உடனடிச்செய்திகள்

Thursday, March 24, 2011

கட்சிகளைப் புரிந்துக்கொள்வோம்! உழவர்களாய் அணிதிரள்வோம்!

கட்சிகளைப் புரிந்துக்கொள்வோம்! உழவர்களாய் அணிதிரள்வோம்!

தமிழக உழவர் முன்னணி அறிக்கை!

வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் முக்கிய கட்சிகள் அனைத்தும் வேளாண்மையைப் புறக்கணித்திருப்பது உழவர்களுக்கு வேதனை அளிக்கிறது.

அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று முந்திக் கொண்டு இலவசங்கள் வழங்குவதாக அறிவிக்கிறார்களே அன்றி தமிழக மக்களின் வாழ்வாதாரமான வேளாண்மையையும், சிறுதொழில்களையும் பாதுகாப்பதற்கு உருப்படியான திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.

தமிழக வேளாண் சந்தையை பாதுகாப்பது, வேளாண் விளைபொருள்களுக்கு
இலாபவிலை உறுதி செய்வது, வேளாண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது போன்ற வேளாண்மை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் கட்சிகள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகியவை அண்டை மாநிலங்களால் முடக்கப்பட்டு தமிழகம் ஒரு வகை நீர் முற்றுகையில் வைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக்கும், குடிநீர் தேவைக்கும் அடிப்படை ஆதாரமான ஆற்றுநீர் உரிமையை மீட்பதற்கு அண்டை மாநிலங்களுக்கும், இந்திய அரசுக்கும் அரசியல்-பொருளியல் அழுத்தம் கொடுப்பது பற்றி இக்கட்சிகள் சிந்திக்கவே இல்லை.

வற்றிய ஆறுகளில் மணல் அள்ளி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்து கொள்ளையடிப்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபோல் செயல்படுகின்றன.வேளாண் நிலங்கள் சிறப்பு பொருளியல் மண்டலத்திற்காகவும், அடுக்குமாடி கட்டடங்களுக்காகவும் மிக வேகமாக மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த மனை வணிகத்தில் கட்சி வேறுபாடின்றி தேர்தல் தலைவர்கள் அனைத்து மட்டத்திலும் தரகர்களாக செயல்படுகின்றனர்.

வேளாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் உலைவைக்கும் மரபீனி மாற்று விதைகளைப்பற்றி இத்தேர்தலில் போட்டியிடும் பெரியகட்சிகள் எதுவும் கண்டுக்கொள்ளவேயில்லை.

ஒரு ரூபாய் அரிசித்திட்டம், இலவச அரிசித் திட்டம் போன்றவை நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் அழுத்தும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.

இந்திய அரசு வேளாண் மானியத்தையும், வங்கிக் கடன்களையும் பெருமளவு வெட்டியுள்ள சூழலில் தமிழக உழவர்கள் கூட்டுறவு வங்கிகளை மட்டுமே குறைந்த வட்டிக்கடனுக்கு சார்ந்து நிற்கும் நிலை உள்ளது.ஆனால் கூட்டுறவு வங்கிகள் வேளாண் கருவிகளை வாங்க கடன் வழங்குவது பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்து உழவர்களுக்கு வேளாண் கடன்கள் தாரளமாக வழங்குவது பற்றி கட்சிகள் கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பெரும்பாலான கட்சிகள் வேளாண்மையையும் உழவர்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டன. இலவ சங்கள் அறிவித்தும் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தும் பதவியைப் பெறுவது என்பது மட்டுமே அவர்கள் கடைபிடிக்கும் அரசியல் பாதையாக உள்ளது. எந்தத் தேர்தல் கட்சியிலும் உழவர்கள் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வலுவுள்ள சக்தியாக இல்லை.ஆனால் கிராமப்புற வாக்காளர்கள் தான் எந்தத் தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பவர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டு உழவர்கள் தங்கள் உரிமைகளையும் நலன்களையும் மறந்து இவ்வாறான கட்சிகளில் கரைந்து பிரிந்து கிடப்பதே இந்த அவல நிலைக்கு முதன்மையான காரணமாகும்.

இனியாவது உழவர் பெருமக்கள் இந்தத் தேர்தல் சூதாட்ட அரசியலைப் புரிந்துக் கொண்டு கட்சிகளுக்கு அப்பால் அணிதிரண்டு உரிமைகளை வலியுறுத்தும் மாற்று அரசியல் சக்தியாக மாற வேண்டும்; உழவர்களாய் அணிதிரளவேண்டும் என தமிழக உழவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
சி.ஆறுமுகம்,
செயலாளர்,
தமிழக உழவர் முன்னணி

23.03.2011

Wednesday, March 23, 2011

இந்திய அரசின் தேர்தலைப் புறக்கணிப்போம் - பெ.மணியரசன் அறிக்கை!


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயுற்குழுக் கூட்டம் 20-03-2011 அன்று திருச்சியில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கி.வெங்கட்ராமன், கோ.மாரிமுத்து, நா.வைகறை, அ.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் கட்சிகள் வாக்காளர்களுக்கு கையு+ட்டுக் கொடுப்பதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகின்றது. தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் தேவை. ஆனால், தடுப்பு நடவடிக்கை என்ற பெயாpல் தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில் அத்துமீறிச் செயல்படுவதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சொந்த செலவுகளுக்கும், வணிகம் மற்றும் தொழில் காரணங்களுக்கும் சாதாரண தொகை எடுத்துச் செல்வோரிடம் அதற்கான ஆவணம் கேட்பதும், ஆவணம் இல்லையென்று அத்தொகையினை பறிமுதல் செய்வதும் அராஜகமாகும். ரூ. 80,000ஃ-இ ரூ. 2 இலட்சம், ரூ 5 இலட்சம், போன்ற மிகக் குறைந்த தொகைகளையும், சட்டப்படி எடுத்துச் செல்லப்படாதத் தொகை என்று கூறி பறிமுதல் செய்துள்ளனர். இப்படிப்பட்ட குறைந்த தொகைகளுக்கு சட்டப்படியான ஆவணம் என்ன இருக்க முடியும்?

கும்பகோணம் - நாச்சியார் கோயில் பகுதியிலிருந்து வழக்கமான தங்கள் விற்பனைக்காக கைவினைஞர்கள் செய்து கொடுத்த 60 வெண்கல குத்துவிளக்குகளைக்கூட பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் தனக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தை ஒரு காட்டாட்சி தர்பார் நடத்த பயன்படுத்தக் கூடாது.

கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது, எந்த வகையான சுவரொட்டியும் ஒட்டக்கூடாது என்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட சுவரொட்டிகள் கூட ஒட்டக்கூடாது என்றும் தனியார் சுவாpல் உரிமையாளாpன் அனுமதியுடன்கூட விளம்பரம் செய்யக் கூடாது என்றும் மண்டபங்களிலோ அனுமதிக்கப்பட்ட திடல்களிலோகூட கூட்டம், கருத்தரங்கம் போன்றவை நடத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடத்தும் கலகமாகும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, அமைப்பு நடத்தும் உரிமை, பரப்புரை உரிமை ஆகியவற்றைத் தடை செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கும் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சர்வாதிகார ஆட்டம் போடும் காவல்துறைக்கும் எங்கிருந்து அதிகாரம் வருகிறது?

தேர்தல் ஆணையம் தனது அதிகார வெறியைக் காட்ட ஆசைப்படுகிறதே தவிர தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையைச் சாpவர செய்ய அக்கறை காட்டவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் தமிழ்நாட்டில் எல்லா கட்சிகள் மற்றும் கட்சி சார்பற்றவர்கள் முறையிட்டும்கூட தேர்தல் தேதியை மாற்றாமல் மாணவர்களின் தேர்வு காலத்தில் தேர்தலை நடத்துவதாகும்.

இரண்டு மாதங்களுக்கு மட்டும் நடத்தும் இந்த சா;வாதிகார அற்பத்தனங்களை தோ;தல் ஆணையம் கைவிட்டு தன்னை அரசமைப்புச் சட்ட வரம்பிற்கு உட்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மக்களின் அடிப்படை உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது. அதேவேளை தோ;தல் கட்சிகள் வாக்காளா;களைக் கவர கையு+ட்டு கொடுப்பது உட்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றின் மீது சட்டப்படியான, முறையான நடவடிக்கைகள் எடுப்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வரவேற்கிறது.

2. தேர்தலைப் புறக்கணிப்போம்!

தமிழ்நாடு சட்டமன்றம் என்பது இறையாண்மையுள்ள அமைப்பு அல்ல. இந்திய அரசிற்கு கங்காணி போல் செயல்படக் கூடிய தன்மையுடையது. எந்தக் கட்சி தோ;தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் தமிழா;களின் உரிமைகளையோ, நலன்களையோ பாதுகாக்கும் அதிகாரம் அதற்கு இல்லை. அதிகாரமற்ற சட்டமன்றத்திற்கு போட்டியிடாத தோடு மட்டுமின்றி எவருக்கும் வாக்களிப்பது இல்லை என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முடிவெடுத்துள்ளது.

இந்நிலைபாட்டை விளக்கி தமிழகம் முழுவதும் பரப்புரை செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

3. ஆலுக்காஸ் மறியல் போராட்ட வழக்கைத் திரும்பப் பெறுக!

தமிழகத்தில் பெருகிவரும் மார்வாடிகள், மலையாளிகள் உள்ளிட்ட அயலார் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கடந்த 09.03.2011 அன்று தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நிறுவனம் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட தோழா;கள் மீது தனியார் சொத்தழிப்பு சட்டப் பிரிவு 3(1) கீழும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 143, 188 ஆகியவற்றின் கீழும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து 120 தோழா;களை திருச்சி நடுவண் சிறையில் அடைத்தது.

கா;நாடகம். கேரளம், மராட்டியம், போன்ற மாநிலங்களில் மாநில உரிமைகளுக்காக மக்கள் போராடும் போது அவா;கள் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளைப்போட்டு சிறையில் அடைப்பது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இனத்துரோக ஆட்சிகள் மண்ணின் மக்களுக்காகப் போராடும் போது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சிறையில் அடைக்கிறது. இச்செயலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆலுக்காஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Wednesday, March 16, 2011

ஆலுக்காஸ் மறியலில் கைது செய்யப்பட்ட த.தே.பொ.க.வினர் 124 பேர் பிணையில் விடுதலை!

மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை மறியல் போராட்டத்தில் கைதான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் 124 பேர் நேற்று(15.09.2011) மாலை பிணையில் விடுதலை செய்ப்பட்டனர்.
தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வெளிமாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த இழிவை துடைக்கும் நோக்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சையில் இயங்கி வந்த மலையாள ஆலுக்காஸ் நகைக்கடையை கடந்த 09.03.2011 அன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது.
பலநூறு பேர் கலந்து கொண்ட அப்போராட்டத்தின் போது ஆலுக்காஸ் நகைக்கடை மூடப்பட்டது. முடிவில், போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மெற்பட்ட உணர்வாளர்களை தமிழக காவல்துறை பொய்வழக்குப் போட்டு கைது செய்தது. 124பேர் திருச்சி நடுவண் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தமிழா; உரிமைக்காகப் போராடிய உணர்வாளர்களை காவல்துறை கைது செய்ததை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் த.தே.பொ.க.வினர் சுவரொட்டி பிரச்சார இயக்கத்தை நடத்தினர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு செசன்ஸ் நீதிமன்றம் பிணை மறுத்தது. பின்னர், மாவட்ட நீதிமன்றத்தில் பிணை மனு மேல் முறையீடு செய்யப்பட்டது. மாவட்ட நீதிமன்ற நீதிபதி தோழர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று(15.03.2011) மாலை திருச்சி நடுவண் சிறையிலிருந்து த.தே.பொ.க. தோழர்கள் 124 பேரும் விடுதலையாயினர். சிறை வாயிலில், அவர்களை வரவேற்க பலநூறு த.தே.பொக. தோழர்களும் தலைவர்களும் கூடியிருந்தனர்.
தமிழ்த் தேசப் பொதுசுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கி.வெங்கட்ராமன், குழ.பால்ராசு, வழக்கறிஞர் கரிகாலன், சிவராஜ் உள்ளிட்டோர் விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு அளித்துப் பேசினர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகர த.தே.பொ.க. செயலாளர் இராசு.முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, தஞ்சை நகர த.இ.மு. செயலாளர் செந்திறல் உள்ளிட்ட விடுதலையான 124 தோழர்களுக்கும் வந்திருந்த உணர்வாளர்கள் பாராட்டுத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.








Wednesday, March 9, 2011

மலையாள ஆலுக்காசை வெளியேற்று! ஒளிப்படக் காட்சிகள்!


ஆலுக்காசை நோக்கி முன்னேறிய த.தே.பொ.க. தோழர்கள்

த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் பேட்டி

மலையாள ஆலுக்காஸ் மறியலில் ஈடுபட்டோர் மீது பொய்வழக்கு! பெ.மணியரசன் கண்டனம்!

மலையாள ஆலுக்காஸ் மறியலில் ஈடுபட்டோர் மீது பொய்வழக்கு!
சிறையில் அடைப்பு! தமிழக அரசுக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!

ஏற்கெனவே அறிவிப்பு செய்திருந்த படி 09.03.2011 அன்று தஞ்சையில் உள்ள மலையாள ஆலுக்காஸ் நகைமாளிகை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147, 143, 188 மற்றும் தனியார் சொத்து அழிப்பு மற்றும் சேதப் பிரிவு - 3(1) ஆகிய பிரிவுகளில் பிணையில் வர முடியாதபடி காவல்துறை வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பியுள்ளது. இச்செயல் சனநாயக விரோதம் மட்டுமின்றி சட்ட விரோதமும் ஆகும்.

ஆலுக்காஸ் நகை மாளிகையில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. போராட்டக்காரர்களால் சேதம் ஏற்பட்டதாக ஆலுக்காஸ் நிர்வாகம் காவல்துறையில் புகாரும் கொடுக்கவில்லை. தஞ்சை நகரக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மங்கலநாதன் தன்னிச்சையாக, பழிவாங்கும் நோக்கத்தோடு பிணையில் விட முடியாதபடி தனியார் சொத்து அழிப்பு பிரிவை இவ்வழக்கில் சேர்த்துள்ளார்.

வழக்கின்படி சேதம் அடைந்த சொத்தின் விவரங்களை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்யவும் இல்லை.

தமிழ்நாட்டை சுரண்டிக் கொழுத்து மண்ணின் மக்களின் தொழில், வணிக, வேலை வாய்ப்பு ஆகியவற்றை பறித்துக் கொள்ளும் மலையாளி, மார்வாடி மற்றும் பிற அயல் இனத்தாருக்கு சேவகம் செய்து கொண்டு தமிழினத்திற்கு துரோகம் செய்யும் தமிழக ஆட்சி, இப்படிப்பட்ட அதிகாரிகள் பொய் வழக்கு போட, தமிழின உரிமைக்காக போராடுவோரை பழிவாங்க ஊக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது.

பொய் வழக்கு போட்ட தமிழகக் காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட தோழர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

நாள் : 09.03.2011
இடம் : தஞ்சாவு+ர்.

பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


மலையாள ஆலுக்காசை வெளியேற்று! - தஞ்சையில் மறியல் 350 பேர் கைது!

மலையாள ஆலுக்காசை வெளியேற்று!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சையில் மறியல்
350 பேர் கைது!
தமிழ்நாட்டில் நகைவணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள ஆலுக்காஸ் நகை மாளிகையைத் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றக் கோரி இன்று (09.03.2011) காலை 10.30 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆலுக்காஸ் நகை மாளிகை முன்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆலூக்காஸ் நகை மாளிகை முன்பு திரண்ட இனஉணர்வாளர்கள் கையில் த.தே.பொ.க. கொடியை ஏந்தியபடி “வெளியேற்று! வெளியேற்று! மலையாள ஆலூக்காசை வெளியேற்று!” என்று ஆக்ரோசமாக ஒரே குரலில் முழக்கமிட்டனர்.

பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக முழக்கமிட்டுக் கொண்டிருந்த இனஉணர்வாளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரான்சிஸ் ஆலூக்காஸ் நகை மாளிகைக்குள் முழக்கமிட்டுக்கொண்டே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக் குழுவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத ஆலூக்காஸ் நகை மாளிகை நிர்வாகத்தினர் உடனடியாகக் கடையை மூடினர்.

போராட்டக் குழுவினர் அத்தனைபேரும் நகை மாளிகையின் படிக்கட்டிலும் வாசலிலும் சாலையிலும் கீழே அமர்ந்து முழக்கமிடத் தொடங்கினார்கள்.

த.தே.பொ.க. நகரச் செயலாளர் இரா.சு முனியாண்டி, த.இ.மு. தஞ்சை நகரச் செயலாளர் செந்திறல் உள்ளிட்டோர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் அருகாமையிலிருந்த ஜோஸ் ஆலூக்காஸ் கடையை நோக்கி விரைந்தனர். இதையும் எதிர்பார்த்திராத காவல்துறையினர் போராட்டக் குழுவினரைக் கட்டுப்படுத்துவதற்குள் திணறிப் போயினர். போராட்டத்தின் போது நகை மாளிகையின் மீது கற்கள் வீசப்பட்டன. ஆலூக்காசின் விளம்பரப் பலகை கிழிக்கப்பட்டது.

நாற்பது நிமிடங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது. இறுதியில் 3 சிற்றுந்துகள் 2 காவல் வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்களில் போராட்டத்திற்குத் தலைமைவகித்த தோழர் பழ.இராசேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, ஓசூர் மாரிமுத்து, மதுரை ஆனந்தன், த.தே.பொ.க.தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி, த.இ.மு. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் செந்திறல், பூதலூர் ஒன்றிய மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரெ.கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் காமராசு, த.இ.மு.ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ம.கோ.தேவராசன், சிதம்பரம் த.இ.மு. செயலாளர் குபேரன், தோழர்கள் கோவை சங்கர், பரமக்குடி இளங்கோ, குடந்தை விடுதலைச் சுடர், நாகை ரவி, திருத்துறைப்பூண்டி அரசு, காட்டுமன்னார்குடி அருளமுதன், சென்னை நாகராசு, செங்குன்றம் பன்னீர் செல்வம், மன்னார்குடி இரெ.செ.பாலன், மதுரை ராசு, கீரனூர் ஆரோக்கியசாமி, பெண்ணாடம் முருகன், திருச்சி செயலாளர் கவித்துவன், இனியன், மகளிர் ஆயம் தஞ்சை அமைப்பாளர் இலெட்சுமி, பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் மீனா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்டோர் தஞ்சை கீழவாசலில் உள்ள அன்னை திருமணமண்டபத்திற்குக் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தஞ்சையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கும்பகோணம் ஆலூக்காஸ் நகை மாளிகை இன்று மூடப்பட்டது. தஞ்சை மற்றும் குடந்தை நகரங்களைச் சேர்ந்த பொற்கொல்லர்களும் நகை வணிகர்களும் போராட்டக் களத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சென்றனர். குடந்தை விஸ்வகர்மா சங்கத்தினர் தங்கள் பதாகையோடு போராட்டத்திற்கு வந்திருந்தனர்.

இரண்டு நகைமாளிகை முன்பும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. உடனடியாக அதிரடிப்டையினர் வரவழைக்கப்பட்டனர். அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் ஆலூக்காஸ் நகை மாளிகைகள் உள்ள சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடைசி செய்தி கைது செய்யப்பட்ட அத்தனைபேரையும் சிறைக்கு அனுப்புவதற்காக நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.










தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை முன் த.தே.பொ.க. மறியல்!



தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை முன்
த.தே.பொ.க. மறியல்!
350க்கும் மேற்பட்டோர் கைது! கடை மூடப்பட்டது!

மலையாளிகள் நடத்தும் தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை முன் இன்று 09.03.2011 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடந்த மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது.

தமிழகத்தின் தொழில், வணிகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீடித்து வரும் அயல் இனத்தார் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் வகையில், மலையாளிகள் நடத்தும் ஆலுக்காஸ் நகைக்கடை முன் மறியல் நடத்தப்படும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் பாரம்பர்யமாக நகைத் தொழில் செய்து வரும் பொற்கொல்லர்களின் தற்கொலைக்கு வெளிமாநிலத்தவர் இத்தொழிலில் ஆதிக்கம் செய்வதேக் காரணம் என்றும் மலையாளிகள் நடத்தும் ஆலுக்காஸ் நகை நிறுவனத்தின் முன் இதனைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.





அதன்படி, இன்று 09.03.2011 தஞ்சை தென் கீழ் அலங்கத்தில் உள்ள ஜோய் ஆலக்காஸ் மற்றும் பிரான்சிஸ் ஆலுக்காஸ் நகைக்கடன் முன் த.தே.பொ.க. தோழர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மறியிலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் வாக்குவாதம் செய்த போது, கடைக்குள் செல்ல முற்பட்ட பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது.



த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் முனியாண்டி, பு+தலூர் ஒன்றியச் செயலாளர் இரெ.கருணாநிதி, புதுக்குடி காமராசு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை ஆனந்தன், ஓசூர் கோ.மாரிமுத்து, பொதுக் குழு உறுப்பினர்கள் கோவை பா.சங்கர், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, நகரச் செயலாளர் செந்திறல், சிதம்பரம் த.இ.மு. செயலாளர் குபேரன், நாகை இரவி, திருத்துறைப்பு+ண்டி அரசு, கீரனூர் ஆரோக்கியசாமி, பரமக்குடி இளங்கோ, திருச்சி கவித்துவன், மதுரை இராசு, காட்டுமன்னார்க்குடி அருளமுதன், சென்னை நாகராஜன், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் பு+தலூர் மீனா, தஞ்சை இலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கைதாயினர்.

ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை முன் எச்சிரிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், மறியலுக்குப் பின் பிரான்சிஸ் ஆலுக்காஸ் நகைக்கடையும் மூடப்பட்டது. ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலையில் பீகாரிகள் அதிக எண்ணிக்கையில் வேலையில் அமர்த்தபட்டதைக் கண்டித்து த.தே.பொ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.

இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், “இது ஓர் அடையாளப் போராட்டம் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

Monday, March 7, 2011

'வந்தவனெல்லாம் வாழ தமிழ்நாடு இனி திறந்த வீடல்ல” - நா.வைகறை பேச்சு!


”வந்தவர்களெல்லாம் வாழ தமிழ்நாடு இனி திறந்த வீடல்ல” என தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை பேசினார். சென்னை ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலையில் அதிக எண்ணிக்கையில் பீகாரிகள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டதைக் கண்டித்தும், மண்ணின் மக்களான தமிழர்களுக்கு வேலையில் 85 விழுக்காடு முன்னுரிமை கொடுக்கக் கோரியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 05.03.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தமிழர் தன்மானப் பாசறை அமைப்பின் அமைப்பாளர் ஆவடி மனோகரன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, தமிழர் தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் மு.முத்தமிழ்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ”வெளியேற்று வெளியேற்று! வெளியாரை வெளியேற்று!”, ”எங்கள் மண்ணில் நின்று கொண்டு எங்களுக்கே புறக்கணிப்பா? என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிறைவாக, சிறப்புரை ஆற்றிய, நா.வைகறை, 'தமிழ்நாட்டில் வந்தனெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறான். தமிழன் இன்னும் விழிப்புணர்வு பெறாமல் இருக்கிறான். பீகாரில் பீகாரிகள் பீகாரிகளாக இருக்கிறார்கள், கர்நாடகத்தில் கன்னடர்களாக இருக்கிறார்கள், கேரளத்தில் மலையாளிகளாக இருக்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் தான் தமிழர்கள் தமிழர்களாக இல்லாமல் இந்தியனாகவும், திராவிடனாகவும் சீரழிந்து கொண்டிருக்கிறான். இந்த அடிமை நிலைமை மாற வேண்டும்” என்று பேசினார்.

இவ்வார்ப்பாட்டத்தில் திரளான தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.


Friday, March 4, 2011

தமிழர்களை புறக்கணிக்கும் இந்திய அரசு! நாளை(05.03.2011) ஆவடியில் ஆர்ப்பாட்டம்!

தமிழர்களைப் புறக்கணிக்கும் ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலை!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலை உள்ளிட்ட 6 படைக்கலன் தொழிற்சாலைகளுக்காக அண்மையில் சார்ஜ்மென்(Chargeman) உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், அதிகளவில் அயல் மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் வெறும் 15 விழுக்காட்டு அளவிற்கே தமிழர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தமிழர்களை அவர்களது மண்ணிலேயே புறக்கணிக்கும் நடவடிக்கையாகும். இதற்கு அங்குள்ள தொழிற்சங்கங்களே கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆவடித் தொழிற்சாலை மட்டுமின்றி தமிழகத்தில் இயங்கும் பல்வேறு இந்திய அரசுத் தொழிற்சாலைகளிலும் இதே போன்று மண்ணின் மக்களான தமிழர்களைப் புறக்கணிக்கும் நிலை தொடர்ந்து வருகின்றது. திருச்சி திருவெறும்பு+ரில் அமைந்துள்ள இந்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனம் 2007ஆம் ஆண்டு அதிகளவில் மலையாளிகளையும், பீகாரிகளையும் பணியில் அமர்த்தியதைக் கண்டித்து அந்நிறுவனத்தின் வாயிலில் த.தே.பொ.க. போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழர்களைப் புறக்கணிக்கும் போக்கைக் கைவிடக்கோரியும், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் இயங்கும் தொழிற்சாலைகள் அனைத்திலும் மண்ணின் மக்களான தமிழர்களுக்கு 85 விழுக்காட்டு இடங்களை ஒதுக்க வேண்டுமெனக் கோரியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பல்லாண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, ஆவடி திண்ஊர்தித் தொழிற்சாலை நிர்வாகத்தின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் 05.03.2011 அன்று மாலை ஆவடி பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குவார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, தமிழர் தன்மானப் பேரவை அமைப்பாளர் ஆவடி மனோகரன், தமிழர் தேசிய இயக்கம் முத்தமிழ்மணி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தாயகக் காப்பு உணர்வுள்ள தமிழ் இன உணர்வாளர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவை நல்கும் விதமாக அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
போராட்டம் குறித்த தொடர்புக்கு: 9941089659

Wednesday, March 2, 2011

பங்குச் சந்தை வளர்ச்சிக்காகப் போடப்பட்ட நிதிநிலை அறிக்கை - பெ.மணியரசன் கண்டனம்

பங்குச் சந்தை வளர்ச்சிக்காகப் போடப்பட்ட நிதிநிலை அறிக்கை
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

நடுவண் அரசின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்வைத்துள்ள 2011-2012க்கான நிதி நிலை அறிக்கை பங்குச் சந்தை வளர்ச்சியை மையமாகக் கொண்டிருக்கிறதே அல்லாமல் பாடுபடும் மக்களின் வளர்ச்சியை மையமாகக் கொள்ளவில்லை.

உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்ற கற்பனை அமுத சுரபியைப் பற்றிக் கூறியுள்ள நிதியமைச்சர் அதற்குரிய நிதி ஒதுக்கவில்லை. ஆனால் கடந்த ஆண்டு கொடுத்த உணவு மானியத்தில் இருபத்தேழாயிரம் கோடி ரூபாயை வெட்டிக் குறைத்துள்ளார்.

உணவுப் பொருள் விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணம் இணைய (ழடெiநெ)வணிகமாகும். உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அதன் பலன் நுகர்வோர்க்கும் கிடைக்காமல் இடைத்தரகர்கள் ஏப்பம் விடும் இணைய வணிகத்தைத் தடை செய்ய மறுக்கிறது இந்நிதிநிலை அறிக்கை. மிகக் குறைவான எண்ணிக்கையினர்க்கு எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட உள்ள உணவுக் காப்புத் திட்டம், பெருவாரியான மக்களுக்குப் பயன்படப் போவதில்லை.

உழவர்களுக்கு வட்டித் தள்ளுபடி என்று சொல்வது ஒரு மாயமான் திட்டமாகும். வேளாண்மை நன்கு விளைந்து, கட்டுப்படியான விலைக்கு விற்க முடிந்து, கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் வாய்ப்புள்ள உழவர்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வட்டியில் 3 விழுக்காட்டைக் குறைத்துக் கொள்வதாகக் கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி. உழவர்களுக்குக் கடந்த ஆண்டு கொடுத்த உரம், பு+ச்சி மருந்து போன்றவற்றிற்கான இடுபொருள் மானியத்தில் நான்காயிரம் கோடி ரூபாயை இப்பொழுது குறைத்துள்ளார்.

உழவர்களுக்கு உதவி செய்யும் நிதிநிலை அறிக்கை என்று எப்படி இதைக் கூற முடியும்?

உழவர்களுக்கு வழங்கும் கடன் தொகையை ஒரு இலட்சம் கோடி ரூபாய் உயர்த்தியுள்ளதாகக் கூறுகிறார். அக்கடனை உண்மையில் பயிர் சாகுபடி செய்கிறவர்கள்தான் வாங்குகிறார்கள் என்பதற்கான நிபந்தனை எதுவும் வைக்கவில்லை. கடந்த காலங்களில் உழவர் என்ற பெயரில், பெரும் பெரும் கம்பெனிகளே அக்கடன் திட்டத்தைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டன.

உழவர்கள் விளைவிக்கும் பொருள்களுக்கு இலாபவிலை கிடைக்கும் வகையில் அரசே நூற்றுக்கு நூறு விகிதம் கொள்முதல் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படாமல் வேறு என்ன செய்தாலும் அது உழவர்களைப் பாதுகாக்கும் உருப்படியான முயற்சி ஆகாது. ஒவ்வொரு மாநிலமும் தனி உணவு மண்டலமாக்கப்படவேண்டும். தமிழ்நாடு தனி உணவு மண்டலமாக வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டுச் சந்தை முழுக்க முழுக்கத் தமிழக உழவர்களுக்குப் பயன்படும்.

பெட்ரோலியத்திற்கு அளித்து வந்த மானியத் தொகையில் பதினைந்தாயிரம் கோடி ரூபாயை வெட்டிக் குறைத்துவிட்டார் பிரணாப். பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டுள்ளது. எண்ணெய் உற்பத்தி நாடுகளில் சனநாயகத்திற்கான புரட்சி நடந்து கொண்டுள்ளது. எண்ணெய் வரத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். இவை அனைத்தையும் தெரிந்து கொண்டே பதினைந்தாயிரம் கோடி ரூபாய் மானியத் தொகையை வெட்டிக் குறைத்துள்ளார்.

நிதி அமைச்சகம் எண்ணெய்க்கு விதிக்கும் சுங்கவரி, உற்பத்திவரி, ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறு பெட்ரோலிய அமைச்சகத்தை வலியுறுத்தியும், பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார். ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்க்கு விதிக்கும் 5 விழுக்காடு சுங்கவரி அப்படியே நீடிக்கிறது. 1 லிட்டர் டீசலுக்கும் பெட்ரோலுக்கும் விதித்துள்ள 7.5 விழுக்காடு சுங்க வரி அப்படியே தொடர்கிறது. இவை அன்றி, 1 லிட்டர் பெட்ரோலுக்கு விதித்துள்ள ரூ14.35 உற்பத்தி வரியும், ஒரு லிட்டர் டீசலுக்கு விதித்துள்ள சுமார் ரூ4.60 உற்பத்தி வரியும் குறைக்கப்படாமல் அதே நிலையில் நீடிக்கிறது. இந்த வரிகளை பிரணாப் முகர்ஜி கணிசமாகக் குறைத்திருக்க வேண்டும்.

பிரணாப் முகர்ஜி நிதி நிலை அறிக்கையில் கூறியுள்ள படி நடப்பு 2010-2011 நிதியாண்டில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அளித்துள்ள வரிச் சலுகை 88 ஆயிரம் கோடி ரூபாய். வரும் நிதியாண்டில் இது மேலும் அதிகரிக்கும். ஆனால் பெட்ரோலியத்திற்கு வரிக்குறைப்பு செய்ய மறுத்துவிட்டார்.

மிக விரைவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த உள்ளார்கள். இதனால் எல்லா விலையும் உயர உள்ளன.

பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபம், பெருமுதலாளிகளின் வளர்ச்சி ஆகிய உலகமயக் கொள்கைதான் நடுவண் அரசின் நிதிநிலை அறிக்கைக்கு இலட்சிய இலக்காக உள்ளது.

இந்தியாவில் இலாபத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நடுவண் அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்க இலக்கு வரையறுத்துள்ளார் நிதியமைச்சர். மேலும் மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிடிக்குள் பொதுத்துறை நிறுவனங்களைத் தள்ளி விடும் முயற்சி இது.

கருப்புப் பணத்தைப் பிடிக்கவோ, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சட்ட விரோதப் பணத்தை மீட்கவோ உரிய திட்டம் எதுவும் நிதி நிலை அறிக்கையில் கூறப்படவில்லை. ஐந்தம்சத் திட்டம் இதற்காக உருவாக்கவுள்ளதாகப் பொத்தாம்பொதுவில் கூறிக் கொள்கிறார் பிரணாப் முகர்ஜி.

இந்தியாவுக்கு வெளியே பலநாடுகளில் பலரால் சட்டவிரோதப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மொரிசியஸ் நாட்டில் மட்டும் 45விழுக்காடு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்கிறார் பிரணாப். ஒரு சின்னஞ்சிறு நாடு மொரிசியஸ். அங்கு மொத்த சட்ட விரோதப் பணத்தில் சற்றொப்ப பாதித் தொகைப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அத் தொகையைக் கொண்டு வர இரு நிலை வரியை நீக்கிவிட்டு இந்தியா அல்லது வெளிநாட்டில் மட்டும் விதிக்கும் ஒரு முகவரித் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக நிதியமைச்சர் கூறுகிறார். இப்படிச் செய்வதால் வெளிநாட்டில் பதுங்கியுள்ள பணம் வெளியே வரும் என்கிறார். அதாவது அந்தக் கருப்புப் பணத்தைப் பறிமுதல் செய்யும் முயற்சி எதுவும் இல்லை. சீரான வரி விதிக்கும் முயற்சிதான் இருக்கிறது. இந்த அணுகுமுறையால் உருப்படியாக எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

அடுத்துத் தங்கத்தின் மீதான வரியைக் குறைக்க உள்ளார். இதனால் தங்கத்தின் மேலாதிக்கம் வளரவும் அதைப் பதுக்கவும் வழி திறந்து விட்டுள்ளார். இதனால் இதரப் பொருள்களின் விலை உயரும்.

மொத்தத்தில் பங்குச் சந்தை சூதாட்டம் வளரவும் விலைவாசி உயரவும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெருமுதலாளிகள் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டவும் போடப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கை இது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தால் இதைத் தடுக்க முடியும். இல்லையேல் இதைச் சுமக்க வேண்டும்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

உழவர்களை வஞ்சிக்கும் இந்திய அரசின் வரவு-செலவுத்திட்டம்

உழவர்களை வஞ்சிக்கும் இந்திய அரசின் வரவு-செலவுத்திட்டம்
தமிழக உழவர் முன்னணி கண்டனம்

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்வைத்துள்ள 2011-12 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) உழவர்களையும், நுகர்வோரையும் வஞ்சிக்கிற-விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கிற திட்டமாகும்.

வேளாண்மை, உணவு, எரிஎண்ணை போன்றவற்றிற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் வெட்டப்பட்டுள்ளது.வேளாண் மானியம் சென்ற நிதியாண்டின் திருத்தப்பட்ட மதீப்பீட்டை விட ரூ4000 கோடி குறைக்கபட்டுள்ளது. பெட்ரோல்,டீசல் மீதான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி குறைக்கப்படும் என எதிபார்க்கப்பட்டது. ஆனால் பெட்ரோல்-டீசல் மீதான வரிகள் குறைக்கப்படாதது மட்டுமின்றி இவற்றிற்கு அளிக்கப்பட்ட மானியம்
சென்ற ஆண்டை விட ரூ15,000 கோடி குறைக்கபட்டுள்ளது.பெட்ரோல் உற்பத்தி ஆகும் அரபு நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதை யொட்டி உலகச் சந்தையில் எண்ணெய் விலையேற்றம் ஏற்படும் ஆபத்து உள்ளது.இந்நிலையில் இந்திய அரசு இவற்றின் மீதான மானியத்தை குறைப்பது பெட்ரோல்,டீசல் விலையேற்றத்திற்கும்
அதனடிப்படையில் எல்லாப் பொருள்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

வேளாண் மானியம் வெட்டப்பட்டுள்ளதால் வேளாண் இடுபொருள்களின் விலைஉயர்ந்து உழவர்கள் கடும் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த பட்ஜெட்டில் பெரும் தொழில் நிறுவனங்கள் மீதான நேரடி வரி விதிப்பு ரூ11,500கோடி குறைக்கப்பட்டுள்ளது.இத்தோடு சேர்த்தால் கடந்த மூன்றாண்டுகளில் 4இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் மக்கள் மீதான
மறைமுக வரி ஏறத்தாழ ரூ12,000 கோடி உயர்ந்துள்ளது.இதுவும் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும்.

வேளாண்மையை நவீனப்படுத்த கூடுதல் கடன் வசதி செய்வது என்ற பெயரால் ஒதுக்கப்படும் நிதி உழவர்களை சென்றடைவதில்லை என்பது கடந்த சில ஆண்டுகளாக கண்டுவரும் உண்மை.

எடுத்துக்காட்டாக அரசு வங்கிகள் வேளாண்மை கடன் என்ற தலைப்பில் வழங்கிவரும் கடன்களில் 70 விழுக்காடு டிராக்டர் நிறுவனங்கள், விதை கம்பெனிகள், உணவு பதப்படுத்தும் தொழிலில் உள்ள
வெளிநாட்டு மற்றும் இந்திய நாட்டு பெரு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படுகின்றன என்பது அரசே ஏற்றுக்கொண்ட புள்ளிவிவரம் ஆகும். இப்போது நிதியமைச்சர் ஒதுக்கியுள்ள கூடுதல் நிதியும் உழவர்களுக்கு பயன்படப்போவதில்லை.நவீனபடுத்துதல் என்ற பெயரால் தொழில் நிறுவனங்களுக்கே வழங்கப்பட இருக்கிறது..

உணவு மானியம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. உழவர்களிடம் வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து நியாய விலையில் மக்களுக்கு வழங்கும் கடமையிலிருந்து அரசு நழுவி செல்வதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இந்திய அரசின் உழவர் எதிர்ப்பு , நுகர்வோர் எதிர்ப்பு வரவு செலவுத் திட்டத்தை தமிழக உழவர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

வேளாண் மற்றும் உணவு மானியத்தை உயர்த்த வேண்டும் என்றும் 4% வட்டியில் வேளாண்மை கடன் உழவர்களுக்கு வழங்க உறுதியான திட்டங்களை அறிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
அன்புடன்

மா.கோ.தேவராசன்
ஒருங்கிணைப்பாளர்
99423 63856

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT