உடனடிச்செய்திகள்

Wednesday, May 28, 2014

ஆங்கிலவழித் திணிப்பைக் கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகை – 200க்கும் மேற்பட்டோர் கைது!


ஆங்கிலவழித் திணிப்பைக் கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகை – 200க்கும் மேற்பட்டோர் கைது!

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகையிடப்பட்டு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தினர் 200க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும்ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது. இதனைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகளைக் கொண்ட தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், தமிழக அரசின் தொடர்ச்சியான ஆங்கிலவழித் திணிப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சரின் வீடு முற்றுகையிடப்படும் என கடந்த 02.05.2014 அன்று நடைபெற்ற தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழு முடிவெடுத்தது.

அதன்படி, இன்று(28.05.2014) காலை சென்னை ராசா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையிலிருந்து அமைச்சர் வீட்டை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

”அழிக்காதே அழிக்காதே தமிழ்வழிக் கல்வியை அழிக்காதே!”, ”திணிக்காதே திணிக்காதே ஆங்கிலவழியைத் திணிக்காதே!”, ”தமிழக முதல்வர் செயலலிதாவே அரசியலுக்கு மட்டும் அம்மாவா? ஆட்சிக்கு மம்மியா?” என்பன உள்ளிட்ட பல ஆவேச முழக்கங்களுடன் பேரணியாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத் தோழர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தை, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும்தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சியின் தலைவருமான திருபெ.மணியரசன் ஒருங்கிணைத்தார். உலகத் தமிழர்பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறன்.தி.மு. துணைப் பொதுச் செயலாளர் திருமல்லை சத்தியா,தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சி.ஆறுமுகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைவர் தோழர் பொழிலன், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் சேகர், திரு. தேனி லிங்கா லிங்கம், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் வ.கவுதமன், எழுகதிர் இதழாசிரியர் திரு. அருகோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, அ.ஆனந்தன், பழ.இராசேந்திரன், க.முருகன், தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் திருச்சி த.கவித்துவன், மதுரை ரெ.இராசு, திருச்செந்தூர் மு.தமிழ்மணி, சிதம்பரம் கு.சிவப்பிரகாசம், புளியங்குடி க.பாண்டியன், ஈரோடு வெ.இளங்கோவன், ரெ.கருணாநிதி, மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர்கள் தோழர் மேரி, செரபினா, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, நடுவண் குழு உறுப்பினர் தோழர் பாபநாசம் பிரபாகரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள், தற்போது மயிலை நாகேசுவரராவ் பூங்கா பின்புறமுள்ள சமூகநலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.





Thursday, May 8, 2014

“கேரள அரசு அடாவடித்தனம் செய்யாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும்!” - தோழர் பெ.மணியரசன் அறிக்கை



“கேரள அரசு அடாவடித்தனம் செய்யாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும்!” 
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் அறிக்கை!
 
நீண்ட நெடிய காலதாமதமானாலும் முல்லைப் பெரியாறு அணை உரிமையில் இன்று (07.05.2014) உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியத் தீர்ப்பு, தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாக அமைந்துள்ளது. 

2006 பிப்ரவரி 27ஆம் நாள் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய வல்லுநர் குழுக்களின் அறிக்கையைப் பெற்று அணை வலுவாக இருக்கிறது என்றும், முதல் கட்டமாக தமிழக அரசு 142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், சிற்றணையில் சிறுசிறு செப்பனிடும் பணிகளை முடித்துக் கொண்டு முழு நீர்த்தேக்க அளவான 152 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு, கேரளத்தைக் கட்டுப்படுத்தாது என்று கேரள சட்டமன்றம் புதிய மசோதா ஒன்றை இயற்றியது. அதற்கு ஆளுநர் ஒப்புதலும் கொடுக்கப்பட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்பட்டது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கேரளத்தின் இந்த அடாவடித் தனத்தை இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை. 

மேற்கண்ட அரசமைப்பு சட்டத்திற்கு முரணான, கேரளச் சட்டம் செல்லாது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டித் தர வேண்டும் என்றும் தமிழக அரசு தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மறுவிசாரணைக்கு அனுப்பியது. மறுபடியும் நீதிபதி ஆனந்த் தலைமையில் வல்லுநர் குழு அமைத்து, அணையின் வலுத்தன்மை பற்றி அறிக்கை தருமாறு அந்த அரசியல் சாசன அமர்வு கோரியது. 

வழங்கப்பட்ட நீதியை செயல்படுத்த இத்தனை தடங்கல்களும், உச்சநீதிமன்றத்தின் தாமதங்களும் இருந்திருக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டு, தமிழக அரசு இப்பொழுது வந்துள்ள தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, ஆணையிட வேண்டும். 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று, இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 136 அடிக்கு மேல் ஓரங்குலம் தண்ணீர் உயர்ந்தால் கூட, அது வெளியே வழிந்து செல்லும் அளவிற்கு, 16 வடிகால் மதகுகளும் உயரத் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளன. திறந்து கிடக்கும் வடிகால் மதகுகளை உடனடியாக இறக்கி மூடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். 

அடுத்து, அணைப் பாதுகாப்புக்கு கேரளக் காவல்துறை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கேரள பாதுகாப்புத்துறையை விலக்கிக் கொள்ளச் செய்து, தமிழகக் காவல்துறை பொறுப்பில் அணைப் பாதுகாப்பை எடுத்துக் கொள்ள தமிழக அரசு ஆணையிட வேண்டும். 

கேரள அரசு, சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்டு, இப்பொழுது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும். மாறாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளத்தில் முழு அடைப்பு நடத்துவது, தமிழக கேரள இணக்கச் சூழ்நிலையைக் கெடுத்துவிடும். 2011இல் நடந்ததைப் போல, கேரளத்தில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படும் உருவானால், அது தமிழ்நாட்டில் எதிர்வினையை உருவாக்கி இருமாநிலங்களுக்கிடையே பதட்டச் சூழ்நிலையை உருவாக்கும் என்பதை இந்திய அரசு இந்தத் தடவையாவது உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

தோழமையுடன்,
பெ.மணியரசன்
தலைவர்,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,
சென்னை.

Monday, May 5, 2014

சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு கருத்தரங்கம்.



சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு கருத்தரங்கம். தோழர். கி.வெங்கட்ராமன் எழுச்சி உரை !
 
சிதம்பரத்தில் சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம். 04.05.2014 ஞாயிறு அன்று மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் ஓமகுளத்தில் உள்ள நந்தனார் கல்வி கழக அறக்கட்டளை மட வளாகத்தில் நடைபபெற்றது. 

அயோத்திதாசப் பண்டிதர் – சுவாமி சகஜாநந்தர் ஆய்வு மையம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக எஸ்.சி/எஸ்.ட்டி ஆசிரியர், அலுவலர் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்திற்கு திரு.ஏ.ஜி. மனோகர் தலைமை தாங்கினார்.

திரு.செ.ஜெயப்பிரகாஷ் வரவேற்றுப் பேசினார். மூத்த வழக்கறிஞர் திரு.பி.கோபாலக்கிருஷ்ணன், நந்தனார் கல்விக் கழக செயலாளர் திரு.டிஇராமமூர்த்தி, லயன்ஸ் கிளப் தலைவர் . பேரா கே.வி.பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திரு.வி.பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கத்தில் ”தமிழக வரலாற்றில் அயோத்திதாசப் பண்டிதர் - சுவாமி சகஜாநந்தர் ஆகியோரின் சாதனைகள்” என்னும் தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணை ஆசிரியர் தோழர். கி.வெங்கட்ராமன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

இரண்டு மணி நேர கருத்துரையில் தோழர்.கி.வெ அவர்கள் அயோத்திதாசர் – சுவாமி சகஜாநந்தர் ஆகியோரின் அரும்பெரும் சமூகப் பணிகள், மாந்த நேய விழுமியங்கள், சாதி ஒழிப்பு, போராட்டக் களங்கள், வாழ்வியல், அரசியல் பண்பாடு, கல்விப் பணி, எழுத்தாற்றல் பேச்சாற்றலின் ஆளுமைகள் , மறைக்கப்பட்ட சமூக மதிப்பீடுகள் குறித்தும், அச்.சான்றோர்களின் இன்றையத் தேவை குறித்தும் ஆழ்ந்த சிறப்பான உரையாற்றினார்.

நிறைவாக திரு.எஸ்.சித்தானந்தம் நன்றி கூறினார். நிகழ்வினை பேரா.அ.அன்பானதன், திரு.அ.இராஜலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கருத்தரங்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக உழவர் முன்னணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி,சகஜாநந்தா நற்பணி மன்றம், நந்தனார் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், தமிழக மாணவர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் மற்றும், திரளான உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

Sunday, May 4, 2014

பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகை : தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழு முடிவு.



அரசுப் பள்ளிகளில் தமிழை அப்புறப்படுத்தி ஆங்கில வழிப்பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்! தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழு முடிவு.

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழுக் கூட்டம் 02.05.2014 அன்று மாலை சென்னை க.க.நகரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தொழிற்சங்கச் செயலாளர் திரு சைதை கே.வி.சிவராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் தோழர் இரா.பச்சைமலை, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், மக்கள் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், தென்மொழி ஆசிரியர் திரு. மா.பூங்குன்றன், தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைமை செய்தித் தொடர்பாளர் தோழர் அருண்சோரி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தி.செந்தில்குமார், தமிழர் எழுச்சி இயக்கப் பொறுப்பாளர் தோழர் ச.எழிலன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழர் தேசிய இயக்கப் பொறுப்பாளர் தோழர் ஆவடி செ.ப.முத்தமிழ்மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் பா.நாகராசன், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் தோழர் க.சோழநம்பியார், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா.சேகர், திரு. அன்றில் பா.இறையெழிலன், புலவர் இரத்தினவேலவர், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கப் பொறுப்பாளர் தோழர் சிவ.காளிதாசன், பொன்னேரி வழக்குரைஞர் பொன்.செல்வன், திரு. அ.முல்லைத்தமிழன், திரு. அ.சி.சின்னப்பத்தமிழர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு முன்மொழிவுகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. இறுதியில் பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு 2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது. இதை ஒரு சாதனையாக நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் கூறினார். ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையும் தமிழ்நீக்க - ஆங்கிலவழித் திணிப்புத் திட்டத்தை சாதனையாக கூறியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில் ஆங்கில வழிப்பிரிவுகளில் சேர்ப்பதற்கு முன்னுரிமை தருகிறார்கள்; முனைந்து செயல்படுகிறார்கள்.

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் கடந்த 2013 மே 28ஆம் நாள் சென்னை பள்ளிக்கல்வி இயக்கக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, ஆங்கிலவழிப் பிரிவுத் திணிப்புத் திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியது. அதில் கலந்து கொண்ட சற்றொப்ப 300 பேர் தளைப்படுத்தப்பட்டனர். அதன்பிறகு, சூன் 17-இல் மாவட்டத் தலைநகரங்களில் மேற்படி கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 2013 ஆகத்து 7-இல் சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் மாபெரும் பேரணி நடத்தினோம். அதில் 1200 பேர் தளைப்பட்டனர். 

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 2014 சனவரி 24 அன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. கே.சி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, ஆங்கில வழித் திணிப்பால் ஏற்படும் அபாயங்களை விளக்கி, அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி வேண்டுகோள் விண்ணப்பம் கொடுத்தோம். அதே போல், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திருவாட்டி. சபீதா அவர்களிடமும் விண்ணப்பம் கொடுத்தோம். 

நமது தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் உள்ள தமிழைக் காப்பாற்றவும் தமிழ் வழியில் பயின்று தமிழர்கள் உலகத்தாரோடு போட்டியிடும் வகையில் அறிவுத்திறன் பெற்றிடவும் நாம் எடுத்த அறவழிப் போராட்டங்களையும் கோரிக்கை விண்ணப்பங்களையும் சிறிதளவு கூட தமிழக அரசு சட்டைசெய்யவில்லை. தமிழை வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழியில் சேர்க்க விரும்புகிறார்கள் என்று தமிழக அரசு சொல்கிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழியில் சேர்ப்பர். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை ஆகியவற்றில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 80 விழுக்காடு தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். அதேபோல், வேலை வாய்ப்பில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80 விழுக்காடு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்கட்டுமானங்களை வலுப்படுத்த வேண்டும். கல்விக் கொள்ளை வணிகத்திற்காக மெட்ரிக்குலேசன் – சி.பி.எஸ்.இ. கடைகளைத் திறந்து வைக்கும் இலாபவேட்டைக்காரர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான பல்வேறு கோரிக்கைகளை நாம் தமிழக அரசுக்குத் தொடர்ந்து வைத்து வருகிறோம். ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கற்பதை நாம் ஏற்கிறோம். இவற்றில் எதையும் செய்ய தமிழக அரசு முன்வரவில்லை.

தமிழக அரசின் தமிழ் நீக்க – ஆங்கிலத் திணிப்புத் திட்டம் தொடர்ந்து நிறைவேறினால், முதற்கட்டமாக பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ் நீக்கப்படும். அடுத்த கட்டமாக தமிழக அரசின் ஆட்சியில் இப்பொழுதிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ் ஆட்சி மொழியும் நீக்கப்பட்டுவிடும். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே ஆங்கிலம் – இந்தி போன்ற அயல் மொழிகளுக்கும், அயல் இனத்தாருக்கும் அடிமைப்பட்டு தங்கள் மொழியையும் இனத்தையும் இழக்கும் இழிநிலை உண்டாகும். அயல் இனத்தாரை அண்டிப்பிழைக்கும் அவலம் தான் மிஞ்சும்.

எனவே, தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்புத் திட்டத்தைக் கண்டித்தும், அதனைக் கைவிட வலியுறுத்தியும், சென்னையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீட்டை 2014 மே 28 அறிவன் (புதன்) கிழமை அன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

-=-=-=-=-=-=-=-
வேண்டுகோள்
-=-=-=-=-=-=-=-
தமிழ்வழிக் கல்விக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு அமைப்புகளும், மற்றும் வெளியில் உள்ள தமிழ் அமைப்புகளும் தமிழ்ச் சான்றோர்களும் இன – மொழி உணர்வாளர்களும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் நிலைபாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்குப் பெருந்திரளான எண்ணிக்கையில் மக்கள் இதில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

நம் மொழி காக்க நடக்கும் இப்போராட்டத்தை மக்கள் திரள் போராட்டமாக நடத்திட, வரலாற்றில் தடம் பதிக்கும் போராட்டமாக ஆக்கிட ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு உணர்வாளரும் சென்னையிலும், மாவட்டங்களிலும் அந்தந்த வட்டாரங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தியும், சுவரெழுத்து எழுதியும், துண்டறிக்கைகள் வழங்கியும், பதாகைகள் கட்டியும், உணர்வாளர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடியும் போராட்டத்திற்கு மக்களை அழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

தங்களன்புள்ள,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம். 

Saturday, May 3, 2014

“தொழிற்சங்க அரசியலும் புரட்சிகர அரசியலும் இணைய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் மே நாள் உரை!

 


தொழிற்சங்க அரசியலும் புரட்சிகர அரசியலும் இணைய வேண்டும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் மே நாள் உரை!

மே 1 – உழைப்பாளர் நாளன்றுதமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்.தே.பொ.. – த.இ.மு. கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.

சென்னை


சென்னை தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் காலை 10 மணியளவில்.தே.பொ.கொடியேற்ற விழா சிறப்புற நடைபெற்றது. மே நாள் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தியும், தமிழ்த் தேச விடுதலைக்கு சூளுரைத்தும் எழுப்பப்பட்ட முழக்கங்களுக்கிடையில், த.தே.பொ.க. தலைவர் தோழர்பெ.மணியரசன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.தே.பொ.சென்னை செயலாளர் தோழர்தமிழ்ச்சமரன்தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்அதன்பின்,அங்கிருந்து .தே.பொ.கொடியுடன் வாகனங்களில் அணிவகுப்பாகச் சென்ற தோழர்கள்..நகர்தலைமை அலுவலகத்தை அடைந்தனர்அங்குமே நாள் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.அங்கு நடைபெற்றக் கூட்டத்தில்.தே.பொ.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் .அருணபாரதிதொடக்கவுரையாற்றினார்., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் உதயன்.ஆனந்தன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அங்கு கூடியிருந்த தோழர்களிடையேதலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய மே நாள்உரையின் எழுத்து வடிவம்:

அன்பார்ந்த தோழர்களுக்கு புரட்சிகர மே நாள் வாழ்த்துகள்!

உழைக்கும் மக்களுக்கு 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுக் கொடுத்த பாட்டாளிகளின்போராட்டத்தைமே நாளன்று நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்கிறோம்இவ்வாண்டும் அதேபோல் நினைவுகூ கூடியிருக்கிறோம். மே நாள் ஈகியக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மட்டுமின்றிதமிழகமெங்கும் உள்ள பல்வேறு இடதுசாரிஅமைப்புகள்தொழிற்சங்கங்கள் மே நாளைக் கொண்டாடி வருகின்றன.

1880களில் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தினர், 12 லிருந்து16 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டார்கள்இந்தக் கொடுமையை எதிர்த்துஒரு நாளைக்கு 8மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பிற செயல்பாடுகள், 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையைமுன்வைத்து சிகாகோ நகரில் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றதுஅப்போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குத் தொழிலாளிகள் பலியானார்கள். தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் தூக்கிலிடப்பட்டனர். 8மணி நேர வேலை உரிமையைத் தொழிலாளர்கள் போராடிப் பெற்றதன் நினைவாகவேமே நாள்ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது.

ஆனால்மே நாள் வெறும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வலியறுத்தும் நாள் மட்டுமல்ல.அது தேசிய விடுதலையையும் வலியுறுத்துகின்ற நாளாகும்எவ்வளவோ நெருக்கடிகள் இருந்த போதும்,தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழத்தில் மே நாள் பேரணிகளை நடத்தினர்.

ஆனால்தமிழ்நாட்டில் தொழிற்சங்கமும் அரசியலும் பிரிக்கப்பட்டுள்ளதுஇந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட இடம் சென்னைதான்திரு.வி..அதை 1918-இல் தொடங்கினார். இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முதலாக மே நாள் கடைபிடிக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்ட மண் தமிழ் மண். 1923-ஆம் ஆண்டு சிங்கார வேலர் முதல் முதலாக சென்னை கடற்கரையில் மே நாள் பொதுக்கூட்டம் நடத்தினார். எந்த முற்போக்குக் கருத்துகள்வந்தாலும்அதை முதலில் உள்வாங்கிக் கொள்ளுகின்ற இனமாக தமிழினம் விளங்குகிறது என்பதன்அடையாளம் அதுஆனால்தொழிற்சங்கங்களின் இன்றைய நிலை கவலைக்குரியதாக இருக்கிறது.

சி.பி.எம். – சி.பி.போன்ற இடதுசாரிக் கட்சிகள் நடத்துகின்ற தொழிற்சங்கங்கள்வெறும் பொருளாதாரக்கோரிக்கைகளுக்காக மட்டும் போராடும் தன்னலக்குழுக்களாக இருக்கின்றன.

தமிழீழப் படுகொலையை எதிர்த்துபோர் நிறுத்தம் கோரி சில தொழிலாளர்கள் தன்னார்வத்துடன்போராடினார்கள்ஆனால்எந்த இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அமைப்பு வழியாக வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டன? பட்டினிப்போர் நடத்தின? பி.எச்..எல்., சிம்சன்நெய்வேலி அனல் மின்நிலையம் என எல்லா இடங்களிலும்போர் நிறுத்தம் கோரி தொழிற்சங்கங்கள் என்னப் போராட்டம்நடத்தின? காவிரி நீர் வராததால், 25 இலட்சம் ஏக்கர் வேளாண் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளதுஇதைஎதிர்த்துஎத்தனை தொழிற்சங்கங்கள் அமைப்புவழியாகத் தொழிலாளர்களைத் திரட்டிப்போராடியிருக்கின்றனதொழிற்சங்கங்களை அரசியல்படுத்தாதன் கோர விளைவு இது!

வர்ண சாதி ஒடுக்குமுறை மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை ஆகிய இரண்டும் இந்தியாவின் தனித்த கூறுகள். இவற்றைப் புறந்தள்ளிய இடதுசாரிக் கட்சிகள்பாரதிய சனதாக் கட்சியும் காங்கிரசும்முன்வைக்கும் இந்தியத் தேசியக் கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டன.  ஒரு சீட்டுக்கும் இரண்டுசீட்டுக்கும் வேண்டி நிற்கும் ஒரு அரசியல் தலைமை இருந்தால்தொழிற்சங்கத் தலைமை மட்டும்எப்படி சரியாக இருக்கும்முதலாளிகள் என்ன கொடுக்கிறார்களோ அதை வாங்கிக் கொண்டு வரும்தொழிற்சங்கத் தலைமைதான் இருக்கும்இவ்வாறுதான்தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணம் இங்குசீரழிக்கப்பட்டு விட்டது.

சமூக மாற்றத்திற்கான புரட்சி நடக்கும்போதுதான்புரட்சிகரத் தொழிற்சங்க இயங்கங்களும் வளரும்.நமக்கான சமூக மாற்றம்தமிழ்த்தேசியமேதமிழ்நாடு விடுதலையே!

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியம்தனது காலனி நாடுகளில் கொள்ளையடித்தவற்றைக்கொண்டுதொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்ததுஎனவேஇலண்டன் தொழிலாளர்கள் யாரும்ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்கத்தைக் கண்டிக்கவில்லைஇத்தகைய தொழிலாளர்களை,காரல் மார்க்ஸ் ‘தொழிலாளர் பிரபுக்கள்’ (Labour aristocrats) என்றார்அதுபோலஇன்றைக்கும் இங்குதொழிலாளர் பிரபுக்கள் இருக்கிறார்கள்இந்திய ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டும்காணாத தொழிலாளர் பிரபுக்களாக இருக்கிறார்கள்.

தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களுக்குள்ளான ஓர் ஒருங்கிணைவுஅதை குறுகிய இனவாதம்என்கிறார்கள் சிலர்இவ்வாறு பேசுபவர்கள் அனைவரும் பெருந் தேசிய இனவாதம் பேசுபவர்களாக,இன்னொரு இனத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். 77 இலட்சம் பேர் வாழும்இசுரேல் சிறுபான்மையல்ல. 44 இலட்சம் பேர் உள்ள நார்வே சிறுபான்மையல்ல.நாசபையில்இந்தியாவுக்கு சமமாக வாக்களிக்கின்றன இந்நாடுகள்ஆனால்உலகெங்கும் 12 கோடி பேரையும், தமிழ்நாட்டில் 7 கோடி பேரையும் கொண்ட தமிழர்களை சிறுபான்மை என்கிறார்கள்எங்களைஅடக்காதே ஒடுக்காதே என்று நாம் தமிழ்த்தேசியத்தை முன்வைத்து ஒருங்கிணைகிறோம்அதைஇனவாதம் என்கின்றனர்இதை நாம் முறியடிக்க வேண்டும்நமக்கான சமூக மாற்றம்தமிழ்த் தேசியப்புரட்சியேஅதை நோக்கி நாம் முன்னேற வேண்டும்

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

நிறைவில்.தே.பொ.பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் நன்றி கூறினார்.இந்நிகழ்வில்திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை நகரம்
தஞ்சை புதுஆற்றுச் சாலையிலுள்ள, கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில், த.தே.பொ.க. கொடியை தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு அவர்களும், த.இ.மு. கொடியை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை அவர்களும் ஏற்றி வைத்தனர். பின்னர், அங்கிருந்து இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாகச் சென்ற த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை உள்ளிட்ட தோழர்கள், கோபிகுளம், பூக்கார லாயம், முனியாண்டவர் காலனி, அண்ணா நகர், இரெங்கநாதபுரம், கலைஞர் நகர், பழைய பேருந்து நிலையம் பழக்கடை உள்ளிட்ட பகுதிகளில், கொடியேற்றி வைத்து உரையாற்றினர். நிறைவில், வடக்குவாசல் பகுதிகளில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு த.தே.பொ.க. தஞ்சை செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். நிகழ்வில், த.தே.பொ.க. தஞ்சை துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் லெ.இராமசாமி, கலைஞர் நகர் த.தே.பொ.க. செயலாளர் தோழர் மா.சீனிவாசன் வழக்கறிஞர் மு.கரிகாலன், தோழர் மு.இராசேந்திரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.


வேதாரண்யம் வட்டம், கடிநல்வயலில் உள்ள ஜி.எச்.சி.எல் உப்புத் தொழிற்சாலையில் உப்புத்தொழிலாளர்கள் சார்பில் மே நாள் விழா எழுச்சியாக நடைபெற்றது.

பல நூறு ஏக்கரில் அமைந்துள்ள இந்த உப்புத் தொழிற்சாலை முதலில் விம் கோ நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது. அதன் பிறகு தாரங்க தாரா கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு கை மாறியது. அதற்கும் பிறகு டால்மியாவின் குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் (ஜி.எச்.சி.எல்) நிறுவனத்தால் வாங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

நிர்வாகம் கைமாறினாலும் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து ஒரே தலைமையின் கீழ் “ விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் ” என்ற பெயரிலேயே இயங்குகின்றது. கடந்த 34 ஆண்டுகளாக தோழர் கி.வெங்கட்ராமன் அச்சங்கத்தின் தலைவராக தொடர்ந்து பணியாற்றிவருகிறார். நமது தமிழக தொழிற்சங்க முன்னணியில் இணைக்கப்பட்ட சங்கமாக அது செயல்பட்டுவருகிறது. 

விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே நாள் பேரணி 01.05.2014 மாலை 5.30 மணியளவில் பன்னாள் , அரசுப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்டது. 

பேரணிக்கு தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

சங்கச் செயலாளர் தோழர் இரா.தியாகராசன் வரவேற்புரையாற்றினார். பன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு வி.கே.விஸ்வநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு,ஜெகன்நாதன், ஓய்வுபெற்ற ஜி.எச்.சி.எல் அதிகாரி திரு,வி.கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேரணியை தொடங்கி வைத்தனர்.

பேரணிக்கு சங்கத் துணைத் தலைவர் தோழர் காமராஜ், துணைச் செயலாலர் தோழர் வாசு, சங்கப் பொருளாளர் தோழர் இளங்கோவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஜி.எச்.சி.எல் தொழிலாலர் சங்கத்தின் செயலாளர் தோழர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியின் முன்னால் தஞ்சை செல்வராஜ் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுச் செல்ல, உப்புத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஏறத்தாழ முன்னூறு பேர் மே நாள் முழக்கங்கள் எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனர். 

பேரணி செல்லும் பாதையெங்கும் ஆங்காங்கே தொழிலாளர் குடும்பத்தினரும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் மற்றும் சங்கத்திற்கு ஆதரவளிக்கும் பல்வேறு அமைப்பினரும் , ஆசிரியர்களும் குளிர்பானம் அளித்தும் தோழர் கி.வெ அவர்களுக்கு சால்வை , மாலை அணிவித்தும் சிறப்பித்தனர். 

மாலை புறப்பட்ட பேரணி 5 கிலோமீட்டர் கடந்து இரவு 10.30 மணி அளவில் கடிநல்வயலில், ஆலை வாயிலை அடைந்தது. 
அங்கு அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் தொழிலாளர்களின் எழுச்சிமிக்க மே நாள் முழக்கங்கங்களுக்கிடையே தோழர் கி.வெங்கட்ராமன் தமிழக தொழிற்சங்க முன்னணியின் கொடியை ஏற்றிவைத்து மே நாள் உரையாற்றினார். 

சி.பி.எம் கட்சியின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றியத்தலைவர் தோழர், வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார். சங்கச் செயலாளர் தோழர்.இரா. தியாகராசன் நன்றி உரையாற்ற இரவு 11.30 மணி அளவில் மே நாள் விழா நிறைவுற்றது.

பூதலூர் ஒன்றியம்

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் தட்சிணாமூர்த்தி, நந்தவனப்பட்டி த.தே.பொ.க. செயலாளர் தோழர் இராஜசேகர் உள்ளிட்ட திரளான தோழர்கள் இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாகத் திரண்டுச் சென்று, செங்கிப்பட்டி, சாணூரப்பட்டி, காதாட்டிப்பட்டி, வளம்பக்குடி, மனையேறிப்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரன்கண்டேன்பட்டி, பூதலூர், விருதராயன்பட்டி, புதுப்பட்டி, வன்னியம்பட்டி ஆகிய பகுதிகளில் த.தே.பொ.க. – த.இ.மு. கொடிகளை ஏற்றி வைத்தனர்.  

புதுக்குடி, புதுக்குடி முதன்மைச்சாலை, மேலத்திருவிழாப்பட்டி, காமாட்சிபுரம், பெரியார் சமத்தவபுரம், வெண்டையம்பட்டி ஆகிய பகுதிகளில், த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, த.இ.மு. துணைத்தலைவர் தோழர் க.காமராசு ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, த.தே.பொ.க. தோழர் மலைத்தேவன் ஆகியோர், ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி, பாளையப்பட்டி, கண்டப்பட்டி ஆகிய இடங்களில் த.தே.பொ.க. – த.இ.மு. கொடிகளை ஏற்றி வைத்தனர்.

தஞ்சை ஒன்றியம்
தஞ்சை ஒன்றியத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.முருகையன், த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, வல்லம்புதூர் கிளைச் செயலாளர் தோழர் சி.தனசேகர் ஆகியோர் வல்லம், வல்லம்புதூர், முன்னியம்பட்டி, உருங்குளம், வாகரக்கோட்டை ஆகியப் பகுதிகளில் கொடியேற்றி வைத்தனர்.

சிதம்பரம்

சிதம்பரம் காசுக்கடைத் தெரு – நெல்லுக்கடைத் தெரு சந்திப்பில்காலை 8.15 மணிக்கு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு த.தே.பொ.மூத்தத் தோழர் மு.முருகவேல் தலைமையேற்றார். மே நாள் வாழ்க! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக“ என தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா முழக்கங்கள் எழுப்பத.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ.தேவராசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக த.தே.பொ.க. சிதம்பரம் நகரச்செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம்மே நாள் குறித்து உரையாற்றினார். நிகழ்வில், த.தே.பொ.க.தோழர்கள் ச.மணிவண்ணன்சி.ஆறுமுகம்பா.பிரபாகரன்செந்தில்தமிழக உழவர் முன்னணி தோழர்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன்அமைப்புக் குழு உறுப்பினர்கள் தோழர் மு.சம்பந்தம், தமிழக மாணவர் முன்னணி பொறுப்பாளர்கள் தோழர்கள்  ஆ.யவனராணிசெ.ரோகேஷ் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

ஓசூர்

ஓசூரில் இராம் நகரில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் செம்பரிதி தலைமையேற்றார். த.தே.பொ.க. தோழர் செந்தில் மாறன் எழுச்சி முழக்கங்கள் எழுப்ப,தோழர்  முருகப்பெருமாள் த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்தார். தோழர்  சுப்பிரமணியன் மே நாள் குறித்து உரையாற்றதோழர் முத்துவேலு நன்றியுரையாற்றினார்.  

குடந்தை

குடந்தை தியாக இராமசாமி தெருவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் தலைமையேற்றார். த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். சாமிமலை த.தே.பொ.க. செயலாளர் தோழர் திருவரசன், த.இ.மு. செயலாளர் தோழர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாமிமலை

சாமிமலை திருமஞ்சன வீதியில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. குடந்தை செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் தோழர் திருவரசன் முன்னிலை வகித்தார். த.தே.பொ.க. தோழர் தமிழ்த்தேசியன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.   

தேவராயன்பேட்டை

தேவராயன்பேட்டை முதன்மைச் சாலையில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரபாகரன் தலைமையேற்றார். த.தே.பொ.க. குடந்தை செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர் முன்னிலை வகித்தார். தமிழக இளைஞர் முன்னணிக் கொடியை தோழர் மனோகரன் ஏற்றி வைத்தார்.

மதுரை

மதுரை செல்லூர் தாகூர் நகரில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. மதுரை செயலாளர் தோழர் இரெ.இராசு தலைமையேற்றார். மகளிர் ஆயம் தோழர்கள் செரபினா, மேரி முன்னிலை வகித்தனர். தோழர் முருகேசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தோழர் அருளர் மே நாள் குறித்து உரையாற்றினார்.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. தோழர் பார்த்திபராசன் தலைமையேற்றார். ஈரோடு த.தே.பொ.க. செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், கட்சிக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தோழர் இராசய்யா மேநாள் குறித்து விளக்கவுரையாற்றினார். தோழர் பரமேசுவரன் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மே நாள் கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.  த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.ஆரோக்கியசாமி திருமலைஇராயபுரத்தில் கொடியேற்றி வைத்தார். காரடிவயல், தெம்மாவூர் ஆகிய பகுதிகளில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.மணிகண்டன், தெம்மாவூர் த.தே.பொ.க. தலைவர் தோழர் முருகானந்தம் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

கிள்ளுக்கோட்டை பகுதியில், த.தே.பொ.க. குன்றாண்டார் ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் திருப்பதி த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்தார். கிளைச் செயலாளர் தோழர் தங்கமணி முன்னிலை வகித்தார். காட்டுக்கோட்டைப்பட்டி, செங்களுர் ஆகிய பகுதிகளில் குன்றாண்டார் கோயில் த.இ.மு. ஒன்றியத் தலைவர் தோழர் இலட்சுமணன் த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார்.

த.தே.பொ.க. ஒன்றியக்குழு உறுப்பினர் தோழர் பாலதண்டாயுதபாணி திருமலைப்பட்டியில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தனர். கிளைச் செயலாளர் தோழர் கருப்பையா முன்னிலை வகித்தார்.


பெண்ணாடம்

பெண்ணாடம் வட்டம் முருகன்குடியில், பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மே நாள் நிகழ்வில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியர் திரு. பழனிவேல், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் தோழர் இராமகிருஷ்ணன் ஆகியோர் மே நாள் குறித்து உரையாற்றினர். நிறைவில், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு நன்றி கூறினார். துறையூரில் த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு தலைமையில் நடைபெற்ற மே நாள் நிகழ்வில், தோழர் இராமகிருஷ்ணன் த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார்.  சாத்துக்குடல் பகுதியில், த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் இளநிலா த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார்.   


(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவி)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT