உடனடிச்செய்திகள்
Showing posts with label வெளியார். Show all posts
Showing posts with label வெளியார். Show all posts

Wednesday, March 16, 2011

ஆலுக்காஸ் மறியலில் கைது செய்யப்பட்ட த.தே.பொ.க.வினர் 124 பேர் பிணையில் விடுதலை!

மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை மறியல் போராட்டத்தில் கைதான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் 124 பேர் நேற்று(15.09.2011) மாலை பிணையில் விடுதலை செய்ப்பட்டனர்.
தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வெளிமாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த இழிவை துடைக்கும் நோக்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சையில் இயங்கி வந்த மலையாள ஆலுக்காஸ் நகைக்கடையை கடந்த 09.03.2011 அன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது.
பலநூறு பேர் கலந்து கொண்ட அப்போராட்டத்தின் போது ஆலுக்காஸ் நகைக்கடை மூடப்பட்டது. முடிவில், போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மெற்பட்ட உணர்வாளர்களை தமிழக காவல்துறை பொய்வழக்குப் போட்டு கைது செய்தது. 124பேர் திருச்சி நடுவண் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தமிழா; உரிமைக்காகப் போராடிய உணர்வாளர்களை காவல்துறை கைது செய்ததை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் த.தே.பொ.க.வினர் சுவரொட்டி பிரச்சார இயக்கத்தை நடத்தினர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு செசன்ஸ் நீதிமன்றம் பிணை மறுத்தது. பின்னர், மாவட்ட நீதிமன்றத்தில் பிணை மனு மேல் முறையீடு செய்யப்பட்டது. மாவட்ட நீதிமன்ற நீதிபதி தோழர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று(15.03.2011) மாலை திருச்சி நடுவண் சிறையிலிருந்து த.தே.பொ.க. தோழர்கள் 124 பேரும் விடுதலையாயினர். சிறை வாயிலில், அவர்களை வரவேற்க பலநூறு த.தே.பொக. தோழர்களும் தலைவர்களும் கூடியிருந்தனர்.
தமிழ்த் தேசப் பொதுசுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கி.வெங்கட்ராமன், குழ.பால்ராசு, வழக்கறிஞர் கரிகாலன், சிவராஜ் உள்ளிட்டோர் விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு அளித்துப் பேசினர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகர த.தே.பொ.க. செயலாளர் இராசு.முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, தஞ்சை நகர த.இ.மு. செயலாளர் செந்திறல் உள்ளிட்ட விடுதலையான 124 தோழர்களுக்கும் வந்திருந்த உணர்வாளர்கள் பாராட்டுத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.








Wednesday, March 9, 2011

மலையாள ஆலுக்காசை வெளியேற்று! - தஞ்சையில் மறியல் 350 பேர் கைது!

மலையாள ஆலுக்காசை வெளியேற்று!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சையில் மறியல்
350 பேர் கைது!
தமிழ்நாட்டில் நகைவணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள ஆலுக்காஸ் நகை மாளிகையைத் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றக் கோரி இன்று (09.03.2011) காலை 10.30 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆலுக்காஸ் நகை மாளிகை முன்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆலூக்காஸ் நகை மாளிகை முன்பு திரண்ட இனஉணர்வாளர்கள் கையில் த.தே.பொ.க. கொடியை ஏந்தியபடி “வெளியேற்று! வெளியேற்று! மலையாள ஆலூக்காசை வெளியேற்று!” என்று ஆக்ரோசமாக ஒரே குரலில் முழக்கமிட்டனர்.

பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக முழக்கமிட்டுக் கொண்டிருந்த இனஉணர்வாளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரான்சிஸ் ஆலூக்காஸ் நகை மாளிகைக்குள் முழக்கமிட்டுக்கொண்டே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக் குழுவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத ஆலூக்காஸ் நகை மாளிகை நிர்வாகத்தினர் உடனடியாகக் கடையை மூடினர்.

போராட்டக் குழுவினர் அத்தனைபேரும் நகை மாளிகையின் படிக்கட்டிலும் வாசலிலும் சாலையிலும் கீழே அமர்ந்து முழக்கமிடத் தொடங்கினார்கள்.

த.தே.பொ.க. நகரச் செயலாளர் இரா.சு முனியாண்டி, த.இ.மு. தஞ்சை நகரச் செயலாளர் செந்திறல் உள்ளிட்டோர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் அருகாமையிலிருந்த ஜோஸ் ஆலூக்காஸ் கடையை நோக்கி விரைந்தனர். இதையும் எதிர்பார்த்திராத காவல்துறையினர் போராட்டக் குழுவினரைக் கட்டுப்படுத்துவதற்குள் திணறிப் போயினர். போராட்டத்தின் போது நகை மாளிகையின் மீது கற்கள் வீசப்பட்டன. ஆலூக்காசின் விளம்பரப் பலகை கிழிக்கப்பட்டது.

நாற்பது நிமிடங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது. இறுதியில் 3 சிற்றுந்துகள் 2 காவல் வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்களில் போராட்டத்திற்குத் தலைமைவகித்த தோழர் பழ.இராசேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, ஓசூர் மாரிமுத்து, மதுரை ஆனந்தன், த.தே.பொ.க.தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி, த.இ.மு. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் செந்திறல், பூதலூர் ஒன்றிய மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரெ.கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் காமராசு, த.இ.மு.ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ம.கோ.தேவராசன், சிதம்பரம் த.இ.மு. செயலாளர் குபேரன், தோழர்கள் கோவை சங்கர், பரமக்குடி இளங்கோ, குடந்தை விடுதலைச் சுடர், நாகை ரவி, திருத்துறைப்பூண்டி அரசு, காட்டுமன்னார்குடி அருளமுதன், சென்னை நாகராசு, செங்குன்றம் பன்னீர் செல்வம், மன்னார்குடி இரெ.செ.பாலன், மதுரை ராசு, கீரனூர் ஆரோக்கியசாமி, பெண்ணாடம் முருகன், திருச்சி செயலாளர் கவித்துவன், இனியன், மகளிர் ஆயம் தஞ்சை அமைப்பாளர் இலெட்சுமி, பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் மீனா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்டோர் தஞ்சை கீழவாசலில் உள்ள அன்னை திருமணமண்டபத்திற்குக் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தஞ்சையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கும்பகோணம் ஆலூக்காஸ் நகை மாளிகை இன்று மூடப்பட்டது. தஞ்சை மற்றும் குடந்தை நகரங்களைச் சேர்ந்த பொற்கொல்லர்களும் நகை வணிகர்களும் போராட்டக் களத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சென்றனர். குடந்தை விஸ்வகர்மா சங்கத்தினர் தங்கள் பதாகையோடு போராட்டத்திற்கு வந்திருந்தனர்.

இரண்டு நகைமாளிகை முன்பும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. உடனடியாக அதிரடிப்டையினர் வரவழைக்கப்பட்டனர். அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் ஆலூக்காஸ் நகை மாளிகைகள் உள்ள சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடைசி செய்தி கைது செய்யப்பட்ட அத்தனைபேரையும் சிறைக்கு அனுப்புவதற்காக நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.










தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை முன் த.தே.பொ.க. மறியல்!



தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை முன்
த.தே.பொ.க. மறியல்!
350க்கும் மேற்பட்டோர் கைது! கடை மூடப்பட்டது!

மலையாளிகள் நடத்தும் தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை முன் இன்று 09.03.2011 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடந்த மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது.

தமிழகத்தின் தொழில், வணிகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீடித்து வரும் அயல் இனத்தார் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் வகையில், மலையாளிகள் நடத்தும் ஆலுக்காஸ் நகைக்கடை முன் மறியல் நடத்தப்படும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் பாரம்பர்யமாக நகைத் தொழில் செய்து வரும் பொற்கொல்லர்களின் தற்கொலைக்கு வெளிமாநிலத்தவர் இத்தொழிலில் ஆதிக்கம் செய்வதேக் காரணம் என்றும் மலையாளிகள் நடத்தும் ஆலுக்காஸ் நகை நிறுவனத்தின் முன் இதனைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.





அதன்படி, இன்று 09.03.2011 தஞ்சை தென் கீழ் அலங்கத்தில் உள்ள ஜோய் ஆலக்காஸ் மற்றும் பிரான்சிஸ் ஆலுக்காஸ் நகைக்கடன் முன் த.தே.பொ.க. தோழர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மறியிலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் வாக்குவாதம் செய்த போது, கடைக்குள் செல்ல முற்பட்ட பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது.



த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் முனியாண்டி, பு+தலூர் ஒன்றியச் செயலாளர் இரெ.கருணாநிதி, புதுக்குடி காமராசு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை ஆனந்தன், ஓசூர் கோ.மாரிமுத்து, பொதுக் குழு உறுப்பினர்கள் கோவை பா.சங்கர், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, நகரச் செயலாளர் செந்திறல், சிதம்பரம் த.இ.மு. செயலாளர் குபேரன், நாகை இரவி, திருத்துறைப்பு+ண்டி அரசு, கீரனூர் ஆரோக்கியசாமி, பரமக்குடி இளங்கோ, திருச்சி கவித்துவன், மதுரை இராசு, காட்டுமன்னார்க்குடி அருளமுதன், சென்னை நாகராஜன், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் பு+தலூர் மீனா, தஞ்சை இலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கைதாயினர்.

ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை முன் எச்சிரிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், மறியலுக்குப் பின் பிரான்சிஸ் ஆலுக்காஸ் நகைக்கடையும் மூடப்பட்டது. ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலையில் பீகாரிகள் அதிக எண்ணிக்கையில் வேலையில் அமர்த்தபட்டதைக் கண்டித்து த.தே.பொ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.

இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், “இது ஓர் அடையாளப் போராட்டம் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT