உடனடிச்செய்திகள்
Showing posts with label எடப்பாடி வீடு முற்றுகை. Show all posts
Showing posts with label எடப்பாடி வீடு முற்றுகை. Show all posts

Saturday, June 17, 2017

தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் நால்வரையும் விடுதலை செய்க! இன்று (17.06.2017) - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம்!

தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் நால்வரையும் விடுதலை செய்க! இன்று (17.06.2017) - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம்!
தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய “குற்றத்”திற்காக கைது செய்யப்பட்டு, “குண்டர்” சட்டம் ஏவப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன், தோழர்கள் இளமாறன், அருண்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்யக் கோரி, இன்று (17.06.2017) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகின்றது.

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் பங்கெடுக்கிறது. நாளை (17.06.2017) மாலை 3 மணிக்கு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து முதல்வர் வீட்டை முற்றுகையிடும் பேரணி நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT