உடனடிச்செய்திகள்
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Saturday, February 25, 2017

தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” திருச்சியில் நாளை நூலறிமுகம்!

தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” திருச்சியில் நாளை நூலறிமுகம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் எழுதிய “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” - நூலின் அறிமுக விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், திருச்சியில் நாளை (25.02.2017) நடைபெறுகின்றது.

திருச்சியில், நாளை காரிக்(சனி)கிழமை (பிப்ரவரி 25) அன்று மாலை 5.30 மணியளவில், தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள ராஜா (ஓட்டல்) உணவகத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன் தலைமை தாங்குகிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகர்ச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தொடக்கவுரையாற்றுகிறார். திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. வீ.ந. சோமசுந்தரம் வாழ்த்துரை வழங்குகிறார்.

திருச்சி - தனிநாயகம் அடிகள் தமிழியல் கல்லூரி முதல்வர் அருட்திரு. அமுதன் அடிகள் நூலை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகிறார். புதுக்கோட்டை மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் த. மணி நூலாய்வு உரையாற்றுகிறார்.

நூலாசிரியரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT