உடனடிச்செய்திகள்

Sunday, April 20, 2008

தமிழர்கள் பகையாளியா? சிங்களர்கள் பங்காளியா?

தமிழர்கள் பகையாளியா? சிங்களர்கள் பங்காளியா?
இந்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
தடையை மீறி ஏராளமானோர் கைது!

இலங்கை இனவெறி இராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கும் இந்திய அரசைக் கண்டித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் 22-3-2008 சனிக்கிழமையன்று மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அறிவிக்கப் பட்டிருந்தது, ஆனால் நிகழ்வு நடப்பதற்கு முன் தினம், 21-3-2008 அன்று தமிழக காவல்துறை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

அதனைத் தொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்குமென ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை 3 மணியிலிருந்தே சென்னை அரசு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் விக்டோரியா மெமோரியல் அரங்கத்தின் முன் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த அமைப்புகளின் தோழர்களும் அமைப்புகளைச் சேராத தமிழ் உணர்வாளர்களும் சென்னையில் பெய்துக் கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாது பெருமளவில் கூடத் தொடங்கினர். சென்னையிலிருந்து மட்டுமல்லாது விழுப்புரம், கடலூர், காஞ்சிபரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்கள் திரண்டனர்.

அந்த இடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அச்ச மூட்டும் வகையில் காவல்துறையை மிகப் பெரிய அளவில் குவித்திருந்தது தமிழக அரசு.

மாலை 4 மணியளவில் பழ. நெடுமாறன் தலைமையில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும், இந்திய அரசைக் கண்டிக்கும் பதாகைகளை ஏந்திக் கொண்டும், இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக பெரும் உணர்வெழுச்சியுடன் முழக்கமிட்டுக் கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுத உதவி வழங்கும் இந்திய அரசையும், அதைத் தடுத்து நிறுத்தாத தமிழக அரசையும் கண்டித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டன உரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் இந்திய அரசைக் கண்டித்து முழக்கமெழுப்ப அவரை பின்பற்றி கூடியிருந்தோர் உணர்வெழுச்சியுடன் முழக்கங்கள் எழுப்பினர்.

கொடுக்காதே கொடுக்காதே தமிழர்களைக் கொல்ல சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்காதே

இந்தய அரசே இந்திய அரசே தமிழர்கள் உன் பகைவர்களா

இந்தய அரசே இந்திய அரசே சிங்களவன் உன் பங்காளியா

போன்ற முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

மேலும் பேசவோ, ஆர்ப்பாட்டத்தை தொடரவோ விடாமல் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட பெண்களும், சிறுவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் 7 காவல்துறை பேருந்துகளில் ஏற்றப்பட்டு சென்னை கொண்டித்தோப்பு காவல் துறை திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தோழர்கள், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் மற்றும் அவ்வியக்கத் தோழர்கள், பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஆனூர் ஜெகதீசன் மற்றும் அவ்வியக்கத் தோழர்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ. மணியரசன் மற்றும் அக்கட்சித் தோழர்கள், தமிழ்த் தேச விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு மற்றும் அவ்வியக்கத் தோழர்கள், தமிழ்நாடு மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியினர், புரட்சிகர இளைஞர் முன்னணியினர், புரட்சிகர ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி யினர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தினர் மற்றும் பேராசிரியர் மருதமுத்து, ஓவியர் வீர சந்தனம், இயக்குநர் புகழேந்தி, உலகத் தமிழர் பேரமைப்பு அலுவலகச் செயலாளர் பத்மநாபன் ஆகியோரும் திரளான தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.



நன்றி : தென் ஆசிய செய்தி

Friday, April 18, 2008

ஒகேனக்கலில் தமிழர் பேரெழுச்சி

தமிழர் மீது இனப்பகை கொண்டு காவிரியைத் தடுத்துவரும் கன்னடக் கலகக்காரர்கள், இப்பொழுது ஒகேனக்கல், ஓசூர், தென்கனிக்கோட்டை போன்ற தமிழகப் பகுதிகளைக் கர்நாடகத்துடன் இணைக்குமாறு உள் நுழைந்து

கூச்சல் போடுகிறார்கள்.
 

இரண்டு மாதங்களுக்கு முன் "கன்னட ரட்சன வேதிகே' என்ற தமிழர் எதிர்ப்பு அமைப்பு ஒகேனக்கல் அருவி வர வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி அப்பகுதியைக் கர்நாடகத்துடன் இணைக்கக் கோரியது. கடந்த மாதம் கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா ஒரு கும்பலுடன் அருவி வர வந்து கர்நாடகத்துடன் ஒகேனக்கலை இணைக்கும்படி கூச்சலிட்டார். அடுத்து பா.ஜ.க.வின் கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் உசமணி தலைமையில் 250 பேர் தொங்குபாலம் வர வந்து

கர்நாடகத்துடன் இணைக்குமாறு கூச்சலிட்டனர். சட்டவி÷ராத நோக்குடன் அத்துமீறி தமிழக எல்லைக்குள் நுழையும் கர்நாடகக் கலகக்காரர்களைத் தமிழகக் காவல் துறையினர் கைது செய்யாமல், அவர்களுக்கு வழிக்காவலாக

வந்தனர். மேலிடத்தின் வழிகாட்டல் அப்படியிருந்திருக்கிறது. ஒகேனக்கல் உரிமைப் பாதுகாப்புக்குழு அழைப்பின் பெயரில், 26.3.2008 பிற்பகல் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் பேöரழுச்சியுடன் ஒகேனக்கலில் நடந்தது. பாதுகாப்புக்குழுத்

தலைவர் திரு அதிபதி, ஒருங்கிணைப்பாளர் தோழர் ந.நஞ்சப்பன், செயலாளர் திரு. தமிழ்ச் செல்வன் ஆகியோர் தலைமை தாங்கியும் முன்னிலை வகித்தும் செல்ல, தோழர்கள் பெ.மணியரசன் (த.தே.பொ.க.), கொளத்தூர் த.செ.மணி

(பெரியார் தி.க.), தகடூர் தமிழ்ச் செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்), மந்திரி (பா.ம.க.), எம்.கோபால் (சி.பி.ஐ.), கே.முனுசாமி (காங்கிரஸ்), சம்பத் (ம.தி.மு.க.), அருண் (வி.வி.மு.), அ.தீர்த்தகிரி (தி.க.), பேரா.சின்னச்சாமி (தமிழக விவசாயிகள் சங்கம்), ரமேஷ்வர்மா (தே.மு.தி.க.), கந்தசாமி (பா.ஜ.க.), உள்ளிட்டோர் அணிவகுத்துச் செல்ல, ஆயிரக் கணக்கானோர் அவரவர் அமைப்புக் கொடியுடன் அருவி ஓசையை அமுக்கிடும் பே÷ராசையுடன் கன்னட வெறியர்களுக்கு எதிராகக் கண்டனம் முழங்கி, காவிரி ஆற்றில் இறங்கி, மணல் திட்டுவர சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓசூர் த.தே.பொ.க. தோழர்கள் ஒரு சிறு பேருந்தில்

வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன

தண்டோரா அறிவிப்புக்கு தடை த.தே.பொ.க. கோரிக்கை வெற்றி

அரசுத் துறைகள், உள்ளாட்சி மன்றங்கள் நீதிமன்றங்கள் வழிபாட்டு நிறுவனங்கள் போன்றவை தமது அறிவிப்புகளை தண்டோரா போட்டு (பறையடித்து) தெரிவிக்கும் முறையைக் கைவிடுவது என தமிழக அரசு முடிவு செய்ய உள்ளது. 
இவ்வாறு பறையடித்து அறிவிக்கும் முறை தீண்டாமைக்கு உள்ளாகும் குறிப்பிட்ட சாதியினர் செய்யும் பணியாக காலங்காலமாகத் தொடர்கிறது. பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும்
அரசே இத்தீண்டாமைப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது கொடுமை யானது என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சுட்டிக்காட்டியது. இப்பழக்கத்தைக்
கைவிடவேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
 
த.தே.பொ.க. 1997 பிப்.22 அன்று திருத்துறைப் பூண்டியில் நடத்திய தீண்டாமை ஒழிப்பு தமிழர் ஒற்றுமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கத் தீர்மானங்களில் இக்கோரிக்கையும் முக்கியமானது. இதற்கு
முன்னர் த.தே.பொ.க. இரண்டாவது சிறப்பு பொதுக்குழு (பேராளர் மாநாடு) 1995ஆம் ஆகஸ்ட் 11, 12, 13 ஆகிய நாட்களில் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் நடந்தது. அதில் தீண்டாமைக்கு எதிரான தொடர் இயக்கங்கள் நடத்துவதற்கு சில அடிப்படை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கிணங்கவே  திருத்துறைப்பூண்டி மாநாடு நடத்தப்பட்டது.

திருத்துறைப் பூண்டி தீர்மானம் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கும் தீண்டாமை ஒழிப்பிற்குமுள்ள இன்றியமையா உறவுகளைக் கோட்பாட்டு வகையில் நிறுவியதோடு, தமிழகத்தில் தீண்டாமை நிலவும் பல்வேறு வடிவங்களை ஆய்வு செய்து அவற்றைத் தீர்ப்பதற்கான நுணுக்கமான கோரிக்கைகளை வøரயறுத்தது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்கம் தனிக் குடியிருப்புகள் கட்டுவதைவிட அனைத்துச் சாதியினரும் கலந்து வாழும் கலப்புக் குடியிருப்புகளைக் கட்டித்தர
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். "பெரியார் நினைவு சமத்துவபுரம்' என்ற பெயரில் அது அரசாங்கத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதேபோல் தலைவர்கள், அறிஞர்கள் பெயøர மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சூட்டக் கூடாது என்று வலியுறுத்தினோம்.
சாதி மோதல்களை உருவாக்கிய இந்தத் தவறான நடைமுறையைப் பின்னால் தமிழக அரசும் கைவிட்டது. பறையடித்து அறிவிக்கும் பழக்கத்தை அரசு
கைவிட்டு துண்டறிக்கைகள், ஒலிபெருக்கிகள் வாயிலாக அறிவிக்கைகள் செய்ய வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி தீர்மானம் வலியுறுத்தியது. (தீர்மானம் எண்.11) தீண்டாமைக்கெதிரான திருத்துறைப்பூண்டித் தீர்மானத்தை வலியுறுத்தி த.தே.பொ.க.வும் தமிழக இளைஞர் முன்னணியும் தெருமுனைக்கூட்டங்கள்
பரப்புøரப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் எனக்கடந்த பத்தாண்டுகளாகத் தொடர் இயக்கங்களை நடத்திவருகின்றன.
தமிழக அரசு நியமித்த பேராசிரியர் நன்னன் குழு இப்போது தீண்டாமைக்கெதிராக அரசு செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துøரகளை முன்வைத்துள்ளது. இரட்டைக்குவளை ஒழிப்பு, தண்டோரா
அறிவிப்புக்குத் தடை போன்றவை இப்பரிந்துøரகளில் அடங்கும். இவற்றை ஏற்று தமிழக அரசு செயல்படுத்தும் என செய்திகள் கூறுகின்றன.

திருத்துறைப்பூண்டி தீர்மானம் சாதி மறுப்புத் திருமணம்செய்து கொண்டோருக்கு இடஒதுக்கீடு, கிராமப் பொது சொத்துகளில் தாழ்த்தப்பட்டோருக்கு பங்கு, கல்லூரி
பள்ளி நலத்துறை விடுதிகள் அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அனைத்து சாதியினரும் கலந்துறைதல் என்பன உள்ளிட்ட பலகோரிக்கைகளை
முன்வைத்துள்ளது. இவைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்குத் தொடர்ந்து போராடுவோம்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT