உடனடிச்செய்திகள்

Tuesday, March 24, 2020

கொரோனா மக்கள் முடக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உடனடியாக வாழ்வூதியம் வழங்குக! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கொரோனா மக்கள் முடக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள உடனடியாக வாழ்வூதியம் வழங்குக!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!



இந்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ள கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இன்று (22.03.2020) அனைத்திந்திய அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. வரும் மார்ச்சு 31ஆம் நாள் வரை அனைத்திந்திய அளவில் தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலுருமிருந்து 75 மாவட்டங்களை இதர பகுதிகளிலிருந்து துண்டித்து, தனிமைப்படுத்த வேண்டுமென இந்திய அரசு அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் உள்ளன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் வரும் மார்ச்சு 31 ஆம் நாள் வரை முழுமையான பணி முடக்கம் செயலாக்கப்படவுள்ளது. போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் நோய்த் தொற்றைத் தவிர்க்க உதவினாலும், இம்முடக்கம் காரணமாக எழும் சமூகப் பொருளியல் சிக்கல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து, கடந்த 19.03.2020 அன்று அறிக்கை வெளியிட்ட நாம், இப்பொருளியல் முடக்கம் காரணமாக பாதிக்கப்படும் பல இலட்சக்கணக்கான குறை ஊதிய தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பேரிடர் கால வாழ்வூதியம் வழங்க வேண்டுமெனவும் அறிக்கை விடுத்திருந்தோம். ஆனால், அதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது.

ஏற்கெனவே உள்ள பொருளியல் மந்தத்தோடு, கொரோனா வைரஸ் சிக்கல் இணைந்து ஒட்டு மொத்தப் பொருளியல் நடவடிக்கைகளும் முடங்கியுள்ள இச்சூழலில், இவற்றால் பாதிக்கப்படும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசு, அதனைத் தட்டிக் கழிப்பது சரியல்ல.

எனவே, தேசியப் பேரிடர் கால வாழ்வூதியம் வழங்கும் பொறுப்பை ஏற்று, தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஆகும் அதிகபட்ச செலவான 13,000 கோடி நிதியை - தேசியப் பேரிடர் கால உதவியாக இந்திய அரசு 75 விழுக்காடும், தமிழ்நாடு அரசு 25 விழுக்காடும் எனப் பகிர்ந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசின் வழியாக ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் இத்தொகை செலுத்தப்பட வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத குடும்பங்களுக்கு அவரவர்களுக்குரிய ரேசன் கடைகளின் வழியாக வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், இந்தப் பேரிடர் காலத்தில் ரேசன் கடைகளில் வழக்கமாக வழங்கும் விலையில்லா அரிசிக்கு மேலாக, நாள் ஒன்றுக்குக் கூடுதலாக குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் ஒரு கிலோ அரிசியை மானிய விலையில் ரூபாய் மூன்றுக்கு வழங்க வேண்டும். மண்ணெண்ணெய், பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் வழங்கலை அரை மடங்குக் கூடுதலாக்கி, மானிய விலையில் வழங்க வேண்டும்.

விடுமுறை அறிவிக்கப்பட்ட சத்துணவு பெறும் மாணவர்களுக்கு கேரள அரசு செய்வதைப் போல், அம்மாணவர்களுக்குரிய சத்துணவை பாதுகாக்கப்பட்ட பொட்டலங்களில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.

அம்மா உணவகங்களின் உணவு வழங்கல் அளவை இரட்டிப்பாக்கி, அதற்குரிய கூடுதல் ஊழியர்களையும் இக்காலத்தில் அமர்த்தி மானிய விலை அம்மா உணவகங்களைக் கூடுதலாக அமைப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறுதொழில்களுக்கு இடர்நீக்க நிதி வழங்குவதுடன், அவர்களது மின்சாரக் கட்டணத்திற்கும் சலுகை வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அரைப் பட்டினிக்கும், சத்துக் குறைபாடுக்கும் ஆளாகி நோய்த் தொற்று அதிகப்பட தொடங்கி விடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Saturday, March 21, 2020

Tamilnadu Governor's decision on Seven Tamils release is contempt of court! K. VENKATRAMAN General Secretary, Thamizh Thesiya Periyakkam (Tamil National Movement)



Tamilnadu Governor's decision on
Seven Tamils release is contempt of court!

K. VENKATRAMAN
General Secretary,
Thamizh Thesiya Periyakkam
(Tamil National Movement)


Yesterday on 20.03.2020, on the floor of the Tamilnadu Legislative Assembly MLA U. Thaniarasu questioned the status of the release of seven convicts in Rajiv Gandhi Assassination case.
Replying to the query, Tamilnadu Law Minister C.Ve. Shanmugam said that, in the supreme court case filed by Mr. Perarivalan one of the seven convicts in the Rajiv Gandhi’s case, the court asked the State government to check the status of the recommendation of the state government sent to the governor on September 8 – 2018 recommending release of all the seven convicts.
Based on the direction of the Supreme Court the State Government sent a letter to the Governor’s office seeking explanation on the steps taken by him on the issue.
The Governor’s office replied that, as the Multi Disciplinary Monitoring Agency (MDMA) is probing the conspiracy in the Rajiv Gandhi assassination case. Any action on the issue would be taken only at the agency submits its report to the Union Home Ministry.
This decision taken by the Governor of Tamilnadu Banwarilal Purohit is clearly illegal. It is against the Article 161 of the Indian constitution.
The State Government of Tamilnadu, sent its advice to the governor to release all the seven life convicts who are languishing in the jail for the last 28 years.
This Proposal sent by the State Cabinet was under the power of the Governor under Article 161.
Under Article 161, it is the bounded duty of the State Governor to put his signature endorsing the decision of the Cabinet.
Under Article 163 of the Constitution, the State Governor should act as per the advice of the State Government.
The Discretionary power of the Governor is very very limited. This question was dealt with by the Five member consititution bench led by Jagadish Singh Khekar in Nabam Rebia on 13.07.2016 (CIVIL APPEAL NOS. 6203-6204 OF 2016).
Nabam Rebia Judgement in its para 4.2.14 and 4.2.15 clearly states as follows.
“In a very limited field, however, the Governor may exercise certain functions in his discretion, as provided in Article 163(1). The first part of Article 163(1) requires the Governor to act on the advice of his Council of Ministers. There is, however, an exception in the latter part of the clause in regard to matters where he is by or under the Constitution required to function in his discretion. The expression "required" signifies that the Governor can exercise his discretionary powers only if there is a compelling necessity to do so. It has been held that the expression "by or under the Constitution" means that the necessity to exercise such powers may arise from any express provision of the Constitution or by necessary implication. We would like to add that such necessity may also arise from rules and orders made "under" the Constitution".
4.2.15 Thus, the scope of discretionary powers as provided in the exception in clause (1) and in clause (2) of Article 163 has been limited by the clear language of the two clauses. It is an accepted principle that in a parliamentary democracy with a responsible form of government, the powers of the Governor as Constitutional or formal head of the State should not be enlarged at the cost of the real executive, viz. the Council of Ministers. The scope of discretionary powers has to be strictly construed, effectively dispelling the apprehension, if any, that the area for the exercise of discretion covers all or any of the functions to be exercised by the Governor under the Constitution. In other words, Article 163 does not give the Governor a general discretionary power to act against or without the advice of his Council of Ministers. The area for the exercise of his discretion is limited. Even this limited area, his choice of action should not be arbitrary or fanciful. It must be a choice dictated by reason, actuated by good faith and tempered by caution.” The important observations in the Justice M.M. Punchhi Commission report, with reference to Article 163(2), are contained in paragraph 4.3.03. Relevant extract of the same is reproduced below:
“Article 163(2) gives an impression that the Governor has a wide, undefined area of discretionary powers even outside situations an impression needs to be dispelled. The Commission is of the view that the scope of discretionary powers under Article 163(2) has to be narrowly construed, effectively dispelling the apprehension, if any, that the so-called discretionary powers extends to all the functions that the Governor is empowered under the Constitution. Article 163 does not give the Governor a general discretionary power to act against or without the advice of his Council of Ministers. In fact, the area for the exercise of discretion is limited and even in this limited area, his choice of action should not be nor appear to be arbitrary or fanciful. It must be a choice dictated by reason, activated by good faith and tempered by caution.
This Article 163 is about the executive relationship between the State Cabinet and Governor. Under Article 161, Governor has no discretionary power of his own.
In this regard, one can refer Maruram vs Union of India (1981 SCC (1) 107). This judgment which was exhaustively quoted in various cases was authored by Justice VR. Krishna Iyer on behalf of Five member constitution bench.
The Para 21 of the order clarifies the constitutional position very clearly as follows.
The President is symbolic, the Central Government is the reality even as the Governor is the formal head and sole repository of the executive power but is incapable of acting except on, and according to, the advice of his council of ministers. The upshot is that the State Government, whether the Governor. likes it or not, can advise and not under Article 161, the Governor being bound by that advice. The action of commutation and release can thus be pursuant to a governmental decision and the order may issue even withhold the Governor's approval although, under the Rules of Business and as a matter of constitutional courtesy, it is obligation that the signature of the Governor should authorise the pardon, commutation or release. The position is substantially the same regarding the President. It is not open either to the President or the Governor to take independent decision or direct release or refuse release of any one of their own choice. It is fundamental to the Westminster system that the Cabinet rules and the Queen reigns. The President and the Governor, be they ever so high in textual terminology, are but functional euphemisms promptly acting on and only on the advice of the Council of Ministers save in a narrow area of power. So, even without reference to Article 367(1) and ss. 3(8)(b) and 3(60)(b) of the General Clauses Act, 1897, that in the matter of exercise of the powers under Articles 72 and 161, the two highest dignitaries in our constitutional scheme act and must act not on their own judgment but in accordance with the aid and advice of the ministers. Article 74, after the 42nd Amendment silences speculation and obligates compliance. The Governor vis a vis his Cabinet is no higher than the President save and narrow area which does not include Article 161. The constitutional conclusion is that the Governor is but a shorthand expression for the State Government and the President is an abbreviation for the Central Government. [1239 C-H, 1240A-B] Shamsher Singh & Anr, v. State of Punjab, [1975] 1 S.C.R. 814, applied.
The Tamilnadu Governor Banwarilal Purohit, out of his animosity towards Tamils, is acting against the constitution. To divert the attention and deny his constitutional duty, he is mentioning about the report of the Multi Disciplinary Monitoring Agency which is enquiring the conspiracy in the Rajiv Gandhi case. This report has nothing to do with the decision of the Cabinet under the Article 161.
If at all the agency report was pertinent to the case, the judiciary right from TADA court upto Supreme Court could not have conducted and concluded the case. Citing the Report of the Multi Disciplinary Monitoring Agency, by the Governor in itself is contempt of court.
Legally and morally the report of the MDMA cannot make any influence on the decision of the cabinet under Article 161.
The Letter of the Governor is not only unconstitutional, but an insult to the Government of Tamilnadu and the Tamil people at large.
So, on behalf of Thamizh Thesiya Periyakkam (Tamil National Movement) I urge upon the State Government of Tamilnadu to send a letter to the Governor stating his unconstitutional position taken in this regard to prevail upon him for the early release of Perarivalan, Murugan, Santhan, Nalini, Jeyakumar, Robertpayes, Ravichandran as early as possible.
K. VENKATRAMAN
General Secretary,
Thamizh Thesiya Periyakkam (Tamil National Movement)


Head Quarters,
Thamizh Thesiya Periyakkam
(Tamil National Movement)

Mobile : 9841949462, 9443291201
Facebook : www.fb.com/tamizhdesiyam
Media : www.kannottam.com
Website : www.tamizhdesiyam.com
Twitter : www.twitter.com/Tamizhdesiyam
Videos : youtube.com/Tamizhdesiyam



Thursday, March 19, 2020

கொரோனா பேரிடர் காலத்திற்கு வாழ்வூதியம் வழங்குக! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கொரோனா பேரிடர் காலத்திற்கு

வாழ்வூதியம் வழங்குக!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


இந்திய அரசு கொரோனா பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பெருமளவு மக்கள் கூடும் பெரிய வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், சுற்றுலா கூடங்கள் போன்றவற்றை மார்ச்சு 31 வரை மூட ஆணையிடப்பட்டுள்ளது. ஆயினும், இவற்றில் பணியாற்றும் பல இலட்சக்கணக்கான குறை ஊதிய தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே உள்ள பொருளியல் மந்தத்தோடு, கொரோனா வைரஸ் சிக்கல் இணைந்து ஒட்டுமொத்த பொருளியல் நடவடிக்கைகளே கிட்டத்தட்ட முடங்கும் நிலையில் இருக்கின்றன. இந்நிலையில், தேசியப் பேரிடர் கால வாழ்வூதியம் வழங்கும் பொறுப்பை அரசுகள் ஏற்க வேண்டும். இல்லையென்றால், அரைப் பட்டினிக்கும், சத்துக் குறைபாடுக்கும் ஆளாகி நோய்த் தொற்று அதிகப்பட தொடங்கி விடும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பேரிடர் கால வாழ்வூதியமாக குடும்ப அட்டை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

2019 மார்ச்சு 15 தொடங்கி 31 வரையுள்ள 15 நாட்களுக்கு, இதற்கு ஆகும் அதிகபட்ச செலவு 13,000 கோடி ரூபாய்தான். தேசியப் பேரிடர் கால உதவியாக இது திகழ்வதால், இதன் 75 விழுக்காட்டு நிதிப் பொறுப்பை இந்திய அரசும், 25 விழுக்காட்டு நிதிப் பொறுப்பை தமிழ்நாடு அரசும் பகிர்ந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் வழியாக ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் இத்தொகை செலுத்தப்பட வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத குடும்பங்களுக்கு அவரவர்களுக்குரிய ரேசன் கடைகளின் வழியாக வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், இந்தப் பேரிடர் காலத்தில் ரேசன் கடைகளில் வழக்கமாக வழங்கும் விலையில்லா அரிசிக்கு மேலாக, நாள் ஒன்றுக்குக் கூடுதலாக குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் ஒரு கிலோ அரிசியை மானிய விலையில் ரூ. 3-க்கு வழங்க வேண்டும்.

அதேபோல், மண்ணெண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் வழங்கலை அரை மடங்குக் கூடுதலாக்கி, மானிய விலையில் வழங்க வேண்டும்.

விடுமுறை அறிவிக்கப்பட்ட சத்துணவு பெறும் மாணவர்களுக்கு கேரள அரசு செய்வதைப் போல், அம்மாணவர்களுக்குரிய சத்துணவை பாதுகாக்கப்பட்ட பொட்டலங்களில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.

அம்மா உணவகங்களின் உணவு வழங்கல் அளவை இரட்டிப்பாக்கி, அதற்குரிய கூடுதல் ஊழியர்களையும் இக்காலத்தில் அமர்த்தி மானிய விலை அம்மா உணவகங்களைக் கூடுதலாக அமைப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேற்கண்ட பேரிடர் காலப் பணிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவித்திட தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே இருக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!


அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக்
கல்வி மட்டுமே இருக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் அறிக்கை!



மிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு வேலைகளைத் தமிழ்வழியில் கற்றவர்களுக்கு வழங்கும் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அமைச்சர் செயகுமார் சட்டப்பேரவையில் விவாதத்திற்கு வைத்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், ஒரு வேலைக்கு அடிப்படைக் கல்வித் தகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள படிப்பைத் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. ஆனால் ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. இந்த நிபந்தனையை இப்போது முன்மொழிந்துள்ள சட்டத்திருத்தம் முன் வைக்கிறது.
எடுத்துக்காட்டாக, இளங்கலைப் பட்டத்தை அடிப்படைத் தகுதியாகக் கொண்டுள்ள வேலைக்கு இளங்கலைப் படிப்பைத் தமிழ்வழியில் படித்திருந்தால் போதும். பத்தாம் வகுப்பு, பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளைத் தமிழ்வழியில் எழுதியிருக்கத் தேவையில்லை. அவற்றை ஆங்கில வழியிலேயே படித்திருக்கலாம்.
இந்தத் துவாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒன்றாம் வகுப்பிலிருந்து இளங்கலை உட்பட ஆங்கில வழியிலேயே படித்தவர்கள், வேலைவாய்ப்பிற்காகத் திறந்தவெளி பல்கலைக் கழகமொன்றில், ஏதாவதொரு இளங்கலைப் படிப்பைத் தனியே படித்து பட்டம் வாங்கி வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். அதிகாரிகள் சிலர் அதற்குத் துணை போயிருக்கிறார்கள்.
இதைத் தடுக்கும் வகையில் இளங்கலைத் தகுதி உள்ள வேலைக்கு, இளங்கலை மட்டுமின்றி 10-ஆம் வகுப்பு, 11, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்று புதிய திருத்தம் நிபந்தனை போடுகிறது. 12 ஆம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படையாக கொண்ட வேலைகளுக்கு 10 ஆம் வகுப்புத் தேர்வையும் தமிழ் வழியில் எழுதியிருக்க வேண்டும் என்று இப்போது புதிய திருத்தத்தில் நிபந்தனை போட்டுள்ளார்கள்.
இந்தப் புதிய சட்டத்திருத்தம் வரவேற்கத்தக்கது! ஆனால் தமிழ்நாடு அரசு தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகளை கடந்த 2013லிருந்து அனுமதித்து வருகிறது. அடுத்து தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் தேர்வெழுதலாம், ஆங்கிலத்தில் எழுதலாம், வேலையில் சேர்ந்த பின் இரண்டாண்டுகளுக்குள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்று தமிழ்நாடு அரசுப்பணித் தேர்வாணையத்தில்(TNPSC) விதி வைத்துள்ளார்கள்.
இந்த இரண்டையும் நீக்கி அரசுப்பணிகளில் தமிழ்ப் பயிற்று மொழி வகுப்புகள் மட்டுமே இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வெழுதுவோர் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கட்டாயம் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் கற்றிருக்க நிபந்தனை போட்டும் செயல்படுத்தினால் மட்டுமே தமிழ்வழிக் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தமிழ்நாடு அரசு இதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

மறுபக்கம் மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினரான மர்மம்! பெ. மணியரசன்


மறுபக்கம்

மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
மாநிலங்களவை உறுப்பினரான மர்மம்!

ஐயா பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, கடந்த 17.11.2019 அன்று பணி ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகாய். அவர் இப்பொழுது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 12 நியமன உறுப்பினர்களில் ஒருவராக மோடி ஆட்சியால் அமர்த்தப்பட்டுள்ளார்.


மாநிலங்களவை உறுப்பினராகிட மகிழ்வுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார் கோகோய்!



மோகன் பகவத் – மோடி ஆட்சி ரஞ்சன் கோகோய்க்கு வழங்கியுள்ள பரிசளிப்பாக இந்த நியமனத்தைப் புரிந்து கொள்ளலாம். இதன் வழியே, தங்களுக்கு ஆதரவாக – தங்கள் ஆட்சிக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கினால், அவருக்கு “வெகுமானம்” உண்டு என இப்போதிருக்கும் நீதிபதிகளுக்கும் “ஆசை”காட்டியுள்ளது மோடி ஆட்சி!



பாபர் மசூதி இருந்த இடம் அப்பள்ளி வாசலை இடித்தவர்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது, சம்மு காசுமீருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருந்த சிறப்புரிமைப் பரிவுகளான 370 மற்றும் 35A ஆகியவற்றை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டபோது அவற்றை உடனடியாக விசாரிக்காமல் காலவரம்பற்று தள்ளி வைத்து உதவியது, இரபேல் விமான ஊழல் அம்பலமான போது அதுகுறித்து விசாரிக்கத் தேவையில்லை என ஆணையிட்டது முதலிய “அரசமைப்புச் சட்டப் பணிகள்” பலவற்றைச் செய்தவர் ரஞ்சன்.



உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர். அவர்கள் மீது இந்திய ஆட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றித்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.



உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் தனிப் பொறுப்பும் தன்னாட்சியும் கொண்டவை; உயர் மதிப்புமிக்கவை!



இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைக் காப்பாற்றும் அதிகாரம் படைத்தவை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும். இப்பணியில், இந்திய அரசு நிர்வாகத்துடன் – தேவைப்பட்டால் மோத வேண்டிய கடமையும் – இந்திய அரசைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் இவ்வரு நீதிமன்றங்களுக்கும் உண்டு.



ஆனால், ரஞ்சன் கோகோய் புது விளக்கம் தருகிறார். நேற்று (17.03.2020) அசாம் தலைநகர் குவாகாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாடாளுமன்றமும் நீதித்துறையும் ஒரு புள்ளியில் இணைய வேண்டிய தேவையுள்ளது” எனக் கூறியுள்ளார்.



ஆனால் இதே நீதிபதி ரஞ்சன் கோகோய், கடந்த 12.01.2018 அன்று புதுதில்லியில் சக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேசுவர், மதன் பி. லோகுர், குரியன் சோசப் ஆகியோருடன் இணைந்து, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் செய்தியாளர்களிடம் செவ்வி கொடுக்கும்போது கூறியதை இப்போது நினைவு கூரலாம்.



“உச்ச நீதிமன்ற அதிகாரத்தை இந்திய அரசு ஆக்கிரமிப்பதை உணர்கிறோம். உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள அரசியல் வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், தங்களின் விருப்பத்திற்குரிய நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகளை உருவாக்குகின்றனர். நாங்கள் வெளிப்படையாக இக்கருத்தை செய்தியாளர்களிடம் சொல்வதற்குக் காரணம், இந்தத் தேசத்திற்கு நாங்கள் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் ஆகும்”.



மேற்கண்ட உச்ச நீதிமன்ற நான்கு நீதிபதிகளும் முதல் முதலாக செய்தியாளர்களைச் சந்தித்து, தங்களின் விமர்சனங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்ட நேரம் மிக முகாமையானது.



குசராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அமித்சா, சொராபுதீன் இணையரைப் போலி மோதலைச் சித்தரித்துக் கொலை செய்யக் காவல்துறையினரைத் தூண்டினார் என்ற வழக்கில் கைதாகி சிறை சென்று, அவர் பிணையில் வெளியில் இருந்த காலம்! அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி லோயா, “சாலை விபத்தில்” கொல்லப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்ட அமர்வில் விசாரிக்கப்பட்ட காலத்தில்தான் நான்கு நீதிபதிகளும் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.



மோகன் பகவத் – மோடி பாசிச ஆட்சியில் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. இக்காலத்தில் ரஞ்சன் கோகோய் – மாநிலங்களவை உறுப்பினராக அமர்த்தப்படுகிறார். அவரும் அதை எதிர்ப்பார்த்திருந்தது போல் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறார்.



தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒரு கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.



இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் இருக்கிறது. இந்நீதிமன்றங்களின் அதிகாரம் இந்திய அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்படாத தன்னாட்சி அதிகாரம். எனவே, உயர் நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக்குப் பின் அரசு மற்றும் தனியார் பதவி எதையும் ஏற்கத் தடை விதித்து, சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு ஈடாக, இந்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்குக் கூடுதலான சம்பளமும், ஓய்வுக் காலப் பலன்களும் அளிக்கலாம்!



பணியில் இருந்தபோது, 2019 மார்ச்சு மாதம் நடந்த ஒரு வழக்கில், “பணி ஓய்வுக்குப் பிறகு நீதிபதிகள் பதவிகள் பெறுவது நீதித்துறை சுதந்திரத்தின் மீதான வடு (Scar)” எனப் பேசியவரும் இதே ரஞ்சன் கோகாய்தான்! இப்போது, அவரே நீதித்துறை தன்னாட்சியின் மீது வடுவை ஏற்படுத்தியிருக்கிறார்.



ரஞ்சன் கோகோய் – அவருக்குக் கீழ் பணியாற்றிய பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற புகார் மனு புதையுண்டு போனதும் இந்நேரத்தில் நினைவுக்கு வருகிறது!


தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



Saturday, March 7, 2020

செல்லாத சட்டத்தில் பொல்லாத வழக்கு! த.தே.பே தலைவர் மணியரசன் மீது பொய் வழக்கு! கி.வெங்கட்ராமன் கண்டனம்!



செல்லாத சட்டத்தில் பொல்லாத வழக்கு!
த.தே.பே தலைவர் மணியரசன் மீது பொய் வழக்கு!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!


தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.



பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திறனாய்வு செய்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் 2019 நவம்பரில் அந்த தீர்ப்பு வந்த ஓரிரு நாட்களில் கவிதை ஒன்றை எழுதி முகநூலில் வெளியிட்டு இருந்தார்.
அதற்கு இப்போது தமிழ்நாடே மதக்கலவரத்தில், மக்கள் மோதலில் தத்தளித்து கொண்டிருப்பது போலவும், தீர்ப்புரைத்த நீதிபதிகள் அவமானத்தால் மனம் பாதிக்கப்பட்டது போலவும், இப்போது தமிழ்நாடு காவல் துறை வழக்கு புனைந்திருக்கிறது.
இதேபோல் இத்தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க. குணசேகரன் ஆகியோர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை கீழவாசல் காவல் நிலையத்தில் இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்திய அரசின் உள்துறைதான் இவ்வழக்கை புனைவதற்கான அழுத்தத்தையும் வழிகாட்டுதலையும் கொடுத்திருக்கிறது என்று கருத அடிப்படை இருக்கிறது.
தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட மூவர் மீதும் ஒரே விதமான குற்றச்சாட்டில் இவ்வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தொழில் நுட்பசட்டத்தில் பிரிவு 66(A), (மின்னனு ஊடகம் மூலம் மக்களைத் தவறாக வழி நடத்துதல்), 72 (இரகசிய தன்மையையும், தனி நபர் உரிமையையும் மீறியது), பிரிவு 72(A) (சட்ட வழிப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தனிநபர் குறித்தத் தகவல்களை வெளியிடுவது) ஆகியவற்றின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 228 (நீதிபதிகளின் மீது வேண்டுமென்றே அவமதிப்பான கருத்துகளை வெளியிட்டு நீதி முறைமையில் குறுக்கிடுதல்), 504 (பொது அமைதியை சீர்குலைக்க பொய்யான தகவல்களைப் பரப்புவது), 505(2) (பல்வேறு மத, இன சமூகங்களுளிடையேப் பகைமையை, வெறுப்பை அல்லது தவறானக் கருத்துகளை உருவாக்குவது), பிரிவு 12 (நீதிமன்ற அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழும் இந்த வழக்குத் தொடுக்கப்படுள்ளது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீதான வழக்கிற்கு காரணமாக சொல்லப்படும் கவிதை இதுதான்.
மண்டபத் தீர்ப்பு
--------------------------
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும் என்றார் இளங்கோவடிகள்
அரசு நடத்துவோர் நடுநிலை தவறினால்
அறம் தண்டிக்கும் என்றார்!
அன்று

அரசனும் நீதிபதியும் ஒருவரே!
சரியாய் விசாரிக்காமல்
தவறாய்த் தீர்ப்புரைத்து
கோவலனைக் கொன்ற குற்றத்திற்காக
தன்னையே மாய்த்துக் கொண்டான்
பாண்டியன்
தமிழர் நீதி இப்படி தழைத்தது!

இன்றோ
மன்னன் வேறு நீதிபதி வேறு!
என்றாலும்
ஒன்றாய் உட்கார்ந்து எழுதியது போல்
தீர்ப்புரைக்கிறார்களே அது எப்படி?

வழிபடும் மண்டபம் - எந்த
வகைறாவுக்கு என்று வழக்கு வந்தது
வல்லடி வழக்கு பேசி – எதிரியின்
வழிபாட்டு மண்டபத்தைத் தகர்த்தவரை
மன்னராகத் தேர்வு செய்தனர் மக்கள்
மன்னர் நீதிபதியைத் தேர்வு செய்தார்

கூடம் கட்டி கோபுரம் எழுப்பி
கும்பிட்டு வந்த வரலாறு
மாற்றுத் தரப்புக்கு மட்டுமே
உண்டு எனினும்
இடித்தவருக்கே மண்டபம் சொந்தம்
என்றார் நீதிபதி
………

என்று தொடர்கிறது அக்கவிதை! இதைத்தான் ஆகப்பெரிய "குற்றம்" என்று வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
இப்போது மீண்டும் வழக்குத் தொடுக்கப்பட்ட சட்டப்பிரிவுகளை பாருங்கள். எந்த சட்டநெறியுமின்றி பழி வாங்கும் ஆரிய வன்மத்தில், அதன் அடிப்பொடி அரசால் தொடுக்கப்பட்ட வழக்கு என்பது தெளிவாகும்.
இதில் சொல்லப்படும் முதன்மைப் பிரிவு தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66(A) என்பதாகும். இப்பிரிவு குறித்து வேறொரு வழக்கு தொடர்பாக நான் ஏற்கெனவே விரிவாகத் திறனாய்வு செய்திருக்கிறேன். ("சட்டத்தின் தாக்குதல்", கி. வெங்கட்ராமன், பன்மைவெளி வெளியீடு).
கணிப்பொறியில் கைவைத்தாலே குற்றம் என்று கூறும் அளவிற்கு மனித நடவடிக்கைகள் அனைத்தையுமே குற்றமாக வரையறுக்கும் பிரிவு 66(A)!
“பிறர் மீது அருவருப்பான, அச்சுறுத்தக் கூடிய, ஆபத்து விளைவிக்கக் கூடிய, இழிவுபடுத்தக் கூடிய, மனதைக் காயப்படுத்தக் கூடிய, தொந்தரவு தரக்கூடிய, பகையை வளர்க்கக் கூடிய, வெறுப்பைப் பரப்பக் கூடிய, இனவாதத் தன்மையுடைய, பல்வேறு மொழி இனங்களுக்கிடையே பகைமையை மூட்டக் கூடிய அல்லது தீமை பயக்கக் கூடிய அல்லது சட்டவிரோதத் தன்மையுடைய அல்லது வேறு வகையில் எதிர்க்கப்பட வேண்டிய மின்னணு தகவல் பரிமாற்றங்கள் தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும்” என்கிறது இந்த பிரிவு 66(A).
இப்பிரிவின் கீழ் இச்சட்டம் உருவாக்கப்பட்ட 2012இல் தொடங்கி பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இது குறித்த வழக்குகளில் ஸ்ரேயா சிங்கால் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் நீதிபதிகள் செல்லமேசுவர், நாரிமன் ஆகியோர் அமர்வு வழங்கிய தீர்ப்பு, இந்த பிரிவு 66(A) முற்றிலும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என வரையறுத்து, இப்பிரவு 66(A) இனிச் செல்லாது எனக்கூறி இப்பிரிவையே ரத்து செய்தது.
உச்ச நீதிமன்றம் இவ்வாறு ஒரு சட்டப்பிரிவை சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்துவிட்டால், பிரிவு சட்டப்புத்தகத்தில் இல்லை என்று பொருள்! அப்பிரிவு செத்துவிட்டது என்று பொருள்.
சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட இந்தப் பிரிவு 66(A) கீழ்தான் இப்போது தோழர் பெ. மணியரசன் மீதும் மற்ற இருவர் மீதும் கொடிய வழக்குத் தொடுக்கப்படுள்ளது.

இந்த பிரிவு 66(A)ஐ இரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின் வருமாறு கூறுகிறது:
”இது போன்றதொரு பிரிவு நாகரிகமடைந்த எந்த நாட்டிலும் இருக்க முடியாது. எது பேசினாலும் குற்றம் என்று வரையறுக்கும் இந்தப் பிரிவு 66(A) சனநாயகத்தையே அழித்துவிடும். சனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பதற்கான அரணாக விளங்குவது, மக்களின் கருத்து கூறும் உரிமையாகும்.
கருத்துரிமையை பிரிவு 66(A) தகர்த்து விடுகிறது. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 19, 21, 14 ஆகிய உறுப்புகளுக்கு இது முற்றிலும் எதிரானது. எனவே இப்பிரிவு 66(A) ஐ சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்கிறோம்”.
சட்டப் புத்தகத்திலிருந்தே தூக்கி எறியப்பட்ட – இல்லாத சட்டப்பிரிவின் கீழ்தான் இவ்வழக்கு புனையப்பட்டுள்ளது. இந்திய உள்துறையின் இச்செயல் புதிதல்ல. இச்சட்டப்பிரிவு 66(A) நீக்கப்பட்ட 2015 மார்ச்சுக்குப் பிறகும் 2018 வரையில் 42 வழக்குகள் இப்பிரிவின் கீழ் பல மாநிலங்களில் வழக்கு புனையப்பட்டது.
இவை குறித்த சில வழக்குகள் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றன. அவற்றுள் ஜாகிர் அலி தியாகி வழக்கு குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச முதல்வராக இருக்கிற அத்தியானந்து என்ற பா.ச.க. தலைவர் மீது 27 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என விமர்சனம் செய்து ஜாகிர் அலி தியாகி என்ற 20 வயது இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்காக அவர் மீது தகவல் தொழில் நுட்பச் சட்டம் 66(A)இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகச் சிறையில் அடைக்கப்பட்ட பின் உயர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்தார். இறுதி மேல் முறையிடு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. இவ்வழக்கைக் கண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்டப் புத்தகத்தில் இருந்தே நீக்கப்பட்ட – செல்லாத சட்டத்தின் கீழ் எவ்வாறு வழக்கு தொடுக்கப்படுகிறது என்று வினா எழுப்பினர்.
"66(A) பிரிவு உயிரோடு இல்லை என்ற நிலையிலும் அப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது என்றால் தொடர்புடைய காவல் துறை உயர்அதிகாரிகள் ஒன்று - சட்ட அறியாமையில் இருக்கிறார்கள் அல்லது ஆணவத்தில் செயல்படுகிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் ஆணவமும் அறியாமையும் இணைந்துதான் இவ்வாறான பொய் வழக்குகளைப் புனைய வைக்கிறது" என்று கூறி கண்டித்தார்கள்.
ஸ்ரேயா சிங்கல் வழக்கில் 66(A) நீக்கப்பட்ட பிறகு ஜாகிர் அலி தியாகி வழக்கில் இச்சட்டப்பிரிவைப் பயன்படுத்துவது ஆணவமும் அறியாமையும் கலந்த நடவடிக்கை என்று கண்டித்த பிறகும் இப்போது மீண்டும் அதே பிரிவில் வழக்கு தொடுக்கப்படுகிறது.
மோடி அரசும் அதன் ஆணையைச் செயல்படுத்தும் எடப்பாடி அரசும் எவ்வளவு தூரம் சட்டத்தை சீர்குலைக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
அதேபோல் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 72 கூறும் ரகசியத்தன்மையை, தனிநபர் உரிமையை அச்சுறுத்துவது என்ற குற்றம் இங்கு எழவே இல்லை. ஏனெனில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு பொது ஆவணமாக உள்ள பாபர் மசூதி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இரகசியமானது அல்ல! இது எந்த நீதிபதியின் தனிநபர் உரிமையும் அல்ல! உச்ச நீதிமன்றம் என்ற நீதி நிறுவனத்தின் தீர்ப்பு அது. மனம் போன போக்கில் பிரிவு 72ஐ சேர்த்திருக்கிறார்கள்.
அதே போல் பிரிவு 72(A) இப்பிரிவு கூறும் தனிநபர் தகவல் எதையும் கவிதையின் வழியாக பெ. மணியரசன் வெளியிடவில்லை.
இவ்வழக்கில் கூறப்படும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 228 பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் காவல் துறை கவனமாக இருக்க வேண்டும் என இந்திய அரசின் சட்ட ஆணையத்தாலேயே எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இப்பிரிவின் கீழும் பெ. மணியரசன் வழக்கில் வரும் இன்னெரு பிரிவான 12 கீழும், நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971ன் கீழும் தொடுக்கப்பட்ட பல வழக்குகள் உச்ச நீதிமன்றம் சென்று இருக்கின்றன.
அவற்றுள் பால் தாக்கரே வழக்கு மற்றும் பதேகர் நடுவண் சிறைக் கண்கானிப்பாளர் எதிர் ராம் மனோகர் லோகியா ஆகிய வழக்குகள் முக்கியமானவை.
நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பது அத்தீர்ப்பை எழுதிய நீதிபதிகளைக் குற்றம் கூறியது ஆகாது. மிக வெளிப்படையாக ஒரு நீதிபதியின் நீதித்துறைச் செயல்பாட்டின்மீது தனிப்பட்ட முறையில் குற்றம் கூறி கருத்துரைத்தால் தான் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட வேண்டும். எவ்வளவு தான் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தாலும் அது உண்மையில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள கிடைக்கும் நல்ல ஆயுதம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர நீதிபதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டாகவோ, நீதிபதியின் நீதித்துறைச் செயல்பாட்டில் செய்யப்படும் குறுக்கீடாகவோ கருதக்கூடாது என்று இத்தீர்ப்புகள் தெளிவுபடுத்தின.
இத்தனைக்கும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஒரு தீரப்பு குறித்துக் கட்டுரை எழுதும் போது, அதில் மும்பை நீதிமன்ற அமர்வில் நீதிபதிகளில் ஒருவர் 32 இலட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்றிருக்கிறார் எனத் தகவல் வந்திருப்பதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். அவ்வாறான சூழலில் கூட இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடாது, நீதிமன்ற செயல்பாட்டில் குறுகீட்டதாகவும் கருதக்கூடாது என்றுதான் உச்ச நீதிமன்றம் தீரப்பளித்தது.
இந்த வழக்கில் கூறப்படும் 505(2) என்ற தண்டனைச்சட்ட பிரிவுகளில் தோழர் பெ. மணியரசனின் கவிதைக்கோ மற்ற இருவரின் கருத்துக்கோ தொடர்பற்றது என்பதை இப்பிரிவை உற்றுநோக்கினால் தெரியும்.
”யாரொருவர் மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது வேறு அடிப்படையில் பல்வேறு மத, மொழி அல்லது பிரதேச குழுகளிடையேப் பகைமையை அல்லது வெறுப்பை அல்லது கசப்பை ஏற்படுத்தும் நோக்கோடு அறிக்கைகள் அல்லது சுற்றிக்கைகள் உருவாக்கி வெளியிட்டால் அல்லது வதந்தியைப் பரப்பினால் அல்லது அச்சுறுத்தும் செய்தியைப் பரப்பினால் அவர் 3 ஆண்டு சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டையும் தண்டனையாகப் பெறத்தக்கவர் ஆவார்" என்று கூறும் 505(2) அதற்குக் கீழ் விதிவிலக்கையும் அடுத்தப் பத்தியிலேயே கூறுகிறது.
“மேற்படிக் குற்றசெயலில் ஈடுபடும் நோக்கமின்றி நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கி வெளியிடப்படும் அறிக்கைகள் அல்லது உரைகள் அல்லது வதந்திகள் இப்பிரிவின் படி வரையறுக்கப்படும் குற்றச் செயல் ஆகாது” என்று அந்த விதிவிலக்குப் பற்றி கூறுகிறது.505(2)ஐ ஒழுங்காக படிக்காததலோ அல்லது தங்கள் ஆணவத்தின் காரணமாகவோ அப்பிரிவை இவ்வழக்கில் சேர்த்திருக்கிறார்கள்.
கருத்துரிமைக்கு ஞாயமான வரம்பு என்ன என்பது குறித்து மேற்சொன்ன ராம் மனோகர் லோகியா வழக்கில் (1960 (2) SCR 821) உச்ச நீதிமன்றம் கூறுவது கவனிக்கத்தக்கது.
“ஒரு செயல் குறித்தோ தீர்ப்பு குறித்தோ கடுமையாகத் திறனாய்வு செய்வதோ விவாதிப்பதோ அல்லது அக்கருத்திற்கு எதிரான தனது கருத்து நிலையைத் தீவிரமாக முன்வைப்பதோ பொது அமைதிக்கு ஊறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி விடக்கூடாது”
“ஒரு கொள்கை நிலையில் இருந்து ஒருவர் வெளியிடும் கருத்து சிலருக்கு அல்லது சமூகத்தின் சில பிரிவினருக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடும் அல்லது ஒரு கருத்து பரிமாற்றத்தால் ஒரு குழுவினர் கடுமையான மனபாதிப்பு அடையக்கூடும், அதை வைத்துக் கூறப்படும் கருத்து பொது அமைதிக்கு எதிரானது என்றோ சமூக குழுக்களிடையேப் பகைமையைத் தூண்டக்கூடியது என்றோ முடிவுக்கு வந்துவிடமுடியாது.

எடுத்துகாட்டாக, ஒடுக்குமுறையில் இருந்து பெண்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒருவர் வெளியிடும் கருத்தோ, சாதி முறையினை நீக்கிவிட வேண்டும் என்று ஒருவர் வெளியிடும் கருத்தோ இக்கருத்தின் மறுதரப்புக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தலாம். அதற்காக அக்கருத்துரிமைக்கு வரம்பு கட்ட முடியாது அக்கருத்துகளைப் பொது அமைதிக்கு இடையூறானது என்று கருதக்கூடாது.”
“பொது அமைதிக்கு அல்லது சமூக ஒழுங்கிற்கு உடனடி ஆபத்து விளைவிக்காத எந்த கருத்தையும் ஞாயமான வரம்பு என்ற பெயரால் தடைவிதித்துவிடக்கூடாது” என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
இத்தீர்ப்பின் வெளிச்சத்தில் தோழர் பெ. மணியரசன் மீதான வழக்கில் இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகள் 505(2), 504 ஆகியவை சற்றும் பொருந்தாதவை என்பது விளங்கும்.
மொத்ததில் தோழர் பெ. மணியரசன் மீதும் மற்ற இருவர் மீதும் தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கு முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது, ஆரிய வன்மத்தின் விளைவாக தொடுக்கப்பட்ட பழிவாங்கும் வழக்கு என்பது தெளிவாகும்.
பாபர் மசூதித் தீரப்பு குறித்து பல்வேறு திறனாய்வுகள் எல்லா ஏடுகளிலும் வந்துவிட்டன; வந்துகொண்டும் இருக்கின்றன. உண்மையில் இந்த கவிதைக்காக தோழர் பெ. மணியரசன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதாக கருதமுடியாது!
ஆரியத்துவத்திற்கு எதிராக அவர் தொடர்ந்து சமராடி வருவதால் காழ்ப்புணர்ச்சியோடு சினம் கொண்ட மோடி அரசின் உள்துறை தான், கை நீட்டிய இடத்தில் பாயும் தமிழ்நாட்டுக் காவல்துறையைப் பயன்படுத்தி இருக்கிறது என்று தெரிகிறது.
சட்டப்புத்தகத்தில் இருந்தே நீக்கப்பட்ட பிரிவின் கீழும் உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டப் பிரிவுகளின் கீழும் தொடர்பே இல்லாதப் பிரிவுகளின் கீழும் கவிதை எழுதி நான்கு மாதங்களுக்குப் பிறகு வழக்குப் புனைந்திருப்பது இந்த ஆரிய வன்மத்தையேக் காட்டுகிறது.

சட்டதின் ஆட்சி குறித்து சற்றேனும் அக்கறை இருந்தால் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் மீது போட்டுள்ள இந்த பொய் வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT