Monday, November 29, 2010
பெரியாருக்கு பின் பெரியார் - தோழர் பெ. மணியரசன் கட்டுரை!
Tuesday, November 23, 2010
PRESS RELEASE[24.11.2010]: மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு தடை நீங்கியது!
ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாருக்கு தஞ்சை செங்கிப்பட்டியில் சிலை ஒன்றை நிறுவ, கடந்த சூலை மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விழா நடத்தியது. மாவீரன் முத்துக்குமாரின் சிலையை இளந்தமிழர் இயக்கம் வடிவமைத்து வழங்கியது. இந்நிகழ்வின் போது, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை, மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை வைக்க அனுமதியளிக்கவில்லை.
இதையடுத்து சிலையை நிறுவ த.தே.பொ.க. சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில், மாவீரன் முத்துக்குமார் சிலையை நிறுவுவதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிலையை நிறுவக் கூடாது என அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை, த.தே.பொ.க. சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் முறியடித்தார்.
இன்று பிற்பகலில் இவ்வாணை கிடைத்ததும், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதோடு, விரைவில் சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வெற்றி த.தே.பொ.க. மற்றும் இளந்தமிழர் இயக்கத் தோழர்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, இன உணர்வாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
Monday, October 4, 2010
இராசராசன் சமாதியைக் கண்டறிய அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் - பெ.மணியரசன்
தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 03.10.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அயோத்தித் தீர்ப்பில் "17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது, ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து தென்னகத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் இராசராசன் மறைந்த விதத்தையோ, அவனுக்கான நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது" என்று கூறி வேதனைப் பட்டுள்ளார்.
ஆட்சி அதிகாரம் அற்ற ஒரு தமிழ்க் குடிமகன் ஆற்றாமையால் வேதனைப் படுவது போல் கருணாநிதி கவலை தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத் தொல்லியல் துறையைத் தம் கையில் வைத்துள்ள அவர் மாமன்னன் இராசராசன் நினைவிடம் (சமாதி) எங்குள்ளது என்பதைக் கண்டறிய அத்துறையின் மூலம் ஆய்வு மேற்கொண்டிருக்க வேண்டும். இதுவரை அவர் அதைச் செய்ய வில்லை. இனிமேலாவது அதற்கான அகழ்வாராய்ச்சிக்கு முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கெனவே இந்தியத் தொல்லியல் துறையின் ஆண்டறிக்கையில் இராசராசன் சமாதி கும்பகோணம் அருகே உள்ள உடையா;ரில் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கல்வெட்டாய்வாளர் குடந்தை சேதுராமன் அங்கு சென்று, குளக்கரையில் உள்ள கல்வெட்டைப் படித்து, உடையா;ரில், திரு. பக்கிரிசாமி அவர்களுக்குச் சொந்தமாக உள்ள நிலத்தில் மண்ணுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் லிங்கத்திற்கு அடியில் இராசராசன் சமாதி இருக்கிறது என உறுதிபடக் கூறினார்.
ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், உடையா;ரில் சேதுராமன் குறிப்பிடும் இடத்தில் இராசராசன் சமாதி இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை மேலும் உறுதி செய்து கொள்ள அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
இராசராசன் காலத்தில் அரசு நிர்வாக அரண்மனை தஞ்சையிலும், அரச குடும்ப அரண்மனை கும்பகோணத்திற்கருகே உள்ள பழையாறையிலும் இருந்தன. அந்தப் பழையாறைக்குப் பக்கத்தில் உள்ள ஊர்தான் அவர் சமாதி இருப்பதாகக் கூறப்படும் உடையா;ர்.
இராசராசன் மனைவி பஞ்சவன்மாதேவியின் சமாதி உள்ள பள்ளிப்படைக்கோயில் உடையா;ருக்குப் பக்கத்தில் உள்ள பட்டீசுவரத்தில் இப்பொழுதும் உள்ளது.
தமிழக முதல்வர் உடனடியாக உடையா;ரில் அகழ்வாராய்ச்சி செய்ய ஆணையிட்டு இராசராசன் சமாதி இருப்பதைப் பற்றி உறுதி செய்ய வேண்டும். அத்துடன் பழையாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய ஆணையிட வேண்டும். அடுத்து, உடையா;ரில் இராசராசன் பெயரில் மிகப் பெரிய நினைவு மாளிகை எழுப்பி, அதன் ஒரு பகுதியை சோழர் காலத்தின் அருங்காட்சியகமாக்க வேண்டும்.
சோழர் காலத்திற்குரிய எல்லாக் கருவிகளையும் செப்புத் திருமேனிகளையும் இதரப் பொருட்களையும் அந்த அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்.
மேற்கண்ட ஆய்வுப் பணிகளையும் இராசராசன் நினைவகம் எழுப்பும் பணியையும் தமிழக முதல்வர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
நாள்: 04.10.2010
இடம்: தஞ்சை
Saturday, August 28, 2010
தஞ்சை பெரிய கோவிலுக்குள் ஆழ்குழாய் கிணறு வெட்டத் தடை!
Friday, August 27, 2010
காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு - த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!
காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு!
த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!
ஈரோடு, 27.08.2010.
கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக தோழர்கள் இயக்குநர் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் மீது பிரிவினை தடைசட்டத்தி்ன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு கைதாயினர்.
அவர்களை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் திரண்டு நின்று உணர்ச்சிப் பிழம்பாக வரவேற்பளித்தனர்.
அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அணியைச் சேர்ந்த சிலர், காங்கிரஸ் கொடி கட்டிய மகிழுந்தில் கூட்டத்தினருக்கு இடையே நுழைந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த மகிழுந்துகளை அடித்து நொறுக்கினர்.
இப்பிரச்சினை தொடர்பாக த.தே.பொ.க. ஈரோடு நகரச் செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர் தோழர் மோகன்ராசு, சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த புலிப்பாண்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் இன்று(27.08.2010), தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நம் தோழர்கள் மீது குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப் படாததால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் மற்றும் அவரது இளம் வழக்கறிஞர்கள் கட்டணம் ஏதுமின்றி முன்னிலையாகி வலுவாக வழக்காடினர்.
Wednesday, August 11, 2010
தி.மு.க. குண்டர்களை கைது செய் - பெ.மணியரசன் கண்டன அறிக்கை!
தி.மு.க. குண்டர்களை கைது செய்!
த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை!
சென்னை, 11.08.2010.
செம்மொழி மாநாட்டை விமர்சித்து கட்டுரை வந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் மாத இதழின் விளம்பரச் சுவரொட்டிகளை 10.08.2010 அன்று இரவு 11 மணியளவில் சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் க.அருணபாரதி, கௌரி பாலா, நாகராசு ஆகியோரை தி.மு.க.வைச் சேர்ந்த குண்டர்கள் 6 பேர் கடுமையாக தாக்கி அவர்கள் கொண்டு சென்ற மிதிவண்டியையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.
மாற்று கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க.வின் ஏதேச்சாதிகார வன்முறைகளின் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாக இத்தாக்குதல் நடந்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவா;களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க.வினரின் இந்த வன்முறையைக் கண்டித்து கண்டன இயக்கம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்!
Sunday, August 8, 2010
NEWS: ஒரு கிலோ அரிசி ரூ.100! அதிர்ச்சித் தகவல்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXGPdZOT5Ic0XB3CGmvHY2_tNPdrTd_EN_xkEnzdpfeppUyqyWIYC66cAvyROjA3zHrJ2-31o8ukSX7qGJhxbyXxts1HzqdT88K5azenHFJ-SGtMvRmQhiaGMPIqgQQCFyMWvCSb4xihU/s320/16.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxmwXQ3i1fndQMicGGYknl38osz5ihDgt4jFlU0oCoOdm1MHitnTfx0CcloSNyHTROjOvP1oEHhS6qPscclpcYdaTOWByaW1gUZ7DYuhknbbNnOGS0Zl8Kdf6t1PHmjtVTB-8X1dFeayg/s320/16a.jpg)
Thursday, August 5, 2010
தமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம் - தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை!
தமிழகத்தை உணவுப்பஞ்சம் நெருங்குவதற்குள் நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் பேசினார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று (05.08.2010) காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் இந்திய, தமிழக அரசுகளைக் கண்டித்து நடந்த இவ்வாப்பாட்டத்திற்கு தமிழக உழவா முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் பேசியதாவது:
இதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும். அதனால், இப்போதே நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாட்டு உழவர்களின் குரலை எதிரொலித்த இவ்வார்ப்பாட்டத்தில், திரளான உழவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Saturday, July 31, 2010
காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
Tuesday, July 13, 2010
PRESS NEWS:: தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின் புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி - பெ.மணியரசன் கண்டனம்!
தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின்
புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!
07.07.2010 அன்று கோடியக்கரைக்கும் தோப்புத்துறைக்கும் இடையே இரு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் வழக்கம்போல் அடித்துத் துன்புறுத்தினர். செல்லப்பன் என்ற மீனவரை அடித்தே கொன்றனர். மீன்கள், மீன் வலைகள், உணவுப்பொருட்கள் முதலிய அனைத்தையும் கடலில் வீசினர். ஒரு படகில் இருந்த மீனவர்களின் உடைகளைக் களைந்து கடலில் வீசிவிட்டு அவர்களை அம்மணமாக அனுப்பினர்.
எல்லைதாண்டி வந்து சென்னைக்கு அருகே அடிக்கடி மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களைத் தமிழகக்காவல் துறை இப்படித் துன்புறுத்துவதில்லை. கண்ணியமாக கைது செய்து பின்னர் விடுதலை செய்கிறார்கள்.
தமிழக மீனவரை இனப்படுகொலை செய்வதையும், சிங்களரின் இதர அட்டூழியங்களையும் கண்டித்துப் பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. கண்டன அறிக்கைகள் வெளியிட்டன.
மேற்கண்ட சிங்கள இனவெறியாட்டத்தைக் கண்டித்து 10.07.2010 அன்று சென்னையில் நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொன்று கொண்டிருந்தால் தமிழகத்தில் சிங்களர்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள் என்று கூறியதாகக் குற்றம்சாட்டி அவர் மீது தமிழக அரசு வழக்குப் போட்டு அவரைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளது. தமிழக அரசின் இச்செயல் கருத்துரிமையை மறுக்கும் பாசிசச் செயல்மட்டுமில்லை, தமிழர் எதிர்ப்புச் செயலுமாகும்.
10.07.2010 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் துரை முருகன் சில சிறு சிறு அமைப்பினர்;, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள். இவர்கள் பேச்சுரிமை என்பதன் கீழ் ஒளிந்து கொள்கிறார்கள். இனி இவர்களை விடமாட்டோம். தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றி ஒடுக்குவோம் என்று கூறினார்.
சீமான் அவர்களும் தமிழ் அமைப்புகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத் தமிழர் உரிமைகளுக்காகவும் கொடுக்கும் குரல் எந்த சட்டம் ஒழுங்குச் சீர்குலைவையும் ஏற்படுத்தவில்லை. இலட்சக்கணக்கான மக்களைக் கூட்டி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தித் தமிழ், தமிழர் பெருமைகளைப் பேசிய ஓசை காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே தமிழர் கடல் பகுதியில் தமிழக மீனவரைச் சிங்களர் அடித்துக் கொல்வதும் அதைக் கண்டித்தோரை கருணாநிதி சிறையில் அடைப்பதும் இட்லரின் பாசிச நாடகத்தைத்தான் நினைவு+ட்டுகிறது.
1933-
தமிழ்நாட்டுக் காவல்துறையை சிங்கள இராணுவத்தின் புறக்காவல்; படையாகக் (Out Post) கருணாநிதி மாற்றி வருவதையே அவரது அணுகுமுறைகளும் அடக்குமுறைகளும் காட்டுகின்றன. இந்த முயற்சியில் அவர் தோல்வியைத்தான் தழுவுவார். மேலும் மேலும் அவர் தமிழ் மக்களிடம் தனிமைப்படுவார்.
வரலாற்றின் படிப்பிணைகளை ஏற்று, கலைஞர் கருணாநிதி அவர்கள், தமது தமிழின ஒடுக்குமுறைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும், தோழர் சீமானையும், அவருடன் சிறைப்படுத்தப்பட்ட தோழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி