உடனடிச்செய்திகள்

Monday, June 15, 2009

கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!! தோழர் பெ. மணியரசன் கட்டுரை!


கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!! தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

காத்திருந்து தமிழினத்தைக் காவுகொண்டுவிட்டது இந்தியா. நயவஞ்சகத்தை மறைத்திட, நளினப்பேச்சு; கூட்டங் கூட்டமாகக் கொல்வதை மறைத்திட, “பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாமல் போர் நடத்துக” என்னும் போலிக்கூற்று; விடுதலை இயக்கத்தைக் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கும் வெறியை மறைத்திட, ‘அரசியல் தீர்வு’ என்னும் ஆசை மொழி. ஈழத் தமிழினத்தை ஒழித்துக்கட்ட இந்தியா கையாளும் உத்திகள் இவை!

ஆறுகோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் அருகில் நம் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கில் காக்கை, குருவிகளைச் சுட்டுக்கொன்றால் கூட, உலக நாடுகள் தலையிட்டு, உயிர்வதை கூடாது என்றும், உயிரிச் சமன்பாட்டில் ஊனம் ஏற்படும் என்றும் கூறித் தடுத்திருக்கும். ஆனால் தமிழ் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஒரு நாடில்லை. பத்துக்கோடித் தமிழர்கள் நிலக்கோளமெங்கும் பரவிக்கிடந்தாலும், நமக்கென்று ஒரு நாடில்லை, ஓர் அரசு இல்லை. அரசியல் அநாதைகளாய்க் கிடந்து அழிகிறோம்.

சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள். உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல் கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர்.

பன்னாட்டுச் சட்டங்களும், ஐ.நா. மன்றமும் தடை செய்துள்ள பாஸ்பரஸ் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி இலட்சக்கணக்கான தமிழர்களைக் கடந்த சில மாதங்களில் மட்டும் கொன்றது சிங்களப்படை. உறுப்புகளை இழந்தும் தசைகள் அறுந்தும் உயிருக்குப் போராடியோர்க்கு மருத்துவ வசதி கிடையாது. அவர்களுக்குச் சிகிச்சையளித்த தமிழின மருத்துவர்களான சண்முகராசா, சத்தியமூர்த்தி, வரதராசா ஆகியோரைச் சிறையிலடைத்தார் இராசபட்சே. அம்மக்களுக்கு ஆதரவு காட்டியதற்காக மாவட்ட ஆட்சியர் பார்த்திபனைச் சிறையிலடைத்தார்.

விடுதலைப்போரில் உலகம் வியக்க வீரமும், போர் உத்திகளும் காட்டிய தளபதிகள் சொர்ணம், தீபன், ரமேசு, பெண் தளபதிகள் விதிஷா, துர்க்கா எனப் பலர் வீரச்சாவெய்தினர். மேலை நாடுகள் சிலவற்றின் முயற்சியில் கடைசி நேரத்தில் போர் நிறுத்தப்பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்களப்படை அழைத்ததின் போரில், வௌ;ளைக்கொடியுடன் பேச்சு நடத்தப்போன அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன், அமைதிப்பேச்சுச் செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்டோரை சிங்களப்படை சுட்டுக்கொன்றது.

வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (!6, 17.05.209), உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர். கடைசி நாட்களில் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டதாக டைம்ஸ் ஏடு குறிப்பிடுகிறது.

போரில் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆன குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாய் இருந்து பிரபாகரன் காப்பாற்றினார். அந்த ஆயிரத்து ஐநூறு குழந்தைகள் என்ன ஆனார்கள்? எப்படி மரித்தார்கள் ? யார் அறிவார்? சாட்சியில்லாத, சாவுக் களமாயிற்றே அது! ஐ.நா.மனித உரிமைகள் அமைப்போ அல்லது செஞ்சிலுவைச் சங்கமோ எதையுமே அங்கு அனுமதிக்கவில்லை. உலக நாடுகளின் ஊடகத்துறையினரை போர்க்களப்பகுதியில் அனுமதிக்கவில்லை.

ஆரிய ரத்னாவான ஸ்ரீலங்கா ரத்னா என். ராமின் ‘இந்து’ ஏட்டின் செய்தியாளர் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டார். தமிழ் இன எதிர்ப்பில் சிங்கள வெறியர்களையும் விஞ்சிய ஏடான ‘இந்து’ உண்மைச் செய்திகளைத் தராது. சிங்களப்படை உருவாக்கிய செய்தியை அந்நோக்கில் மேலும் மெருகேற்றித் தந்து கொண்டிருக்கிறது.

மூன்றரை லட்சம் தமிழர்களை “இடைத்தங்கல் கூடாரம்”, “நல் வாழ்வுச் சிற்றூர்’ என்ற பெயர்களில் உள்ள இட்லர் கால வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிடாதபடி, மின்கம்பி வேலி எடுத்துக் காவல் புரிகின்றனர் சிங்களப் படையாட்கள். இந்த வதை முகாம்களில் படுகாயமுற்றுத் துடிக்கும் தமிழர்களின் சிறுநீரகம், கண்கள் போன்ற பல உறுப்புகளை அறுத்து எடுத்து சிங்களர்களுக்குப் பயன்படுத்த கொழும்புக்கு அனுப்புகிறார்களாம். அதுவும் மயக்கமருந்து கூட கொடுக்காமல் அறுக்கிறார்களாம். இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லையா?

எவ்வளவு காலத்திற்கு, இந்த மந்தை அடைப்புகள் நீடிக்கும்? இராசபட்சே சொல்கிறார் “குறைந்தது மூன்றாண்டுகளுக்காவது இவர்கள் இங்கே தங்கியிருக்க வேண்டும் ; அவர்களின் சொந்த ஊர்களில் அவர்களின் வீடுகள் போரில் நாசமடைந்துவிட்டன. புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். அந்த ஊர்களில் புலிப்படை கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளது. அவற்றை அகற்ற வேண்டும். இதையெல்லாம் செய்ய மூன்றாண்டுகள் தேவை” என்கிறார். ஆனால் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் சொந்த வீடுகளில் சிங்களரைக் குடியேற்றிக் கொண்டுள்ளார் இராசபட்சே. தமிழர்களின் ஊர்களைச் சிங்கள மயமாக்கிக் கொண்டுள்ளார். தமிழர்களுக்கெனத் தாயகப்பகுதியாக, வரலாற்றுக் காலம் தொட்டு இருக்கும் மண்ணை சிங்களர் குடியேற்றங்களாக மாற்றுகிறார். தமிழர் தாயகத்தை அழிப்பதே அவர் நோக்கம்.

எதிர்காலத்தில் எஞ்சியுள்ள, தமிழர்களிடையே, உதவித்தொகைகள் மூலம், போதைப்பழக்கத்தையும், பாலியல் சிதைவுகளையும் ஏற்படுத்தி, ஒரு தேசிய இன உணர்வற்று, சிங்களரை அண்டிப்பிழைக்கும் மக்களாகத் தமிழர்களை ஆக்கவேண்டும் என்பது இலங்கை அரசின் திட்டம்.

அமெரிக்காவில் புதிதாகக் குடியேறிய ஆங்கிலேயர்களும் மற்ற ஐரோப்பிய இனத்தவரும், வரலாற்றுக் காலம் தொட்டு அங்கு வாழ்ந்துவந்த மண்ணின் மைந்தர்களாகிய செவ்விந்தியர்களைப் போரிட்டுத் தோற்கடித்தனர். அதன்பின் உதவித்தொகைகள் மூலம் அவர்களிடம் இடைவிடாத போதைப் பழக்கத்தையும், வரம்பற்ற பாலியல் நாட்டத்தையும் உருவாக்கினர். இன்று செவ்விந்தியர்கள், வந்தேறிகளான வௌ;ளையரை எதிர்க்கவில்லை. அவர்களை அண்டிப் பிழைக்கின்றனர். அந்த அடிமை நிலைக்குத் தமிழர்களைக் கீழே தள்ளுவது தான் சிங்கள அரசின் திட்டம்.

இவ்வளவு பெரிய இனப் பேரழிவு இந்திக்காரர்களுக்கோ, வங்காளிகளுக்கோ, மலையாளி களுக்கோ அல்லது வேறு இனத்தவர்க்கோ எங்காவது அடுத்த நாட்டில் நடந்திருந்தால் இந்தியா இப்போது இருப்பதைப் போல் அமைதி காத்திருக்குமா? இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள தலித் தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களும் அமைதி காத்திருப்பார்களா? திராவிட மாநிலங்கள் என்று சொல்லப்படுகின்ற ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்கள் அமைதி காத்திருக்குமா?

கடந்த ஓராண்டுக்குள் இலட்சக் கணக்கில் ஈழத்தமிழர்கள் சிங்கள அரசால் கொல்லப்படுவதை ஒரே ஒரு தடவையாவது மன்மோகன் கண்டித்ததுண்டா? சோனியாகாந்தி கண்டித்ததுண்டா? வடநாட்டுத்தலைவர்கள் கண்டித்த துண்டா? இல்லை. ஏன்? தமிழர்கள் அவர்கள் இனமில்லை. அது மட்டுமா? ஆயுதங்களால் தமிழர்களைக் கொன்றது இலங்கை. அதற்கு ஆயுதங்களை வழங்கியது இந்தியா. ஆயுதங்களை மட்டுமா வழங்கியது? அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று சிங்களப் படையினர்க்குப் பயிற்சி கொடுத்தது இந்தியா. விடுதலைப் புலிகளுக்கு எதிராக உளவு வேலை பார்த்தது. ரேடார்கள் கொடுத்தது. செயற்கைக் கோள்கள் வழியாக, விடுதலைப் புலிகளின், பாசறைகள், நடமாட்டம் அனைத்தையும் அறிந்து இலங்கைப் படைக்கு அன்றாடம் துப்புச் சொன்னது.

உயிர்காக்கக் கடல் வழியே தப்பி ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்துவிடாமல் இலங்கை எல்லை நெடுகத் தனது கப்பல் படையை நிறுத்தி அவர்களைத் தடுத்தது இந்தியா. இதனால், சுற்றி வளைக்கப்பட்டு இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் கடந்த ஓராண்டாக, ஈழத்தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்திற்கு வர முடியவில்லை. ஈழத்தமிழர்கள், கேரளக் கடலில் கரையேற முயல்வார்கள் என்று கருதி அங்கும் காவலை வலுப்படுத்தியது இந்தியா.

இவற்றை அறிந்த ஈழத்தமிழர் 22 பேர், ஆந்திரக்கடலில் கரையேறப் பயணம் செய்தனர். ஆனால் திசை தடுமாறி, பல நாட்கள் கடலில் சுற்றித் திரிந்து இறுதியில் காக்கி நாடாவில் கரை சேர்ந்தனர். அப்போது அப்படகில் 12 பேர் பிணமாகக் கிடந்தனர். உணவு தீர்ந்து, தண்ணீரும் தீர்ந்து, தாகம் தாங்காமல், கடல் நீரைக்குடித்து, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு - இப்படிப் பட்டினியாலும் வயிற்றுப் போக்காலும் 12 பேர் செத்துப்போயினர். இவ்வளவு கொடுமைகளையும் இந்தியா தமிழர்களுக்கு இழைப்பதேன்?

இந்தியா தமிழர்களுக்கான தாயகம் அல்ல. தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு இந்தியாவில் ஒரு காலனியாக இருக்கிறது. “இராசீவ் காந்தி தமிழ்நாட்டில் கொல்லப்பட்டார் ; அது விடுதலைப் புலிகளால் நடந்தது ; அதனால் இப்படி இந்தியா பகையாகிப் போனது “ என்று நடுநிலையாளர் சிலர் வாதிடக்கூடும். இந்தியாவின் இனச்சார்பு மற்றும் இனப்பகை அரசியலை அறியாதவர்களும், தமிழ்நாட்டுக்கு இந்தியா இழைத்து வரும் இரண்டகங்களை அறியாதாரும் இராசீவ் கொலையைக் காரணமாகக் கருதிக்கொள்வர்.

தமிழர்கள் மீது வரலாற்றுக் காலந்தொட்டு ஆரியர் கொண்டுள்ள பகைமை உணர்ச்சியை பழிவாங்கும் திட்டத்தை மறைக்க விரும்புவோரும் இராசீவ்காந்தி கொலையை நயவஞ்சகமாகக் காரணம் காட்டுகின்றனர். இராசீவ்காந்தி இந்திய அமைதிப்படை என்ற பெயரில் ஓர் ஆக்கிரமிப்புப் படையை அனுப்பி ஆறாயிரம் தமிழர்களை - ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொன்றொழித்தார். இந்தியப்படையினர் ஈழத்தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டு சீரழித்தனர். இவற்றின் எதிர்வினைதான் இராசீவ் கொலை.

நல்ல பாம்பு யாரையும் தேடிப் போய் கடிக்காது; “விதித்தால் கடிக்கும் அல்லது மிதித்தால் கடிக்கும்” என்பர். இங்கு மிதித்ததால் கடிபட்டார் இராசீவ்! இதேபோல், சீக்கிய மக்களை மிதித்ததால், இந்திராகாந்தி கொல்லப்பட்டார். அந்த சீக்கிய இனத்தோடு கூடிக் குலாவுகிறது இந்தியா. அவர்களுக்குப் பிரதமர் பதவியே கொடுக்கிறது! அது எப்படி?

இந்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும் தமிழ் ஈழம் அமைவதை எதிர்ப்பார்கள். இழந்த பகுதிகளை மீட்டு ஆனையிறவையும் மீட்டனர் புலிகள் 2001-இல்! அடுத்து யாழ்ப் பாணத்தை மீட்கப் படையெடுக்கப்போகிறார்கள் என்ற நிலை ஏற்பட்டது. யாழ்ப் பாணத்தில் அப்போது 16 ஆயிரம் சிங்களப் படையினர் இருந்தனர். அந்தப் 16 ஆயிரம்பேரையும் பிணமாகவோ உயிருடனோ புலிகள் பிடித்துவிடுவார்கள் என்ற நிலை. அன்று ஆட்சியிலிருந்த பா.ஜ.க. புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்கக் கூடாது என்று நிபந்தனை போட்டது. சிங்கள அரசுக்குப் போர்க்கப்பல் கொடுத்தது. யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்காமல் புலிகளைத் தடுக்கவேண்டும் என்று சி.பி.எம். கட்சி அறிக்கை வெளியிட்டது. அக்கட்சித்தலைவர்களில் ஒருவரான உமாநாத் இலங்கைக்கு இந்தியா இலவசமாக ஆயுதம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். இதுதான் இந்தியா!

தில்லி ஏகாதிபத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும், இடதுசாரிகள் தலைமை தாங்கினாலும், ஈழம் பிறப்பதை ஏற்க மாட்டார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளது. அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைமையின் நிலை வேறு; அனைத்திந்தியத் தலைமையின் நிலை வேறு.

இராசீவ்காந்தியின் மனைவி என்பதால் சோனியா, ஈழத்தமிழர் அழிப்பில் மிகை முனைப்புக் காட்டுகிறார். மற்றபடி, காங்கிரசில் வேறு யாருமோ அல்லது பா.ஜ.க.வோ அல்லது இடதுசாரிகளோ இந்திய ஆட்சிக்கு, யார் தலைமை தாங்கினாலும், ஈழம் பிறப்பதைத் தடுத்திட அவர்கள் படையினரைப் பயன்படுத்துவார்கள். இந்தியா, தமிழ் இனத்தோடு, தமிழ்நாட்டிலும் சமரசம் ஆகவில்லை. ஈழத்திலும் சமரசம் காணவில்லை.

காவிரி நீர் உரிமையைக் கன்னடர் பறிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும் இந்திய அரசு கன்னடர் பக்கம் சாய்காலாக இருந்து அத்தீர்ப்புகளை செயல்படுத்த மறுத்தது. அதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் ஞாயத்தை ஏற்றுத் தீர்ப்புக் கொடுத்தாலும், இந்திய அரசு மலையாளிகளுக்குச் சாய்காலாக இருந்து அத்தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்தது. இவற்றைப்பார்த்த தெலுங்கர், ஆந்திராவில் பாலாற்றில் அணைகள் கட்டிக் கசிவு நீரும் தமிழகத்திற்கு வராமல் தடுக்க முற்பட்டுள்ளனர்.

ஒரு சுண்டைக்காய் நாடான சிங்களம், 450-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்ல ஊக்க மூட்டியது இந்தியாதான். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடல் இருக்கிறது. இரண்டு நாடுகளும் நான்குமுறை போரிட்டுக் கொண்டன. அடுத்த போர் எப்போது என்ற ஆயத்தத்தில் இருக்கின்றன. ஆனால் எல்லைதாண்டி வந்த மீனவர்களை இருநாடுகளும் சிறைப்பிடித்தார்களே அன்றி சுட்டுக்கொல்லவில்லை. இந்தியாவுக்கும், தமிழர் களுக்குமான அடிப்படை முரண்பாடு இனப்பகைமைதான். இது மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது.

அக்காலத்தில் இந்தியா இல்லை. இக்கால இந்திய ஆளும் வர்க்கத்தின் முதன்மைப்பிரிவினரின் முன்னோர்கள் இருந்தார்கள். அவர்கள் இனத்தின் பெயர் ஆரியர். இந்த இனப்பகைமைக்கு அடுத்த இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை முக்கியத்துவம் கொண்டவைதான், இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கையும் (புவிசார் அரசியலும்) பொருளியல் சுரண்டலும்.

கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இந்தியாவை நோக்கி நட்புக் கை நீட்டினார். மதியுரைஞர் ஆண்டன் பாலசிங்கம் இந்திய அரசு அதிகாரிகளுடன் பேசினார்; ஊடகங்கள் வழியாக விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை வெளிப் படுத்தினார். (இந்திய அரசு குறித்த புலிகளின் நிலைபாட்டை அப்போதிருந்தே த.தே.பொ.க. ஆதரிக்கவில்லை) தமிழீழ அரசு அமைய இந்தியா உதவி செய்தால், இந்தியப் பெருங்கடலில் அது இந்தியாவின் காவல் அரணாக விளங்கும் என்றார் பிரபாகரன்.சிங்களப்படைக்கு இந்தியா ஆயுதம், நிதி பன்னாட்டு அரசியல் ஆதரவு ஆகிய உதவிகளை அள்ளி அள்ளி வழங்கிய போதும் கூட கடைசிவரை, பிரபாகரன் இந்தியாவைக் கண்டிக்கவில்லை. மாறாக நட்பிற்குத்தான் நாடினார்.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வழிவகுத்துள்ளது. இலங்கையில் உள்ள அம்பன் தோட்டா என்ற துறைமுகத்தை சீனாவுக்குக் கொடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கப் பரவலை எதிர்கொள்ள தமிழீழத்தை ஏற்பதுதானே இந்தியாவின் புவிசார் அரசியலுக்கு உகந்த உத்தியாகும். ஏன் அத்திசையில் இந்தியா திரும்பவில்லை?

தமிழர்களை நம்பத் தயாராக இல்லை இந்தியா. தமிழீழத் தமிழர்களையும் நம்ப முடியாது. தமிழ்நாட்டுத் தமிழர்களையும் நம்ப முடியாது என்பது அதன் கணக்கு. ஆரியர்கள் வரலாற்று பகைமையைக் கணக்கில் எடுக்கத் தவறமாட்டார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி ஏமாறும் குணமுடையோர் தமிழர்கள். வங்காள தேசத்தைப் பிரித்துத் தந்தது போல், ஈழத்தைப் பிரித்தால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் உள்ள வங்காளிகளை இந்தியா நம்புகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களை நம்பவில்லை. தமிழைத்தவிர, இந்தியாவில் உள்ள பெரிய மொழிகள் அனைத்தும் வடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. தமிழிலிருந்து பிரிந்த “திராவிட” மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை வடமொழிக் கலப்பால் உருவானவை. வடமொழிச்சார்பின்றித் தனித்து நிற்கக் கூடிய ஒரே மொழி தமிழ் மட்டுமே!. தமிழ் இனம் மட்டுமே இன்னும் மரபினக் கூறுகளைக் கூடுதலாகக் கொண்டு பார்ப்பனியத்தையும் வடநாட்டு அரசியல், பண்பியல் ஆதிக்கத்தையும் கூடுதலாக எதிர்த்து வருகிறது. நமக்கு இணையாக, இந்தியத்தையும், ஆரியத்தையும் எதிர்ப்பவர்கள், வடகிழக்கு மாநிலங்களில் மங்கோலிய மரபினத்திலிருந்து பிறந்த தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அம்மாநிலங்களில் வங்காளிகள் குடியேற்றத்தை மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது இந்தியா. வங்காளிகளை வெளியேற்றக் கோரி அசாமில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அதில் உள்ள ஞாயத்தைப் பார்க்காமல் படையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது இந்தியா. அப்போது மக்கள் எழுச்சியை அடக்கமுடியாமல, அசாம் மாணவர் அமைப்புடன் ஓர் உடன்பாடு கண்டார் இராசீவ்காந்தி. அந்த உடன்பாட்டை செயல்படுத்தாமல் இந்தியா முடக்கிவிட்டது. அப்போதைய மாணவர்களில் ஒரு பிரிவினர் தேர்தல் கட்சி அமைத்துச் சீரழிந்தனர். இன்னொரு பிரிவினர் (உல்பா) அசாம் விடுதலைப் போராட்டம் நடத்துகின்றனர்.

காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம் அடிப்படையில் தேசிய இனம் சார்ந்ததே. அப்போராட்டத்திற்கு வெறும் மதச்சாயம் பூசுவது இந்தியாவின் பார்ப்பனிய உத்தியாகும். அயல் இனப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தி லிருந்து விடுதலை பெறப்போராடும் சிறுபான்மை இனம், மக்களைத் திரட்ட ஓரளவு மதத்தையும் பயன்படுத்தத்தான் செய்யும். அதைக் குற்றமாகக் கருத வேண்டியதில்லை.

தமிழ்நாட்டில் முதல் விடுதலைக் குரல் 1938- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எழுந்தது. அப்போது, “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தந்தை பெரியார் குரல் கொடுத்தார். மறைமலை அடிகளார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தமிழறிஞர்கள் அப்போது பெரியாருடன் கூட்டாக இருந்து அம்முழக்கத்தைத் திரும்பக் கூறினர்.

பெரியார் இறுதிவரை தனித்தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். 1949-இல் உருவான தி.மு.க தனித் திராவிட நாடு இலட்சியத்தை முன்வைத்தது. திராவிடநாடு கிடைக்காவிட்டாலும் தமிழ்நாடு கிடைக்கும் என்ற உறுதியில் தமிழ் மக்கள், தி.மு.க.வின் தனி நாட்டுக்கோரிக்கையை ஆதரித்தனர். தனி நாட்டுக்கோரிக்கைக்குப் பெருந்திரளாக, தேர்தல் வழி ஒப்புதல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்கும். தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிறுத்தி தி.மு.க, இரண்டு பொதுத் தேர்தல்களைச் சந்தித்தது. 1957-ல் 15 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. 1962-இல் 50 சட்டமன்றத்தொகுதிகளைக் கைப்பற்றியது.

ஆனால், அக்கழகம் பிரிவினைத் தடைச்சட்டம் பின்னர் வரப்போகிறது என்று தெரிந்ததும் 1963-இல் தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துதான் இந்தியா, தமிழர்களைச் சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களோ, தங்களின் சொந்த இனத்தின் வரலாற்றையும், அதன் தனித்தன்மையையும், அதன் பெருமிதத்தையும் உணராமலும், வரலாற்று வழிப்பட்ட இனப்பகையின் வஞ்சகத்தை முழு அளவில் அறியாமலும், தங்களை ‘இந்தியன்’ என்று சொல்லி ஏமாறுகின்றனர்.

இந்தியா, தமிழினத்தைக் காக்கும் என்று நம்பித் தோற்கின்றனர். தனது அடிமை நிலையைத் தமிழினம் அடையாளம் கண்டுகொள்ளாமல் மயக்குவதற்காகத் தமிழ்நாட்டில் கங்காணிகளை அரவணைத்தது இந்தியா. தனிநாடு கேட்ட தி,மு.க தில்லியின் தலைமைக் கங்காணியாக மாறியது. தி.மு.க. விலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க., தாயை விஞ்சிய குட்டியாக இந்திய ஆதிக்கத்தைத் தீவிரமாக ஆதரிக்கிறது. பார்ப்பனியத்தில் காலூன்றி நிற்கும் பார்ப்பன அம்மையாரின் தலைமையையும் அக்கழகம் ஆராதிக்கிறது. தமிழ், தமிழன், தலித்தியம் என்று பேசிக் கொண்டிருக்கும் மற்ற சிறு சிறு தேர்தல் கட்சிகளும் சாரத்தில் கங்காணி வேலை பார்ப்பவையே.

கங்காணி வேலை பார்க்காத கட்சிக்கு தேர்தல் அரசியலில் வாய்ப்பு ஏதும் இல்லை. இந்திய ஒருமைப்பாட்டையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் ஏற்றால்தான் தேர்தலில் நிற்க முடியும் என்பது முதற்காரணம். பெரிய கங்காணிக்கட்சிகளில் ஒன்றுடனோ அல்லது இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றுடனோ கூட்டணி சேர்ந்தால் தான் சில இடங்களாவது இச்சிறு கட்சிகளுக்குக் கிடைக்கும் என்பது இரண்டாவது காரணம்.

இவ்வளவு பெரிய இனப்பேரழிவு ஈழத்தில் ஒருநாளில் நடத்துவிடவில்லை. ஓராண்டாகப் போர் நடந்தாலும் கடந்த செப்டம்பர் மாதம் தீவிரம் அடைந்தது. அக்டோபர் இரண்டில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சியில், போர் நிறுத்தம் கோரித் தமிழ் நாடெங்கும் அனைத்துக்கட்சி உண்ணாப்போராட்டம் நடந்தது. அதன்பிறகு கூட்டாகவும், தனியாகவும் பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள் போராட்டங்களைத் தொடர்ந்தன. ஆனால் தேர்தல் கட்சிகள் தலைமைதாங்கிய போராட்டம் எதுவும் இந்திய அரசை எதிர்த்து நடைபெறவில்லை.

இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு இந்திய அரசைக் கோரினார்களே அன்றி, இந்திய அரசு அலுவலகங்களை, நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் முடக்கும் போராட்டம் எதையும் நடத்தவில்லை. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் தி.க., தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகிய மூன்றும் அமைத்த கூட்டமைப்பான ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ தஞ்சையில் இந்திய விமானப்படைத்தள முற்றுகை, இந்திய அரசின் வரிவசூல் அலுவலங்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் ஆகியவற்றை நடத்தியது. த.தே.பொ.க.வும், த.தே.வி.இ.யும் கூட்டாக இந்திய, சிங்கள அரசுகளின் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தின.

இந்தியாதான் ஆயுதம், நிதி, அரசியல் உதவிகள் செய்து ஈழத்தமிழர் அழிப்புப் போரை இயக்குகிறது என்கிற செய்தி தேர்தல் கட்சிகளின் தலைவர்கள் அனைவர்க்கும் தெரியும். திருட்டுப்பொருளை மீட்டுத்தருமாறு, திருடியவனிடமே புகார் கொடுத்தது போல், இந்திய அரசிடமே இத்தலைவர்கள் முறையிட்டார்கள். இக்கட்சிகள் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. தலைமையில் என்றைக்கும் கூட்டணி சேர்பவை. அக்கட்சிகளின் கீழ், பதவி பெறுபவை. எனவே இக்கட்சிகள் என்ன எக்காளமிட்டாலும், எதிர்த்துப்பேசினாலும் இவற்றின் கட்டுத்தறி தில்லியில் உள்ளது. அதில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் நீளத்திற்கு இக்கட்சிகளின் தலைவர்கள் கண்டிப்பார்கள், எச்சரிப்பார்கள். இவற்றையெல்லாம் ஏளனப் புன்னகையோடு தில்லி எசமானர்கள் ரசிப்பார்கள். இந்திய அரசு நிறுவனங்களை முடக்கும் அளவிற்கு இக்கட்சிகள் போகமாட்டா.

தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோகும் போதும் மேற்படி சிறு சிறு தேர்தல் கட்சிகள், இந்திய அரசு நிறுவனங்களை முடக்கும் அளவிற்குப் போராட்டங்களை நடத்தமாட்டா. ஈழத்தில் இன அழிப்புப்போர் நடைபெறும்போது தமிழ்நாட்டில் கொந்தளிப்பு வராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை, இந்திய அரசு ஏற்றது. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளை நம்பித்தான் காங்கிரஸ் அரசு இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதனடிப்படையில் இலங்கை அரசுக்கு உறுதியும் கொடுத்தது.

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் செயலலிதா, இயல்பிலேயே தமிழின எதிர்ப்பாளர். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகக் கருதுபவர். தனித்தமிழ் ஈழத்தை எதிர்ப்பவர். இந்திய அரசு இராணுவத்தை அனுப்பிப் பிரபாகரனைப் பிடித்துவந்து இந்தியாவில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் (16.04.2002) தீர்மானம் நிறைவேற்றியவர். "போர் நடக்கும் போது பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று இரண்டு மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டார். ஷஈழத்தமிழர’ என்று சொல்வது தவறு, ஷஇலங்கைத் தமிழர்’ என்றே கூறவேண்டும் எனச் செய்தியாளர்களைத் திருத்தினார். அவர் தேர்தல் ஆதாயத்திற்காக திடீரென்று ஒரு நாள் (09.04.2009) ஈழத்தமிழர்களுக்காக உண்ணாப்போராட்டம் நடத்தினார். 15- வது மக்களவைத்தேர்தல் நெருங்க, நெருங்க, ஈழத்தமிழர் சிக்கல் தேர்தல் சிக்கல் ஆகிவிட்டதை அறிந்து கொண்ட செயலலிதா “இராணுவத்தை அனுப்பித் தனி ஈழம் அமைத்துத் தருவேன்” என்று தேர்தல் கூட்டங்களில உறுதியாகப் பேசினார். அப்பேச்சு நம்பகத்தன்மை குறைந்த நபரிடமிருந்து வந்ததால் அதை உண்மை என்று கருத முடியவில்லை. மேற்கண்ட கடைசி நேரம் தவிர மற்ற காலங்களில் ஈழத்தமிழர் அழிப்புப் போரை ஆதரித்து வந்தவர்தாம் செயலலிதா.

இப்போது தேர்தல் முடிவுகள் வந்து, ஈழத்திலும் பேரழிவு நிகழ்ந்து, விடுதலைப்புலிகளுக்கு தற்காலிகத் தோல்வி ஏற்பட்டுள்ள நிலையில், தனி ஈழம் குறித்தும், புலிகள் குறித்தும் எதுவும் கருத்து தெரிவிக்காமல், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயர்துடைப்புப் பணிகள் ஐ.நா.மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்பதோடு நிறுத்திக்கொண்டுள்ளார் செயலலிதா. இனி எப்படி இச்சிக்கலை அணுகுகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டக் கூடிய வல்லவர். சாரத்தில் அவரின் நிலைபாடுகள் இராசபட்சே - சோனியா கும்பல் நடத்தும் தமிழ் இன அழிப்பைத் தாங்கிக்கொள்ளும் மனநிலையைத் தமிழர்களிடம் உண்டாக்கும் நோக்கங்கொண்டவை. தமிழினத்தை ஆயுதத்தால் அழித்தார் இராசபட்சே; அதற்கு ஆயுதம் கொடுத்தார் சோனியர் அந்த அழிவு கண்டு தமிழ்நாடு கொந்தளிக்காமல் இருக்க உளவியல் போர் நடத்தினார் கருணாநிதி.

ஐ.நா. மனித உரிமை அமைப்பும், ஐரோப்பிய நாடுகளும், போரில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள், அது கூடாது என்று கண்டித்த போது இராசபட்சே சொன்னார்: "பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் போர் நடக்கிறது. மக்களுக்கு எதிராக அல்ல”. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றார் இராசபட்சே.

இதை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றிவளைத்து மென்மையான சொற்களில் சொன்னார் கருணாநிதி: "ஈழ விடுதலைக்கு என்று இயக்கம் ஆரம்பித்து, சகோதரச் சண்டையில் ஈடுபட்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு இன்று கேள்விக்குறியாக நிற்க்கிறது. ஆனால் பிரபாகரன் என் நண்பர்” விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்தாம் என்ற மனநிலையைத் தமிழர்களிடையே உருவாக்கும் உளவியல் பணியைக் கருணாநிதி மேற்கொண்டார். பிறகு, “இன்னும் சில நாட்களில் பிரபாகரனைப் பிணமாகவோ அல்லது உயிருடனோ பிடித்து விடுவோம்’ என்று இராசபட்சே கொக்கரித்தார். அவ்வாறு பிரபாகரன் பிடிபட்டால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும் என்று கருதினார்கள். எனவே, பிணமாகவோ, உயிருடனோ பிடிபவடுவது உறுதி என்பதைத் தமிழ் நாட்டு மக்களிடம் முன்கூட்டியே தெரிவித்து, திடீர் அதிர்ச்சி வராமல் தடுத்து, அந்நிகழ்வை இயல்பான ஒன்றாக ஆக்கிட கருணாநிதி முயன்றார். அதற்காக அவர் சொன்னார்,

“பிரபாகரனைக் கைது செய்தால் அலெக்சாந்தர், போரஸ் மன்னனை நடத்தியதைப்போல் கவுரமாக நடத்த வேண்டும்.” பிரபாகரன் கைது உறுதி என்பதைத் தெரிவிக்கும் அதே வேளை அவர் மீது அக்கறைப்படுவதுபோல் காட்டிக்கொள்ளும் உளவியல் உத்தி இது. பிறகு ஆங்கிலத் தொலைக் காட்சி (என்.டி.டி.வி) செவ்வியில் “பிரபாகரன் கொல்லப்பட்டால் என்ன கருதுவீர்கள்” என்று கேட்டதற்கு “மிகவும் வருத்தப்படுவேன”; என்றார். பிரபாகரன் கொல்லப்படுவது நடக்கக்கூடிய ஒன்றுதான் என்று முன்கூட்டியே கூறித் தமிழர்களின் மனநிலையை இயல்புப்படுத்தும் - அதாவது உணர்வுகளைச் சமன்படுத்தும் உளவியல் உத்திதான் இந்த வினாவும்,

அதற்கான விடையும். “பிரபாகரனை ஏன் கைது செய்ய வேண்டும்? கைது செய்யக்கூடாது. அவரை ஏன் கொல்ல வேண்டும்? கொல்லக்கூடாது, போரை நிறுத்தி அவருடன் அமைதிப்பேச்சு நடத்த வேண்டும் என்பது தி.மு.க. நிலைபாடு; அதுவே தமிழக அரசின் நிலைபாடும;’, என்றல்லவா கருணாநிதி விடையளித்திருக்க வேண்டும.; போர் நிறுத்தம் வேண்டும் என்று தானே கருணாநிதி மனிதச் சங்கிலி நடத்தினார். சட்டப்பேரவையில் “இறுதித்” தீர்மானம் போட்டார் ; பேரணி நடத்தினார். அந்த நிலைபாட்டுக்கு நேர் முரணாக, “பிரபாகரன் கைது செய்யப்பட்டால், பிரபாகரன் கொல்லப்பட்டால”; என்ற நிலைபாடுகளை அவர் ஏன் எடுக்க வேண்டும்? திடீர் குட்டிக்கரணம் அடித்து செயலலிதா தனி ஈழத்தை ஆதரித்துப் பேசியபின், அதை முறியடிக்கக் காலை உணவுக்கும் பகல் உணவுக்கும் இடையில் “சாகும்வரை பட்டினிப்போராட்டம்” நடத்தி ‘உலகச் சாதனை’ படைத்தார் கருணாநிதி. போர்நிறுத்தம் செய்ய உறுதி அளித்து விட்டது இலங்கை அரசு என்று கூறி உண்ணாமையை நண்பகல் முடித்துக்கொண்டார். அன்று மட்டும் 272 பொதுமக்களை சிங்களப்படை கொன்றது. மறுநாள் 172 பேரைக் கொன்றது. அடுத்த நாள் ஆயிரம் பேரைக் கொன்றது. இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார்.

இவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டது வெறும் தூவானம் போன்றது தான் அவருக்கு! பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக 18.05.2009 அன்று இலங்கைப் படை அறிவித்தது. 19.05.2009 அன்று பிரபாகரன் உடல் கிடைத்ததாக, ஒட்டு வேலை செய்து ஓர் உடலைக்காட்டியது சிங்களப்படை. 20.05.2009 நாளேடுகளில் அப்படம் வெளிவந்த தினத்தந்தியில் கருணாநிதியின் வசன கவிதை ஒன்று வந்தது. புறநானூற்றில் உள்ள புலவர் பக்குடுக்கை நன்கணியார் பாடல் அது. அதற்கு விளக்கம் எழுதியிருந்தார் கருணாநிதி. அதன் பொருள் இதுதான். “ஒரு வீட்டில் திருமணப் பறையொலி கேட்கிறது; இன்னொரு வீட்டில் சாவுப்பறையொலி கேட்கிறது. ஒரு வீட்டில் இளங்காதலர்கள் தழுவிக் கொள்கின்றனர். இன்னொரு வீட்டில் கணவனைப்பிரிந்தோர், கண்ணீர் விடுகின்றனர். இவ்வாறு மகிழ்வும் துயரமும் ஒருசேரப் படைத்து விட்டான் பண்பில்லாத படைப்பவன். உலகின் இவ்வியல்பு உணர்ந்த யாவரும் துன்பந்தருவனவற்றைச் சிந்தை செய்யாது, இனியனவற்றை மட்டும் கண்டு மகிழ்வாராக”.

தேர்தல் முடிவுகள் வந்த வெற்றிக் களிப்பில், இந்திய அரசின் அமைச்சர்களாகப் போகிறார்கள் பிள்ளைகளும் பேரனும் என்ற இன்பப் பெருக்கில் திளைத்திருக்கிறது கருணாநிதி குடும்பம். இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டு பிணங்களாகக் கிடக்கிறார்கள். பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மை தானா என்ற தவிப்பு. இதனால் தமிழர்கள் இல்லமெல்லாம் துயரம் கவிந்து கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையை இயல்பான ஒன்றாக்கிக் காட்டி கொந்தளிப்பு வராமல் தடுக்க, கருணாநிதி கண்டெடுத்த புறப்பாடல்தான் மேலே கூறப்பட்டது.

தமிழின அழிப்பில் ஆயுதப் போரை நடத்தியவர்கள் இராசபட்சேயும், சோனியாவும்; அவர்களுக்குத் துணையாக உளவியல் போரை நடத்தியவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக நிலவும் கங்காணி அரசியலை நன்கு பயன்படுத்திக் கொண்டது இந்தியா. ஈழத்தமிழின அழிப்பில் சிங்கள- இந்தியக் கூட்டுப்படைகள் ஈடுபட்டதை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கிளம்பிய எழுச்சி கட்டுமீறிப் போகாமல், ஒரு வரம்புக்குள் இருக்கும்படி கங்காணி அரசியல் கட்சிகள் பார்த்துக்கொண்டன. அதேவேளை பன்னாட்டு அரசியலில் இந்தியா தீவிரமாகத் தலையிட்டு, ஈழத்தில் நடைபெறும் மனித குல அழிப்புக்கு எதிராக எந்தநாடும் உறுதியாகத் தலையிடாதவாறு தடுத்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும், ஐ.நா.மன்றமும் இலங்கை அரசு நடத்தும் மனிதப் பேரழிவுப்போரைத் தடுத்து நிறுத்த உருப்படியாகத் தலையிடவில்லை. அரை குறையாகவே தலையிட்டன.

இந்த நாடுகளின் வணிக நலன்களுக்குத் தீனிபோடும் அளவிற்கு ஈழம் பெரிய மக்கள்தொகையையும் நிலப்பரப்பையும் கொண்டிருக்கவில்லை. இலங்கையே கூட பெரிய சந்தை இல்லை. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா மாபெரும் சந்தை. அதை இழந்துவிடக்கூடாது; அத்துடன், சீன ஆதிக்கத்தை மட்டுப்படுத்த, இந்தியாவைப் பயன்படுத்தவேண்டும் என்பன போன்ற காரணங்களுக்காக, இந்தியாவை எதிர்த்துக்கொண்டு, ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காதரவாக முழு அளவில் உலகநாடுகள் இறங்க முன்வரவில்லை.

பாட்டாளிவர்க்க சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட்டு நாடுகள் தங்கள் சொந்த தேசிய நலன்களுக்காக மற்ற நாடுகளின் நலன்களைப் பலியிட்டு வருகின்றன. லெனினுக்குப் பிந்தைய சோவியத் ஒன்றியம் இதைத்தான் செய்தது. மாவோ தலைமையில் இருந்த சீனமும் இதையே செய்தது. இதுபற்றி விரிவாகப் பின்னொரு வாய்ப்பில் விவாதிக்கலாம். இப்பொழுது நடந்த அநீதியை மட்டும் பார்க்கலாம். இன்னும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைக்காமல், அதன் பெயரிலேயே சீனா, முதலாளியச் சுரண்டல் ஆட்சி முறையைக் கொண்டுவந்துவிட்டது. அத்துடன் ஏகாதிபத்தியக் கனவுகளோடு விரிவாதிக்கக் கொள்கையைக் கடைபிடிக்கிறது.

தெற்காசிய மண்டலத்தில் தனது ஆதிக்கப் போட்டியில் குறுக்கிடும் வட அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியவற்றிற்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்திக்கொள்வது சீனாவின் திட்டம். அத்திட்டத்தை நிறைவேற்றிட, இலங்கை அரசுக்கு, ஈழத்தமிழர் அழிப்புப் போருக்காக, ஏராளமான ஆயுதங்களையும்,நிதியையும் வாரி வாரி வழங்குகிறது. இலங்கை அரசு தன்னிடம் ஆயுதம் வாங்கி ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்வது, மனித குல அழிப்புப் போரை நடத்துவது ஆகியவற்றைப் பற்றி சீனாவுக்குச் சிறிதளவும் கவலை இல்லை. திபெத் தேசத்தை ஆக்கிரமித்து, திபெத்தியர்களின் விடுதலைப் போராட்டத்தைக் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கும் சீனாவுக்கு, ஈழத்தமிழர் தேசிய உரிமையும், இலட்சக்கணக்கான மனித உயிரும் ஒரு பொருட்டே இல்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இராசபட்சே, படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் போர்க் குற்றவாளிகளாக விசாரிப்பது குறித்து விவாதிக்கக்கூட எதிர்ப்புத் தெரிவிக்கிறது சீனா. ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று மெக்சிகோ, உருகுவே போன்ற நாடுகள் முன்மொழிந்த போதெல்லாம் சீனாவும், ரசியாவும் ரத்து வாக்களித்து ( வீட்டோ) அதைத் தடுத்து விட்டன. கியூபா, பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகளின் குடியரசுத் தலைவர்கள் மார்க்சியர்கள். இந்நாடுகள் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

இலங்கை இனப்படுகொலை செய்யவில்லை, மனித உரிமைகளை மீறவில்லை என்று வாக்களித்துள்ளன. ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்யப்படுவதை, அங்கு மனித உரிமைகள் அழிக்கப்படுவதை வெனிசுவேலா குடியரசுத்தலைவர் சாவேஸ் ஒருமுறை கூட கண்டிக்கவில்லை. இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஓர் இரங்கல்கூட அவர் தெரிவிக்கவில்லை. கியூபாவையும், பிடல் காஸ்ட்ரோவையும் உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் நேசிக்கின்றனர்.

தமிழர்கள் பிடலை நெஞ்சில் வைத்துப் போற்றுகின்றனர். ஆனால் அங்கிருந்து, ஈழத்தமிழ் மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரு சொல்கூட வரவில்லை. மாறாக இலங்கை அரசின் தமிழ் இன அழிப்புப் போருக்கு ஆதரவாக அதன் குரல் உலக அரங்கில் ஒலிக்கிறது. சீனா, இந்தியா ஆகிய இருநாடுகளின் நட்பும் கியுபாவுக்குத் தேவை. இந்திய, சீன நாடுகளின் உதவியுடன் உலகின் ஒரு பகுதியில் மனித இனம் அழிக்கப்பட்டால்கூட கியுபா அதற்காக வருத்தப்படாது. அக்கொடுமையைக் கண்டிக்காது. இந்திய, சீன நட்புக்காக, மனித குல அழிப்பையும் பொருட்படுத்தாது. அந்த இன அழிப்புப் போரை ஆதரிக்கும். இதுதான் கியூபா பாணி நிகரமையா? இதுதான் காஸ்ட்ரோவின் மார்க்சியமா? இதைத்தான் கியூபாவிடமிருந்து ஒடுக்கப்பட்ட தமிழர்கள் எதிர்பார்த்தார்களா? “வியட்ந்நாம் யுத்த்தம் எங்க்கள் யுத்தம், வியட்நாம் ரத்தம் எங்கள் ரத்த்தம்”; என்று தமிழ்நாட்டு வீதிகளில் முழக்கமிட்டோம். அது நடத்திய விடுதலைப் போரை ஆதரித்தோம்! அந்த வியட்நாம், இனவெறி இலங்கை அரசை ஆதரிக்கிறது. இன அழிப்புக்கு உள்ளான ஈழத் தமிழர்க்கு ஆறுதலாக வாய்திறக்கவில்லை.

இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனா என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. மிகக்கொடிய சிங்கள இனவெறிக்கட்சி அது. இராசபட்சே நடத்தும் தமிழின அழிப்புப் போரின் வேகம் போதாது என்று குற்றம் சாட்டுகிறது அது. எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் முறியடித்து மனித சமத்துவத்துவத்தை நிலை நாட்டுவது தான் மார்க்சியம். அந்த மார்க்சியத்தைத் தனது தத்துவமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட்டுகள் பலர் சொந்த தேசிய வாதத்துடனும், தேசிய வெறியுடனும் செயல்படுவது சகிக்க முடியாத முரண்பாடாக உள்ளது. புத்த மதத்தைப் பின்பற்றிக்கொண்டு இனக்கொலை செய்யும் சிங்கள புத்த பிட்சுக்களுக்கும், இந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

பாட்டாளிவர்க்க சர்வதேசியப் பதாகையை உயர்த்திப் பிடிக்க கம்யூனிஸ்ட் நாடு எதுவுமே இல்லையா? அவை, சொந்த தேசிய நலனுக்கான தூதரக உறவாகத்தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாட்டைக் கொச்சைப்படுத்தி விட்டனவா? பிாிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கை அரசைத் கண்டித்தன. மனித உாிமைகளுக்காகக் குரல் கொடுத்தன. அதே வேளை, விடுதலைப்போர் நடத்திய விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென்று அவை தடை செய்து வைத்துள்ளன. அத்தடையை அவை நீக்கவில்லை. (இந்நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவும், சீனாவும் பாடுபட்டன.) போர் நிறுத்தம் கோரிய ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஒவ்வொரு தடவையும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று வலியுறுத்தின.

“பொதுமக்கள் வெளியேற பாதை உண்டாக்கித்தரவேண்டும்” என்று விடுதலைப்புலிகள் அமைப்பைக் கோரின. இவ்வாறு இந்நாடுகள், அரைகுறையாகப் போர் நிறுத்தம் கோரின.. ஐ.நா. மன்றப் பொதுச்செயலாளர் பான் கி மூனும் இதே அரைகுறை முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய செயலாளர் விஜய் நம்பியார் ஒரு மலையாளி. அவர்தாம் அடிக்கடி, மனித உரிமை தொடர்பாக இலங்கை சென்று வந்தார். விஜய் நம்பியார் தம்பி இந்தியப் படையில் பணிபுரிகிறார். அவரை இந்தியா, இலங்கைப் படைக்கு உதவி செய்ய அனுப்பி இருக்கிறதாம்.

ஐ.நா. மன்றத்தின் தலையீடு எந்த அலங்கோலத்தில் இருந்திருக்கும் என்று இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். பிரதமரின் பாதுகாப்பு மதியுரைஞராக உள்ள மலையாளி எம்.கே. நாராயணன், இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலராக உள்ள மலையாளி சிவசங்கரமேனன் இருவரும் அடிக்கடி, இலங்கை சென்று ஏன் இன்னும் விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை என்று நச்சரித்தது நாடறியும். ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டதை அறிந்து அக மகிழ்ந்தவர்கள் அவர்கள். ஐ.நா. மன்றத்திலும் மலையாளி ஆதிக்கம்! அந்தப் பதவிகளில் மலையாளிகள் இருக்கக்கூடாது என்பது நமது கருத்தல்ல. பெரும்பான்மை மலையாளிகள் தமிழினத்தைப் பகையினமாகக் கருதுகிறார்களே என்பதுதான் நமது குற்றச்சாட்டு.

இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற, விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடையவேண்டும் என்று நிபந்தனை போட்ட ஐரோப்பிய நாடுகள், ஐ.நா. மன்றம் ஆகியவை இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யப் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று நிபந்தனை போடவில்லையே ஏன்? இஸ்ரேலிய யூத வெறியர் களால் நாடு பறிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் நம் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் உாியவர்கள். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஹமாஸ் என்ற மதத் தீவிரவாத அமைப்புதான் இப்பொழுது முன்னெடுக்கிறது. யாசர் அராபத் மறைவிற்குப் பின் பி.எல்.ஓ. அமைப்பின் தலைமை அமெரிக்க அடிவருடி ஆகிவிட்டது. மதத் தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் இப்பொழுது நாம் ஹமாசைத்தான் ஆதரிக்கவேண்டும். அந்த ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன நிர்வாக எல்லைக்குள் இருந்துகொண்டு இஸ்ரேலுக்குள் எறிகணைகள் வீசிப் பொதுமக்களைக் கொல்கிறது என்று குற்றம் சாட்டி கடந்த சனவரி மாதம் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்து விமானக்குண்டு வீச்சு நடத்தியது இஸ்ரேல். காசாப் பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களைக் கொன்றது. இந்த ஆக்கிரமிப்பை அமெரிக்கா ஆதரித்தது. இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில், தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா அத்தீர்மானத்தை எதிர்த்தது. அதையும் மீறி 142 நாடுகள் ஆதரித்துப் போர் நிறுத்தத் தீர்மானம் வெற்றி பெற்றது. அத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியாவும் வாக்களித்தது. அத்தீர்மானம், இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்து, பாலஸ்தீனத்திலிருந்து தனது படையணிகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று கோாியதே அன்றி, ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று கோரவில்லை.

இந்தியா கூட, அப்படி ஒரு கோாிக்கையை எழுப்பவில்லை. போர் தொடங்கி 19-ஆம் நாள் போர் நிறுத்தம் செயலுக்கு வந்தது. பாலஸ்தீன மக்கள் காப்பாற்றப்பட்டனர். தமிழர்கள் மட்டும் காப்பாற்றப்படவில்லையே, ஏன்? “கர்த்தரே? கர்த்தரே, ஏன் எம்மைக் கைவிட்டீர்?” என்று சிலுவையில் அறையப்படும் போது ஏசுபிரான் எழுப்பிய குரலைப்போல் உலகத்தைப் பார்த்துத் தமிழினம் எழுப்புகிறது, தமிழினம் என்ன பாவம் செய்தது?” தனது தாயகத்தை மீட்க பாலஸ்தீனர்கள் போராடுவது ஞாயம்! தாயக விடுதலைக்காக ஈழத் தமிழர்கள் போராடுவது குற்றமா? ஹமாசுக்கு ஒரு நீதி, விடுதலைப்புலிகளுக்கு வேறொரு நீதியா?

தமிழர்களே, தமிழ்நாட்டுத் தமிழர்களே,

உலகத்i;தைப் பார்த்து;து வினா எழுப்புவதோடு நிற்காதீர்கள்! உங்களுக்குள் வினா எழுப்புங்கள். உலகத்தோடு உரையாடும் முன் உங்கள் மனச் சான்றோடு உரையாடுங்கள்! பாலஸ்தீனர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள்! ஆனால் அவர்களின் அரபு இனத்திற்குப் பலநாடுகள் இருக்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாம் மதத்திற்குப் பல அரசுகள் இருக்கின்றன. எகிப்தைப் போன்ற எட்டப்ப நாடுகள் விதிவிலக்கு. ஆனால் பல அரபுநாடுகளும், இஸ்லாமியர்களும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டின. அந்த நாடுகளோடு எண்ணெய் வணிகம் உள்ளிட்ட பல வணிகம் செய்யும் நாடுகள், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுக் கை உயர்த்தின. அவற்றுள் இந்தியாவும் ஒன்று. இப்பொழுதாவது புாிகிறதா, தமிழ் இனத்தின் அடிப்படை ஊனம் என்ன என்று? அதற்கொரு நாடு இல்லாததுதான் அந்த ஊனம்;. இந்த உண்மை இப்பொழுதாவது புாிகிறதா?

உலகில் பத்துக்கோடித் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கொரு நாடில்லை. ஒன்றரைக்கோடி மக்கள் தொகை மட்டுமேகொண்டுள்ள சிங்களர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது. அவர்களின் இறையாண்மையை மற்ற நாடுகள் ஏற்கின்றன. அவர்களால் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை வளைத்துப்போட முடிகிறது. தமிழ் இன அழிப்புப் போரை தங்குதடையில்லாமல் நடத்த முடிகிறது. ஆனால் நமக்கொரு நாடில்லை.

பத்தாண்டுகள், தனியரசு நடத்தினர் விடுதலைப்புலிகள். உலக நாடுகளின் ஏற்பிசைவு இல்லாததைத் தவிர அந்த ஈழ அரசில் என்ன குறை இருந்தது? தனிப்படை, தனிக்காவல்துறை, நீதித்துறை, பொருண்மியக்கழகம், கலை பண்பாட்டுத்துறை, ஆட்சியில் முழுமையாகத் தமிழ், வரிவசூல் முறை, நலத்திட்டங்கள் செயலாக்கம், தொழில்துறை உற்பத்தி, வேளாண் உற்பத்தி, பன்னாட்டு உறவு, மேம்பட்ட தகவல் தொடர்புத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, வணிகம் என அரசுக்குாிய அனைத்தும் இருந்தன. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனைத் தங்க்களின் குடியரசுத் தலைவராகவே ஈழ மக்க்கள் ஏற்ற்றனர்.

பிரபாகரன் நிர்வாகத்தில், மக்களிடையே இருந்த சாதிக்கொடுமை ஒழிக்கப்பட்டது. வரதட்சிணைக் கொடுமை ஒழிக்கப்பட்டது. களவு, கொலை, பாலியல், வன்முறை அறவே இல்லை. “நள்ளிரவில் ஓர் இளம்பெண் கழுத்து நிறையத் தங்க நகை அணிந்து தன்னந்தனியாக வெளியே போய்விட்டு வீட்டுக்குப் பத்திரமாகத் திரும்பினாள் என்ற நிலை நாட்டில் வரவேண்டும். அதுவே நான் விரும்பும் சுயராச்சியம்” என்றார் காந்தி. இந்தப் பாதுகாப்பு இந்தியாவில் இல்லை. பிரபாகரனின் ஈழத்தில் இருந்தது. உலக நாடுகள் உச்சிமோந்து அந்த ஈழத்தை அங்கீகரித்திருக்க வேண்டும். அதைச் சிங்களர்கள் அழிக்கத் துணைபோயின ஏன்? உலக அரங்கில் குரல் கொடுக்க, இதர நாடுகளின் ஆதரவைத் திரட்ட தமிழ் இனத்திற்கென்று ஒரு நாடில்லை.

ஈழ விடுதலைப்போரில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதுதான். எாிந்து போன சாம்பலிலிருந்தே உயிர்பெற்று மீண்டும் தாவிப் பறக்கும் பீனிக்ஸ் பறவை போல் விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவர். விடுதலைப்போர் தோற்காது. நம்பிக்கை ஊட்டுவதற்காக நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல் மொழிகளல்ல இவை. உலக நடப்பு இது தான்.

ஆப்கனிஸ்தானத்தில் அரசு நடத்திய தாலிபான்களை அடியோடு அழித்தது அமெரிக்கா. இதோ அவர்கள் எழுந்து வந்து விட்டார்கள். அந்நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றி இப்பொழுது அரசு நடத்துகிறார்கள். அத்துடன் பாகிஸ்தான் பகுதிகள் சிலவற்றையும் கைபற்றி இருக்கிறார்கள். இலங்கையின் சொந்த அனுபவம் ஒன்று இருக்கிறது.

சேகுவேரா வழியில் புரட்சி நடத்திய ஜனதா விமுக்தி பெரமுனாவை தலைமை உட்பட அடியோடு அழித்தது இலங்கை அரசு. 50,000 இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். அதே ஜே.வி.பி. இப்பொழுது மீண்டும் எழுந்து இலங்கையில் முக்கிய அரசியல்கட்சியாக உள்ளது. அக்கட்சி தமிழினத்திற்கு எதிராக உள்ளது என்பது வேறு செய்தி. விடுதலைப்புலிகள் ஈழம் முழுதும் பரவி நிற்கிறார்கள் கிழக்கு மாநிலம், மன்னார் பகுதி யாழ்ப்பாணம் போன்றவற்றில் ஆற்றல்மிகு தளபதிகள் தலைமையில் இன்றும் அவர்கள் செயல்படுகிறார்கள். ஏற்பட்ட இழப்பு பெரிது. ஆனால் வற்றாத ஊற்றிலிருந்து தண்ணீர் பீறிட்டு வருவதுபோல் விடுதலைப்பு;புலிகள் மேலும் மேலும் வருவார்க்கள்.. போர் தொடரும்.. ஈழம் மலரும்!

தமிழ்நாட்டுத் தமிழர்களே, ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் அழிக்கப் பட்டார்கள். ஆற்றல் மிகு தளபதிகள் கொல்லப்பட்டார்கள் என்று செய்தி வந்ததும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல் ஆகிக் குடும்பத்தோடு குந்தி அழுகின்ற தமிழர்களே, தலைவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற வினாவை எாியும் நெருப்பாக நெஞ்சில் சுமந்து வெந்து கொண்டிருக்கும் தமிழர்களே, தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற நல்ல செய்தி கிடைத்துள்ளது. தலைவரின் இயக்கம் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழர்கள் ஈழ விடுதலைப் போரை எடுத்து நிறுத்த ஆயத்தமாய் உள்ளார்கள். இவ்வளவு பேரழிவிலும் இன்னொரு நன்மை விளைந்திருக்கிறது.

ஈழத் தமிழர் விடுதலைப்போர் உலக நாடுகளின் கவனத்திற்கு அழுத்தமாக வந்துவிட்டது. “அப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா” என்று நிலக்கோளத்தின் கடைக்கோடியில் உள்ள சின்னஞ்சிறு தேசம் கூட இனி கேட்காது. எல்லோருடைய கவனத்திற்கும் அது வந்துவிட்டது. உலக ஆதிக்க நாடுகளுக் கிடையே உள்ள முரண்பாடு, ஈழத்திற்கு ஆதரவாக பெரிய நாடுகள் சிலவற்றை இனித் திருப்பிவிடும். இந்தியப் பெருங்கடலில், சீனாவும், இந்தியாவும் ஆதிக்கப்போட்டியில் இறங்கி முரண்பட்டு நிற்கப் போகின்றன. மேற்கத்திய நாடுகள் சீனாவைத் தட்டி வைக்க விரும்புகின்றன.

ஈழத்தில் இலங்கை நடத்திய மனித அழிப்பை, வாழ்வுரிமைப் பறிப்பை, இரசாயனப்போரை விசாாிக்க முனைந்துள்ளன உலக நாடுகள். போர்க்குற்றவாளிகளாக, இராசபட்சே, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராசபட்சே, படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கூண்டில் நிறுத்தவேண்டும் என்ற கோாிக்கை உலக மனித உாிமை அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உாிமை அமைப்பு, ஐ.நா.பாதுகாப்புக்குழு ஆகியவை அவற்றை விசாாிக்கும் நிலை உருவாகி உள்ளது.

சூடானில் டார்ஃபர் பகுதியில் வாழும் ஃபர், மசாலித், ஜாகுவா இனங்களைச் சேர்ந்த மக்களை இனப்படுகொலை செய்தார் அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் உமர் ஹாசன் அல் பசீர். தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தினார். அம்மக்களுக்கு உணவும், மருந்தும் கிடைக்காமல் தடுத்தார். மூன்று லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 2009 மார்ச்சு 4- ஆம் நாள் சூடான் அதிபர் அல்பசீருக்கு எதிராகப் பிடி ஆணை பிறப்பித்தது. இன்னும் பிடிபடாமல் உள்ளார். ஒருநாள் கூண்டிலேற்றப்படுவார். ஏற்கெனவே, குரோசிய, கொசாவா மக்களை இனப்படுகொலை செய்ததற்காக, செர்பிய அதிபர் மிலோசோவிச், போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அதற்கு முன், சிலியில் தொழிலாளர்களையும், மக்களையும் கொன்று குவித்த சர்வாதிகாாி பினோசே பன்னாட்டு நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டார்.

1. இந்த வரிசையில் இராசபட்சே கும்பல் கைது செய்யப்படவேண்டும். இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாாிக்க அமெரிக்கா முன்மொழிந்து ஐ.நா.வின் மனித உாிமைக்குழு விவாதித்தது. நாற்பத்தேழு உறுப்பு நாடுகளைக்கொண்ட மனித உாிமை ஆணையத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாாிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து தீர்மானம் முன்மொழிந்தது. அதை எதிர்த்து இலங்கை அரசுக்கு ஆதரவாக மேற்படி விசாரணை தேவையில்லை என்ற தீர்மானமும் முன்மொழியப்பட்டது. 28.5.2009 அன்று நடந்த வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து முன்மொழிந்த தீர்மானம் பதினேழு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது. இலங்கை முன்மொழிந்த தீர்மானம் 22 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தது. இந்தியா, சீனா, கியூபா, பொலிவியா, நிகரகுவா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன. இருப்பினும் நாம் மேற்கண்ட கோாிக்கையை உலகு தழுவியஅளவில் வலியுறுத்திப் போராடவேண்டும். தமிழ்நாட்டிலும்அதற்கான பரப்புரையும், போராட்டமும் நடத்த வேண்டும்.

2. போாில் படுகாய முற்று, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்ற, மன அதிர்ச்சிக் குள்ளானோரைக் குணப்படுத்த மருத்துவர் குழுக்கள் சென்று உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

3. ஈழத் தமிழர்களுக்கான அனைத்துத் துயர் துடைப்புப் பணிகளும் ஐ.நா. மன்றம் அல்லது பன்னாட்டுக் குழுவினரின் மேற்பார்வையில் நடைபெறவேண்டும். சிங்கள அரசின் கண்காணிப்பில் நடைபெறக்கூடாது.

4. வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் மூன்றரை இலட்சம் தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பவேண்டும். அவர்களின் சொந்த வீடுகள் தகர்க்கப்பட்டிருந்தால், அவ்விடங் களில் உடனடியாகத் தற்காலிக வீடுகள் கட்டித்தரவேண்டும்.

5. இப்பொழுது ஏற்பட்டுள்ள பேரழிவைப் பயன்படுத்தி தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடைபெறாமல் ஐ.நா. மன்றமும் உலக நாடுகளும் தடுக்கவேண்டும்.

6. தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்தி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் தொடர்பான கணக்குப் பொறுப்பைத் தீர்வு (யுஉஉழரவெயடிடைவைல) செய்வதற்கு ஐ.நா.மன்றம் ஆவன செய்ய வேண்டும்.

7. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.

உலக நாடுகளை நோக்கி நாம் உடனடியாக எழுப்பவேண்டிய கோாிக்கைகள் இவை. இக்கோாிக்கைகளை முன் வைத்துப் போராட்டங்கள் நடத்தவேண்டும். விடுதலைப்புலிகள் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும் உலக அரசியல் அரங்கில் முன்னேறியுள்ளனர். சிங்கள அரசு போர்க்களத்தில் தற்காலிக வெற்றி பெற்ற போதிலும் உலக அரசியல் அரங்கில் தோல்வி அடைந்து வருகிறது.

அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும் ஈழத் தமிழ்த் தேசிய இனம் தனது புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்கும். தற்காலிகத் தோல்விக்கான காரணங்களைத் தன் திறனாய்வுடன் ஆராய்ந்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். தமிழ்நாட்டுத் தமிழர்கள், ஈழத்தமிழர்க்கு ஏற்பட்ட பேரழிவிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்ன? அவர்களின் எதிர்கால இலக்கு என்ன? உடனடிக் கடமைகள் என்ன? இவையே நம்முன் உள்ள வினாக்கள்.

இவற்றிற்கான விடைகள் :

தமிழ்நாட்டை, இந்தியா தனது காலனியாகத்தான் நடத்துகிறது. போர் நிறுத்தம் கோாி நாம் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, படையினரை அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்கும் போரை இயக்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ளவில்லை.

மாவீரன் முத்துக்குமார் தொடங்கி 14 தமிழகத் தமிழர்கள் தீக்குளித்து சாவைத் தழுவியும் இந்தியா மனமிரங்கவில்லை. தமிழ் இனத்தின் மீது இந்தியாவுக்கு உள்ள பகை, வரலாற்று வழி வந்த தமிழர் - ஆாியர் பகையின் தொடர்ச்சியே.

நாம் “இந்தியர்” அல்லர்;, தமிழர்களே! நாம் “திராவிடர்கள்” அல்லர், தமிழர்களே!

தமிழ்நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை இன அழிவிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். தமிழ்நாட்டில் ஆறரைக்கோடி மக்கள் இருக்கிறோம். இறையாண்மை யுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதே நமது இலக்காக இருக்கவேண்டும்.

ஈழம் தனி நாடாகட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்ற கருத்து, சமூக அறிவியலுக்கும், இயங்கியல் விதிகளுக்கும் புறம்பான நிலைபாடு. ஒன்றின் ஊடாக இன்னொன்று செயல்புாியுமே அன்றி ஒன்றுக்குப்பின் இன்னொன்று செயல்படும் என்பது பிழையான கோட்பாடு. ஏனெனில் இரண்டு போராட்டங்களுக்குமே பகை அரசாக இந்திய அரசு இருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தைத் தமிழகத் தமிழர்கள் ஆதரிக்கவேண்டும். தமிழகத்தின் தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் ஆதரிக்கவேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றின் தாக்கம் இன்னொன்றை ஊக்கப்படுத்தும். ஈழ விடுதலைப் போர் முன்னேறிச் சென்றால் களிப்படைவது, அதில் பின்னடைவு நேர்ந்தால் துயரப்படுவது என்பது மட்டும் போதாது. ஈழ விடுதலைப்போர் கிாிக்கெட் விளையாட்டல்ல. நாம் காலரியில் உட்கார்ந்து கையொலி எழுப்புவோரும் அல்லர். அது இன விடுதலைப்போர். விடுதலைப் புலிகள், தங்கள் தாயகத்திற்குப் போராடுகிறார்கள்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்கள் தாயகத்திற்குப் போராட வேண்டாமா? தமிழ்மொழி உணர்ச்சி மட்டும் போதாது, தமிழ் இன உணர்ச்சியும் வேண்டும். தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டத்தைத் தேர்தல் கட்சிகளால் நடத்த முடியாது. தமிழர்களிடையே இன உணர்ச்சி எழுச்சி கொள்வதற்கேற்ப, அதற்கு ஈடு கொடுத்துத் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, போலியாக இன முழக்கங்களை எழுப்பி, உணர்வாளர்களைத் திசைதிருப்பிவிடும் அக்கட்சிகள்.

தேர்தலுக்கு வெளியேதான் தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டக்களம் இருக்கிறது. அப்போராட்டம் தமிழ்நாட்டில் மக்கள் திரள் போராட்டமாக எழுந்தால்தான் இங்கு வெற்றி பெற முடியும். ஆயுதக் குழுப்போராட்டம் இங்கு மக்களை ஈர்க்காது. பணம் - பதவி - விளம்பரம் மூன்றிற்கும் ஆசைப்படாத இளைஞர்கள் இந்தப் போராட்டத்திற்கு முன்வரவேண்டும்.

தேனீக்கு அஞ்சினால் தேனெடுக்க முடியாது. தியாகத்திற்கு அஞ்சினால் தேசம் அமைக்க முடியாது. அன்னையின் மடியில் அனாதையாய், சொந்த மண்ணில் ஏதிலியாய் இழிவடையக் கூடாது. தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்திற்குப் பல தரப்பினரும் தேவை. நேரடியாகப் போராட்டங்களில் பங்கு பெறுவோர், சிறைக்கஞ்சாதவர், முழுநேரச் செயல்வீரர்கள், பகுதி நேரச் செயல்வீரர்கள்;, ஓய்வு நேரத்தில் பணிபுாிவோர், ஒதுங்கி நின்று உதவி புாிவோர், கருத்துரை வழங்குவோர், கலை இலக்கியப் படைப்பாளிகள், இவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ளும் மக்கள்; இவ்வாறான தேசியச் சமூக ஒருங்கிணைப்பு தேவை.

தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்தில் இவர்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்லும் புரட்சிகரத் தமிழ்த் தேசிய அமைப்பு இதற்கு முதன்மைத் தேவை. யார் யாருக்கு எந்த அளவில் செயல்ப்பட முடியுமோஅந்த்த அளவில் செயல்ப்பட வாருங்க்கள்! கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரியம் பெறுவோம்! கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் பெறுவோம்!

எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள். எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு அறிவிப்போம்!

எங்கிருந்து தொடங்குவது? இங்கிருந்து தொடங்குவோம்!

தமிழ்நாட்டிலிருந்து தொடங்குவோம்! கண்ண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, June 11, 2009

வீட்டில் கொடி ஏற்றும் நிபந்தனை ஏற்கக்கூடியது அல்ல : த.தே.பொ.க. - த.தே.வி.இ. கூட்டறிக்கை (11.06.09)

கோவை கொடி எரிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய
பிணை  நிபந்தனைகள் சட்டநீதிக்கு புறம்பானவை - ஏற்கக்கூடியவை அல்ல !

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் கூட்டறிக்கை

    தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தியாகு ஆகியோர் 11.06.09 அன்று சென்னையில் விடுத்துள்ள கூட்டறிக்கை :

    இலங்கை அரசு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுத உதவி, நிதி உதவி மற்றும் பன்னாட்டு அரசியல் உதவி ஆகியவற்றை வழங்கி அந்த இனப்படுகொலையில் பங்கு வகித்தது. இதற்கு சனநாயக வழியில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை கடந்த 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய அரசுக் கொடியையும் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டம் அறிவித்தது.

    கோயம்புத்தூரில் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த 8 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றுடன் 48 நாட்களாக அவர்கள் கோவை நடுவண் சிறையில் உள்ளனர்.

    அவர்களுக்கு பிணை விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. கடந்த 9.06.09 அன்று அப்பிணை மனு மீது ஆணை வழங்கிய நீதிபதி திரு. ஆர். இரகுபதி அவர்கள் மேற்கண்ட 8 பேரும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லைஇ அதற்கு முன்பாக அவர்களைத் தடுத்துக் காவல்துறையினர் கைது செய்து விட்டார்கள் என்ற போதிலும் அவர்களின் நோக்கம் குறித்து கடுமையாகக் கருத வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் ஒரு வாரத்திற்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்திய அரசுக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் ஒரு வாரத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

    இந்த இரு நிபந்தனைகளும் நீதிநெறிக்கும் சட்டத்திற்கும் புறம்பானவை. பிணை வழங்கும் போது நிபந்தனை விதிப்பதற்கு ஒரு சட்டக் கோட்பாடு உள்ளது. அது அக்குறிப்பிட்ட வழக்கில் புலனாய்வுக்கு உதவியாக அந்நிபந்தனைகள் அமைய வேண்டும் என்பதாகும். இந்தக் கோட்பாட்டிற்கும் மேற்படி நிபந்தனைகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. மாறாக, ஒரு கொள்கைக்கு எதிராக பழிவாங்கும் தன்மையே மேலோங்கியுள்ளது. பிணை வழங்கும் நிலையில் ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் கருதித் தண்டனை வழங்கக் கூடாது என்பது சட்டநெறி. ஆனால், இவ்வழக்கில் பிணை வழங்குவதற்கு இந்திய அரசுக் கொடியை அவரவர் வீட்டு வாசலில் ஒரு வாரம் ஏற்ற வேண்டும் என்பதும், அநாதை இல்லத்தில் சேவை புரிய வேண்டும் என்பதும் தண்டனை வழங்கும் செயலாகும்.

    தேசியச் சின்னங்களை இழிவு படுத்துவதைத் தடுக்கும் சட்டம் - 1971 பிரிவு (2) - இந்திய அரசுக் கொடியை அவமதிக்கக் கூடாது என்பதற்கான விதியாகும். இந்திய அரசுக் கொடியை ஒருவர் மதிக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்த அந்தச் சட்டத்தில் எந்த விதியும் கிடையாது.  

எனவே, இந்த ஆணையில் உள்ள நிபந்தனைகள் ஏற்க இயலாதவைகளாக உள்ளன. முறைப்படி உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுச் செய்ய உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


நாள் : 11.06.09

இடம் : 44ஃ1, பசனை கோயில் தெரு,
 தியாரகராயர் நகர், சென்னை-17.

 ஓப்பபுதல் 

  • பெ.மணியரசன், பொதுச் செயலாளர் , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
  • தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.



Tuesday, June 9, 2009

ஈழம்: நாம் என்ன செய்ய வேண்டும்? - இன்று(09.06.09) சென்னையில் பொதுக்கூட்டம்

ஈழம்: நாம் என்ன செய்ய வேண்டும்?
 
சிறப்புப் பொதுக்கூட்டம்
 
நாள் : இன்று (09.06.09) மாலை 5.30 மணி
 
இடம் : எம்.ஜி.ஆர்.நகர், சென்னை
 
தலைமை : தோழர் சிவகாளிதாசன் (த.தே.வி.இ.)
 
முன்னிலை : தோழர் பழ.நல்.ஆறுமுகம் (த.தே.பொ.க.)
 
சிறப்புரை:
 
தோழர் பெ.மணியரசன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
தோழர் கொளத்தூர் தா.செ.மணி
தலைவர், பெரியார் திராவிடர் கழகம்
 
தோழர் தியாகு
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
 
நன்றி : தோழர் தமிழ்க்கனல் (த.தே.பொ.க.)
 
இவண்
தமிழர் ஒருங்கிணைப்பு

தமிழ்த் தேசியம் - வரைவு அறிக்கை - விவாதங்கள் - ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை

விவாதங்கள் - ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன

 

நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வருகின்ற சூலை 12 2009 இல் திருச்சியில் நடத்தவிருக்கும் "தமிழ்த் தேசியம்" சிறப்பு மாநாட்டிற்கான வரைவு அறிக்கை இது. தோழமை அமைப்புகள் மற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் மற்றும் உணர்வாளர்கள் பங்குபெறவிருக்கும் இம்மாநாட்டில் இறுதி செய்யப்படவிருக்கும் இவ்வறிக்கையின் மீது விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றை tamizhdesiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 'தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 44/1, பசனை கோயில் தெரு, முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17.' என்ற முகவரிக்கும் உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.

 

    ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டதும், விடுதலைப்புலிகளும், ஆற்றல்மிகு தளபதிகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், தமிழீழத் தேசியத்தலைவர் "பிரபாகரன் உடல் இதோ" என்று ஒட்டு வேலை செய்து ஓர் உடலை சிங்களப்படை காட்டியதும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களை ஒவ்வொரு வகையில் தாக்கி சிதைத்துள்ளது.

    பக்கத்தில் தமிழ்நாட்டில் நாம் ஆறரைக்கோடி பேர் இருந்தும், நம் இன மக்கள் ஆயிரம் ஆயிரமாக அன்றாடம் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை. தமிழின அழிப்புப் போரின் கடைசி மூன்று நாள்களான 2009 மே 16,17,18 ஆகிய நாட்களில் மட்டும் 45 ஆயிரம் தமிழ் மக்களை பாஸ்பரஸ் குண்டு வீசியும், கொத்து வெடிகுண்டு போட்டும், சிங்களப்படை கொன்றது. தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கும் நோக்கில் குழந்தைகளையும், பிள்ளைத்தாய்ச்சிப் பெண்களையும் குறிவைத்து அழித்தது சிங்களப்படை.

    இந்தத் தமிழ் இன அழிப்புப்போரை, சிங்களர் மட்டுமா நடத்தினர்? இந்தியாவும் சேர்ந்து நடத்தியது.

   2008 அக்டோபர் மாதத்திலிருந்து தமிழ்நாட்டில், பெரும்பாலான கட்சிகள், பெரும்பாலான மக்கள், ஈழத்தில் போர்நிறுத்தம் செய்ய இந்தியாவை வலியுறுத்திப் பலவகைகளில் போராடினோம்.தமிழ்நாட்டில் இப்போராட்டங்கள் தீவிரப்பட, தீவிரப்பட, ஈழத்தமிழர் அழிப்புப்போரை இந்தியா மேலும் தீவிரப்படுத்தியது. தமிழகத்தின் வழியாகவே, கனவகைப் போர்க்கருவிகளை இலங்கைக்குப் பகிரங்கமாக அனுப்பிவைத்தது.

    ஈழத்தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? இலங்கை நாடு 1948 பிப்ரவரி 4-ஆம் நாள் வெள்ளையரிடமிருந்து விடுதலைப்பெற்றது முதல் சிங்களப் பேரினவாத அரசு தமிழினத்தை ஒடுக்கியது; இரண்டாம் தரக் குடிகளாக நடத்தியது. உரிமைகள் கேட்டுப் போராடிய  தமிழர்கள் விடுதலை பெற்றால் ஒழிய வேறு தீர்வில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.


    வட இந்தியாவிலிருந்து வந்தேறிய சிங்களர் புகுவதற்கு முன்பிருந்தே முழு இலங்கைக்கும் உரிய மண்ணின் மக்கள் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகத் தென் இலங்கைக்குப்போன மலையகத் தமிழர்கள் வேறு; ஈழத்தமிழர்கள் வேறு. மலையகத் தமிழர்களின் தேவை சமஉரிமை. ஈழத்தமிழர்களின் தேவை தாயக விடுதலை.


    அமைதிவழியில், சனநாயகவழியில், தேர்தல் வழியில் தாயக விடுதலை கேட்ட தமிழர்களை, அவ்வப்போது சிங்களப்படை சுட்டுக்கொன்றது; சிறைப்பிடித்து சித்திரவதை செய்தது. எதிர்வினையாக எழுந்தது விடுதலைப்புலிகளின் ஆயுதப்போர். உலகத்தின் தலைசிறந்த விடுதலைப்படையாக, விடுதலை இயக்கமாகத் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் அமைப்பு எழுந்தது.

    விடுதலைப்புலிகள் அமைப்பை அழிப்பதை இந்தியா தனது இலக்காக எடுத்துக்கொண்டது. இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை அழிப்பதைத் தனது வேலைத் திட்டமாக இந்தியா ஏற்றுக்கொண்டது.


    இந்தியாவைத் தனது தாய்நாடு போல் நேசித்தவர்கள் ஈழத்தமிழர்கள். காங்கிரஸ் தலைவர்களான காந்தி, நேரு, இந்திராகாந்தி போன்றவர்களைத் தங்கள் தலைவர்களாக நேசித்தார்கள்.

    அப்படி நேசித்த மக்கள் மீது 1987-இல் படையெடுத்தார் இராசீவ்காந்தி. ஆறாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படை. அதில் பாதிக்கப்பட்டோர், இராசீவ்கொலையில் ஈடுபட்டிருக்கலாம். 


    ஈழத் தமிழ்இன அழிப்புப்போரை இந்தியா நடத்துவதற்கான அடிப்படைக்காரணம் இராசீவ்காந்தி கொலை அல்ல.

    இந்திய அரசு நேருகாலத்திலிருந்து இன்றுவரை இலங்கையில் சிங்கள இனத்திற்கு ஆதரவாகவும் தமிழ் இனத்திற்கு எதிராகவும் தான் இருந்து வருகிறது. 

    நேரு காலத்தில், சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாட்டில் தி.மு.க. அழுத்தம் கொடுத்தது. அக்கோரிக்கையை நேரு ஆய்வு செய்கிறார் என்று தெரிந்ததும்,  அப்போதைய இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா புதுதில்லி வந்து நேருவைச்  சந்தித்து, சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என்று  வலியுறுத்தினார். சேது கால்வாய் ஆழப்படுத்தப்பட்டால் தூத்துக்குடி துறைமுகம் விரிவடையும்;  கொழும்பு துறைமுகம் தனது முகாமைத்தன்மையை இழந்து விடும் என்று அவா; கூறினார்.  அக்கோரிக்கையை ஏற்று நேரு அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்.

    நூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கையை வளப்படுத்த, தேயிலைத் தோட்டங்கள் செழிக்கத் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழக வம்சாவழித்தமிழர்கள் பதினைந்து லட்சம் பேர்க்குக் குடியுரிமை வழங்க மறுத்தார்; சிரிமாவோ பண்டாரநாயகா.குடியுரிமை கோரி இலங்கையில் தமிழர்கள் போராடினார்கள். தமிழ் நாட்டிலும் அக்கோரிக்கையை ஆதரித்து ஆர்ப்பரித்தனர் தமிழர்கள்.

    சிங்கள அரசின் விருப்பத்தை ஏற்று, அப்போதைய இந்தியப்பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஐந்துலட்சம் தமிழர்களை அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வரவழைத்தார். ஐந்துலட்சம் தமிழர்கள் இலங்கையில் நாடற்றவர்களாக இருக்கவும் சாஸ்திரி ஒப்புக்கொண்டார். இதற்கு சிரிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் என்று பெயர்.


    இப்பொழுது, தமிழகக் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் காரணமாக, சேதுக்கால்வாய்த்திட்டம் செயலுக்கு வந்தது. அதை இலங்கை அரசு எதிர்த்தது. வடநாட்டுக் கட்சிகளும் "இராமர் பாலம்" இடிக்கப்படுகிறது என்று கூறி எதிர்த்தன. அத்திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

    தமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத்தீவைத் தனக்கு வேண்டுமென சிங்கள அரசு கேட்டது. தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி இந்திரா காந்தி, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தார்.


    தமிழ்நாட்டு மீனவர்களை நானூற்றைம்பது பேர்க்கு மேல் சிங்களப்படை சுட்டுக் கொன்றுள்ளது. இன்னும் எவ்வளவு பேரைக் கொல்லும் என்று சொல்லமுடியாது. இவ்வளவு இனக்கொலையையும் இந்தியாவின் துணையோடுதான், இந்தியாவின் ஆதரவோடுதான் சிங்களப்படை செய்துள்ளது.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் அரபிக் கடலில் எல்லைதாண்டி மீன் பிடிக்கும் மீனவரை அடுத்த நாடு சுட்டுக்கொல்வதில்லை. தளைப்படுத்தி பின்னர் விடுவிக்கிறார்கள். இந்த அணுகுமுறைகள் தமிழக மீனவர்களிடம் சிங்கள அரசு கடைபிடிப்பதில்லை. அந்நாட்டு அத்துமீறலை இந்தியா தடுப்பதில்லை.


    சிங்களர்க்கும், தமிழர்க்கும் இடையே முரண்பாடு வந்தால், இந்தியா சிங்களர் பக்கம் நிற்கும்; தமிழர்களைப் பலியிடும். ஈழத்தமிழர்கள் பால் மட்டுமல்ல, தமிழகத் தமிழர் மீதும் இந்தியா கொண்டுள்ள  எதிர்ப்பு இதே போன்றதுதான்.


    காவிரி, முல்லைப்பெரியாறு நீர் உரிமையில் நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அவ்வப்போது கொடுத்த தீர்ப்புகளைச் செயல்படுத்த கன்னட அரசும், மலையாள அரசும் மறுத்தன.

    இத்தீர்ப்புகளைச் செயல்படுத்த இந்திய அரசமைப்புச் சட்டப்படி எல்லா அதிகாரமும் இந்திய அரசிடம் இருக்கிறது. ஆனால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் தாகத்திற்கும், பாசனத்திற்கும் தண்ணீர்ப் பெற்றுத் தர இந்திய அரசு முயலவி;ல்லை. மாறாக மறைமுகமாக, கன்னடர்களையும், மலையாளிகளையும் ஆதரித்துத் தமிழர்களைப் பழிவாங்கியது. அரசமைப்புச்சட்ட விதி 355-இன் கீழ், நடுவர்மன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்துமாறு கட்டளைத் தாக்கீது அனுப்பிச் செயல்படுத்தியிருக்கலாம். அக்கட்டளைத் தாக்கீதையும் செயல்படுத்தவில்லை என்றால், விதி 356-இன் கீழ் குறிப்பிட்ட மாநில நிர்வாகத்தை இந்திய அரசு தன் கையிலெடுத்து, மேற்கண்ட தீர்ப்புகளைச் செயல்படுத்த முடியும்;.

 

 அரசமைப்புச்சட்டத்தில் இந்த அதிகாரங்கள் இருந்தும், தமிழ்நாட்டிற்குரிய நீதியை நிலைநாட்ட இந்திய அரசு முன்வரவில்லை. மாறாக அந்த மாநிலங்களின் அத்துமீறல்களை மறைமுகமாக ஊக்குவிக்கின்றது.

 

 இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஆந்திரப்பிரதேசம், பாலாற்றில் தமிழக எல்லையை ஒட்டி பல அணைகளைக் கட்டுகிறது.

 

 வரலாற்றுக் காலந்தொட்டு நமக்குரியதாக இருந்துவரும் காவிரி உரிமையை மறுத்தது மட்டுமின்றி, கன்னட வெறியர்கள், கர்நாடகத்தில் காலம் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களை 1991-1992 -இல் அடித்துத் துன்புறுத்தி, வீடுகளைக் கொள்ளையிட்டு, கொளுத்தி, நூற்றுக் கணக்கானோரைக் கொன்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாகத் தமிழகம் நோக்கி ஓடிவந்தனர்.

 

 இந்தக்கொலை, கொள்ளை குற்றங்களுக்காக, ஒருவர் மீது கூடக் கர்நாடகத்தில் வழக்கு இல்லை. யாரும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவில்லை. கன்னட வெறியர்களின் கொலை, கொள்ளைச் செயல்களை இந்திய அரசு மறைமுகமாக ஆதரித்ததால் தான் அக்குற்றவாளிகள் தப்பிக்க முடிந்தது.

 

 ஒகேனக்கலில், அருவி அருகே, தமிழக அரசு ஆண், பெண் உடை மாற்றும் அறை கட்டியதைக் கன்னட அரசு தடுத்துவிட்டது. 2005 செப்டம்பர் மாதம் இக்கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளை அங்கு வந்த கன்னட வெறியர்கள் தாக்கி, கட்டுமானக்கருவிகளைப் பிடுங்கி, ஓடுகின்ற காவிரி ஆற்றில் வீசினர். அத்தோடு அக்கட்டுமானப்பணி நின்றுவிட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தைக் கர்நாடக அரசு எதிர்க்கிறது. அத்துடன், ஒகேனக்கல் கர்நாடகத்திற்குச் சொந்தம் என்று உரிமை கோருகிறது.

 

முல்லைப்பெரியாறு அணைப்பகுதி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு பணிபுரியும் தமிழகப் பொதுப்பணித்துறைப் பொறியாளர்களையும் ஊழியர்களையும், அவ்வப்போது கேரள வனத்துறையினர் அடித்துத் துன்புறுத்துகின்றனர்.

 

 மேற்கண்ட அட்டூழியங்களைச் செய்வது கேரளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி. இதற்கு முன் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போதும் இதேபோல் தான் நடந்துகொண்டது.

 

 கர்நாடகத்தில், காவிரி உரிமைக்கு எதிராகச் செயல்படுபவை,காங்கிரஸ், ஜனதாதள, பா.ஜ.க. கட்சிகளும் அவற்றின் ஆட்;சிகளும் தாம்.

 

 மேற்கண்ட கட்சிகள் அனைத்தும் இந்திய தேசியம், இந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பேசக்கூடியவை.

 

 ஈழத் தமிழின அழிப்புப்போரில் இந்தியா பங்கு கொண்டது தனிப்பட்ட ஒரு திட்டமல்ல ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் மீதும் இந்திய ஆளும்வர்க்கம் கொண்டுள்ள பகை உணர்ச்சியின் கொடூர வெளிப்பாடே அது.

 

 குறிப்பாக, தமிழ் நாட்டுத் தமிழர்கள் மீது இந்திய ஆளும்வர்க்கம் கொண்டுள்ள பகையுணர்ச்சியின் நீட்சிதான் ஈழத்தமிழர்கள் மீது அது பாய்ந்ததற்கான அடிப்படைக் காரணம். தமிழகத் தமிழர்களின் தமிழ்த்தேசியத்தன்னுரிமையை மறுத்து, தமிழ்நாட்டைத் தனது காலனியாக வைத்திருப்பதற்குத் தமிழ் ஈழம் இடையூறாய்ப் போய்விடும் என்று இந்தியா ஆளும்வர்க்கம் கருதுகிறது.

 

 இந்தியப் பெருங்கடலில், இலங்கையைத் தன்வசப்படுத்தித் தனது புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தனது விரிவாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் இலங்கையை வளைத்துப் போடுவதற்காக, இந்தியா, சிங்கள இனவெறிக்குத் துணைபோகிறது என்று சிலர் வாதிடுகின்றனர்.

 

 இந்திய ஆளும் வர்க்கத்தின் புவிசார் அரசியல் நலனும், விரிவாதிக்க நோக்கமும் ஈழச்சிக்கலில் இரண்டாம்நிலை முகாமை கொண்டவையாகவே உள்ளன. அதுதான் முதன்மைக்காரணி எனில், வங்காளதேச விடுதலைப் போருக்கு ஏற்பிசைவு வழங்கியதுபோல், ஈழவிடுதலைப்போரை ஏற்று, புலிகளுக்கு உதவிகள் செய்திருக்கலாம்.

 

 பிரபாகரன், கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவை நோக்கி நேசக்கை நீட்டினார். இந்தியா தமிழீழத்திற்கு ஏற்பிசைவு வழங்கினால், இந்தியப்பெருங்கடலில், இந்தியாவின் பாதுகாப்பு அரணாக ஈழம் விளங்கும் என்றார். இக்கருத்து, இந்திய அதிகாரிகளிடம் பல தடவை தெரிவிக்கப்பட்டது. பிரபாகரன் நீட்டிய நட்புக் கையை இந்தியா தட்டிவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த சிங்கள அரசுக்கு உதவியது.

 

 இந்தியா, தமிழர்களை நம்ப அணியமாய் இல்லை. சிங்களர்களையும் முழுமையாய் நம்ப முடியாது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்.

 

 கடந்த காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி இலங்கை, சீனாவுடன் மிக நெருக்கமான உறவு வைத்துள்ளது. வங்காள தேசப்போரின் போது, பாகிஸ்தான் விமானங்கள், இந்திய வான்வழியே பறந்து கிழக்குப் பாகிஸ்தானுக்குப் போக இந்தியா அனுமதிக்கவில்லை. அப்போது கொழும்பு வழியே, பறந்துசெல்ல பாகிஸ்தானை அனுமதித்தது இலங்கை. இப்பொழுது கூட அம்பன் தோட்டா என்ற துறைமுகத்தை, சீனாவுக்குக் கொடுத்துள்ளது இலங்கை.

 

 சீனாவும் இலங்கையுடனான தனது உறவு மிகவும் முன்னுரிமை மிக்கது என்று பகிரங்கமாகக் கூறி வருகிறது. இதெல்லாம் இந்தியாவுக்குத் தெரியாத கமுக்கங்கள் அல்ல. தமிழர்களை நம்புவதைவிட சிங்களரை நம்புவதே மேல் என்று இந்திய ஆளும் வர்க்கம் கருதுகிறது.

 

 இந்தியா, ஈழத்தமிழர்களையும் நம்பவில்லை; தமிழ்நாட்டுத் தமிழர்களையும் நம்பவில்லை.
 தமிழர்களின் நம்பிக்கைக்குரிய முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா ஒருபோதும் தன்னைக் கருதிக்கொண்டதில்லை. அதேபோல் தமிழர்களை நம்பிக்கைக்குரியவர்களாக அது கருதியதுமில்லை.
 மெய்நடப்பு இவ்வாறிருக்க, இந்தியாவைத் தமிழர்கள் நம்புவதும், இந்தியா ஏமாற்றிவிட்டது என்று அதிர்ச்சியடைவதும் நமது ஏமாளித்தனத்தைத் தான் வெளிப்படுத்தும்.

 

 ஆயுதப்போர் நடத்தும் விடுதலைப்புலிகள் பலவகை அரச தந்திர உத்திகளைக் கையாளலாம். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம், இந்தியாவை நம்பினோம், ஏமாற்றிவிட்டது என்று கூறுவது, ஆடு ஓநாயிடம் அடைக்கலம் தேடியதைப் போன்றதுதான்.

 

 காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்று உரிமைகள், கடல் உரிமை, கச்சத்தீவு உரிமைபோன்றவற்றை  இந்தியா எந்நாளும் தமிழர்களுக்கு மீட்டுத்தராது.

 

 இந்த உரிமைகளைப் பறித்துள்ள தேசிய இனங்களுக்கு (மாநிலங்களுக்கு) எதிராகப் பொருளியல் தடை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கவும், உலக அரங்கில், உரிமையோடு இச்சிக்கல்களை எழுப்பி, பல நாட்டு ஆதரவைத் திரட்டவும், தமிழர்களுக்கு இறையாண்மை வரும்போதுதான், இச்சிக்கல்களுக்குத் தீர்வு வரும்.

 

 இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு தமிழர்களுக்கு இருந்திருந்தால், தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோயிருக்காது; ஈழத் தமிழினமும் அழிந்திருக்காது.

 

 தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால், நமக்கொரு படை இருந்திருக்கும். கர்நாடகத்தில் நம்மின மக்கள் மீது கன்னடர்கள் எளிதில் கைவைத்திருக்க முடியாது. ஒகேனக்கலில் நுழைந்து நம் கட்டுமானத் தொழிலாளிகளைத் தாக்கியிருக்க முடியாது. முல்லைப்பெரியாறு அணையில் நம் பொறியாளர்களையும், ஊழியர்களையும் மலையாளிகள்  தாக்கியிருக்க முடியாது. நானூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நம் மீனவர்களைச் சிங்களர்கள் சுட்டுக் கொன்றிருக்க முடியாது.

 

 நாம் பதிலடி கொடுத்திருப்போம் என்பது மட்டுமல்ல் அவற்றைப் பன்னாட்டுச் சிக்கல்கள் ஆக்கிப் பரிகாரம் தேடியிருப்போம். ஐ.நா.மன்றத்தைப் பயன்படுத்தியிருப்போம்.

 

 இப்பொழுது நமது அழுகுரல் உலக அரங்கில் ஒலிப்பதில்லை. ஏன், தமிழ்நாட்டைத் தாண்டிக்கூட போவதில்லை. நமது அழுகுரல் இந்தியாவுக்கும் உருத்தாது; இதர மாநிலங்களுக்கும் உருத்தாது.

 

 ஈழத்தில் இவ்வளவு பெரிய இன அழிப்பு நடத்தியதற்கு இந்தியாவின் எந்த மாநிலமாவது இரக்கப்பட்டு, ஆறுதல் தெரிவித்ததா? தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் தலைவர்கள், பாட்டாளிவர்க்கச் சர்வதேசியம் பேசும் அனைத்திந்தியத் தலைவர்களில் பலர், திராவிட மாநிலங்களின்  தலைவர்கள் என யாருக்குமே  தமிழ் இன அழிப்பு, ஒரு பொருட்டாகத் தெரியவில்லையே. அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையே.

 

 தமிழ்நாடு தனது இறையாண்மையை மீட்காமல்; தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளை மீட்க முடியாது. இந்த இலட்சியத்தோடு மகள் திரள் எழுச்சி  தமிழ்நாட்டில் பீறிட்டுக் கிளம்பாமல் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கும் நம்மால் உறுதியான முறையில் உதவ முடியாது. இதர நாடுகளில் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்காது.

 

 உரிமைகள் மீட்பிற்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கும், தமிழகத்தில் தமிழ்ச் சமூகம் முன்னேறுவதற்கும், சமத்துவ சமூகம் அமைவதற்கும் இந்தியா எதிராக உள்ளது.

 

 இந்திய அரசமைப்புச் சட்டம், 'தமிழர்' என்ற தேசிய இனம் இருப்பதை ஏற்கவில்லை. இது இன அடையாள மறுப்பாகும். தமிழ் மொழி, தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய மொழி என்பதையும் அது ஏற்கவில்லை. இந்தி மற்றும் ஆங்கில ஆதிக்கக் கருவியாகவே அரசமைப்புச் சட்டம் உள்ளது.

 

தேர்தல் சனநாயகம் என்ற பெயரால் இந்தி தேசிய இனத்தின் 'பெரும்பான்மை வாதம்' கோலோச்சுகிறது. தமிழர்களை அவர்களின் வரலாற்றுக்கும், தாயகத்திற்கும், பண்பாட்டிற்கும் தொடர்பில்லாத மிகத்தொலைவிலுள்ள அயல் இனங்களுடன் சேர்த்துத்  தமிழர்களை செயற்கையாக சிறுபான்மையாக்குவது தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சாரம்.

 

மக்களவை என்பது, உண்மையான பொருளில் இந்தி மக்களின் அவையே. தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட உரிமை பறிக்கப்பட்ட பிற தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக் கருவி தான் இந்தியாவின் மக்களவை.

 

தமிழ்நாட்டில் உள்ள சட்டப் பேரவை, பிரித்தானியக் காலனி ஆட்சி உருவாக்கிய மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அதே வடிவம் தான். அயல் இனத்தார் ஆள்கிறார்கள் என்பதை மூடிமறைக்க, மண்ணின் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது போன்ற மாயத் தோற்றத்தை அளிப்பது தான் மாண்டேகு செம்ஸ்போர்டு உருவாக்கிய சட்டமன்றம். அதற்கென்று முழுமையான அரசியல் இறையாண்மை கிடையாது. அன்று போலவே இன்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை ஒரு கங்காணி மன்றமாகவே உள்ளது. தமிழக அரசு என்பது தில்லி ஏகாதிபத்தியத்தின் கங்காணி அரசே.

 

இந்திய அரசமைப்புச் சட்டம் தமிழகத்தின் இயற்கை வளங்களையும், வரி வருமானங்களையும் இந்திய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது. கனி வளங்கள், பெருந்தோட்டங்கள், துறைமுகங்கள், ஏற்றுமதி வருவாய்கள், அனைத்து வகை வரி வருமானங்கள் என எல்லாவற்றையும் இந்திய அரசு பறித்துக் கொண்டு, தமிழகத்தின் கையில் பிச்சைப் பாத்திரத்தைத் திணித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தில்லியில் இருந்து வரும் வரிப்பங்குத் தொகை குறைந்து கொண்டே வருகிறது என்று தமிழகக் கங்காணி அரசு கூட கவலை தெரிவித்துள்ளது.

 

திறந்த சந்தை, இந்தியா ஒரே சந்தை என்ற பெயரால் தமிழ்நாட்டின் தொழிலும் வேளாண்மையும் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளால் சூறையாடப்படுகின்றன.

 

 இந்திய சமூகத்தின், அதேபோல் தமிழ்ச் சமூகத்தின் தனித் தன்மையாக இருப்பது வர்ணசாதி ஒடுக்குமுறை. இவ் வொடுக்குமுறைக்குரிய தத்துவம் பார்ப்பனியம். பார்ப்பனியம் தமிழ்நாட்டில் தோன்றிய மெய்யியல் அல்ல. அதைத் தோற்றுவித்தவர்கள்  தமிழர்களும் அல்லர். அது வடநாட்டில், ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட மெய்யியல்.

 

 இன்றைக்கும் பார்ப்பனியத்தின் தலைமை பீடம் புது தில்லியில் தான் உள்ளது. தமி;ழ் நாட்டில் எவ்வளவுதான், தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை ஏந்திப் பார்ப்பனியத்திற்கு எதிராகப் போராடினாலும் அதனை முற்றிலும் வீழ்த்த முடியவில்லை. அரசுத்துறை, தொழில்துறை, ஊடகத்துறை, கலை இலக்கியத்துறை ஆகியவற்றில் இன்றும் தமிழ்நாட்டில் பார்ப்பனியமே கோலோச்சுகிறது. தமிழ்நாட்டில் செயல்படும் பார்ப்பனியத்திற்கு உயிரும் ஊட்டசத்தும் தில்லித் தலைமை பீடத்திலிருந்து வருகிறது.

 

 இந்திய அரசு, உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகியவை பார்ப்பனியப் பாம்புகள் பதுங்கியிருக்கும் புற்றுகளாகும்.

 

 தமிழ்நாட்டில் எழுச்சி கொண்டுள்ள பார்ப்பனிய எதிர்ப்புச் சூழலுக்கேற்ப, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காதரவாக சிற்சில நடவடிக்கைகளும், சட்டங்களும் வந்தால் கூட, தில்லி ஆதிக்க சக்திகள் அவற்றைச் செல்லாததாக்கிவிடும். இட ஒதுக்கீடு, சேதுக்கால்வாய்த்திட்டம், தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்குதல், பயிற்றுமொழியாக்குதல் போன்றவற்றில் உள்ள தடைகள் இதற்கான எடுத்துக்காட்டுகள்.

 

 தமிழ்நாடு தில்லியின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்வரை, இங்கு பார்ப்பனியத்தை ஒழிக்க முடியாது என்று பெரியார் கூறினார். (பெரியார் பிறந்தநாள் விடுதலை மலர் 1973 செப்டம்பர்-17)

 

 பார்ப்பனியத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது. பார்ப்பனியத்திற்கென்று ஒரு மெய்யியல் இருக்கிறது. (கர்ம, தர்ம, தண்டக்கோட்பாடு. இதுவே வர்ணாசிரம தர்மம்). சாதிக்கென்று தனியே ஒரு மெய்யியல் இல்லை.

 

 தொடக்கக் காலத்தில் தொழில் அடிப்படையில் உருவான சாதி, வர்ணாசிரம தத்துவப் பின்புலம் கிடைத்ததும், நிலைத்து வளர்ந்தது. வர்ணாசிரமத்திலிருந்து நேரடியாகக் கிளைவிடாவிட்டாலும், வர்ணாசிரமத்தின் பின்பலம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த அளவு சாதி நிலைத்திருக்காது.

 

 ஆனால், வளர்ந்து நிலைத்துவிட்ட சாதி, இப்பொழுது வர்ணாசிரமம் மறைந்தாலும் தான் மறையாத அளவிற்கு வேறு சில காரணிகளைக் கொண்டுள்ளது. அரசாங்கச் செல்வாக்கு, எண்ணிக்கை வலு, பொருளியல் மேம்பாடு போன்றவற்றால் ஏற்படும் சமூக மேல் நிலை காரணமாக பார்ப்பனரல்லாத சிற்சில சாதிகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முனைகின்றன. இம்முனைப்புக்கு எதிர் வினையாக, ஒடுக்கப்பட்ட சாதிகளும் சிறுபான்மைச்சாதிகளும், வறிய நிலையில் உள்ள சாதிகளும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முனைகின்றன.

 

 பார்ப்பனரல்லாத சாதிகளின் சமூக ஆதிக்க நிலை என்பது வட்டார அளவில்தான் உள்ளது. அது தமிழகம் தழுவியது அல்ல. அதனால்தான் சில சாதி அமைப்புகள தாங்கள் அரசியல் ஆதிக்கம் பெற, தமிழ்நாட்டை இரண்டாக, மூன்றாகப் பிரிக்கக்  கோருகின்றன.

 

 பார்ப்பனியம் அதாவது வர்ணாசிரமம் அனைத்திந்திய ஆதிக்கம் பெற்றது. அனைத்திந்தியாவிலிருந்து தமிழ்நாடு  வெளியேறினால், வர்ணாசிரமம் ஒழிக்கப்பட வாசல் திறக்கும்.அந்நிலை சாதியை ஒழிக்கும்  சமூகச் சூழலை உருவாக்கும்.

 

 சாதி ஆதிக்கம் மற்றும் தீண்டாமையை  ஒழிக்கத் தனிக்கவனம் செலுத்தாமல் சாதியற்ற சமூகத்தை உருவாக்க முடியாது. சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக அந்தந்த மட்டத்தில் போராடுவதும், தமிழ்த்தேசிய  ஓர்மைப் பண்பை வளர்ப்பதும் சாதி மறையத் துணை செய்யும்.

 

 வர்ணாசிரமம்  இன்று சாதி வழியாகத்தான் செயல்படுகிறது. பார்ப்பனர்கள் ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் சாதியாக இன்று செயல்;படுகிறார்கள். சாதியானது உற்பத்தி முறைகளில் ஏற்படும் எல்லா மாறுதல்களோடும் தன்னை இணக்கப்படுத்திக்கொள்கிறது. நிலக்கிழமை உற்பத்தி முறைக்கு முந்தியது சாதி. நிலக்கிழமை உற்பத்தி முறை வந்தபோது, அதனோடு இணங்கி, சாதி தன்னை வலுப்படுத்திக்கொண்டது.

 

 முதலாளிய உற்பத்தி முறை வளர்ந்தபோது அதனுடன் சாதி தன்னை இணக்கப்படுத்திக்கொண்டது. முதலாளியம் சாதியை இணைத்துக்கொண்டது.

 

 இப்பொழுது உலகமயமும் சாதியும் இணைந்துகொண்டன.

 

 காலகாலமாக உற்பத்தியில் ஈடுபடும் சாதிகள் கீழ்நிலையில் இருக்கின்றன. அதிகாரவர்க்கம் மற்றும் வணிகச்சாதிகள் மேல்நிலையில் இருக்கின்றன. இன்றும் அதே நிலைதான். உற்பத்தியில் ஈடுபடும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகள் கீழ்நிலையிலும் வறுமையிலும் உழலுகின்றன.இச்சாதிகளில் உள்ள சில தனிநபர்கள் முன்னேறியிருக்கலாம். அம்முன்னேற்றம் சராசரித்தன்மையது அல்ல. அதிகார வர்க்கப் பணிகளையும், வணிகங்களையும் செய்;வோர் வளமாகவும் சமூக ஆதிக்க நிலையிலும் உள்ளார்கள். அதிலும் நாடோடித் தன்மை கொண்ட பல்தேசிய வணிகச் சாதிகள செழிப்பாக இருக்கின்றன. வேளாண் உற்பத்தியில் மட்டுமல்ல தொழில் உற்பத்தியிலும் ஈடுபடுவோரைவிட வணிகர்களும், புதிய சேவைத் துறையினரும் (ளுநசஎiஉந ளுநஉவழச) பல்தேசிய நாடோடிகளுமே செல்வம் கொழிக்கிறார்கள். ஆதிக்கம் செலுத்துகிறார்கள். செழிப்பாக இருக்கிறார்கள்.

 

 உலகம் சிலருக்காக மட்டுமே என்பது இன்றைய உலகமயக் கோட்பாடு;. இதுதான் ஆரியத்தின் அடிப்படைக் கோட்பாடு. உலகமயமும் ஆரியமும் ஒன்றின் ஊடாக இன்னொன்று செயல்படுகின்றது. ஓருயிர் ஈருடல் என்பது போல் இரண்டும் ஒன்றையொன்று காதலிக்கின்றன. இரண்டும் உடன்கட்டை ஏறினால் உழைக்கும் மக்களுக்கு நிரந்தர விடிவு வரும்.
 வணிகம் செய்துகொண்டும் பல்தேசிய நாடோடிகளாகவும் உள்ள  சமூகப்பிரிவினர் இந்தியாவில் பார்ப்பனர்கள், மார்வாரி, குசராத்தி சேட்டுகள் ஆகியோரே! உலகமயத்தால் இவர்கள் கொழுத்து வருகிறார்கள்.

 

 தமிழ்நாட்டு தொழில் வணிகம் அனைத்திலும் மார்வாரி, குசராத்தி சேட்டுகள் ஏகபோகம் செலுத்துகிறார்கள். அடுத்த நிலைஆதிக்கத்தை மலையாளிகள்  பெற்று வருகிறார்கள்.

 

 "இந்தியன்"  என்கிற இல்லாத இனத்தைச் சொல்லிக்கொண்டு, அவர்கள் இந்தியா முழுமையையும் தமது தாயகம் போல் ஆக்கிக், கொண்டு, மண்ணுக்குரிய தேசிய இன மக்களைக் குனிய வைத்து அவர்கள் முதுகில் குதிரைச் சவாரி செய்கிறார்கள்.

 

 இவர்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்தால்- அது இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரான வன்முறை என்று இந்தியா நம்மீது பாயும்.

 

 தமிழக வேலைவாய்ப்புகளை மிகுதியாக வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவரகள் பறித்துக்கொள்கிறார்கள். 'இந்தியன்'  என்ற கற்பனை அடையாளத்தால் எல்லா ஆக்கிரமிப்புக் குற்றங்களும் கழுவப்படுகின்றன.

 

 இவ்வாறான அயலார் ஆக்கிரமிப்பு, தமிழர்க்குரிய தாயகத்தின் இருப்பை வினாக்குறியாக்குகிறது. தமிழர் தாயகம் பறிபோகும்  நிலை உள்ளது. இதற்கெல்லாம் இந்தியாதான் காரணம்.

 

 உலகமயத்தை எதிர்க்கும் வலுவான கோட்பாடு தேசிய இனத்தாயக இறையாண்மை மீட்பு தான். அயல் தேச மூலதனக் கழுகுகளை உள்ளே விடாமல் தடுப்பது தேசிய இனத் தாயகக் காப்புதான்.

 

 தமிழ்த்தேச இறையாண்மைதான், மார்வாரி, குசராத்தி, மலையாளிகள் மற்றும் அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களைத் தடுக்கும். தமிழ் மக்களுக்கான தாயகத்தையும், வாழ்வுரிமையையும் பாதுகாக்கும்.

 

 உலகமயம் கொண்டு வந்த மிகப்பெரிய தீங்குகளில் ஒன்று சூழலியல்  பேரழிவு. நிலம், நீர்,காற்று, நெருப்பு, வெளி என்ற ஐம்பூதங்களையும் அது மாசுப்படுத்தி, அதனதன் இயற்கைத் தன்மையைக் கெடுத்துவிட்டது. இதனால் இந்நிலக்கோளம் மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்களும் வாழத்தகுதியற்றதாக மாற்றப்பட்டு வருகிறது.

 

 முதலாளியத்தின் அடிப்படையாக உள்ளது மூலதனம். இலாபம், மேலும் இலாபம், என்ற வெறியும் அதனடிப்படையிலான போட்டியும் அதன் இயங்கு ஆற்றலாக உள்ளது. எல்லாவற்றையும் வீழ்த்தி, வெல்லவேண்டும் என்ற முதலாளிய மனநிலை அது. அது இயற்கையின் கூறுகள் அனைத்தையும் தனது இலாப வேட்டைக்கான ஆதாரங்களாக மட்டுமே பார்க்கிறது.

 

 தேசியத் தாயகம் என்பதை முதலாளியத்திற்குரிய, திறந்தவெளிச் சந்தைத் திடலாக மாற்றுகிறது. அதில்வாழும் மக்களை நுகர்வு வெறிகொண்ட வாடிக்கையாளர்களாக மாற்றுகிறது.

 


 இவ்வாறான உலகமயச் சுரண்டலைக் கொண்டு வருவது இந்தியா. ஆரியத்திற்கும் உலகமயத்திற்கும் நெருக்கமான உறவு உண்டு என்று பார்த்தோம்.இந்த உறவுச் சுற்றுச்சூழலைக் கெடுக்கிறது. சிந்து வெளியில் நிலையான வாழ்வு வாழ்ந்த தமிழர்களின் நீர்நிலைகளையும் வேளாண்மையையும் அழித்தார்கள் ஆரியர்கள். யாகக்குண்டங்களை எழுப்பி, அந்நெருப்பில் உணவுத் தவசங்களையும், ஆடு மாடுகளையும் போட்டு எரித்து வீணாக்கினர். இயல்பிலேயே சுற்றுச்சூழலை கெடுக்கிறது ஆரியம்.

 

 தமிழர்களின் மரபுவழிப்பட்ட தொழில்நுட்பம், சுற்றுச் சூழலைப்பாதுகாப்பதாக உள்ளது. நமது இயற்கை வேளாண்மை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

 

 சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நமது மரபு வழித் தொழில்நுட்பங்களைச் சார்ந்து போராட வேண்டியுள்ளது. இருப்பினும் இந்தியா, அன்றாடம் சூழலைப் பெருமளவில் மாசுபடுத்தும்போது அதிலிருந்து தப்பிக்க, தமிழ்நாட்டின் இறையாண்மையை மீட்க வேண்டிய தேவை உள்ளது.

 

 உலகின் முதல் மொழி என்றும் மூத்த செம்மொழி என்றும் ஆய்வாளர்களால்  கருதப்படும் என்றுமுள தென்தமிழ் தேயவும், இந்தியும் ஆங்கிலமும் கொழுக்கவும் ஆன சூழ்நிலை  தமிழ்நாட்டில் இருக்கிறது. அதற்கான காரணம் இந்தியாவே!

 

 இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்றது ஆளும்வர்க்கம். தற்காப்பு நிலையில் தமிழகத் தலைவர்கள் இந்திக்கு மாற்றாக  ஆங்கிலத்தை ஆட்சி மொழி என்றார்கள். இவ்விரண்டில் எதை ஏற்றுக்கொண்டாலும் தமிழுக்கு அழிவே.

 

 தமிழ்நாட்டிற்குத் தனி இறையாண்மை இருந்திருந்தால், தமிழே ஆட்சி மொழி, கல்வி மொழி என்ற ஒரு மொழிக்கொள்கை செயலுக்கு வந்திருக்கும். மொழிப்பாடமாக ஆங்கிலத்தைக் கற்பது வேறு. அனைத்து நிலையிலும்  ஆதிக்கம் செலுத்தும் மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் நீடிப்பது தமிழையும் தமிழ் இனத்தையும் அரித்து அண்டிப்பிழைக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தடையாகஉள்ளதுஇந்தியாவே!.

 

 இந்திய அரசுக் கட்டமைப்பில் பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் இருப்பதால், இந்தியா பெண் விடுதலைக்கும் எதிராக உள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மகளிர்க்கான இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்குவதற்குக் கூட சாக்குப்போக்குகள் கூறப்படுகின்றன. பெண்களுக்கு சிற்சில உயர்பதவிகளைக் கொடுப்பது மட்டும் பெண்விடுதலைஆகாது. இந்தி மண்டலத்தில் பெண்ணடிமைத்தனம் கூடுதலாக உள்ளது.

 

 தமிழ்நாடு ஒப்பீட்டளவில், பெண் விடுதலைக் கருத்துகளில் முன்னேறிய தேசமாகும்.
 மொழி ஒடுக்குமுறை, வரலாற்றுத் தாயகத்திற்கு ஆபத்து, வர்க்கச் சுரண்டல், உலகமயச் சூறை, வர்ண-சாதி ஆதிக்கம், சூழலியல் பேரழிவு, பெண்ணொடுக்குமுறை முதலிய அனைத்துக்கும் நிலைக்களமாக இந்தியத் தேசியம் இருக்கிறது. இந்தப் புனைவு தேசியத்தின் கொடுங் கையாக இந்திய வல்லரசு செயல்புரிகிறது. பன்னாட்டு முதலாளிகளுடன் இணைந்துள்ள பெருமுதலாளிகள், குறிப்பாக மார்வாடி - குசராத்தி சேட்டுகள் - பார்ப்பனர்கள் - இந்தி ஆதிக்க சக்திகள் இக்கொடுங்கோல் வல்லரசின் ஆளும் சக்திகளாக இருக்கிறார்கள். பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களின் துணைகொண்டுதான் இவர்களது ஆதிக்கம் தொடர முடிகிறது.

 

 எனவே தமிழ்நாட்டு மக்கள் தங்களை அழுத்துகிற எந்தவகை ஒடுகு;குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்றாலும் அதற்கு இந்தியத் தேசியத்தோடு முரண்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.

 

 இந்த ஆதிக்கப் புனைவு தேசியத்திலிருந்து விடுபடுவதற்கு உள்ள மாற்றுவழி தமிழ்த்தேசியம் தான்; இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு படைப்பது தான். அதனால்தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விடுதலைச் சிந்தனைகளும், முற்போக்கு நீரோட்டங்களும் 'தமிழ்த்தேசியம்' என்ற மைய விடுதலை நீரோட்டத்தில் இணைந்தாக வேண்டியது அவசியம் எனத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அனைத்துவகை விடுதலைச் சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்டே தற்சார்புள்ள - புரட்சிகரத் தமிழ்த் தேசியம் உரம் பெறுகிறது.

 

 தமிழ் மண்ணின் முற்போக்கு மரபுகளை உள்வாங்கியும், பெரியார், அயோத்திதாசர்,அம்பேத்கர் ஆகியோரின் சமூகவியல் சிந்தனைகளை ஏற்றும்  செழுமையுற்ற மண்ணுக்கேற்ற மார்க்சியமே நாம் நடத்த விரும்புகிற தமிழ்த் தேசியப் புரட்சிக்கு வழிகாட்டும் நெறி என த.தே.பொ.க. அறிவித்துள்ளது. இதன் போக்கில் அனைத்து வகை முற்போக்குச் சிந்தனைகளையும் வளர்த்தெடுத்துச் செல்ல முயல்கிறது.

 

 வரலாற்றியல், உற்பத்தி ஒழுங்கமைப்பு, சமூக ஒருங்கிணைப்பு போன்ற அனைத்திலும் இனமுரண்பாட்டின் பங்கு, மொழியின் பாத்திரம் ஆகியவற்றைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டியதாகிறது.

 

 "ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே" என்ற மார்க்சிய வரையறுப்பு சரியே என்றாலும், அது முழு உண்மையை விளக்கவில்லை. வர்க்கப் போராட்டத்தைப் போலவே இனப் போராட்டமும் வரலாற்றை வளர்த்திருக்கிறது. வர்க்கச் சுரண்டலும், வர்க்க ஆதிக்கமும் இனச் சுரண்டல், இன ஆதிக்கம் வழியாகவே பல நேரங்களில் செயல்படுகிறது.

 

 சிந்து வெளியில் நிலையான வேளாண் சமூகத்தின் மீது மேய்ச்சல் நாடோடி வர்க்கத்தின் ஆதிக்கம் நிறுவப்பட்டது. தொல் தமிழினத்தின் மீது ஆரிய இன ஆதிக்கம் நிறுவப்படுவதன் வழியாகவே இது நடைபெற்றது.

 

 பல்லவர் ஆட்சிக் காலத்திலிருந்து பேரரசுகள் எல்லாம் நிலக்கிழமை வர்க்க ஆட்சியாக மட்டும் இல்லை. ஆரிய பார்ப்பனிய - வடமொழி மேலாண்மை ஆட்சியாகவும் இருந்தது. பின்னால் வந்த மொகலாயர் ஆட்சி சமீன்தாரி வர்க்க - நிலக்கிழமை வர்க்க ஆட்சியாக மட்டும் இல்லை. பாரசீக - நிலக்கிழமை ஆட்சியாகவே இருந்தது. அதுபோலவே தெலுங்கு மன்னராட்சி ஒரே நேரத்தில் நிலக்கிழமை ஆட்சியாகவும் - தெலுங்கு இன மேலாதிக்க ஆட்சியாகவும் திகழ்ந்தது. மராட்டியர் ஆட்சியும் அதையொத்ததே.

 

 இங்கெல்லாம் ஒடுக்குமுறைக் கருவியான அரசுக்கு வர்க்கத் தன்மை மட்டும் இருக்கவில்லை; இனத்தன்மையும் சேர்ந்தே இருந்தது. வர்க்க ஒடுக்குமுறைக் கருவியாக மட்டுமின்றி இன ஒடுக்குமுறைக் கருவியாகவும் அரசுகள் திகழ்ந்தன.

 

 அமெரிக்க முதலாளியத்திற்குக் கிடைக்கும் குறைந்த கூலித்தொழிலாளர்கள் பெருமளவில் கறுப்பின மக்களே ஆவர். எனவே அமெரிக்க ஆளும் வர்க்கம் வெறும் முதலாளிய வர்க்கம் மட்டுமல்ல் அது வௌ;ளை - முதலாளி வர்க்கம் ஆகும்.

 

 இன்றைய உலகமயக் காலத்தில் மிகை உழைப்புச் சுரண்டலுடன் இணைந்து இன ஆதிக்கமும், நிற ஆதிக்கமும் பெருமளவில் நடப்பதைப் பார்க்கிறோம்.

 

 கூர்ந்து கவனித்தால் இனத்தாழ்ச்சி, நிறத்தாழ்ச்சிக் கருத்தியல்தான் வற்றாத குறைகூலித் தொழிலாளர்களைப் பெற்றுத் தருவது புலனாகும். அதாவது இன ஆதிக்கம், நிற ஆதிக்கம் வழியாகத்தான் வர்க்க ஆதிக்கம் எளிதாக நிறுவப்பட்டுள்ளது.

 

 இந்தியாவில் ஏகபோக முதலாளி வர்க்க ஆதிக்கம் என்பது சாரத்தில் மார்வாடி - குசராத்தி ஆதிக்கம்தான். சனநாயகக் காலத்தில் இங்குள்ள தேவைக்கு ஏற்ப அது இந்தி ஆதிக்கம் வழியாகச் செயல்படுகிறது. உலகமயச் சுரண்டலும், ஆங்கில ஆதிக்கமும் இணைந்து வருவது தற்செயலானதல்ல.

 

 உழைக்கும் வர்க்கம் என்பது பெரிதும் உழைக்கும் சாதியாக இங்கு நிலவுவதும் தற்செயலானதல்ல.

 

 வரலாறு நெடுகிலும் உற்பத்தி உறவும் குல உறவும் ஒன்றாக இருந்து வந்ததைப் பார்த்திருக்கிறோம். 'குலத்தொழில்' என்பதன் அடிப்படை அதுதான். குடிகள், மரபினங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைவுக்கு முக்கியப் பங்காற்றிய மொழியானது, உற்பத்தி ஒழுங்கமைப்பிலும் மையப் பங்காற்றுகிறது.

 

 கருவிகளைப் போலவே கருவிகள் குறித்த அறிவியலும், தொழில் நுட்பமும் உற்பத்தி சக்தியாகும். இந்த அறிவியல் தொழில் நுட்பத்தின் கொள்கலனாகவும், அதனைப் பரப்பும் கடத்தியாகவும் உள்ள மொழியும் உற்பத்திக் கருவிதான். கருவிகளை இயக்கும் மனித உழைப்பாற்றல் உற்பத்தி சக்தியாகத் திகழ்கிறது. எப்போதுமே உழைப்பு என்பது சமூக உழைப்புதான் என்பதை மார்க்சியம் தெளிவுபடுத்துகிறது. இந்த சமூக உழைப்பைச் சாத்தியப்படுத்தும் மையக் காரணியாக மொழியே விளங்குகிறது.

 

 ஆயினும் மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் அல்ல. அதேபோல் மனிதஉறவுகள் வெறும் உற்பத்தி உறவுகள் மட்டுமல்ல.

 

 உற்பத்தி நடவடிக்கைகளுக்கு வெளியேயும் மனிதர்களுக்குச் சமூக உறவுகள் உள்ளன. இந்த சமூக உறவுக்கு மையக் காரணியாக மொழியே உள்ளது.

 

 இவ்வாறு மொழியானது உற்பத்தி ஒழுங்கமைப்பிலும், சமூக ஒருங்கிணைப்பிலும் ஒரு சேரப் பணியாற்றுகிறது. இதனால், வரலாற்று வளர்ச்சியை உந்தித் தள்ளும் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக மொழி திகழ்கிறது.

 

 இதன் காரணமாகத்தான் மொழி விடுதலையும், இனவிடுதலையும், வர்க்க விடுதலையும் ஒரு சேரச் செல்கின்றன.

 

 அதுவும் ஒரு தேசிய இனம் என்ற ஒட்டுமொத்தமே (றுhழடந) அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, அந்த அடிமைத்தளையை அறுக்காமல் வர்க்க விடுதலை, சாதி விடுதலை, பாலின விடுதலை என்ற உள்கூறு விடுதலைகள் தனித்து சாத்தியப்படாது. தனக்கான தேசத்தைப் படைத்துக் கொள்ளாத எந்தத் தேசிய இனமும் வர்க்க விடுதலையையோ பிற விடுதலையையோ சாதிக்க முடியாது.

 

 அதேபோல் இந்த உட்கூறு விடுதலைக்கானக் போராட்டங்களுடன் இணைக்கப்படாத தேச விடுதலைப் போராட்டம் இலக்கற்றதாக முடியும். இரண்டின் ஒருங்கிணைவே புரட்சிகரத் தமிழ்த்தேசியம் ஆகும்.

 

 இவ்வாறான சூழலில் தேச அரசு அமைப்பதே புரட்சிகர சமூக சக்திகளின் மையக் கடமையாக இருக்க முடியும்.

 

அதனால்தான் இங்கு இறையாண்மை உள்ள தமிழ்த் தேசக் குடியரசு நிறுவுவதை மையக் கடமையாக அறிவிக்கின்றோம்.

 

உலகில் நாடுகளுக்கான எல்லை பழைய காலத்தில் அரசர்களின் வாள் வலிமைக் கேற்ப விரியும், சுருங்கும் அல்லது அழியும். இந்த இடையறாத போர் அழிவைத் தவிர்க்க உருவாக்கப்பட்டதே தேச அரசுக் கோட்பாடு. ஒரு தேசியஇனத்தின் தாயகம் அத்தேசிய இனத்திற்கான நாடு. ஒரு தேசத்தின் அடிப்படை அலகு இதுவே.

 

இப்பொழுதுள்ள நாடுகள் பெரிதும் தேசிய இனத்தேசங்களாக உலகில் உள்ளன. இன்றும் அவ்வாறு அமையாத நாடுகளும் உண்டு.

 

பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாட்டை ஏற்றுள்ள கம்யு+னிஸ்ட்டுக் கட்சிகள் ஆளும் நாடுகள், நடைமுறையில் தங்கள் தேசிய நலன்கள் அடிப்படையில் தான் உலக அரச தந்திரத்தை வகுக்கின்றன. பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் அவை உலக அரச தந்திரத்தை வகுப்பதில்லை.

 

எடுத்துக்காட்டாக, கியு+பா, தேசிய விடுதலைப் போர் நடத்தும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், இனஒடுக்குமுறைப் போர் புரியும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் நிலைபாடு எடுத்து வருகிறது. 28.5.2009 அன்று இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்  தொடர்பாக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கை அரசை ஆதரித்து கியு+பா வாக்களித்தது. மார்க்சியக் குடியரசுத் தலைவர்களைக் கொண்ட பொலிவியா, நிகரகுவா ஆகியவையும் அன்று இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்தன. இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்நாடுகள் பேசவில்லை.

 

வியட்நாம், இலங்கைக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. (விரிவாதிக்க வல்லரசான சீனா, இலங்கைக்கு வேண்டிய ஆயுதமும் நிதியும் கொடுத்தது).
கம்யு++னிஸ்ட் நாடுகள் தங்கள் தேசிய நலனுக்காக, இன்னொரு தேசிய இனத்தின் உரிமையைப் பலியிடத் தயங்கவில்லை என்பதையே மேலே காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகள் மெய்ப்பிக்கின்றன.

 

அந்தந்தத்தேசத்தின்   முன்னுரிமை அந்தந்த தேசிய நலனுக்குத்தான் என்ற நிலையே உள்ளது. இதுதான் இன்றைய உலக நிலை. இதில் நமது தேசிய இனத்திற்கும், தேசத்திற்கும் முன்னுரிமை கொடுத்துதான் நாம் செயல்பட வேண்டும். இதனால் பிறநாடுகளில் மனித உரிமைகள்  பறிக்கப்பட்டால் நாம் அதன்மீது அக்கறைக்காட்டக்கூடாது என்று பொருளல்ல. அக்கறை காட்ட வேண்டும்  நாம் நமது தமிழ்த்தேசத்தில் ஊன்றி நிற்கவேண்டும். கம்யூனிஸ்ட்டு நாடுகள் சொந்த தேசியவாதிகளாக  மட்டும் குறுகிப்போனதைத் திறனாய்வு செய்யும் அதே வேளை அந்நாடுகளிலிருந்தும் அந்நாடுகளின் தலைவர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக் கொள்ளத்தவறக்கூடாது.

 

தமிழ்த் தேசியம் தனது விடுதலையைத்தான் கோருகிறதே அன்றி மற்ற நாடுகளைப் போல் பிறதேசியங்களின் நலன்களைப் பலியிடக் கோரவில்லை.

 

தேசிய உணர்ச்சி, தேச விடுதலை இயக்கம் சமூக இயக்கத்தின் உந்து சக்தியாக நீண்டகாலமாகச் செயல்பட்டுவருகிறது. இன்னும் நீண்டகாலத்திற்கு அதன் இயங்குவிசையின் வேகம் நீடிக்கும்.

 

தேசிய விடுதலை இயக்கத்தைப் பிராந்தியவாதம், பிரிவினைவாதம் என்று யார் கொச்சைப்படுத்தினாலும் அவர்கள், ஒடுக்கும் தேசியம் ஒன்றின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

 

ஈழவிடுதலைப் போர் மீண்டும் வேகமாக எழும்! அதை நாம் உறுதியாக ஆதரிப்போம்! அதேபோல் ஈழத்தமிழர்கள் நம்முடைய தமிழ்த்தேசியப் போராட்டத்தை ஆதரிப்பார்கள்.

 

நமது முதன்மை வேலைத்தி;ட்டம் தமிழ்நாட்டில் தேசிய இறையாண்மை மீட்பே.

 

இப்போராட்டம் ஆயுதக்குழுப் போராட்டமாக இருக்க வேண்டியதில்லை. தமிழகச் சூழலில் அப்போராட்டமுறை மக்கள் திரளை ஈர்க்காது.

 

அதே வேளை, நாடாளுமன்ற, சட்டமன்றப்பாதை புதைசேற்றில் கால் வைத்து மூழ்கி விடக்கூடாது. அதனால் தமிழ்த் தேசிய இறையாண்மை மீட்பை முன்னெடுக்க முடியாது. அதற்கு இரண்டகம் மட்டுமே செய்ய முடியும்.

 

மக்கள் திரள் எழுச்சிப்பாதையே தமிழ்த் தேசியப் புரட்சிப்பாதை!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT