தியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள் எனப் பல இனத்தவர்க்கும் தனித் தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதற்காக இம்மாநிலங்களில் பிற மொழி பேசும் மக்களும் பிற தேசிய இனமக்களும் வாழவே மாட்டார்கள், வாழவே கூடாது என்ற வரையறை எதுவும் இல்லை. 
    
வரலாற்றுப் போக்கில் பல்வேறு காரணங்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் வெளியிலிருந்து வந்து குடியேறிய மக்கள் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சம உரிமை உண்டு. ஆனால் அந்தச் சிறுபான்மையினர்க்காக, அம்மாநிலத்துக்குரிய வரலாற்று வழிப்பட்ட மண்ணின் மக்கள் தங்கள் இனப்பெயரை மறைத்துக் கொள்வது என்பதோ, தங்கள் தாய்மொழியை, முன் நிறுத்தக் கூடாது என்பதோ எந்த மாநிலத்திலும் இல்லை. மரபு வழியில் மண்ணுக்குரிய இனத்தின் பெயரை -  அதன் மாநிலத்திற்கு  வைக்கக் கூடாது என்றும் கூற முடியாது. 

அதே வேளை தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து அயல் இனத்தவர்கள் அன்றாடம் வந்து குவிந்து தமிழ்த் தேசிய இனத்தின் தாயகமான தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. மொழி வழி தேசிய இனத் தாயகமாகத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு வரையறுக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்கு பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அனைவரும் அயலார் என்றும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை எழுப்பிவருகிறது.   

தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, செளராட்டிரம் முதலிய மொழிகளைப் பேசும் மக்கள் பலநூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களை நாம் அயலாராகக் கருதவில்லை. மண்ணின் மக்களே. அதே வேளை தமிழே இங்கு கல்வி மொழி, ஆட்சி மொழி; தமிழர்களின் மரபுவழித் தாயகம் தமிழ்நாடு!

கர்நாடகத்தில் தமிழர் நிறுவனங்களில் கன்னடத்துடன் தமிழிலும் நிறுவனப் பெயர் எழுதபட்டிருந்தால் அப்பலகைகளை அடித்து உடைக்கிறார்கள் கன்னட வெறியர்கள். தமிழில் இசை நிகழ்ச்சி நடந்தால் மேடை ஏறித் தாக்குகிறார்கள்.  தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் நடப்பதில்லை. நடக்கக் கூடாது.

ஆனால் தமிழின அடையாளத்தையே மறைக்க தி.க.வும், தி.மு.க.வும் முனைவது சரியா? திராவிடத்திணிப்பு ஏன்?இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின்  திராவிடத் திணிப்பில் தீவிரம் காட்டுவது ஏன்?

ஐயா அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 175-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி அவர் நினைவைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் “தமிழன், திராவிடம்” என்ற இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது என்று முன்னுரை கொடுத்தார். திராவிடம் என்பதை அனைவர்க்கும் பொதுவான இனமாகவோ – பண்பாகவோ திணிப்பதை ஏற்க முடியாது.

அயோத்திதாசர் தொடக்கத்தில் திராவிட என்ற சொல்லைப் பயன்படித்தினார். பின்னர் அச்சொல்லைக் கைவிட்டு, தமிழன் என்பதையே பயன்படுத்தினார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (1881) தமிழர் என்று அனைவரையும் பதியச் சொன்னார். தமிழன் என்ற பெயரில் ஏடு நடத்தினார்.

அயோத்திதாசரைப் போற்றுவதைக் கூட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஸ்டாலின், திராவிடத்தைத் திணிப்பது சரியன்று.

தமிழிக்கும் தமிழினத்திற்கும் பாடுபட்ட அயோத்திதாசர், மனோன்மணியம் சுந்தரனார் போன்றவர்கள் கூட திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். காரணம் அப்போது ஆட்சியாளர்களால் திராவிடர் என்ற சொல் பிரபலப்படுத்தப்பட்டிருந்ததாகும்.

“திராவிட” என்ற சொல் எப்போது பிரபலம் ஆனது. விசயநகரத் தெலுங்கு மன்னர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்த போது! அதிலும் குறிப்பாகத் தெலுங்கு பிராமணர்கள் “திராவிட” என்ற சொல்லைக் கூடுதலாகத் திணித்தார்கள். அப்பொழுதுதான் தாயுமானவர் முதல் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

ஐரோப்பிய மொழியியல் ஆய்வாளர்கள், ஆரிய பிராமணர்கள் கொடுத்த “திராவிட” என்கிற இன – மொழிப் பெயரை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.
  
நம்முடைய தமிழ்ச்சான்றோர்களும்,  அறிஞர்களும் திராவிட, திராவிடர் என்ற சொற்களைப் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தினார்கள். தெலுங்கர்களின் – பிராமணர்களின் மேலாதிக்கச் செல்வாக்கால் – வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி நம் சான்றோர்கள் திராவிடத்தைப் பயன்படுத்தினார்கள்.

 ஆரிய-பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடினார் பெரியார்; ஆரிய ஆதிக்கத்தின் மீது அடி விழுந்தது. அந்த நன்றிக் கடனுக்காக, நம்முடைய பாவேந்தர் போன்றோர் தமிழையும் தமிழ் இனத்தவரையும்  பெரியார் இழிவு படுத்தியதையெல்லாம் தாங்கிக் கொண்டார்கள். பெரியார் தாசனாகப் பாவேந்தர் விளங்கினார். அதே வேளை தமிழுக்கு அமுதென்று பேர், தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடினார்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழைப் படிக்காதே, ஆங்கிலத்தைப் படி என்று பெரியார் ஆவேசப் பரப்புரை செய்த போது கூடப் பாவேந்தர் “நூலைப்படி; சங்கத் தமிழ் நூலைப்படி; காலை இரவு பொருள்படும்படி சங்கத் தமிழ் நூலைப்படி” என்று பாடினார்.

தமது பாக்களில் திராவிடன், திராவிட நாடு என்று எழுதிய பாவேந்தர் பின்னர் மறுபதிப்புகளில் அவற்றைத் தமிழன், தமிழ்நாடு என்று மாற்றினார். இதுபற்றி பாவேந்தர் ஆய்வாளர் காலஞ்சென்ற முனைவர் இளவரசு அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்திதாசரும் பாவேந்தரும் “திராவிடர்” என்று முழுமையாகக் கடைசிவரைக் கூறவில்லை. அவர்கள் தமிழ், தமிழர் என்ற களத்தில்தான் செயல்பட்டார்கள். இந்த இடத்தில் இன்னொரு கருத்தையும் சொல்லிவிடுவது நல்லது. நம்முடைய அயோத்திதாசரும், பாவேந்தரும் “திராவிடர்” என்ற இனம் பற்றி மெய்யாகவே கூறியிருந்தாலும் அதை நீக்கிவிட்டுதான் நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.   

இதுதான் தமிழ் அறிவுத் தேடல் மரபு. அயோத்திதாசரும் பாவேந்தரும் அந்த அறிவுத் தேடல் மரபை நமக்கு அடையாளம் காட்டியுள்ளார்கள்.

===============================
திராவிடத் திணிப்பு வேகம் பிடிப்பதேன்?
===============================

அண்மைக் காலமாகத் தமிழின உணர்ச்சி தமிழ்நாட்டு இளையோரிடமும் பெரியோரிடமும் வளர்ந்து வருகிறது. தமிழ்த் தேசியம் வளர்ந்து வருகிறது. இந்தத் தமிழின உணர்ச்சி வளர்ச்சி வேகத்தைத் தடுத்து மடைமாற்றத் திராவிட உணர்ச்சியை செயற்கையாகத் தூண்டுகிறார்கள்.

அடுத்து, தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்று இருப்பதைக் கலப்பு இன மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டம் கொண்டுள்ளார்கள்.

கலப்பின மாநிலம் என்பதை நேரடியாகச் சொன்னால் திராவிடக் கட்சிகளில் இருக்கின்ற தமிழர்களே அதை எதிர்ப்பார்கள் என்பதற்காக, ஆரிய எதிர்ப்புக்கு உரியது திராவிடமே என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். இந்த உத்தி ஏற்கெனவே பெரியாரால் சொல்லப்பட்டதுதான்.

ஆரிய-பிராமணப்-சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பை 2000 ஆண்டுகளாக தொடர்ந்து வள்ளலார் காலம் – மறைமலையடிகள் காலம் வரை கடைபிடித்து வந்தது தமிழினம். அதற்கான சான்றுகள் ஏராளம். அப்படி தமிழ் முன்னோர்களால் ஆரிய எதிர்ப்பிற்கு பக்குவப் படுத்தப்பட்ட மண்ணில்தான் பெரியாரின் ஆரிய எதிர்ப்பு வளர முடிந்தது அதே வேளை அவர் உரிமை கொண்டாடிய ஆந்திர, கர்நாடக, கேரள திராவிட மாநிலங்களில் ஆரிய பார்ப்பணிய சமற்கிருத எதிர்ப்பு வெகு மக்கள் இயக்கமாக உருவாகவில்லை.  

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்க திராவிடம் இனம் என்ற வரையறை தேவை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் பார்ப்பனர்களை எதிர்க்கத் தமிழினம் பொருத்தமில்லை, திராவிட இனமே சரியானது என்று பெரியார் கூறினார். இதோ அவர் கூற்று:
“திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஷ்டமாயிருக்கும் போது, தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும்.  இங்கேயே பாருங்கள் கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். எனவே திராவிட  சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம், நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது” என்று ஒரு பொதுக் கூட்டத்தில்  பெரியார் பேசினார்.     (பெரியார் ஈ.வெ.ரா, சிந்தனைகள் -1, பதிப்பாசிரியர், வே.ஆனைமுத்து. 1974 பக் 543-550).

தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழரல்லாத மற்ற இனத்தவர்களுக்கும் உரிய பொதுச் சொல்லாகத்தான் பெரியார் திராவிடத்தைத் தேர்வு செய்தார். அதன்பிறகு தமிழர் என்றால் “என் தாய் மொழியும் தமிழ் என்று கூறிக் கொண்டு பார்ப்பனர்களும் வந்து சேர்ந்து கொள்வதைத் தடுக்கத் திராவிடர் என்ற இனப் பெயரைப் பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.

தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகிய மூன்று இனத்தார்க்கும் பொதுச் சொல் திராவிடர் என்று கால்டுவெல் பாணியைப் பின்பறிப் பெரியார் கூறினார்.

இப்போதும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இருக்கும் தமிழர் என்ற தனி அடையாளத்தை – தாயக உரிமையை நீக்க, தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்ற பிற இனங்களையும் இணைத்து, கலப்பின மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றவே முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட இனம் குறித்துத் தீவிரமாகப் பேசிவருகிறார்.

தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் முறையே ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக, கேரள மாநிலங்களில் தங்களின் இயற்கையான இனப்பெயரில் வாழ்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும் தங்களின் இயற்கையான இனப்பெயரை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, திராவிடர் என்ற பெயரில் அடையாளப்பட வேண்டும் என்பதுதான் இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் திராவிட முனைப்பு. இதைப் புரிந்து கொண்டு தமிழர்கள் தங்களின் இனப்பெயரை, இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
அதே வேளை, பல நூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்களைத் தமிழர்களாகிய நாம் அயலாராகக் கருதவில்லை, கருதக்கூடாது. சம உரிமை உள்ள மக்களாகவே கருதுகிறோம். அவர்களும் தமிழர்களின் இனப்பெயரை மாற்றும் “திராவிட” முயற்சிகளுக்கு ஆதரவளிக்கக்கூடாது. ஓர் இன மக்களுக்கு அந்த இன முன்னோர்கள்தான் இனப்பெயரை சூட்டுவர், கால்டுவெல் போன்ற வெளியார் தமிழர்களுக்கு இனப் பெயர் சூட்ட முடியாது. கால்டுவெல்லை பயன்படுத்தித் தமிழின அடையாளத்தை மறைத்தும் மறுத்தும் சூதாடுகின்ற திராவிட அரசியலை ஏற்க முடியாது.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Sunday, September 5, 2021

“திராவிடம்” என்பது ஆரிய அடிமைத்தனம் (முரசொலிக்கு எதிர்வினை) - ஐயா பெ.மணியரசன் அவர்கள் எதிர்வினை!



“திராவிடம்” என்பது ஆரிய அடிமைத்தனம்
(முரசொலிக்கு எதிர்வினை)

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  
ஐயா பெ.மணியரசன் அவர்கள் எதிர்வினை!

“தஞ்சாவூர்” என்பதும் “டேஞ்சூர்” என்பதும் ஒன்றுதான், அதனால் நாம் டேஞ்சூர் என்றே சொல்வோம் என்று யாராவது சொன்னால் அதை ஏற்போமா? மாட்டோம்! ஆனால் “தமிழர்” என்பதும் திராவிடர் என்பதும் ஒன்றுதான், எனவே திராவிடர் என்றே நம்மை சொல்லிக் கொள்வோம் என்று ஒரு சாரார் சொல்வதை ஏற்கலாமா? கூடாது.

“ ‘திராவிடம்’ என்றால் எரிகிறதா?” என்ற தலைப்பில் தி.மு.க.வின் அதிகார முறை ஏடான முரசொலி நாளிதழ் 2.9.2021 அன்று ஆசிரிய உரை எழுதியிருந்தது.

“தமிழ்த் தேசியப் பேரியக்கம் என்ற அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை என்பது தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றை மட்டுமல்ல, மொழிப் புலமை அறியாத தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது,” என்று தனது வாதத்தை முரசொலி தொடங்குகிறது.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் 31.8.2021 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்த தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை அறிக்கையில், 

“சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்புகளாகவும் திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் அச்சிட்டுக் குறைந்த விலையில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வெளியீடு: இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை.

அந்த அறிவிப்பில் மேற்படி வாசகங்கள்தாம் இருந்தன. சங்கத் தமிழ் நூல்களைத் தொகுத்து, திராவிடக் களஞ்சியம் என்ற தலைப்பில் வெளியிடப் போகிறார்கள் என்று தான் பலரும் புரிந்து கொண்டோம்.

“திராவிடக் களஞ்சியம்” என்பதை எதிர்த்து நான் கொடுத்த அறிக்கையில் “சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் “திராவிட” என்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறு இருக்க வலிந்து, சங்கத் தமிழ் நூல்களுக்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று தி.மு.க. ஆட்சி பெயர் சூட்டுவதற்கு ஓர் உள் நோக்கம் இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு, மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆனபிறகு கூடுதல் முனைப்புடன் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்திய நிகழ்வுகளை வரிசைப்படுத்தி இருந்தேன். 

“திராவிடம்” என்ற சொல்லைக் கால்டுவெல் சமற்கிருத நூல்களான மனு தர்மம், குமாரில பட்டரின் தந்திர வார்த்திகா ஆகியவற்றிலிந்து எடுத்ததாக அவரது ஒப்பிலக்கணத்தில் கூறுகிறார் என்றும் சுட்டியிருந்தேன். தென்னாட்டில் குடியேறிய ஆரிய பிராமணர்களைத்தான் திராவிடர் என்று அவர்கள் அழைத்துக் கொண்டார்கள் என்பதையும் சொல்லியிருந்தேன். வட சொல்லான திராவிடத்தை, தமிழ் இலக்கிய தொகுப்பிற்குத் தலைப்பாக்க வேண்டாம் என்றும் கேட்டிருந்தேன்.

“எங்கள் அடையாளம் தமிழ்” என்ற குறிச்சொல் பரப்புரை (ஹேஷ் டாக்) மற்றும் வலைத்தள பரப்புரை என திரளான தமிழர்களின் கண்டனத்தைத் தமிழ்நாடு அரசின் மேற்படி “களஞ்சிய” அறிவிப்பு சந்தித்தது.

இந்தப் பின்ணனியில்தான் முரசொலி ஆசிரியவுரை வந்தது.

எனது அறிக்கையில் “திராவிட என்பது வட சொல்” என்று எழுதியிருந்தேன். அதை மறுத்து முரசொலி எழுதியுள்ளது.

“திராவிட என்பதை வட சொல் என்பது வேர்ச் சொல் அறியாதவர் கூற்றாகத்தான் இருக்க முடியும். திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே என்று தான் நிறுவி உள்ளார். திராவிடம் என்பது தென் சொல்லே என்று நிறுவி உள்ளார்.”

“தமிழம் – தவிள – தவிட – என்று பிராகிருதத்தில் திரிந்த பின்பு, தமிலி, தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரவிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாகப் பண்டிதர் கிரையர்கள் கூறுவர். (கிரையர்சன் என்பது கிரையர்கள் என்று பிழையாக அச்சாகியுள்ளது.)  

“எங்ஙன மிருப்பினும் தமிழம் என்னும் சொல்லே “த்ரவிட” என்று திரிந்தது என்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை என்று எழுதியிருக்கிறார் பாவாணர்” என்று முரசொலி கூறுகிறது. பாவாணர் எந்த நூலில் இவ்வாறு எழுதியுள்ளார் என்ற குறிப்பை முரசொலி கொடுக்கவில்லை.

பாவாணர் தமது “தமிழ் வரலாறு” என்ற நூலில் கூறியதைத்தான் சிறிது மாற்றி வேறு பொருள் தரும்படி முரசொலி மேற்கோளாகப் போட்டுள்ளது.

பாவாணர் கூறுகிறார்:

“நாட்டுப் பெயர்களும் மொழிப் பெயர்களும் பண்டைக் காலத்தில் பெரும்பாலும் ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கியதை நோக்கும் போது, தமிழ் என்னும் சொல்லும் சிறுபான்மை (அளவு) தமிழம் என்று வழங்கியதாகக் கருத இடம் ஏற்படுகின்றது. தமிழம், த்ரமில (ம்), த்ரமிள(ம்), த்ரமிட (ம்), த்ரவிட (ம்) என்னும் முறையே நோக்கின், தமிழ் என்பதன் திரிபே திரவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலை கீழாய் நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார். ஆயின் கிரையர்சன் இத்தவற்றைத் திருத்திவிட்டனர்.”

பாவாணர் தமிழ் வரலாறு, பக்கம் 32

தமிழர்களிடையே வழங்கப்பட்ட தமிழை வடவர் திரிபாகத் திரமிள, திராவிட என்று ஆக்கினர். ஆனால் கால்டுவெல் மிகத் தவறாக, திராவிட என்பதிலிருந்து தமிழ் வந்தது என்று கூறுகிறார் என்று பாவாணர் திறனாய்வு செய்தார். அத்துடன் மேலே காட்டப்பட்ட மேற்கோளுக்குக் கீழே தமிழ்நாட்டில் தவறிக்கூட, “திராவிட” என்ற சொல்லை உச்சரிக்கவில்லை – பயன்படுத்தவில்லை என்பதைத் தனிக் குறிப்பாக மேற்படி பக்கம் 32 இல் கூறியுள்ளார்.

“(4) திராவிடம் என்னும் வடிவம் தமிழ்நாட்டுலக வழக்கில் அருகியும் வழங்காமை. (தடிப்பெழுத்து வடிவம் பாவாணரே கொடுத்தது.)

இதன் பொருள் தமிழ்நாட்டில் எப்பொழுதாவது, மிக மிக அரிதாகக்கூட திராவிடம் என்ற சொல்லை பேச்சு, எழுத்து வழக்கில் (உலக வழக்கில்) பயன்படுத்தியதே இல்லை என்பதாகும்.

திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு ஆதரவாகப் பாவாணர் கருத்துகள் கூறியது போல் முரசொலி அவருடைய மேற்கோளைத் திரித்துப் பயன்படுத்துவது நீதியா?

நான் தொடக்கத்திலேயே சுட்டிக் காட்டியது போல் அயலாரான ஆங்கிலேயர் தஞ்சாவூரை –டேஞ்சூர் என்று கொச்சையாக உச்சரித்தால் அந்தக் கொச்சை வடிவத்தைக் கொண்டாடி மகிழ்வது அடிமை மனப்பான்மை இல்லையா? டேஞ்சூர் என்பது ஆங்கிலேய எசமானனுக்கான அடிமைத்தனம்; திராவிடம் என்பது ஆரிய எசமானனுக்கான அடிமைத்தனம். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, September 4, 2021

"கலைஞராலே முடியவில்லை! ஸ்டாலினால் எப்படி முடியும்?" 'IBCTamil' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"கலைஞராலே முடியவில்லை! 

ஸ்டாலினால் எப்படி முடியும்?"


'IBCTamil' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, September 2, 2021

திராவிடக் களஞ்சியத்தை அரசு வெளியிடுவது சரியல்ல; தி.மு.க. வெளியிடலாம்! - பெ. மணியரசன் அறிக்கை!



திராவிடக் களஞ்சியத்தை அரசு 
வெளியிடுவது சரியல்ல; தி.மு.க. வெளியிடலாம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


“திராவிடக் களஞ்சியம்” குறித்த விளக்கத்தைத் தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (02.09.2021) சட்டப்பேரவையிலும், வெளியில் ஊடகங்களிடமும் விளக்கியுள்ளார். சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டவில்லை; கால்டுவெல் காலத்திலிருந்து தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட காலம் வரை உள்ள 150 ஆண்டு கால வரலாற்றில் திராவிடச் சிந்தனையாளர்களின் கருத்துகள், மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, இடஒதுக்கீடு, சமூகநீதி போன்றவை குறித்த கட்டுரைத் தொகுப்புகள் போன்றவற்றை அரசு வெளியிட இருக்கிறது. அத்தொகுப்பின் தலைப்புதான் “திராவிடக் களஞ்சியம்” என்று கூறியுள்ளார். (புதிய தலைமுறைத் தொலைக்காட்சி, 02.09.2021).

“திராவிடக் களஞ்சியம்” குறித்து இப்போது அமைச்சர் கொடுத்துள்ள விளக்கத்தில், ஒரு வரியாவது கூறி, “திராவிட இயக்கச் சாதனைகள் பற்றிய நூல்” என்று குறிப்பிட்டிருக்கலாம். இதுகுறித்து மக்கள் செய்தித் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் பின்வருமாறு இருந்தது : “சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் அச்சிட்டுக் குறைந்த விலையில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்”. 

இதில், “திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும்” என்று இருக்கிறது. ஆனால், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள மானியக் கோரிக்கை அறிக்கை எண் 46இல், “திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும்” என்று மாற்றிக் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த சொற்றொடர் அமைப்புக் குழப்பத்தினால் சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுகிறீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டது. நல்லவேளை, அப்படி இல்லை என்று விளக்கம் கொடுத்தீர்கள், நன்றி! தொலைக்காட்சியில் நீங்கள் விமர்சித்ததுபோல் குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க அலையும் நபர் நான் இல்லை. தமிழர்களின் மரபான இனத்தை மாற்றிக் குழப்புவது தி.மு.க.தான்! 

பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத மக்கள் அணிவகுப்பைத் திரட்டி, தமிழ்த் தேசிய இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற கொள்கையுடையது எங்கள் தமிழ்த்தேசியப் பேரியக்கம். 

இப்போது நீங்கள் சொல்லி இருக்கிற விளக்கத்தின்படி பெரியார், அண்ணா, கலைஞர் முதலிய தி.க. – தி.மு.க. தலைவர்களின் கட்டுரைகள், கவிதைகள், அவர்களைப் பற்றி மற்றவர்கள் எழுதிய படைப்புகள், புகழுரைகள் மற்றும் தமிழ் மொழியை – தமிழர் பண்பாட்டை - தமிழர் தனித்துவ வரலாற்றைத் திராவிடம் என்ற பலமொழிக் கூட்டுக் கலவைக்குள் திணித்து எழுதிய அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இப்பொழுதுள்ள பாலகிருஷ்ணன் போன்றவர்களின் ஆய்வுரைகள் முதலியவை இடம்பெறும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. 

தமிழின வரலாற்றை ஒரு பகுதியை கால்டுவெல்லின் காலத்திலிருந்து தொடங்குவது எப்படிப்பட்ட வரலாற்று அறிவு என்பது புரியவில்லை. கி.மு. – கி.பி. என்பதுபோல தி.மு.க., கா.மு. – கா.பி. என்று வரையறுத்துக் கொண்டதோ? 

ஆரிய – சமற்கிருத ஆதிக்கத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக எதிர்த்து வருவது தமிழினம்! வர்ணாசிரம தர்மத்தை தமிழர் ஆன்மிகம் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. ஆரிய வர்ணாசிரம எதிர்ப்பை தமிழினத்தில் முதல் முதலாகத் தொடங்கியது திராவிட இயக்கம் என்பதுபோன்ற பிழையான வரலாற்றுத் திரிபுகள் வேண்டாம்! ஆரியத்துவா ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. அணியுடன் கூட்டணி சேர்ந்து ஒன்றிய அமைச்சரவையில் பங்கு வகித்ததும், தமிழ்நாட்டில் அக்கட்சியினரை சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்ததும் தி.மு.க. வரலாற்றில் உண்டு! எதிர்காலத்தில் இக்கூட்டணி மீண்டும் உருவாகாது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை!

“திராவிடக் களஞ்சிய”த் தொகுப்புகளில், தமிழைத் திராவிட மொழிகளுள் ஒன்று என்றும், தமிழரைத் திராவிடர் என்றும் வலியுறுத்தும் தமிழின மறைப்புதான் நடைபெறவுள்ளது. மற்ற மொழிகளுக்குத் தாய்மொழியாக உள்ள தமிழின் தொன்மை – ஆற்றல் ஆகியவற்றை மறைக்கும் செயல்தான் இதனால் மிஞ்சும். திராவிட மொழிப் பட்டியலில் கூறப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோர் மகிழ்ச்சி அடைவர். 

கடந்தகாலத் தி.க. – தி.மு.க. கட்சிகளின் “சாதனைகள்” மற்றும் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளாக நீங்கள் கருதுபவற்றை மக்கள் வரிப் பணத்தில் நூல்களாக வௌயிடுவது சரியா என்பதையும் தி.மு.க. தலைவர்கள் “நெஞ்சுக்கு நீதி”யுடன் முடிவு செய்ய வேண்டும். இத்தொகுப்பைத் தி.மு.க. வெளியிடுவதே சரி! 

தி.மு.க. ஆட்சியில்தான் தமிழ்நாட்டு சமூக, பொருளியல் வளர்ச்சி வடமாநிலங்களைவிட அதிகமாக ஏற்பட்டது; அதற்கான சூத்திரம்தான் “திராவிட மாடல்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஒன்றை மட்டும் கேட்கிறேன். கடந்த ஆறாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்தக் காலத்தில், தமிழினம் வடநாட்டவர்களைவிட வேளாண்மை - தொழில் – வணிகம் – நகர நாகரிகம் – சமூகநீதி முதலியவற்றில் பின்தங்கி இருந்தது? வெள்ளைக்காரன் ஆட்சியிலும் சரி, அவன் வெளியேறிய பிறகு வந்த காங்கிரசு ஆட்சியிலும் சரி மேற்கண்டவற்றில் வடமாநிலங்களை விடத் தமிழ்நாடு (சென்னை மாகாணம்) முன்னேறித்தான் இருந்தது. இதற்கென்ன  தனித்துவமான “திராவிட மாடல்” பங்களித்தது? 

எவ்வளவு மோசமான ஊழல், பதவிவெறி அரசியல், தன்னல அரசியல், காங்கிரசு – பா.ச.க.வுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி போன்றவை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில்   களிநடம்புரிந்தாலும் வடமாநிலங்களை விடத் தமிழ்நாடு இன்றும் முன்னேறி இருப்பதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. 

இவற்றில் முதன்மையானது, வரலாற்று அடிப்படையில் தமிழினம் முன்னேறி இருந்த பின்னணி, அறிவு – ஆற்றல் – நேர்மை முதலியவற்றில் மரபுவழி உள்ளாற்றல் தமிழர்களுக்கு இருப்பது என்பதே இன்றைய முன்னேற்றத்திற்கும் அடிப்படைக் காரணம்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Wednesday, September 1, 2021

"தேர்தலுக்கு முன் தமிழன்.. ஆட்சிக்கு வந்த பிறகு திராவிடனா..!?" - 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தேர்தலுக்கு முன் தமிழன்.. ஆட்சிக்கு 

வந்த பிறகு திராவிடனா..!?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, August 16, 2021

ஸ்டாலின் பெருமிதமும்! சித்தராமையாவின் சீற்றமும்! - ஐயா பெ.மணியரசன் உரை!

ஸ்டாலின் பெருமிதமும்! 

சித்தராமையாவின் சீற்றமும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, March 18, 2021

தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா? - ஐயா பெ. மணியரசன், சுப.வீ.கட்டுரைக்கு மறுவினை கட்டுரையின் காணொலி வடிவம்!


தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், சுப.வீ.கட்டுரைக்கு மறுவினை கட்டுரையின் காணொலி வடிவம்!

width="640">

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, March 15, 2021

தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா? - சுப.வீ. கட்டுரைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மறுவினை!



தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா?

சுப.வீ. கட்டுரைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மறுவினை!

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் 12.3.2021 அன்று இணையத்தளத்தில் ஒரு விவாதக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதன் தலைப்பு “நீங்கள் எந்தப் பக்கம்? தேர்தல் வாக்களிப்பா? புறக்கணிப்பா?” என்பதாகும்.

“தமிழ்த்தேசியப் பேரியக்கமும் வேறு சில இயக்கங்களும் கடைபிடிக்கும் தேர்தல் புறக்கணிப்பு தவறு, அப்புறக்கணிப்பால் மோசமான கட்சிகள் பயன் அடைவதைத் தவிர வேறு ஒரு பயனையும் பெற இயலாது” என்று கூறி சுப.வீ. தமது கட்டுரையை முடித்துள்ளார். இது பற்றி என்னிடம் முதல் நாள் (11.3.2021) தொலைபேசியில் சில வினாக்கள் கேட்டார்.

இந்தக் கட்டுரையின் கடைசிப் பகுதியில், உங்கள் “லட்சியம் எது என்று கேட்டேன். அதற்கு இறையாண்மை கொண்ட தமிழ்த் தேசியம் என்றார்” என்று சுப.வீ. குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு திருத்தம்; “எங்கள் இலட்சியம் இறையாண்மை கொண்ட தமிழ்த் தேசம்” என்றேன். தமிழ்த் தேசியம் என்று கூறவில்லை. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்பது கருத்தியல் வடிவம். தமிழ்த்தேசம் என்பது தாயகம் என்ற பருண்மை வடிவம்.

தேர்தலைப் புறக்கணித்த பின், உங்கள் குறிக்கோளை அடைய மாற்று வழி என்ன வைத்துள்ளீர்கள் என்று என்னிடம் கேட்டார் சுப.வீ. அதற்கு “இலட்சியத்தை நோக்கிய கட்டமைக்கப்பட்ட வெகுமக்கள் போராட்டங்கள்” என்றேன். இது பற்றி சிறிது சொல்ல வேண்டியிருக்கிறது.

இக்காலத்தில், தன்னெழுச்சியாக கட்சி சார்பற்று நடந்த வெகுமக்கள் எழுச்சியும் போராட்டமும் கலைஞர் கருணாநிதி, செயலலிதா போன்ற வலிமையான ஆளுமைகளின்  ஆட்சிகளால் மீட்க முடியாத சல்லிக் கட்டு உரிமையை மீட்டது; ஸ்டெர்லைட்  ஆலையை மூடியது, ஐட்ரோ கார்பன் எடுப்பதைத் தடுத்தது; காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக ஆட்சியாளர்களை அறிவிக்க வைத்தது. மீத்தேன் எடுப்பதைத் தடைசெய்து  அன்றைய முதல்வர் செயலலிதா ஆணை பிறப்பித்தது கூட நம்மாழ்வார் தொடங்கி வைத்து விரிவடைந்த மக்கள் திரள் போராட்டங்களால்தான்!

வெகுமக்கள் எழுச்சி சாதிக்கும் என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகள். சரியான அமைப்பினால் வழிகாட்டப்பட்டு, கட்டமைக்கப்பட்ட வெகு மக்கள் எழுச்சியும் போராட்டமும். தமிழ்த்தேச இறையாண்மையை மீட்கும். தேர்தல் வழிமுறை மூலமோ, தேர்தல் கட்சிகள் மூலமோ தமிழ்த்தேச இறையாண்மையை மீட்க முடியாது என்ற எனது நிலைபாட்டைச் சுருக்கமாகத் தொலைபேசியில் குறிப்பிட்டேன், அதன் சுருக்கத்தை சுப.வீ வெளியிட்டுள்ளார். அதில் குறையொன்றுமில்லை.

ஆனால் தமிழ்த்தேச இறையாண்மை மீட்பு இலட்சியத்தை சுப.வீ ஏற்கிறாரா, மறுக்கிறாரா? என்பது குறித்து அவர் தமது திறனாய்வுக் கட்டுரையில் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது.

சுப.வீயின் தலைவர்களான அண்ணாவும் கலைஞரும் முழங்கிய “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” இலட்சியம் பற்றி நான் கேட்கவில்லை. கலைஞர் கருணாநிதி 1970-களின் தொடக்கத்தில் “மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்று முழங்கி, மாநாடெல்லாம் போட்டாரே அந்த முழக்கத்திற்காவது மறுஉயிர் கொடுத்து, அதை முதன்மைப்படுத்தி இந்தத் தேர்தலை(2021) சுப.வீயின் தலைவர் தளபதி ஸ்டாலின் சந்திப்பார் என்று கூட சுப.வீயால் சொல்ல முடியவில்லை.

பிரிவினைத் தடைச் சட்டம் வந்த பின் அல்ல, வரப்போகிறது என்று தெரிந்த உடனேயே திராவிட நாட்டு விடுதலைக் கோரிக்கையை “ஒத்திவைத்தது” தி.மு.க.(1964) “தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதே தவிர, அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று பின்னர் அண்ணா சொன்னார். 1967-இல் முதலமைச்சர் ஆன பின்னும் “தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டது; ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்றார். “காஞ்சி” இதழில் எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது; முதலைமைச்சர் என்ற பட்டம்; என் தலையில் முள் கிரீடம் போல் இருக்கிறது, நான் சூழ்நிலையின் கைதி என்று எழுதினார். 

கலைஞரின் தலைமையிலான தி.மு.க. 1971-இல் இந்திரா காங்கிரசுடன் மக்களவை – தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டிற்குமான தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டது. 1977 மக்களவைத் தேர்தலில் மொரார்சி தேசாயின் சனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருந்தது தி.மு.க. மொரார்சி தலைமை அமைச்சரானார். அடுத்து 1980-இல் இந்திரா காந்தியின் காங்கிரசுடன் மக்களவை மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி சேர்ந்தது. 

1996-97-இல் தேவகவுடா, ஐ.கே.குஜரால் ஆகியோரை தலைமையமைச்சராக கொண்ட கூட்டணியில் தி.மு.க. உறுப்பு வகித்து அமைச்சர் பதவிகளை பெற்றது. வாஜ்பாயி (1999-2004), மன்மோகன்சிங் (2004-2014) ஆட்சிகளில் நடுவண் அரசின் அமைச்சர்களாகத் தி.மு.க.வினர் வீற்றிருந்தனர்.

இக்காலத்தில் மாநிலத் தன்னாட்சிக் கோரிக்கைகளில் எத்தனை உரிமைகளை மீட்டார்கள்? மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியை 1976-இல் பொதுப்பட்டியலுக்கு மாற்றினார் இந்திரா காந்தி  இதுபோன்ற மாநில உரிமைகள் பல நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பறிக்கப்பட்டன. இவ்வாறு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை கூட்டணி அரசில் இருந்த தி.மு.க.வால் தடுக்க முடிந்ததா? பறித்தவற்றில் ஒன்றிரண்டை மீட்க முடிந்ததா? ஒரே ஒரு உரிமையைப் புதிதாகக் கலைஞர் மாநில அரசுக்குப் பெற்றார். இந்திய விடுதலை நாளில், மாநிலங்களில் ஆளுநர்கள் இந்திய அரசுக் கொடியை ஏற்றி வந்தனர். அதை மாநில முதலமைச்சரே ஏற்றும் “உரிமையை” “வாதாடிப்” பெற்றார். மாநில சுயாட்சியில் அவர் மீட்ட புதிய உரிமை இது! “சற்சூத்திரராக” தன்னை தில்லி எசமானர்களிடம் காட்டிக் கொண்டார்.

இந்தப் பின்னணியில் தான் மு.க.ஸ்டாலின் தி.மு.கவின் தலைமையை ஏற்றபின் இதுவரை “மாநிலத்தில் தன்னாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்தை முதன்மைப்படுத்தவில்லை. இந்தத் தேர்தலிலும் தேர்தல் அறிக்கையிலும் அந்த முழக்கத்தை மு.க.ஸ்டாலின் முதன்மைப் படுத்த வில்லை. தலைவரை மீறி சுப.வீயால் தமிழினத்திற்கான – தமிழ்த்தேசத்திற்கான இறையாண்மை மீட்பு போன்ற இலட்சித்தை அல்ல – மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்ற கோரிக்கையைக் கூட முதன்மைப்படுத்த முடியாது.

======================================

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை

======================================

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் 6.4.2021 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை 13.3.2021 அன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முகப்புரைப் பகுதியில் “அ.தி.மு.க. அரசு நம் அரசியல் சட்டத்தில் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் சாரமான மாநில உரிமைகள் அனைத்தையும் தாரைவார்த்து விட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது இந்த சொற்றொடரின் வழியாக தி.மு.க. இரண்டு வகையில் தில்லிக்கான தனது எசமான விசுவாசத்தைக் காட்டிக்கொள்கிறது.

ஒன்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாத “கூட்டாட்சி” என்ற சொல்லையும் கருத்தையும் அச்சட்டத்தின் மீது ஏற்றிப் புகழ்கிறது தி.மு.க.! இந்தியாவை “ஒன்றியம்” என்று அரசமைப்புச் சட்டம் கூறிக் கொண்டாலும் அதில் ஒற்றையாட்சித் தன்மையே மிகுந்துள்ளது, என்பதை தி.மு.க.வின் சிந்தனையாளர்களில் ஒருவரான காலஞ்சென்ற கு.ச.ஆனந்தன் அவர்கள் தமது “மாநில சுயாட்சி” நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு, கொஞ்ச நஞ்சம் இருந்த மாநில உரிமைகளையும் காங்கிரசு மற்றும் பா.ச.க. ஆட்சிகள் பறித்துவிட்டன என்பதை மூடி மறைத்து, அ.இ.அ.தி.மு.க அரசு தாரைவார்த்து விட்டது என்கிறது. அவ்வாறு மாநில உரிமைகளைப் பறித்த போதும் அதற்குப் பின்னும் காங்கிரசு, பா.ச.க. கூட்டணியில் தி.மு.க. இருந்தது. மாநில உரிமைகளைப் பறிகொடுப்பதில் முதன்மையான கட்சி அ.இ.அ.தி.மு.க-வா, தி.மு.க-வா என்று வேண்டுமானால் பட்டிமன்றம் நடத்தலாம்! மற்றபடி தில்லிக்கு கங்காணி வேலை பார்ப்பதில் இவ்விரு கழகங்களிடையே அடிப்படை வேறுபாடு எதுவுமில்லை.

===============================================

மாநிலத் தன்னாட்சி

===============================================

அடுத்து, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் “மாநில சுயாட்சி” என்ற தலைப்பு வருகிறது.

“மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழு ஈடுபாட்டோடு மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்”, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் எதிர்எதிரான இரண்டு முகாம்களில் இருந்து கொள்ள வேண்டும் என்பது தி.மு.க.வின் நிரந்தர உத்தி! இந்தத் தந்திரத்தில் தமிழர்களின் பகைமுகாமில் விசுவாசமாக இருந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது போல் பாசங்கு செய்வது தி.மு.க.வின் உத்தி! அதற்கான எடுத்தக்காட்டுகளை அடுக்கினால் கட்டுரை நீளும்.

இப்பொழுது கூட பா.ச.க. ஆட்சியின் இந்துத்துவா அதாவது ஆரியத்துவா பாசிசத்தை அடையாளப்படுத்தாமல் – மக்களின் முதல் எதிரி பா.ச.க. என்பதைச் சொல்லாமல் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சியில்தான் மாநில அரசின் வணிக வரிவசூல் உரிமையைப் பறித்து சரக்கு சேவை வரி நடுவண் அரசு வசூலிக்கும் புதிய சட்டத்தை அணியப்படுத்தினார்கள். அவர்களின் கூட்டணி ஆட்சிதான் நீட் தேர்வுத் திட்டத்தை உருவாக்கியது. இப்போது பா.ச.க ஆட்சி மாநிலக் காவல்துறையின் அதிகாரத்தைப் பறித்து நடுவண் அரசின் அதிகாரத்தில் சேர்த்துக் கொண்ட தேசியபுலானய்வு முகமைச் சட்டத்தை (NIA) தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தார்கள்!

இந்திய அரசின் மாநில உரிமைப் பறிப்புகளுக்குத் துணை போகும் கட்சி அ.தி.மு.க. என்பதில் எந்த ஐயமும் எங்களுக்கு கிடையாது. செல்லாத நாணயத்தின் இரண்டு பக்கங்களே தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்! 

“பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் இடம் பெறச் செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்”  என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை கூறுகிறது.

அடுத்து புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் தனியே கல்விக் கொள்கைச் சட்டம் இயற்றப்படும் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

இவைப் போன்ற இன்னுஞ் சில உரிமை மீட்புக் கோரிக்கைகளை – மதச்சார்பின்மைக் கோரிக்கைகளை பொது வேலைத் திட்டமாக வைத்தல்லவா தி.மு.க. தனது தலைமையில் தேர்தல் கூட்டணி உருவாக்கி இருக்க வேண்டும். ஏன் அப்படி கூட்டணி அமைக்கவில்லை? தேர்தல் அறிக்கையில் ஊர் மெச்ச ஒப்புக்குக் கோரிக்கைகள் வைக்கிறது தி.மு.க!

பா.ச.க.வின் “இந்துத்துவா பாசிசத்தை” எதிர்க்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும் – இதற்காக தி.மு.க. கூட்டணியை இத்தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று வேறு சிலர் கருத்துகள் கூறுகின்றனர்.

பா.ச.க. பாசிச எதிர்ப்புக் கூட்டணி அமைத்திருப்பதாகத் தி.மு.க.வும் காங்கிரசும் கூட்டறிக்கையோ, கூட்டுப் பிரகடனமோ வெளியிட்டுள்ளனவா? இல்லை! பா.ச.க. அரசு மாநில உரிமைகளைப் பறிப்பதைப் பற்றி பெயர் சுட்டிக் கண்டனம் செய்யவில்லை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பா.ச.க.வை வீழ்த்த வேண்டிய தேவையை தி.மு.க. தேர்தல் அறிக்கை சுட்டிக் காட்டவில்லை.

இனிமேல் பா.ச.க.வுடன் கூட்டணி சேரமாட்டோம் என்ற அறிவிப்பும் தி.மு.க. தரப்பிலிருந்து இல்லை!

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் கவனத்தைப் போல் கங்காணி அதிகாரத்தைக்  கைப்பற்றிக் கொள்ளும் தன்னல நோக்கமே தி.மு.க.வின் தேர்தல் உத்தியில் பளிச்சிடுகிறது.

================================================

சுப.வீ.யாவது சொன்னாரா?

================================================

பா.ச.க.வின் இந்துத்துவா பாசிசத்தை – வீழ்த்திட, தி.மு.க.வை ஆதரிப்பது தேவை அல்லவா என்று சுப.வீ.யாவது வெளிப்படையாக மேற்படிக் கட்டுரையில் சொன்னாரா? இல்லை!

தி.மு.க. எவ்வழி, அவ்வழியே சுப.வீ. வழி! பா.ச.க. பாசிசம் என்ற பகைமை ஆற்றலை பளிச்சென்று வெளிப்படுத்தாமல் அதற்கு அஞ்சி பதுங்கிக் கொள்வது தி.மு.க.வின் உத்தி! அதனால் அது தனது தேர்தல் அறிக்கையில் கூட பா.ச.கவின் ஆரியத்துவா பாசிசத்தை வெளிப்படுத்தவில்லை! இக்கட்டுரையில் அதே பாணிதான் சுப.வீ பாணி!

“சோதனைக்காக, தோழர்கள் மணியரசன், தியாகு போன்ற நபர்களிடம் பா.ச.க அல்லது அ.தி.மு.க பற்றி ஒரு வினா எழுப்புங்கள், உடனே அவர்கள் காங்கிரசு, தி.மு.க. இரண்டையும் கொண்டு வந்து சேர்த்துதான் விடை சொல்வார்கள்! கேட்ட கேள்விக்கு நேரடியாக விடை சொல்லமாட்டார்கள்” என்று சுப.வீ. கூறுகிறார்.

சுப.வீயின் மனச் சான்றுக்குத் தெரிகிறது, அ.தி.மு.கவுக்குள்ள அதே குறைகள் தி.மு.க.வுக்கும் இருக்கிறது. எனவே, “குறைப்பற்றி பேசி, சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை. அதனால் அதிகக் குறையுள்ள கட்சி, குறைந்த குறையுள்ள கட்சி என்று பேசுகிறார்.

“உள்ளதில் நல்லது என்னும் விதிப்படி, யார் ஓரளவு ஏற்புடையவர்களோ அவர்களுக்கே நாம் வாக்களிப்போம். யாருக்கும் வாக்களிக்கவில்லை என்றால் அந்தச் சுமாரானவருக்கு வாக்குகள் குறையும். அதன் மூலம் அவரை விட மோசமானவருக்குத் தானே பயன் கிடைக்கும்” என்று கேட்கிறார் சுப.வீ!

அவரின் மதிப்பீட்டில், தி.மு.க.சுமாரான கட்சிதான், குறைகள் உள்ள கட்சிதான்! சொக்கத் தங்கம் அன்று! திராவிடத் தமிழர் உரிமை மீட்புப் பாசறை அன்று!

அதெல்லாம் போகட்டும், இன்றைய பா.ச.க. பாசிசத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தி அதை முறியடிக்க வாரீர் என்று வாக்காளர்களைத் தி.மு.க.வும் அழைக்கவில்லை; சுப.வீயும் இக்கட்டுரையில் அழைக்கவில்லை!

இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளாகவும், தமிழினத்தின், தமிழ் மொழியின், உரிமைப் பறிப்புக் கட்சிகளாகவும் செயல்படும் காங்கிரசு மற்றும் பா.ச.கவுடன் பதவி, பணம், ஊழல் ஒய்யார வாழ்வு முதலிய தன்னல நோக்கங்களுக்காக் கூட்டணி சேர்ந்தும் சேராமலும் ஒத்துழைத்து இன இரண்டகம் செய்யும் கட்சிகள் தி.மு.க.வும் அ.தி.மு.கவும் என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கதின் வரையறுப்பு.

இவை ஒரு புறமிருக்க இப்போது கூட மோகன்பகவத் – மோடி ஆட்சியின் ஆரியத்துவா பாசிசத்தை அம்பலப்படுத்தி, அதை எதிர்த்திட வறையறுக்கப்பட்ட வேலைத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு அழைப்பு விடாத கட்சி தி.மு.க! 

=========================================

தேர்தல் பற்றிய வரையறுப்பு

=========================================

அடுத்து மிக முகாமையான ஒரு வினாவை சுப.வீ எழுப்பியுள்ளார். 1980களின் இறுதிப் பகுதியில் நாங்கள் தேர்தலில் பங்கெடுக்கும் தேவை பற்றி – சுப.வீயிடம் தருக்கம் செய்தததையும் அதற்கு மறுப்புத் தெரிவித்து அவர் தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தியதையும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சிக்கலில் அவர் சொல்லியிருப்பது உண்மை! நாங்கள் பிறவி மேதைகள் அல்லர். முயன்று தவறிக் கற்றுக் கொள்ளும் விடாமுயற்சியாளர்கள். அதில் முன்னேறிச் செல்வோம்! இந்த முயற்சிப் போக்கில் எங்களிடம் எந்தத் தன்னலமும் இல்லை. மக்கள் நலன் – இன நலன் மட்டுமே எங்களுக்குத் தலைமையானது! 

அப்பொழுது நாங்கள் பொதுவுடைமைக் கொள்கையை முதன்மைப் படுத்தி, அதன் வழியில் புரட்சிகரப் பாதையில் செல்லத் தீர்மானித்து தனி அமைப்பை உருவாக்கினோம்.

இந்தியாவின் முதன்மை முரண்பாடு இன முரண்பாடு; ஆரிய-இந்தி இனம் மற்ற இனங்களை ஒடுக்குகின்றது. ஆரியம் தனது முதல் பகையாகத் தமிழினத்தைக் கருதுகிறது. இந்த ஒடுக்கு முறையிலிருந்து விடுபடத் தமிழ்த் தேசம் இறையாண்மை பெற வேண்டும்; இந்தியாவில் ஒடுக்கப்பட்டுள்ள மற்ற இனங்களுக்கும் இறையாண்மை வேண்டும் என்பதே வளர்ச்சி அடைந்த எங்களின் புதிய முடிவு!

இந்த இலட்சியத்திற்கு இரண்டகம் செய்யாமல் எங்களால் இயன்ற வகைகளில் செயல்பட்டு வருகிறோம். பதவி,பணம்,விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியர்களின் பாசறையாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை வளர்த்து வருகிறோம். இவ்வாறான சிந்தனை வளர்ச்சிப் போக்கில், ஆதிக்க இனம் நடத்தும் தேர்தல் பற்றி புதிய முடிவுகளுக்கு வந்தோம்.

இந்திய அரசு ஆரிய – இந்தி இன மேலாதிக்க அரசு. இதன் தலைமை அடுக்குகள் பிராமணர்கள் – ஆரிய வைசிய மார்வாரி – குசராத்தி மற்றும் வடநாட்டுப் பெருமுதலாளிகள்! இதன் வெகு மக்கள் ஆதரவு ஆற்றல்கள் இந்தி பேசும் இனத்தவர்கள்! இவர்கள் மிகப் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள்.

இந்தியா என்பது ஒரு தேசமன்று; பல தேசிய இனங்களின் – பல தேசங்களின் பிணைப்பு! பிரித்தானியப் பீரங்கிகளின் வல்லுறவுக்குப் பிறந்தது இத்தியா! இந்தியாவை உருவாக்கிய உண்மையான தந்தைமார் இராப்ர்ட் கிளைவு போன்றோரே!

இப்படிப்பட்ட பீரங்கிப் பிணைப்பில் தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டு விட்டார்கள். இன்றும் பிரிட்டனை விட, பிரான்சை விட அதிக மக்கள் தொகை கொண்டது தமிழ்நாட்டின் தமிழ்த் தேசிய இனம்!

இந்திய நாடாளுமன்றம் என்பது சனநாயகத் திரைச் சீலையால் மூடப்பட்ட இன ஒடுக்கு முறையின் ஒய்யாரமேடை. ஓர் இன எதேச்சாதிகாரம் கொண்டது. மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் 543 பேர்! தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் 39 பேர். புதுவையைச் சேர்த்தால் 40 பேர்! ஆனால் இந்திக்காரர்கள் எண்ணிக்கை சற்றொப்ப 250 பேர்! அவர்களுக்குப் பத்து மாநிலங்கள் இருக்கின்றன.

இந்திக்காரர்களுக்கு நடுவண் ஆட்சியும், மாநில ஆட்சியும் ஒன்றுதான். செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழர்களைப் போன்ற தேசிய இனங்களுக்கு இப்போதுள்ள இந்திய ஆட்சியானது ஆங்கிலேயக் காலனி ஆட்சியின் மறுவடிவம்தான்!

அதில் வைஸ்ராய் என்பவர்க்கும் இலண்டன் நாடாளுமன்றத்திற்கும் ஏகபோக அதிகாரம். அவர்களுக்குக் கட்டுப்பட்டவைதான் அப்போதிருந்த மாநில ஆட்சிகள்! இப்போது தலைமை அமைச்சர்க்கும் நாடாளுமன்றத்திற்கும் கட்டுப்பட்டவைதான் மாநில ஆட்சிகள். நாடாளுமன்றத்தில் நம்மவர் நாற்பது பேரும் ஒன்றாகக் குரல் கொடுத்தாலும் அவர்களின் முன் மொழிவுகள் செயலுக்கு வராது. பயன்படாத சிறுபான்மை!

=========================================

காந்தியின் தேர்தல் புறக்கணிப்பு

========================================

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது போன்று கற்பனைச் செய்துகொள்வதற்காகக் கொண்டுவரப்பட்டதே மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம். அதன் அடிப்படையில் வெகுமக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும் சட்டமன்றம் அமைச்சரவை ஆகியவை 1920-இல் உருவாக்கப்பட்டன. ஆளுநர்க்கு அதிகாரம், சட்டமன்றத்திற்கும் சில அதிகாரங்கள் – இறுதி அதிகாரம் ஆளுநர்க்கு!

இது இரட்டையாட்சி இதில் பங்கெடுக்க மாட்டோம் என்று காந்தியும் காங்கிரசும் தேர்தலைப் புறக்கணித்தனர்.

இந்தியாவின் முதல் அரசமைப்புச் சட்டம் என்று கருதப்படும், இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act) 1935-இல் செயலுக்கு வந்தது. அதனடிப்படையில் ஆங்கிலேய ஆட்சி 1937-இல் நடத்திய பொதுத் தேர்தலில் ஒரு நிபந்தனையோடு வேட்பாளர்களை நிறுத்தியது காங்கிரசு!

காங்கிரசின் தலைமை பதவி விலகச் சொல்லும் போது பதவி விலக ஒப்புக் கொண்டு, கையொப்பமிட்டுக் கடிதம் தந்தால்தான் வேட்பாளராக நிற்க அனுமதி என்றது. அந்த நிபந்தனையை ஏற்றுத் தேர்தலில் நின்று மாநிலங்களின் ஆட்சியை பிடித்தது காங்கிரசு! ஆனால் 1939-இல் இந்திய விடுதலையை முன் நிபந்தனையாக்கி, அனைத்து முதலைமைச்சர் மற்றும் அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகச் சொன்னது காங்கிரசுத் தலைமை. அனைவரும் விலகினார்கள்.

காங்கிரசு மிதவாதக் கட்சிதான், ஆனால் இந்திய விடுதலையில் உறுதியாக நின்றது. 1947 ஆகத்து 15-இல் இந்திய விடுதலையை அது பெற்றது.

===============================

தமிழீழத்தில்

===============================

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ விடுதலைக்கு ஆயுதப் போர் நடத்தினார்கள். அவர்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள். ஆனால் அவர்களும் தேவை என்று கருதிய போது தேர்தலைப் பயன்படுத்தினார்கள். கி.பி.2000-இல் வெளிநாடுகள் தலையீட்டில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே வெளிநாடுகளில் அமைதிப் பேச்சு நடந்து வந்தது. அதில், பங்கேற்ற சிங்கள அரசுப் பிரதிநிதிகள், “துப்பாக்கி முனையில் மக்களை விடுதலைபுலிகள் அச்சுறுத்தி தனி ஈழம் கேட்க வைத்துள்ளார்கள். அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்குத் தமிழர்களிடையே ஆதரவில்லை” என்றார்கள்.

அது பொய்க் குற்றச்சாட்டு என்று மெய்ப்பிப்பதற்காகவும், தமிழர்கள் தமிழீழ விடுதலையை ஆதரிக்கிறார்கள் என்பதை உலகிற்குக் காட்டுவதற்காகவும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புதிய உத்தியைக் கையாண்டார். ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களைக் கொண்டு சம்பந்தர் தலைமையில், தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற அமைப்பை 2001-இல் உருவாக்கினார். 

தமிழ்த்தேசியக் கூட்டணி தமிழீழ விடுதலைப் புலிகளையும் தனி ஈழக் கோரிக்கையையும் வெளிப்படையாக ஆதரித்தது. அக்கூட்டணி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதுவரை இல்லாத அளவிற்கு வடக்கு, கிழக்கு மாகணங்களில் 22 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற்றது. தமிழ்ப் பகுதியில் 90 விழுக்காடு வெற்றி!

தமிழீழ விடுதலையைத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் – அவர்களின் பிரதிநிதியே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற உண்மை உலக அரங்கில் உறுதி செய்யப்பட்டது.

அதே வேளை, தமிழீழ விடுதலையைத் தேர்தல் மூலம் அடைவது என்ற நிலைபாட்டை ஒருபோதும் பிரபாகரன் எடுக்கவில்லை.

அயலாரால் அடிமைப்படுத்தப்பட்ட நாட்டின் அல்லது இனங்களின் விடுதலைக்குத் தேர்தலைப் புறக்கணிக்கலாம் அல்லது பயன்படுத்தவேண்டிய தருணங்களில் பயன்படுத்தலாம்; அதே வேளை தேர்தல் பங்கெடுப்பை நிரந்தரப் பாதையாக வகுத்துக் கொண்டு தேச விடுதலையைப் பெற முடியாது என்பதைக் காந்தியடிகளும் பிரபாகரன் அவர்களும் இருவேறு முனைகளில் இருந்து வழிகாட்டியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

கூட்டணித் தந்திரம் பற்றி வெளிநாட்டு உவமைகள் பலவற்றை சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் கூறுவது வழக்கம். கம்யூனிஸ்ட் சோவியத்து ஒன்றியம், ஏகாதிபத்திய பிரித்தானிய – வட அமெரிக்க – பிரான்சு நாடுகளுடன் சேர்ந்து பாசிச இட்லரின் செர்மானியப் படையை எதிர்த்துப் போரிட்டது போன்றதுதான் இந்தியாவில், பெரிய எதிரிக்கு எதிராகப் பல்வேறு சந்தர்ப்பவாதக் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சேர்வது என்பார்கள். நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் கையாளும் கூட்டணி உத்தியை ஒரு நாட்டிற்குள் நடக்க வேண்டிய சனநாயக மீட்பு, இன இறையாண்மை மீட்பு போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது. மலை ஏறுபவன் உயிர்வளிக் குடுவை (ஆக்சிஜன் குடுவை) கொண்டு செல்கிறான் – அவன் வீரன்! மாடி ஏறுபவன் உயிர்வளி குடுவை கொண்டு சென்றால், அவன் நோயாளி!

===================================

படிப்பினைகள் 

===================================

தமிழ்நாட்டில் அண்ணாவும், காசுமீரில் சேக் அப்துல்லாவும், மிஜோரமில் லால்டெங்காவும் ஆண்டைகள் நடத்தும் தேர்தலில் வென்று இன உரிமை பெறுவோம் என்று அறிவித்துத் தேர்தலில் பங்கெடுத்தார்கள். இந்த மூன்று மாநிலங்களிலும் இனவிடுதலைக்கு எழுச்சிபெற்ற மக்களை இவர்களின் உத்தி சீரழித்ததுதான் மிச்சம்!

மேலே கண்ட அனைத்துப் படிப்பினைகளையும் தமிழ்தேசியப் பேரியக்கம் உள்வாங்கிக் கொள்கிறது.

தேர்தலில் பங்கெடுப்போரை நாங்கள் தடுப்பதில்லை. அதே வேளை நாங்கள் தேர்தலில் பங்கெடுப்பதில்லை.  தேர்தல் திருவிழாக் காலந் தவிர மற்ற காலம் முழுவதும் நம் மக்கள் தங்கள் வாழ்வுரிமைகளுக்காக மொழி, இன, தாயகப் பாதுகாப்பிற்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வாறான வெகுமக்கள் போராட்டங்கள் தமிழ்த் தேசிய உள்ளடக்கத்துடன் நடக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு!

==============================================

அரசிடம் கோரிக்கை வைக்கலாமா?

==============================================

தேர்தலைப் புறக்கணிக்கும் நீங்கள் தேர்தலில் அமையும் அரசிடம் தானே கோரிக்கை வைக்கிறீர்கள், இதன் முரண்பாடில்லையா என்று தொலைபேசி உரையாடலில் சுப.வீ. கேட்டார்.

“வெள்ளையனே வெளியேறு” என்று தீர்மானம் போட்ட காந்தி வெள்ளை அரசிடம் தான் கோரிக்கைகள் எழுப்பினார். தமிழீழ விடுதலைப் போர் நடத்திய புலிகளின் தலைமை சிங்கள அரசுடன் தான் இடைக்காலக் கோரிக்களுக்காகப் பேச்சு நடத்தியது; இலட்சியத்தை விட்டு அந்தந்த அரசுகளுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்து விடவில்லை.

ஒருவர் வாக்களிக்காத கட்சி ஆட்சிக்கு வ்ந்துவிட்டால் அவர் அந்த ஆட்சியிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்ற அடுத்த நிலைக்கு சுப.வீ.போன்றவர்கள் போய்விட வேண்டாம். வாக்களித்தவர்-வாக்களிக்காதவர் அனைவர்க்கும் பொதுவானது அரசு  என்று தான் அவர்களின் சட்டம் கூறுகிறது. 

 

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT