உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழர் தற்காப்பு அரசியல். Show all posts
Showing posts with label தமிழர் தற்காப்பு அரசியல். Show all posts

Friday, March 2, 2018

சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசிய நாள் - சிறப்புக்கூட்டம்!

சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசிய நாள் - சிறப்புக்கூட்டம்!
 இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையறுப்புகளோடு முன்வைக்கப்பட்டது. அம்மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய திசைவழியைக் காட்டியது! அந்நாளை “தமிழ்த் தேசிய நாள்” என ஒவ்வொரு ஆண்டும் பேரியக்கக் கொடியேற்றம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளின் வழியே கடைபிடித்து வருகின்றோம்.

  இன்று, தமிழ்நாட்டு அடிப்படை அரசியலின் நிகழ்ச்சி நிரலை முன் வைப்பதாக “தமிழ்த்தேசியம்” வளர்ந்து வரும் சூழலில், 2018 பிப்ரவரி 25 - தமிழ்த்தேசிய நாளையொட்டி “தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில், தமிழ்நாடெங்கும் சிறப்புக் கூட்டங்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியேற்ற நிகழ்வுகளும் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.
 அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 28 அன்று, மாலை சிதம்பரத்தில் தமிழ்த்தேசிய நாள் கொடியேற்றம் மற்றும் தமிழர் தற்காப்பு அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
 சிதம்பரம் போல் நாராயனன் தெருவில் நடைபெற்ற “தமிழர் தற்காப்பு அரசியல்” – சிறப்புக் கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி சிறப்புரையாற்றினார். மூத்த தோழர் பா. பிரபாகரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் தோழர் இரா. எல்லாளன் வரவேற்றார். பேரியக்க மூத்த தோழர் ச. மணிவண்ணன், தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி தோழர் க. வேந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழர் தேசிய முன்னணி மாணவரணி அமைப்பாளர் தொழர் செ. செயப்பிரகாசு, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்ரமணிய சிவா ஆகியோர் உரையாற்றினர். தோழர் அ. கலைச்செல்வன் நன்றி கூறினார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, February 20, 2018

பிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர் தற்காப்பு அரசியல்” பொதுக்கூட்டம்!

பிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர் தற்காப்பு அரசியல்” பொதுக்கூட்டம்!
இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையறுப்புகளோடு முன்வைக்கப்பட்டது. 

அம்மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய திசைவழியைக் காட்டியது!

அந்நாளை “தமிழ்த் தேசிய நாள்” என ஒவ்வொரு ஆண்டும் பேரியக்கக் கொடியேற்றம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளின் வழியே கடைபிடித்து வருகின்றோம்.
இன்று, தமிழ்நாட்டு அடிப்படை அரசியலின் நிகழ்ச்சி நிரலை முன் வைப்பதாக “தமிழ்த்தேசியம்” வளர்ந்து வரும் சூழலில், வரும் 25.02.2018 அன்று தமிழ்த்தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வுகளும், சிறப்புப் பொதுக் கூட்டங்களும் “தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளன.
காவிரி உரிமை மறுப்பு, வெளியார் திணிப்பு, அணுஉலை - மீத்தேன் - நியூட்ரினோ - கெயில் - சாகர் மாலா - நீட் திட்டங்கள் திணிப்பு என பறிக்கப்பட்டுக் கொண்டுள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் குறித்து பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஜி.ஆர். நகரில், வரும் ஞாயிறு (25.02.2018) மாலை 5.30 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் உள்ளிட்டொர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், தமிழ்த்தேசிய ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Wednesday, February 14, 2018

பிப்ரவரி 25 அன்று தமிழ்நாடெங்கும்... “தமிழர் தற்காப்பு அரசியல்” தமிழ்த்தேசிய நாள் சிறப்புக் கூட்டங்கள்!

பிப்ரவரி 25 அன்று தமிழ்நாடெங்கும்... “தமிழர் தற்காப்பு அரசியல்” தமிழ்த்தேசிய நாள் சிறப்புக் கூட்டங்கள்!
இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையறுப்புகளோடு முன்வைக்கப்பட்டது. அம்மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய திசைவழியைக் காட்டியது! 

அந்நாளை “தமிழ்த் தேசிய நாள்” என ஒவ்வொரு ஆண்டும் பேரியக்கக் கொடியேற்றம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளின் வழியே நினைவு கூர்ந்து வருகின்றோம். 

இன்று, தமிழ்நாட்டு அடிப்படை அரசியலின் நிகழ்ச்சி நிரலை முன் வைப்பதாக “தமிழ்த்தேசியம்” வளர்ந்து வரும் சூழலில், வரும் 25.02.2018 அன்று தமிழ்த்தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வுகளும், சிறப்புப் பொதுக் கூட்டங்களும் “தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளன.

காவிரி உரிமை மறுப்பு, வெளியார் திணிப்பு, அணுஉலை - மீத்தேன் - நியூட்ரினோ - கெயில் - சாகர் மாலா - நீட் திட்டங்கள் திணிப்பு என பறிக்கப்பட்டுக் கொண்டுள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் குறித்து பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. 

இந்நிகழ்வுகளில், தமிழின உணர்வாளர்களும், தமிழ்த்தேசிய ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT