உடனடிச்செய்திகள்
Showing posts with label புதுச்சேரி. Show all posts
Showing posts with label புதுச்சேரி. Show all posts

Saturday, July 13, 2019

புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை!

புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை!


புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.


ஐட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்த வல்லுனர்களின் கருத்துக்கள் அடங்கிய ஆய்வறிக்கையையும் புதுச்சேரி முதல்வரிடம் ஐயா பெ மணியரசன் அவர்கள் நேரில் வழங்கி விளக்கினார்.


காவிரி உரிமை மீட்புக்குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. வேல்சாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கத் தலைவர் தோழர் த. இரமேசு, இலக்கியப் போக்கில் இலக்கிய மன்றத் தலைவர் திரு பராங்குசம், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் கௌரி, தமிழர் களம் தலைவர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ் கழகம் புதுச்சேரி தலைவர் திரு. கோ. தமிழலகன், நா.த.க. அரியாங்குப்பம் செயலாளர் திரு. செ. இளங்கோவன், உ.த.க. திரு. புதுவை வேலா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உடனிருந்தனர்.




செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

Tuesday, April 16, 2019

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பல்கலைப் பதிவாளரிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி கோரிக்கை!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பல்கலைப் பதிவாளரிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி கோரிக்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு காலாப்பட்டு பகுதியில் 870 ஏக்கர் வேளாண் விளை நிலங்கள் மீது அமைக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்காக சற்றோப்ப 870 ஏக்கரில் நடைபெற்று வந்த விவசாயம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

இப்பல்கலைக்கழகம் புதுச்சேரியில் அமைக்கப்படுவதற்கான நோக்கத்தை அப்போதே தெளிவுபடுத்தினார்கள். புதுச்சேரி மக்கள் தங்களுடைய கல்வி - வேலைவாய்ப்பு ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் தான் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக அன்றைய இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி வாக்குறுதி அளித்தார். அதன் பெயரிலேயே வேளாண் விளை நிலங்களின் மீது இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த நோக்கங்கள் இன்றைக்கு சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை!
புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளி மாநில மாணவர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் மிக மிகக் குறைவு! புதுச்சேரி மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஏற்கெனவே புதுதில்லியில் அம்மாநில அரசு மத்திய பல்கலைக் கழகமாக உள்ள தில்லி பல்கலைக்கழகத்தில் அந்த மண்ணின் மக்களுக்கு 85 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 2017ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மத்திய பல்கலைக்கழக இருந்தாலும் கூட அந்த மண்ணின் மக்கள் டெல்லியில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

ஆந்திராவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் 1978ஆம் ஆண்டிலிருந்து இந்திய குடியரசுத் தலைவர் தனி ஆணையின் பேரில் 85 விழுக்காடு அந்த மண்ணின் மக்களுக்கே என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் தேர்வு ஆந்திராவில் மட்டும் பொருந்தாது என்ற நிலை இருக்கிறது.

எனவே இந்த நடைமுறைகளை பின்பற்றி புதுச்சேரியிலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 90 விழுக்காடு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக மாணவர் முன்னணி சார்பில் பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழகப் பதிவாளர் திருமதி. சித்ரா அவர்களிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி தோழர்கள் உதயச்சங்கர், கணேசமூர்த்தி, தினேஷ், பவித்திரன்,
தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் இம்மனுவை இன்று (16.04.2019) காலை நேரில் கையளித்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 25 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென தாம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக பதிவாளர் திருமதி. சித்ரா தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த நம் தோழர்கள் 25 விழுக்காட்டு இடங்கள் போதாது எனவும், 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், எவ்வித முன்னறிவிப்புமின்றி புதுச்சேரி பல்கலைகழகத்தின் கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை எளிய மாணவர்களை கடுமையாக பாதிக்கக்கூடிய நடவடிக்கை எனக் குறிப்பிட்டு, இக் கல்வி கட்டண உயர்வைத் திரும்பப் பெற்று பழைய கல்வி கட்டண விகிதம் தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி பல்கலைக் கழக நிர்வாகத்தை வலியுறுத்தி வேண்டுகோள் விடப்பட்டது.

#வெளியார்

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, February 18, 2018

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இன்று (17.02.2018), காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று மாலை புதுச்சேரியில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு - புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளருமான தோழர் இரா. வேல்சாமி தலைமையேற்றார்.

உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கத் தலைவர் திரு. த. இரமேசு, தமிழர் தேசிய முன்னணி புதுச்சேரி தலைவர் ஐயா இளமுருகன், தமிழ் தமிழர் இயக்கப் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேசு, யாவரும் கேளிர் அறக்கட்டளை திரு. ஏ. கேசவன், தை நிமிர்வு அன்புநிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசுக்கு எதிராகவும், தமிழர் உரிமையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT