உடனடிச்செய்திகள்

Monday, July 31, 2017

“தென்நதி தென்றல்” காவிரி ஆறு குறித்த ஓவியர் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி - சென்னையில்..!

“தென்நதி தென்றல்” காவிரி ஆறு குறித்த ஓவியர் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி - சென்னையில்..!


தமிழின உணர்வாளரும் ஓவியருமான கேசவனின் “தென்நதி தென்றல்” என்ற தலைப்பிலான காவிரி குறித்த தன்னோவியங்கள், சென்னையில் நாளை (01.08.2017) முதல் ஆகத்து 15 (15.08.2017) வரை காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூரிலுள்ள அம்பாசிடர் பல்லவா விடுதியின் (30, மாண்டீத் சாலை), லா கேலரி - கலை அரங்கில் நாளை மாலை நடைபெறும் இதன் தொடக்க நிகழ்வில், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான திரு. பெ. மணியரசன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். ஓவிய ஆசிரியர் திரு. ஜனாதிபதி வரவேற்புரையாற்றுகிறார்.

கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி முன்னாள் முதல்வர் திரு. க.சி. நாகராசன், சென்னை ஆசான் நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளி முதல்வர் திரு. சுனிதா விபின்சந்திரன், துணை முதல்வர் திரு. ஜோதிமேனன், பெல் நிறுவன முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. க. துரைக்கண்ணு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர். நிறைவில், ஓவியர் திரு. வீ. கேசவன் ஏற்புரையாற்றுகிறார்.

நாளை (01.08.2017) தொடங்கி ஆகத்து 15ஆம் நாள் வரை, நாள்தோறும் காலை 11.30 மணி முதல், மாலை 7 மணி வரை ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, விற்பனையும் செய்யப்படுகின்றன.

இந்நிகழ்வுக்கு,  தமிழின உணர்வாளர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாக வருகை தர வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தொடர்புக்கு : வீ. கேசவன் - 9677093844

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

“தமிழ்த்தேசியப் போராளி” ஓவியர் வீரசந்தானம் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு!

“தமிழ்த்தேசியப் போராளி” ஓவியர் வீரசந்தானம் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு!
“தமிழ்த்தேசியப் போராளி” ஓவியர் வீரசந்தானம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, இன்று (31.07.2017) சென்னையில் நடைபெறுகின்றது. 

சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மாலை 3 மணி தொடங்கி நடைபெறும் இந்நிகழ்வுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு தலைமையேற்கிறார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் முன்னிலை வகிக்கிறார். 

உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் ஓவியர் வீரசந்தானம் அவர்களின் படத்தைத் திறந்து வைக்கிறார். இயக்குநர் வ. கவுதமன் வரவேற்பரை வழங்கி, நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார். 

“பாவலர்கள் நோக்கில் ஓவியர் வீரசந்தானம்” என்ற தலைப்பில் திரைப்படப் பாடலாசிரியர்களும், “கலைஞர்கள் நோக்கில் ஓவியர் வீரசந்தானம்” என்ற தலைப்பில் நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்களும், “சான்றோர்கள் நோக்கில் ஓவியர் வீரசந்தானம்” என்ற தலைப்பில் சமூக செயல்பாட்டாளர்களும், “தலைவர்கள் நோக்கில் ஓவியர் வீரசந்தானம்” என்ற தலைப்பில் 
பல்வேறு அரசியல் கட்சி - இயக்கத் தலைவர்களும் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்துகின்றனர்.

இவ் அரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார். 

நிகழ்வில், தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Sunday, July 30, 2017

தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற “தமிழர் மீட்சிப் பெருங்கூடல்” தமிழ்த்தேசியப் பரப்புரையின் தொடக்க விழா!

தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற “தமிழர் மீட்சிப் பெருங்கூடல்” தமிழ்த்தேசியப் பரப்புரையின் தொடக்க விழா!
 
 



 தமிழர்களின் மரபார்ந்த கலை நிகழ்வுகள் – உரிமைகளை மீட்க உந்து விசையளிக்கும் பாவரங்கம் – தமிழர் மரபு வேளாண்மையை இன்றைக்கும் சிறப்பாக மேற்கொண்டு வருவோருக்கு பாராட்டு – வடமொழிப் பெயர் நீக்கி தமிழ்ப் பெயர் சூட்டல் – தமிழர் மீட்சிக்கான உரைவீச்சு என பல்வேறு வடிவ நிகழ்வுகளோடு, தஞ்சையில் தமிழ்த்தேசியப் புத்தெழுச்சியுடன் நேற்று (29.07.2017) மாலை “தமிழர் மீட்சிப் பெருங்கூடல்” சிறப்புடன் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், நேற்று மாலை தஞ்சை – ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு தலைமை தாங்கினார். தஞ்சை வீரசோழன் தப்பாட்டக் குழுவினரின் எழுச்சிமிகுப் பறையிசையும் நடனமும் காண்போரின் கண்களைக் கவர்ந்து கட்டிப்போட்டது. தப்பாட்டக் கலைஞர்களுக்கு மேடையில் துண்டணிவித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, பேரியக்கத் தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி வரவேற்புரையாற்றி உரையரங்கத்தைத் தொடங்கி வைத்தார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

தமிழ்த்தேசியக் கருத்துகளை தமக்கே உரிய கலை இலக்கிய நடையில் பாக்களாக வடித்து, பாவலர்கள் கவிபாஸ்கர், நா. இராசாரகுநாதன், செம்பரிதி, முழுநிலவன் ஆகியோர் சிறப்பான பாவீச்சு நல்கி, திரண்டிருந்த கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் விடியல் (அ. ஆனந்தன்), தமிழர் பெருங்கூடலில் தொடங்கி இனி தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ள தமிழ்த்தேசியப் பரப்புரையை அறிவிக்கும் முதன்மைத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். பலத்த கையொலியுடன் தீர்மானம் நிறைவேறியது.

இதனையடுத்து நடைபெற்ற எழுச்சிமிகு உரையரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா, நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா ஆகியோர், தமிழர்களின் உரிமை உரிமை மீட்பு – தமிழ்த்தேசியக் கோட்பாடின் வரலாறு – மதுக்கடை ஒழிப்பு – நீட் தேர்வு என பல்வேறு தலைப்புகளில் சிறப்பான உரைவீச்சை நிகழ்த்தினர்.

இதனையடுத்து, தமிழர்களின் மரபான இயற்கை வேளாண்மையை இன்றைக்கும் சிறப்பாக மேற்கொண்டு வருவோரைப் பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் (பெண்ணாடம்), திரு. கண்ணதாசன் (முருகன்குடி), திரு. சு. பழனிவேலு (சூழியக்கோட்டை), திரு. கார்த்திகேயன் (காஞ்சிபுரம்)   ஆகியோருக்கு மேடையில் துண்டவிணித்தும், புத்தகங்கள் வழங்கியும் சிறப்பு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளர்கள்  பலரின் பெயரை தமிழில் சூட்டும் நிகழ்வு நடந்தது. பேரியக்கத்தின் பொருளாளர் தோழர் அ. ஆனந்தனுக்கு “விடியல்” என்றும், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தெட்சிணாமூர்த்திக்கு, “தென்னவன்” என்றும், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தினேசுக்கு “தீந்தமிழன்” என்றும், ஈரோடு தோழர் பிரகாசுக்கு “அருள்ஒளி” என்றும், செங்கிப்பட்டி தோழர் செயராஜூக்கு “வெற்றித்தமிழன்” என்றும் தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டன.

நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புமிகு நிறைவுரையாற்றினார். தமிழினத்தின் உரிமைகளை மீட்பது மட்டும் தமிழ்த்தேசியம் அல்ல, தமிழர்களின் மரபான அறத்தையும், வீரத்தையும், பண்புகளையும் மீட்பதும் – சாதி அழுக்கும் மனக்கேடுகளும் நீக்கப்பட்ட புதிய தமிழனை – தமிழச்சியை மறுவார்ப்பு செய்வதும் தமிழ்த்தேசியம்தான் என்பதே அவரது உரையின் சாரமாக இருந்தது.

புதிய எதிர்பார்ப்புகளுடன், தமிழ்த்தேசிய எழுச்சியுடன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும்  பல்லாயிரக்கணக்கான இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், உழவர் சங்கத் தலைவர் திரு. சித்திரக்குடி பழனிராஜன், உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி பொறுப்பாளர் ஐயா கோ. தமிழுலகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் நிகழ்வுக்கு வந்திருந்தனர்.


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், மதுரை இரெ. இராசு, சென்னை அருணபாரதி, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரம் ஆ. குபேரன், பொதுக்குழு உறுப்பினர்கள் குடந்தை தீந்தமிழன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி, முன்னணிச் செயல்பாட்டாளர்கள் புதுச்சேரி இரா. வேல்சாமி, சிதம்பரம் பா. பிரபாகரன், தருமபுரி க. விசயன், புளியங்குடி க. பாண்டியன், தொரவி சிவக்குமார் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பேரியக்கத் தோழர்கள் ஊர்திகளில் வந்து பங்கேற்றனர்.


நிகழ்வில் பங்கேற்றவர்கள், புதிய விடியலுக்கான தமிழ்த்தேசியப் புத்தெழுச்சியுடன் விடைபெற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முகநூல் பக்கத்தில் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பெருங்கூடல் நிகழ்வுகளை (பார்க்க: https://www.facebook.com/tamizhdesiyam/videos/738537519665094) பல்லாயிரக்கணக்கானோர் பார்த்தனர். தஞ்சையில் தொடங்கப்பட்ட தமிழர் மீட்சி – தமிழ்த்தேசியப் பரப்புரை நிகழ்வு, தமிழ்நாடெங்கும் இனி நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது!  
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Friday, July 28, 2017

தஞ்சையில் - நாளை (29.07.2017)...தமிழர் மீட்சிப் பெருங்கூடல்..! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..! தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலை தி.பி. 2048 ஆடி 13 - காரி(சனி)க்கிழமை 29.07.2017 மாலை 6.30 மணி

தஞ்சையில் - நாளை (29.07.2017)...தமிழர் மீட்சிப் பெருங்கூடல்..! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..! தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலை தி.பி. 2048 ஆடி 13 - காரி(சனி)க்கிழமை 29.07.2017 மாலை 6.30 மணி
இந்தியாவில் கங்கைக்கரை வரையிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கம்பூச்சியா வரையிலும் உள்ள பல நாடுகளுக்குத் தலைநகராக விளங்கிய தஞ்சை மாநகரில் கூடுகிறோம்!

ஆயிரமாண்டுகளுக்கு முன் தமிழ்ப் பேரரசர்கள் இராசராசன், இராசேந்திரச்சோழன் ஆண்ட காலம் அது!

இன்று ஒரு மாநிலமாய், இந்தியப் பேரரசின் ஒரு பிராந்தியமாய் சுருங்கிக் கிடக்கிறோம்!

ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட வடக்கிந்தியக் கம்பெனிகளுக்கும் பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வேட்டைக்காடாகத் தமிழ்மண் மாற்றப்பட்டுள்ளது!

உழவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு இலாப விலை மறுத்து, அவர்களை ஓட்டாண்டிகளாக்கி, அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகின்றனர், இந்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள்!

காலங்காலமாய் ஓடி வந்த காவிரி, பாலாறு, தென்பெண்ணை எங்கே? அவற்றைக் களவாடியவர்கள் யார்? கச்சத்தீவும் கடல் உரிமையும் பறிபோனது யாரால்?

தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை அதிகமாகச் சேர்த்திடத்தான் “நீட்” தேர்வு! மாநில அரசின் வணிக வரி உரிமையைப் பறிக்கத்தான் ஜி.எஸ்.டி. வரி!

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் தொழிலங்களில், அலுவலகங்களில் வெளி மாநிலத்தவர்களே அதிகமாகச் சேர்க்கப்படுகிறார்கள். தகுதியிருந்தும் தமிழர்களாய்ப் பிறந்ததால், மண்ணின் மக்ககளுக்கு வேலை மறுக்கப்படுகிறது!

அன்றாடம் தமிழ்நாட்டில் புகும் அயல் மாநிலத்தார் வெள்ளம், தமிழரைச் சிறுபான்மையாக்கிடும் அபாயம் எழுந்துள்ளது!

ஆங்கில ஆதிக்கத்துடன் சமற்கிருதத் திணிப்பும் இந்தித் திணிப்பும் பா.ச.க. அரசால் தீவிரப்படுத்தப்படுகின்றன! நம் தமிழ் மொழியின் கதி என்ன?

இந்த உரிமைப் பறிப்புகளைத் தடுத்து நிறுத்திடவோ, இழந்தவற்றை மீட்டிடவோ ஆற்றலற்றவையாய், அக்கறையற்றவையாய் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள்!

அவற்றைப் போலவே மற்றும் பல கட்சிகள்!

தமிழர்களே! நம் எதிர்காலம் என்னாவது? நம் தாயகம் நமக்கு மிஞ்சுமா? தஞ்சைக்கு வாருங்கள்! புதிய முடிவுகளைத் தீர்மானிப்போம்!

இழந்த உரிமைகளை மீட்போம்! சிறந்த தமிழர் மரபுகளை மீட்போம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Wednesday, July 26, 2017

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்புப் பின்பற்றி - இந்தியாவிலும் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்புப் பின்பற்றி - இந்தியாவிலும் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் (European Court of Justice - ECJ) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி இன்று(26.07.2017) தீர்ப்பு வழங்கியிருப்பது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களையெல்லாம் ஆறுதல்படுத்தும், சனநாயகத் தீர்ப்பாகும்.


ஏற்கெனவே 2014 – அக்டோபரில் (16.10.2014), ஐரோப்பிய ஒன்றியத்தின் லக்சம்பர்க் நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியபோதிலும், தமிழினத்திற்கு எதிரான பகை உணர்ச்சியும் பழிவாங்கும் வெறியும் கொண்ட இலங்கை அரசு, அத்தடையை நீக்க வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று புலிகள் மீதான தடை நீக்க ஆணையை உறுதி செய்து, தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அத்தீர்ப்பில் நீதிமன்றம் சொன்ன காரணம், மிகவும் உண்மையான இயல்பான காரணமாகும். 2009க்குப் பிறகு, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்படவில்லை. அந்த அமைப்பின் சார்பில் உலகில் எங்கேயும் வன்முறை நடக்கவில்லை. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் வன்முறை நடக்கவில்லை. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை தேவையற்றது என்ற சாரத்திலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பின் சாரத்தை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி கூறியுள்ள உண்மை, இந்தியாவுக்கும் பொருந்தும். 2009க்குப் பிறகு இலங்கையில், குறிப்பாக தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் செயல்பாடு இல்லை. இந்தியாவிலும் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இல்லை. ஆனால், ஈழத்தமிழர்களுடன் இன உறவு கொண்ட 9 கோடித் தமிழர்கள் இந்தியாவில் வாழ்கிறோம். இந்த 9 கோடி தமிழர்களின் உணர்வையும், இந்திய அரசு கணக்கிலெடுக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை சான்றுகாட்டி, தமிழ்நாடு அரசு இந்திய அரசை உரியவாறு அணுகி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முழுமூச்சில் செயல்பட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு சமூக வலைத்தளப் பதிவுக்காக... கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் குபேரன் பிணையில் விடுதலை..!

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு சமூக வலைத்தளப் பதிவுக்காக... கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் குபேரன் பிணையில் விடுதலை..!

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் ஆ. குபேரன், இன்று (26.07.2017) மாலை, கடலூர் நடுவண் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானார்.

கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும், அக்கிராமத்தின் மீது போடப்பட்ட காவல்துறை முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அக்கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் ஏற்பட்ட பேரழிவின்போது தளைப்படுத்தி - முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்ட பத்து பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 20.07.2017 காலை 10 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமாகோயில் அருகில் மாணவ மாணவிகள் திரள வேண்டும் என்று தோழர் குபேரன் தனது முகநூலில் வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவ்வேண்டுகோளை ஏற்று அங்கு திரண்ட மாணவ மாணவிகளை காவல்துறையினர் அச்சுறுத்திக் கலைத்து விட்டனர். அங்கு சென்ற தோழர் குபேரன் மாணவர்கள் கலைந்து சென்ற நிலையில், வீடு திரும்பி தன் கடையில் இருந்திருக்கிறார். அவரை சிதம்பரம் காவல்துறையினர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தளைப்படுத்தி, கடலூர் நடுவண் சிறையில் அடைத்தனர். தடுப்புக் காவல் பிரிவின் கீழ் சிதம்பரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் குபேரன் மீது, பிணை மறுப்புப் பிரிவான - குற்றவியல் நடைமுறைத் திருத்தச் சட்டம் - 7(1)(a) பிரிவின் கீழ் வழக்குப் போடப்பட்டது.

இந்நிலையில், நேற்று (25.07.2017) சிதம்பரம் நீதிமன்றம் தோழர் குபேரனுக்கு நிபந்தனைப் பிணை வழங்கியது. சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கோபாலகிருஷ்ணன் அவர்களும், வழக்கறிஞர்கள் முகுந்தன், இதயச்சந்திரன் உள்ளிட்டோரும் தோழர் குபேரனுக்காக நேர்நின்று வாதாடினர்.

இதனையடுத்து, இன்று (26.07.2017) மாலை, கடலூர் நடுவண் சிறையிலிருந்து தோழர் குபேரன் விடுதலையானார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அர. கனகசபை, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, சிதம்பரம் தோழர் பிரபாகரன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் சிறை வாயிலில் அவரை முழக்கமிட்டு வரவேற்றனர்.

தோழர் குபேரன் கைதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் குரல் கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், சமூக வலைத்தள செயல்பாட்டாளர்களுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! தோழர் குபேரனை பிணையில் எடுக்க உதவிய சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றி!

சிறையிலிருந்து விடுதலையான பின், சிறைச்சாலை வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய தோழர் குபேரன், கதிராமங்கலத்துக்காகவும், தமிழினத்தின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடுவோம், அதை இதுபோன்ற அடக்குமுறைகளால் தடுத்துவிட முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.

தொடருந்து போராட்டக்களத்தில் நிற்போம்! போராடுவோம்!
 
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Sunday, July 23, 2017

தோழர் குபேரனை விடுதலை செய்க! - தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தோழர் குபேரனை விடுதலை செய்க! - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
கதிராமங்கலத்துக்காகக் குரல் கொடுத்த, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான தோழர் ஆ. குபேரன் கடந்த 20.07.2017 அன்று, தடுப்புக் காவல் பிரிவின் கீழ் சிதம்பரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பிணை மறுப்புப் பிரிவான - குற்றவியல் நடைமுறைத் திருத்தச் சட்டம் - 7(1)(a) பிரிவின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும், தமிழக இளைஞர் முன்னணியின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள தோழர் ஆ. குபேரன் செய்த குற்றம் என்ன? அவர் ஈடுபட்ட சட்ட விரோதச் செயல் என்ன?

கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும், அக்கிராமத்தின் மீது போடப்பட்ட காவல்துறை முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அக்கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் ஏற்பட்ட பேரழிவின்போது தளைப்படுத்தி - முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்ட பத்து பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமாகோயில் அருகில் மாணவ மாணவிகள் திரள வேண்டும் என்று தோழர் குபேரன் தனது முகநூலில் வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவ்வேண்டுகோளை ஏற்று அங்கு திரண்ட மாணவ மாணவிகளை காவல்துறையினர் அச்சுறுத்திக் கலைத்து விட்டனர். அங்கு சென்ற தோழர் குபேரன் மாணவர்கள் கலைந்து சென்ற நிலையில், வீடு திரும்பி தன் கடையில் இருந்திருக்கிறார். அவரை சிதம்பரம் காவல்துறையினர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தளைப்படுத்தி, கடலூர் நடுவண் சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையினரின் அழைப்பின் பேரில், காவல் நிலையத்திற்குத் தானாகவே சென்ற தோழர் குபேரன் அவர்கள், போராட்டம் நடந்த இடத்திலிருந்த போது காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்ததாகவும், அவர் தப்பி ஓட முயன்றதாகவும் காவல்துறையினர் தங்கள் முதல் தகவல் அறிக்கையில் பொய்யாகக் குறிப்பிட்டுள்ளனர்.

திருமுருகன் காந்தி, மாணவி வளர்மதி ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டதையும், பேராசிரியர் த. செயராமன் உள்ளிட்டோரை பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைத்ததையும் கண்டித்து, 19.07.2017 அன்று சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது, போராட்டத்தைத் தூண்டும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர் மீது குண்டர் சட்டம் பாயுமென்று ஆணவமாக விடையளித்தார் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்!

இன்று ஓரிடத்தில் கூடி குரலெழுப்புமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த செயலையே ஒரு வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டதுபோல் சித்தரித்து, காவல்துறையினர் தோழர் குபேரனை கைது செய்திருக்கிறார்கள். “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசமா?” என்ற போக்கில் எடப்பாடியார் அரசு செயல்படுகின்றது.

இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 19 வழங்கும் அடிப்படை சனநாயக உரிமையான கருத்துக் கூறும் உரிமையை - ஆயுதமின்றிக் கூடும் உரிமையை தமிழ்நாடு அரசு பறித்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த சனநாயகப் பறிப்பு மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டிப்போம்!

தமிழ்நாடு அரசே!

தோழர் குபேரனை உடனடியாக விடுதலை செய்க!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: WWW.tamizhthesiyam.com

Saturday, July 22, 2017

தமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். ஆபிரகாம் பண்டிதர் சாலை. காரி(சனி)க்கிழமை 29.07.2017 மாலை 6.30 மணி. அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!

Thursday, July 20, 2017

சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசமா?” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசமா?” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான தோழர் ஆ. குபேரன் அவர்களை இன்று (20.07.2017), தடுப்புக் காவல் பிரிவின் கீழ் சிதம்பரம் காவல்துறையினர் தளைப்படுத்தியுள்ளனர். அவர் மீது பிணை மறுப்புப் பிரிவான - குற்றவியல் நடைமுறைத் திருத்தச் சட்டம் - 7(1)(a) பிரிவின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும், தமிழக இளைஞர் முன்னணியின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள தோழர் ஆ. குபேரன் செய்த குற்றம் என்ன? அவர் ஈடுபட்ட சட்ட விரோதச் செயல் என்ன?

கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும், அக்கிராமத்தின் மீது போடப்பட்ட காவல்துறை முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அக்கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் ஏற்பட்ட பேரழிவின்போது தளைப்படுத்தி - முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்ட பத்து பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமாகோயில் அருகில் மாணவ மாணவிகள் திரள வேண்டும் என்று தோழர் குபேரன் தனது முகநூலில் வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவ்வேண்டுகோளை ஏற்று அங்கு திரண்ட மாணவ மாணவிகளை காவல்துறையினர் அச்சுறுத்திக் கலைத்து விட்டனர். அங்கு சென்ற தோழர் குபேரன் மாணவர்கள் கலைந்து சென்ற நிலையில், வீடு திரும்பி தன் கடையில் இருந்திருக்கிறார். அவரை சிதம்பரம் காவல்துறையினர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தளைப்படுத்தி, கடலூர் நடுவண் சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையினரின் அழைப்பின் பேரில், காவல் நிலையத்திற்குத் தானாகவே சென்ற தோழர் குபேரன் அவர்கள், போராட்டம் நடந்த இடத்திலிருந்த போது காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்ததாகவும், அவர் தப்பி ஓட முயன்றதாகவும் காவல்துறையினர் தங்கள் முதல் தகவல் அறிக்கையில் பொய்யாகக் குறிப்பிட்டுள்ளனர்.

திருமுருகன் காந்தி, மாணவி வளர்மதி ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டதையும், பேராசிரியர் த. செயராமன் உள்ளிட்டோரை பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைத்ததையும் கண்டித்து, நேற்று (19.07.2017) சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது, போராட்டத்தைத் தூண்டும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர் மீது குண்டர் சட்டம் பாயுமென்று ஆணவமாக விடையளித்தார் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்!

இன்று ஓரிடத்தில் கூடி குரலெழுப்புமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த செயலையே ஒரு வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டதுபோல் சித்தரித்து, காவல்துறையினர் தோழர் குபேரனை கைது செய்திருக்கிறார்கள். “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசமா?” என்ற போக்கில் எடப்பாடியார் அரசு செயல்படுகின்றது.

இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 19 வழங்கும் அடிப்படை சனநாயக உரிமையான கருத்துக் கூறும் உரிமையை - ஆயுதமின்றிக் கூடும் உரிமையை தமிழ்நாடு அரசு பறித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த சனநாயகப் பறிப்பு மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். தோழர் குபேரன் அவர்களை உடனடியாக விடுவிக்க ஆணையிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, July 18, 2017

பா.ச.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கையா நாயுடு: குடியரசுத் தலைவர் அலுவலகம் பா.ச.க.வின் கட்சி அலுவலகமாக மாறும்! பெ. மணியரசன் எச்சரிக்கை!

பா.ச.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கையா நாயுடு: குடியரசுத் தலைவர் அலுவலகம் பா.ச.க.வின் கட்சி அலுவலகமாக மாறும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எச்சரிக்கை!
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு பா.ச.க.வின் வேட்பாளராக நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு அவர்களை பா.ச.க. நிறுத்துகிறது. வெங்கையா நாயுடு பா.ச.க.வில் இருந்தாலும், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்களிடமோ பிற கட்சிகளிடமோ செல்வாக்கு பெற்ற நபர் அல்லர். அவர் தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.காரராகவும் நரேந்திர மோடியின் கோயபல்சாகவும் செயல்பட்டு வருகிறார்.

பா.ச.க. தலைவர்களில் ஒருவர், குடியரசுத் தலைவராகவோ குடியரசுத் துணைத் தலைவராகவோ வரக்கூடாது என்பது நமது நிலையன்று! பா.ச.க.வில் இருந்தாலும் மற்ற கட்சிகளும் மதிக்கத்தக்க பொதுத்தன்மை கூடுதலாக உள்ளவரையே இப்பதவிகளுக்கு நிறுத்துவதுதான் சிறந்த மரபாகவும் சனநாயகத்தன்மையுள்ளதாகவும் இருக்கும்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு பா.ச.க. நிறுத்தியுள்ள இராம்நாத் கோவிந்த் அவர்களை கட்டுப்படுத்தக்கூடியவராக, அவருக்கு வழி சொல்லக் கூடியவராக செயல்படுவதற்காகவே வெங்கையா நாயுடு அவர்களை குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்துகிறார்கள்.

வருங்காலத்தில், குடியரசுத் தலைவர் மாளிகை, பா.ச.க.வின் கட்சி அலுவலகமாக செயல்படும் என்பதை விழிப்புள்ள தமிழர்கள் புரிந்து கொண்டு, அதற்கேற்ப தங்கள் வியூகங்களை வகுத்துக் கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Friday, July 14, 2017

மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆதாய அரசியல் அணுகுமுறை கூடாது! அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆதாய அரசியல் அணுகுமுறை கூடாது! அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 85 விழுக்காட்டு இடங்கள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை இன்று (14.07.2017) சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி இரவிச்சந்திர பாபு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது பேரதிர்ச்சி தருகிறது. மாநில உரிமையின் மீது சம்மட்டி கொண்டு தாக்கியதாக உள்ளது!

இந்த அநீதியிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு அரசு ஆணைப்படி மாநிலப் பாடத்திட்டத்தைச் சேர்ந்த 85 விழுக்காட்டு மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இடம் கிடைக்கச் செய்வது எப்படி என்றுதான் ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மற்றும் அனைத்து அமைப்புகளும் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு துரோகமிழைத்துவிட்டது என்று கண்டனம் தெரிவிக்கும் எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்த சிக்கலிலிருந்து விடுபட்டு தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 விழுக்காட்டு இடங்கள் கிடைக்க என்ன செய்யலாம் என்று அறிவுரை கூற வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை சாடுவதற்கான ஒரு வாய்ப்பாக கருதிச் செயல்படக் கூடாது!

பா.ச.க. தலைமையிலான நடுவண் அரசு, மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய மிகக் குறைந்த சில அதிகாரங்களையும் பறித்து தில்லியில் குவித்துக் கொள்வதில் தீவிரமாக உள்ளது. அந்த ஒற்றை அதிகாரக்குவிப்பின் ஒரு ஆக்கிரமிப்புதான், மாநிலத்தின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்!

அடுத்து, மாவட்ட அளவிலான நீதிபதிகளை தேர்வு செய்யவும் அனைத்திந்தியத் தேர்வு நடத்த பா.ச.க. அரசு திட்டமிடுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக சொந்த அரசு நடத்திய தமிழினம், புதுதில்லியின் ஒரு பாளையப்பட்டாக – ஒரு சமசுதானமாக மாற்றப்படுவதை கண்டு, அனைத்துத் தமிழர்களும் நெஞ்சு கொதிக்க வேண்டும். கூடிப்பேசி ஒருமித்த சட்டப்போராட்ட வடிவங்களையும், மக்கள் போராட்ட வடிவங்களையும் முடிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு அரசுக்குள்ள அதிகாரத்தை மீட்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

இனி வரும், களப்போராட்டங்களில் - கருத்தரங்குகளில் வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும்! பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!

இனி வரும், களப்போராட்டங்களில் - கருத்தரங்குகளில் வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!
தமிழ் கூறும் நல்லுலகின் மகத்தான ஓவியராகவும், தமிழின உரிமைப் போராளியாகவும் விளங்கிய ஓவியர் வீரசந்தானம் அவர்கள் நேற்று (13.07.2017) இரவு, மாரடைப்பால் திடீரென இறப்பெய்தினார் என்ற செய்தி, தமிழ் உணர்வாளர் நெஞ்சில் பேரிடியாய் தாக்கியது!

அவர் நடுவண் அரசில் தலைச்சிறந்த ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி, அதில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியாக உயர்ந்தார். அரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, 1980களிலிருந்து ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைகளை அறிந்து துன்புற்று துடித்தெழுந்து ஈழ விடுதலை ஆதரவாளராகச் செயல்பட்டார்.

பணி நிறைவுக்குப் பிறகு தமிழீழம் – தமிழ்நாடு – தமிழ்மொழி – சமூக மாறுதல் ஆகியவற்றிற்கான களப்போராட்டங்களில் உணர்ச்சிப் பொங்க பங்கேற்று, உரை நிகழ்த்துவதுடன் அவ்வப்போது தளைப்படுத்தவும்பட்டார்.

தமிழின விடுதலை, தமிழர் மேம்பாடு தவிர வேறெதுவும் நெஞ்சில் சுமக்காத மெய்யான தமிழ்த்தேசியர் தோழர் வீரசந்தானம்!

தமிழீழ விடுதலைப்போரின் தலைச்சிறந்த நினைவுச் சின்னமாக தஞ்சையில் எழுந்து நிற்கும் “முள்ளிவாய்க்கால் முற்ற” சிற்பங்களுக்கான வரைவு ஓவியங்களை தீட்டித் தந்தவர், தோழர் வீரசந்தானம் அவர்கள்! நவீன ஓவியத்துறையில் புதிய பங்களிப்புகள் வழங்கியவர் அவர்!

சில ஆண்டுகளுக்கு முன் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்களின் உதவியினால் மறுபிறவி போல் உயிர்த்தெழுந்தார். அதன் பிறகும் அவர் போராட்டங்களில் கலந்து கொண்டார். அண்மையில் இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து சென்னையில் இந்திப் பிரச்சார சபை முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய நகல் எரிப்புப் போராட்டத்தில், தோழர் சந்தானம் கலந்து கொண்டார்.

இனி, தமிழின – தமிழ்மொழி உரிமைகளுக்காக நடக்கும் களப்போராட்டங்களிலும் கருத்தரங்க மன்றங்களிலும் ஓவியர் சந்தானம் இல்லாத வெறுமை உணர்வாளர்களின் நெஞ்சத்தை உலுக்கும்! கள்ளம் கபடமற்ற அவருடைய சிரிப்பும், இடியோசைப் பேச்சும், எதிர்காலம் குறித்த கவலைச் சொற்களும், ஒவ்வொருவர் நெஞ்சிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்! இளம் தலைமுறைக்கு அவை வழிகாட்டிகளாக விளங்கும்.

நெஞ்சு நிறைந்த, நெஞ்சு நிமிர்ந்த தமிழ்த்தேசியப் போராளி – ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Wednesday, July 12, 2017

தமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். ஆபிரகாம் பண்டிதர் சாலை. காரி(சனி)க்கிழமை 29.07.2017 மாலை 6.30 மணி. அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!

தமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!
தமிழ்ச்சமூகம் இன்று முட்டுச் சந்தில் நிற்கவில்லைமுன்னேறிச் சென்று கொண்டுள்ளது. காவிய நாயகர்களின்” வருகைக்காக அது காத்திருக்கவில்லைமக்களே போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்!

தமிழ்நாட்டு ஆறுகளின் கதி என்ன?

வணிக வேட்டைக்கு வந்து ஆட்சி பிடித்த ஆங்கிலேயேர்கள் 1924இல் அருமையான காவிரி ஒப்பந்தம் போட்டுமேட்டூர் அணை 1934இல் திறந்தார்கள். ஆனால் வெள்ளையரை வெளியேற்றி உருவான இந்திய ஆட்சி காவிரி உரிமையைப் பறித்து விட்டது. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து விட்டது மோடி அரசுகன்னடர் இன வெறிக்குத் துணை போகிறது.

வெள்ளையராட்சி 1895இல் முல்லைப் பெரியாறு அணை கட்டிக் கொடுத்தது. இந்தியத்தேசியம் பேசும் கேரளாவின் காங்கிரசுக் கட்சியும் மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அந்த அணையை உடைக்க நேரம் பார்த்துக் கொண்டுள்ளன. அவை அங்கு ஆளும் கட்சிகள்! முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாகத் தூக்கி எறிகின்றன கேரளாவின் இந்தியத்தேசியக் கட்சிகள்! அதில் உள்ள சிற்றணையை மேலும் வலுப்படுத்தத் தமிழ்நாடு அரசு கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை கேரள அரசு!

பாலாற்றில் தமிழ்நாட்டிற்குள்ள வரலாற்று வழி உரிமையை நிலைநாட்டி 1892இல் வெள்ளையர் அரசு ஒப்பந்தம் போட்டது. வெள்ளையர் வெளியேறியவுடன் ஏராளமான அணைகளைப் பாலாற்றில் கட்டிஆந்திரப்பிரதேசம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைக் களவாடிக் கொண்டது.

அதேபோல் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணைகள் கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்து விட்டது.

கேரளம் பவானி ஆற்றில் புதிதாக ஆறு தடுப்பணைகள் கட்டிக் கொண்டுள்ளது. சிறுவாணியிலும் புதிதாகத் தடுப்பணை கட்டுகிறது.

இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கெதிராக இனப்பாகுபாடு காட்டுவதால்தான் அண்டை இனங்கள் தமிழ்நாட்டின் சட்டப்படியான ஆற்றுநீர் உரிமைகளைப் பறித்துக் கொண்டன!

கடல் உரிமைப் பறிப்பு

இந்திய அரசு 1974இல் தன்னிச்சையாக சிங்கள அரசுக்குத் தமிழ்நாட்டுக் கச்சத்தீவைக் கொடுத்தது. அதை வைத்து தமிழர்களின் கடல் உரிமையை இலங்கை அரசு பறித்துவிட்டது. எல்லை தாண்டி வந்ததாக 600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை சுட்டுக் கொன்றது சிங்களப்படை!

ஆயிரக்கணக்கான தமிழ் மீனவர்கள் நிரந்தரமாக ஊனப்படுத்தப்பட்டுதுன்பத்தில் உழல்கிறார்கள். சின்னஞ்சிறு இலங்கைக்கு இத்தனை துணிச்சல் கொடுத்தது யார்இந்தியா! தமிழ் மீனவர்களைத் தாக்கியசுட்டுக் கொன்ற - படகுகளைக் கடத்திய சிங்களப் படையாட்கள் மீது ஒரு வழக்கு கூட இந்தியா போடவில்லை.

மலையாள மீனவர் இருவரை அரபிக்கடலில் சுட்டுக் கொன்ற இத்தாலியின் கப்பற்படையினரை சிறைப்பிடித்து வழக்கு நடத்தியது இந்தியா! தமிழர்களுக்கு எதிராக மட்டும் இந்திய அரசு இனப்பாகுபாடு காட்டுவதேன்?

தமிழர்கள் செய்த குற்றமென்ன?

வெள்ளையரை வெளியேற்றும் விடுதலைப் போரில் தமிழர்கள் பங்கேற்கவில்லையாதடியடிபடவில்லையாசிறைப் படவில்லையாசெக்கிழுக்கவில்லையாசெத்து மடியவில்லையாமூவண்ணக் கொடி காக்க உயிர் விடவில்லையாவிடுதலைக்கு முன்னும் பின்னும் தமிழ்நாட்டில் காங்கிரசு ஆட்சி அமைக்க வாக்களிக்கவில்லையாஇந்திய ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மம் ஏன்இத்துணை இனப்பாகுபாடு ஏன்?

தி.மு.க.அ.இ.அ.தி.மு.க. சாதித்ததென்ன?

ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டை தி.மு.க.அ.தி.மு.க. கட்சிகள் ஆண்டுவரும் காலங்களில்தான் மேற்கண்ட உரிமைப் பறிப்புகளும் உயிர்ப்பறிப்புகளும் அரங்கேறின. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் ஆற்றலும் இன்றிஅக்கறையும் இன்றி பதவி மோகம்பணமோகம் ஆகியவற்றில் மட்டுமே அக்கழகங்கள் கவனம் செலுத்தின.

இந்திய ஆளுங்கட்சிகளான காங்கிரசுபா.ச.க. ஆகியவற்றுடன் மாறி மாறி கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளைஉயிர்களைக் காவு கொடுக்கும் கங்காணி வேலை செய்தன.

இனியும் இக்கழகங்கள் என்ன செய்யப் போகின்றனஏற்கெனவே செய்து வந்த இனத்துரோக வேலைகளைத்தான் செய்யப் போகின்றன!

இந்தி - சமற்கிருதத் திணிப்பு 

இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, 1965இல் மாணவர்கள் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டிலும் நடுவண் அரசிலும் அப்போது இருந்த காங்கிரசு ஆட்சிகள் 300 தமிழர்களை சுட்டுக் கொன்றன.

இப்போது பா.ச.க. ஆட்சி இந்தியுடன் சமற்கிருதத்தையும் சேர்த்து வேகமாகத் திணிக்கிறது. ஆரியம் ஆள்கிறது என்பதைப் பறைசாற்றவே சமற்கிருதத்தையும் அதன் ஒரு பிரிவான இந்தியையும் திணிக்கிறார்கள்.

தி.மு.க.அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளும் அக்கட்சிகளும் ஒப்புக்கு மட்டுமே இந்தியை எதிர்க்கின்றன.

தி.மு.க.வின் டி.ஆர். பாலு நடுவண் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்த போதுதான்தமிழ்நாட்டுத் தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் வழிக்குறிப்புகள் எழுதப்பட்டன.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தான் பள்ளிக்கல்வியில் அரசு பள்ளிகளில் முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.

தமிழ் அழிப்பில் கழக ஆட்சிகள் பங்கு கணிசமானது!

வேளாண்மையையும் குடிநீரையும் அழிக்கும் எண்ணெய் - எரிவளி

பெட்ரோலிய - எரிவளி ஆழ்குழாய்க் கிணறுகள் இறக்கப்பட்ட ஊர்களில் எல்லாம் நிலத்தடி நீர் பாழ்பட்டுபாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படாமல் போய்விட்டது. எனவே இவற்றையும் ஐட்ரோ கார்பனையும் எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். ஆனால்புதிதாக 110 ஆழ்குழாய்க் கிணறுகள் எண்ணெய் மற்றும் எரிவளிக்காக இறக்கப் போவதாக ஓ.என்.ஜி.சி. அறிவித்துள்ளது.

வெளியார் ஆக்கிரமிப்பு 

தமிழ்நாட்டுத் தொழில் வணிகம் அனைத்திலும் வெளி மாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தேவைக்கு அதிகமாகப் பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்கள்தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் வெளி மாநிலத்தவர்களே மிகை எண்ணிக்கையில் வேலை பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசுத் தொழிலகங்கள் - அலுவலகங்கள் அனைத்திலும் வெளிமாநிலத்தவர்களே மிகை எண்ணிக்கையில் வேலையில் சேர்க்கப்படுகின்றனர்.

மற்றுமொரு கட்சியாமாற்று அரசியலா?

தமிழர் தாயகம்தமிழ்த்தேசிய இனம்தமிழ் மொழி ஆகியவற்றின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் மாற்று அரசியலே இன்றையத் தேவை!

பழைய தி.மு.க.அ.தி.மு.க.வோ அல்லது அவற்றின் பாணியில் புதிய கட்சிகளோ தேவை இல்லை!

பா.ச.க.வின் இந்துத்துவா

பா.ச.க.வின் இந்துத்துவாவின் உண்மைப் பெயர் ஆரியத்துவா தான்! சொந்த இனத்திலும் அயல் இனங்களிலும் உள்ள சாதாரண இந்து மத மக்களை ஏமாற்றி ஈர்த்துக் கொள்ளவே ஆரியத்துவாவாதிகள் இந்துத்துவா” என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். தமிழில் அர்ச்சனை செய்யவோபிராமணரல்லாத தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆகிடவோ ஆர்.எஸ்.எஸ். ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் பா.ச.க.வின் ஆரியத்துவா பாசிசத்தை எதிர்கொள்வதற்குரிய சரியான அரசியல் சிந்தாந்தம் தமிழ்த்தேசியமே!

உலகின் மூத்த குடிகளாகவும்முதல் இனமாகவும் உள்ள தமிழர்கள் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தமிழ்க்கொடி ஏற்றி ஆண்டவர்கள் தமிழ் வேந்தர்கள்! அறிவியல் - அறம் - வீரம் மூன்றும் தமிழர் மரபின் மூன்று தூண்கள்! மனிதர்கள் அனைவரும் சமம் - தமிழர்கள் அனைவரும் சமம் என்பது தமிழர் அறத்தின் சாரம்!

இந்த மாண்புகள் எல்லாம் இப்பொழுது சிதைந்து கிடக்கின்றன. இவற்றை மீட்போம்!

தமிழர் இனமுழக்கம்

வேளாண் தமிழர் வாழ்வுரிமை காப்போம்தமிழ்நாட்டுத் தொழில் வணிகத்தில் தமிழர் மேலாதிக்கம் பெறப் போராடுவோம்! நடுவண் அரசு தொழிலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்குப் பெறுவோம்தமிழர் கடல் தமிழர்க்கு உரிமையாக்குவோம்எல்லா நிலையிலும் தமிழே ஆள வைப்போம்! பா.ச.க.வின் பாசிசம் தடுப்போம்!

தமிழ்த்தேசியச் சுடர் ஏந்துவோம்! தமிழ்த்தேசியத்தின் முகம் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தலைமைச் செயலகம்,தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com



Tuesday, July 11, 2017

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. மதுரையில் 12.07.2017 அன்று தெருமுனைக்கூட்டம்..!

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. மதுரையில் 12.07.2017 அன்று தெருமுனைக்கூட்டம்..!

கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும், மதுரையில் நாளை (12.07.2017) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகின்றது.

மதுரை - செல்லூர் அறுபது அடி சாலையிலுள்ள கண்ணையா முத்தம்மாள் அரங்கில் மாலை 6 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சு. அருணாச்சலம் தலைமை தாங்குகிறார். பல்வேறு அமைப்பினரும் தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

கதிராமங்கலத்தைக் காப்பதற்கான போராட்டம், அதோடு நின்று விடாமல், ஒட்டுமொத்தக் காவிரிப்படுகையையும் காப்பதற்கான போராட்டமாக விரிவடைய வேண்டும்.

எனவே, தமிழின உணர்வாளர்களும் சனநாயக ஆற்றல்களும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT