உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழக உழவர் முன்னணி. Show all posts
Showing posts with label தமிழக உழவர் முன்னணி. Show all posts

Tuesday, August 13, 2019

வீடு - விளைநிலங்கள் வழியாக பெட்ரோலியக் குழாய்களா? அனுமதிக்க மாட்டோம்..! தமிழக உழவர் முன்னணி எதிர்ப்பு!


வீடு - விளைநிலங்கள் வழியாக பெட்ரோலியக் குழாய்களா? அனுமதிக்க மாட்டோம்..! தமிழக உழவர் முன்னணி எதிர்ப்பு!

கர்நாடக மாநிலம் தேவனகுந்திக்கு பெட்ரோல் கொண்டு செல்வதற்காக, கிருட்டிணகிரி மாவட்டத்தின் இருகூர் வழியாக பெட்ரோலியக் குழாய்ப் பதிப்புத் திட்டத்தை இந்திய அரசின் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.


கேரளாவில் செயல்படுத்துவதைப் போல் சாலை வழியாக பெட்ரோலியக் குழாய்களைக் கொண்டு செல்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் வீடுகள் - விளைநிலங்கள் வழியாகச் செல்லும் இந்த பெட்ரோலியக் குழாய்கள் உழவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் அழித்துவிடும். இதைச் சுட்டிக்காட்டியும் இத்திட்டத்திற்குத் தங்கள் நிலங்களைத் தர மாட்டோம் என தெரிவித்தும் தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூ. தூருவாசன் தலைமையில் இன்று (13.08.2019) காலை கிருட்டிணகிரி மாவட்டத் துணை ஆட்சியர் திரு. ஆர். புஷ்பா அவர்களை நேரில் சந்தித்து உழவர்கள் முறையிட்டனர். த.உ.மு. ஆலோசகர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒடையாண்டஹள்ளி, எச்சனஹள்ளி, எதிர்கோட்டை, இராயக்கோட்டை, பழையூர், நெல்லூர், சஜ்ஜலப்பட்டி, பிள்ளாரிஅக்ரகாரம், கொப்பக்கரை, கோனேரி அக்ரகாரம், லிங்கனம்பட்டி, நடுக்காலம்பட்டி, கடவரஅள்ளி, பண்டப்பட்டி, பந்தாரப்பட்டி, சின்னபண்டப்பட்டி, அயர்னப்பள்ளி, ஆழமரத்துக்கொட்டாய், கொடகாரலஅள்ளி, சீபம், துப்புகானப்பள்ளி, உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் இதில் பங்கேற்று மனு அளித்தனர்.

இந்திய அரசே! வீடுகளை - விளை நிலங்களை அழித்து பெட்ரோலியக் குழாயப் பதிக்கும் திட்டத்தைக் கைவிடு!

செய்தித் தொடர்பகம்,
தமிழக உழவர் முன்னணி

பேச: 94432 91201, 76670 77075 
முகநூல் : தமிழக உழவர் முன்னணி

Tuesday, February 26, 2019

கதவணை கட்ட வலியுறுத்தி தாமிரபரணி உழவர்கள் ஆர்ப்பாட்டம்! தமிழக உழவர் முன்னணி முடிவு!

கதவணை கட்ட வலியுறுத்தி தாமிரபரணி உழவர்கள் ஆர்ப்பாட்டம்! தமிழக உழவர் முன்னணி முடிவு!
தமிழக உழவர் முன்னணியின் திருச்செந்தூர் - ஏரல் வட்ட பேரவைக் கூட்டம், இன்று (26.02.2019) காலை - தூத்துக்குடி மாவட்டம் - குரும்பூரில் நடைபெற்றது.

தமிழக உழவர் முன்னணி தமிழகத் துணைத் தலைவரும், தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளருமான தோழர் மு. தமிழ்மணி தலைமையேற்றார். தூத்துக்குடி மாவட்ட உழவர்கள் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து திரு. விஜய நாராயண பெருமாள் விளக்கவுரையாற்றினார்.

தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழக உழவர் முன்னணியின் கொள்கைகளையும், உழவர் போராட்டங்களின் அவசியத்தையும் விளக்கி நிறைவுரையாற்றினார்.

புதிதாக தமிழக உழவர் முன்னணியில் இணைந்த ஆண் - பெண் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை தோழர் கி.வெ. வழங்கினார்.

கூட்டத்தில், கீழ்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 மார்ச் 16 அன்று மாலை குரும்பூரில் உழவர்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள் 

1. ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும்.

2. வேளாண் விளை பொருட்களுக்கு இலாப விலை தீர்மானிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக, எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நெல், பருத்தி, வாழை, கரும்பு உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை வழங்க வேண்டும்.

3. தொடர்ந்து வறட்சியாலும், பூச்சி – பறவைகள் தாக்குதலாலும் விளைச்சல் இழந்துள்ள தூத்துக்குடி மாவட்ட உழவர்களின் வேளாண் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கூட்டத்தின் நிறைவில் திரு. தியாகராசன் நன்றி கூறினார்.

செய்தித் தொடர்பகம்,
தமிழக உழவர் முன்னணி

பேச: 94432 91201, 76670 77075
முகநூல் : தமிழக உழவர் முன்னணி 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT