உடனடிச்செய்திகள்

Tuesday, May 28, 2013

தமிழ்வழிக் கல்விக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய 300க்கு மேற்பட்டோர் சென்னையில் கைது!

தமிழ்வழிக் கல்விக்காக 
ஆர்ப்பாட்டம் நடத்திய 300க்கு மேற்பட்டோர் சென்னையில் கைது!




தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(28.05.2013) சென்னையில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தைச் சேர்ந்தபல்வேறு கட்சிஅமைப்புகளின் தோழர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.




சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன்பு காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை எதிரொலித்தனர்.

இந்நிகழ்வில், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனர் திரு. குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தைப் பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தலைநகர்த் தமிழ்ச் சங்கக் காப்பாளர் புலவர் த.சுந்தரராசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் திரு சைதை சிவா, உலகத் தமிழ்க் கழக சென்னை மாவட்டத் தலைவர் புலவர் இறையெழிலன், தமிழ்த் தேச மக்கள் கட்சி ஒருங்கிகைணப்பாளர் தோழர் தமிழ்நேயன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், சேவ் தமிழ்ஸ் இயக்கத் தோழர் செந்தில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வேலுமணி, தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.செயப்பிரகாசு நாராயணன், தமிழ் மீட்புக் கூட்டமைப்புத் தோழர் அ.சி.சின்னப்பத்தமிழர், திருவள்ளுவர் வாழ்வியல் மன்றத் தலைவர் கவிஞர் செவ்வியன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்றுக் கைதாகியுள்ளனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், அ.ஆனந்தன், க.முருகன், உதயன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் கு.சிவப்பிரகாசம், பழ.நல்.ஆறுமுகம், மு.தமிழ்மணி, கவித்துவன், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிர் த.பானுமதி, தமிழக இளைஞர் முன்னணி சார்பில் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, மகளிர் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் ம.இலட்சுமி உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

கைதான தோழர்கள் தற்போது, ஆயிரம்விளக்கு பள்ளிக்கூடத்தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.



















(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : வெற்றித் தமிழன்)

Friday, May 24, 2013

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!


தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!



தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, வரும் 28.05.2013 செவ்வாய் அன்று காலை 10 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் முன், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

வரும் 2013 சூன் மாதத்திலிருந்து தமிழக அரசின் 3200 தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும்ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதுஅதாவது, இதுவரை தமிழில் நடத்தப்பட்டு வந்த அறிவியல்சமூகவியல் ஆகிய பாடங்கள் இனி ஆங்கில மொழியில் நடத்தப்படும்.

10.05.2013 அன்று நிதிநிலை அறிக்கையின் கல்விமானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர்வைகைச்செல்வன் அவர்கள், 3200 பள்ளிகளில் மட்டுமல்லபெற்றோர்கள் விரும்பினால் எல்லாப்பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள்தொடங்குவோம் என்று அறிவித்தார்.

ஆங்கிலத்தை மொழிப் பாடமாக(Language) கற்பிப்பதை நாம் ஆதரிக்கிறோம்அம்மொழியைச் சிறப்பாகக் கற்பிக்க ஆங்கில இலக்கியத்தில் பட்டம்பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்இப்போது பெரும்பாலும் வரலாறுபொருளியல்,கணக்குவணிகவியல் ஆகியவற்றைப் படித்த இளநிலைப் பட்டதாரிகளோ அல்லது முதுகலைப் பட்டதாரிகளோ தான் ஆங்கில ஆசிரியராக உள்ளார்கள்.

கணிதம்அறிவியல்சமூகவியல் போன்ற பாடங்களை ஆங்கில வழியில் படிக்கும் போது மாணவர்களுக்கு மனனம் செய்யும் சுமை ஏற்படுகிறதே தவிர,இயல்பாக அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லைஅறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழி மூலம் கல்வி கற்பதே சிறந்த வழி என்று உலகெங்கும் கல்விஇயல் வல்லுநர்களும் குழந்தை உளவியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள்சற்றொப்ப எல்லா நாடுகளிலும் தாய்மொழி வழியிலேயே தொடக்கக்கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விவரைகற்பிக்கிறார்கள்.

தமிழ் தவிர இதரப் பாடங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும்போதுகிராமப்புற மாணவர்கள்அட்டவணை வகுப்பு மாணவர்கள்மிகவும்பிற்படுத்தப்பட்டபிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மற்றும் பெண்கள் இயல்பாகப் புரிந்து கொள்ளாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் சுமைக்குஆளாவார்கள்இவர்கள்  நகர்ப்புறமற்றும் முன்னேறிய வகுப்பு மாணவர்களோடு போட்டியிட முடியாமல் பின்தங்கி விடுவார்கள்தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாகிமனப்பாதிப்பு அடைவார்கள்இதனால் கூடுதல் மதிப்பெண் பெற முடியாமல் பின்தங்கி விடுவார்கள்.

எனவே தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் திணிப்பதைக் கைவிட வேண்டும்.

பெற்றோர்கள் தமிழ்வழி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காமல்ஆங்கில வழி வகுப்புகளுக்காக தனியாரின் மெட்ரிகுலேசன் பள்ளிகளில்சேர்க்கிறார்கள்அதனால் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உள்ளது என்று தமிழக அரசு,ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதற்கான காரணத்தைக் கூறுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் முடிவை எதிர்த்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் பின் வரும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது .

1.   முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்றவேண்டும்.

2.   அரசுப்பள்ளிகளின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும்தண்ணீர்க்கும் துப்புரவிற்கும் தட்டுப்பாடில்லாத கழிவறைகள்விளையாட்டுத்திடல் போன்றவை வேண்டும்விளையாட்டுஓவியம்இசை போன்ற துறைகளுக்குத் தனித்தனி ஆசிரியர் வேண்டும்.

3.   மருத்துவம்பொறியியல்வேளாண்மை போன்ற தொழிலியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்குமுன்னுரிமை தர வேண்டும்ஏனெனில் அவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

மேற்கண்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்அவ்வாறு செய்யாமல் ஆங்கில வழி வகுப்புகளைப் பெருமெடுப்பில் அரசுப் பள்ளிகளில்தொடங்கினால்கிராமப்புறஅட்டவணை வகுப்புமிகவும் பிற்படுத்தப்பட்டபிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும்.குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்படுவர்அத்துடன் தமிழ் மொழியின் அழிவுக்கும் அது வழி கோலும் என்றும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





28.05.2013 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சைதை சிவா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கச் செயலர் தோழர் தியாகு, தமிழர் கழகத் தலைவர் புதுக்கோட்டை இரா.பாவாணன், தமிழ்த் தேச மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்நேயன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய இயக்கத் தோழர் செ.ப.முத்தமிழ் மணி, தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப.வேலுமணி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்பாளர் தோழர் சிவ.காளிதாசன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், கவிஞர் இன்குலாப், தலைநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் த.சுந்தரராசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மக்கள் கல்வி இயக்க அமைப்பாளர் பேராசிரியர் பா.கல்விமணி, உலகத் தமிழ்க் கழக சென்னை மாவட்டத் தலைவர் புலவர் பா.இறையெழிலன், சேவ் தமிழ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கசேந்திர பாபு, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பாளர் திரு. சீ.தினேசு, தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.செயப்பிரகாசு நாராயணன், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தமிழ் மீட்புக் கூட்டமைப்பு திரு. அ.சி.சின்னப்பத்தமிழர், திருவள்ளுவர் வாழ்வியல் மன்ற அமைப்பாளர் கவிஞர் செவ்வியன், எண்ணம் அறக்கட்டளை திரு. கா.தனசேகரன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

இப்போராட்த்தில், தமிழ் மீதும் கல்வி மீதும் அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமென தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

Thursday, May 23, 2013

காவிரி நீர் பெற, எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும் : பெ.மணியரசன்




காவிரி எழுச்சி நாளை கடைபிடித்து, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பேரணி, கூட்டங்களைம நடத்தி, காட்டினால்தான் டெல்லி பயப்படும். அப்போதுதான் தமிழகத்திற்கு காவிரி நீர் பெறமுடியும்என்று தமிழ் தேச பொதுவுடைமை கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து விகடன் இணையத்தில் வெளியான பேட்டியிலிருந்து...

'
காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு தரமாட்டோம்' - கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரின் இந்த அறிவிப்பு தமிழகத்தையே தகிக்க வைத்திருக்கிறது. இதுகுறித்து தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் தலைவரான மணியரசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரின் இந்த அறிவிப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்?

கர்நாடக காங்கிரஸ் தலைவர் வரும் சாகுபடி பருவத்திலும் தண்ணீர் தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார். காவிரி பிரச்னையை பொறுத்தவரை காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க.வாக இருந்தாலும் ஒரே நிலையில் தான் இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இது. இதேபோல் மத்தியில் காங்கிரஸ் கட்சி இருந்தாலும், பா.ஜ.க இருந்தாலும் தமிழ்நாட்டிற்குறிய நியாயத்தை பெற்றுத்தராது. முன்பு மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் பா.ஜ.க.வும் இருந்தது. இதனால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என சொன்னார்கள். இப்போது காங்கிரஸ் தலைவர் இதை சொன்னதில் இருந்து அது உண்மையில்லை என்பது தெரிகிறது. இப்போது முதல்வராக இருக்கும் சித்தராமையா எதிர்கட்சி தலைவராக இருந்தபோது காவிரி குறித்து நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும், சட்டப்பேரவை விவாதத்திலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என சொன்னவர் தான். தமிழர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டியது கிடைக்க தேவையில்ல என்ற மனப்போக்கில் தான் காங்கிரஸ் இருக்கிறது.

காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கெசட்டில் வெளியிட்டால் தண்ணீர் கிடைத்து விடும் என்ற கருத்து குறித்து?

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு. அப்போதே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும். தீர்ப்பை மட்டும் வெளியிட்டு விட்டு அந்த தீர்ப்பின் பரிந்துரையை நிறைவேற்றவில்லை. 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் எங்களின் இந்த தீர்ப்பு வெறும் துண்டு காகிதம் தான்' என்று தீர்ப்பாயம் சொல்லியிருக்கிறது. அதையும் மீறி அப்போதைய கர்நாடக முதல்வர் ஷெட்டர் பிரதமரை சந்தித்து மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்றார். அதையும் காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொண்டது. கர்நாடகம் சட்டவிரோதமாக எதை சொல்லுகிறதோ அதைதான் மத்திய அரசு கேட்கிறது. சட்டத்தை செயல்படுத்த மறுக்கிறார்கள். இந்த ஆண்டு குறுவை, சம்பா சாகுபடிகளை இழந்திருக்கிறோம். அதோடு ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வரைக்கும் காவிரி நீர் தான் குடிநீராக பயன்படுகிறது. அப்படி இருந்தும் கர்நாடக அரசு சட்டப்படி செயல்பட மாட்டோம் என அறிவிக்கிறது. அதை மத்திய அரசு ரசிக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவை தஞ்சைக்கு வரவழைத்து பொன்னியின் செல்வி என்ற பட்டத்தை கொடுத்தார்கள். ஆனால் இந்த வருடம் ஜூன் மாதம் ஆறாம் தேதியோ, அல்லது தி.மு.க ஆட்சி காலத்தில் திறக்கப்பட்ட ஜூன் 12 ஆம் தேதியோ உங்களால் தண்ணீரை திறக்க முடியுமா என ஸ்டாலின் கேட்டுள்ளாரே?

காவிரி உரிமையை மீட்டுத்தர முடியாததில் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கு வேறுபாடு இல்லை. இரண்டு ஆட்சியாளர்களாலுமே காவிரி உரிமையை மீட்டுத்தர முடியவில்லை. இவர்களின் சவால்கள் எல்லாமே வெத்து வேட்டு சவால்கள். இவர்கள் இருவருக்குமே ஒரு கலாச்சாரம் இருக்கு. அது மலிவான பிரச்சாரத்தை செய்து வாக்கு வங்கியை சேர்த்துக்கொள்வது தான். 1998ல் ஆணையம் போட்டபோது அது உதவாக்கரை ஆணையம் என நாங்கள் சொன்னோம். ஆனால் தி.மு.க. ஊர் முழுவதும் இனிப்பு கொடுத்து கொண்டாடியது. 'நியாயம் வென்றது' என கருணாநிதியும் சொன்னார். அப்ப தண்ணீர் கிடைத்ததா. ஜெயலலிதாவை வரவழைத்து பட்டம் கொடுத்த இதே மன்னார்குடி ரெங்கநாதன், அப்போது கருணாநிதியை தஞ்சைக்கு வரவழைத்து திலகர் திடலில் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் காவேரிகொண்டான் எனும் பட்டத்தை கொடுத்தார். அது எப்படி போலியானதோ, பொய்யானதோ, அதேபோல் ஜெயலலிதாவிற்கு பாராட்டு கூட்டம் நடத்தி பட்டம் கொடுத்ததும் போலியானது, பொய்யானது. மொத்தத்தில் இருவருமே போலியான பெருமைகளை சூடிக்கொள்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் சார்பாக பேசப்படும் காவிரிப்பிரச்சினை விவசாயிகளின் நலனுக்காகவா, அரசியல் லாபத்திற்காகவா?

முழுக்க, முழுக்க அரசியல் கட்சிகளின் சுயலாபத்திற்காக தான் பேசுகிறார்கள். அதை தி.மு.க.வும் செய்தது. இப்போது அ.தி.மு.க.வும் செய்கிறது. கடந்த இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கடைமடை பகுதிகளிலும் முப்போகம் விவசாயம் செய்ய முடியாவிட்டாலும், ஒருபோகம் விவசாயம் செய்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். இப்போது கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாய நிலங்களைவிட இப்போது குறைவாகத்தான் இருக்கிறது. இருந்தும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஆறுகளை தூர்வாரி, பாசன முறையை முறையாக பராமரிக்காததால் தான் இந்த நிலை வந்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. அதனால் தான் மேட்டூரில் நீர் நிரம்பி வழிந்த போது கூட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போகவில்லை. அப்படியென்றால் இவர்களின் பேச்சு எப்படி விவசாயிகளின் நலனிற்காக என்று எடுத்துக்கொள்ள முடியும்.

காவிரி பிரச்சினைக்கான தீர்வு தான் என்ன?

தமிழக முதல்வர் நமது அனுபவத்தில் இருந்து புதிய உத்திகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுவதால் மட்டுமே நமக்கு பலன் கிடைக்கவில்லை. அதற்காக வழக்கு போட்டது தவறு என்று சொல்லவில்லை. மத்திய அரசு நம்மை கைகழுவி விடும்போது, மாநிலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் ஒற்றுமையாக இல்லாதது அவர்களுக்கு பலமாக போகிறது. இவர்கள் ஒற்றுமையாக இல்லை. அதனால் இவர்கள் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களை திருப்ப முடியாது. பெரிய அளவில் போராட்டங்கள் வராது. அப்படி வராமல் இருக்கும் பொறுப்பை ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரே பார்த்துக்கொள்வார்கள் என்பதை மத்திய அரசும், கர்நாடகமும் நம்புகிறது. மறைமுகமாக இவர்கள் மத்திய அரசுக்கு உதவி செய்கிறார்கள்.

இதை பொய்யாக்கும் வகையில் முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, ஒருமித்த கருத்தை எடுத்து அனைத்துக்கட்சி குழுவை அழைத்துப்போய் பிரதமரை சந்தித்து அரசியல் அழுத்தம் தரவேண்டும். சட்டத்தை நிறைவேற்றுங்கள் என வற்புறுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம் தமிழகத்திற்கு பொருந்துமா? பொருந்தாதா? என கேள்வி எழுப்ப வேண்டும். அடுத்து காவிரி உரிமை மீட்பு நாள் என்றோ, காவிரி எழுச்சி நாள் என்றோ அதில் ஒரு நாளை குறித்து, அனைத்து கட்சிகளும் சேர்ந்து பேரணிகளும், கூட்டங்களூம் நடத்தி மத்திய அரசையும், கர்நாடக அரசையும் வலியுறுத்த வேண்டும். அப்படி ஒரு நாள் வந்தால் கோடிக்கணக்கான மக்களை திரட்ட முடியும்.

1968
ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அண்ணா அவர்கள், மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி எழுச்சி நாள் என்ற கோரிக்கை நாளை கடைப்பிடித்தார். அப்போது தமிழகம் முழுவதும் கூட்டங்களும் பேரணிகளும் நடந்தது. சேலம் உருக்காலை, தூத்துக்குடி துறைமுகம் இப்படி பல கட்டங்களை வைத்து எழுச்சி நாள் கடைபிடித்தார்கள். இதை அண்ணாவே வழிகாட்டியிருக்கிறார். அண்ணாவின் பெயரை கட்சியின் பெயராக வைத்திருக்கும் முதல்வர் அவர்கள் காவிரி எழுச்சி நாளை கடைபிடித்து, அனைவரையும் ஒன்றுதிரட்டி காண்பித்தாலே டெல்லி பயப்படும். மொத்தத்தில் கர்நாடக அரசியல்வாதிகள் சண்டைபோட்டு கொண்டாலும் காவிரி என்று வரும்போது ஒன்று கூடி விடுகிறார்கள். அந்த ஒற்றுமை இங்கும் வர வேண்டும். அப்போது தான் காவிரி பிரச்சினை தீரும் என்றார்

(விகடன் செய்தியாளர்: வீ.மாணிக்கவாசகம், படங்கள்: கே.குணசீலன்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT