உடனடிச்செய்திகள்

Wednesday, September 30, 2009

முல்லை பெரியாறு: தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்: மதுரை ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் பேச்சு

இந்திய அரசைக் கண்டித்த மதுரையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டை விட்டு மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்
பெ.மணியரசன் பேச்சு

மதுரை, 29.09.09.

முல்லைப் பெரியாற்று அணைக்கு பதிலாக புதிய அணையைக் கட்டுவதற்கு கேரள மாநிலத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு வனப் பகுதியில் நில அளவை செய்ய கேரள அரசிற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம், தற்பொழுதுள்ள முல்லைப் பெரியாற்று அணைக்கு பதிலாக புதிய அணைக்க கட்டுவதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது உறுதியானது. தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இச்செயலைக் கண்டித்தும், அந்த அனுமதியை இரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று 26.09.09 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று (29.09.09) மாலை 5.00 மணியளவில் மதுரை மேல மாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தோரை த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் இர.இராசு வரவேற்றுப் பேசினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கி உரையாற்றினார்.

"இனிமேல் இந்திய அரசையோ உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையோ நாம் நம்பி பயனில்லை. மாநில அரசு என்பது தமிழர்களின் உரிமைப் பறிப்புகளை மறைத்து திசைத் திருப்பும் அரசாகவே உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற தேர்தல் கட்சிகளையோ நம்பிப் முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க முடியாது. கேரளத்தைப் பொறுத்தவரை முல்லைப் பெரியாறு சிக்கலை இனச்சிக்கலாகவே பார்க்கின்றனர். தமிழர்களுக்கு தண்ணீர் தரக் கூடாது என்று காங்கிரஸ், கம்யுனிஸ்ட் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் உள்ளனர். எனவே நாமும் முல்லைப் பெரியாறு பிரச்சினையை இனப்பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்" என்று அவர் பேசினார்.

மேலும், "இரண்டு நிலைகளில் நாம் போராட வேண்டும். ஒன்று தமிழ்நாட்டிலிருந்து எந்தப் பொருளும் கேரளாவுக்கு போகாமல் மறியல் செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்.மலையாளி நடத்தும் நிறுவனங்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்" என்று அவர் தனது பேச்சில் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில்  தமிழக உழவர் முன்னணியின் பொதுச் செயலாளர் தெ.காசி நாதன், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.எம்.அப்பாஸ், PD-4 முல்லைப் பெரியாறு - வைகை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த இரா.இராமசாமி, PD-3 முல்லைப் பெரியாறு - வைகை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த ந.சி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் முல்லைப் பெரியாற்று அணையால் பாதிப்புக்குள்ளாகும் உழவர்களின் சிக்கல் குறித்து விளக்கிப் பேசினார்கள்.

தியாகி இம்மானுவேல் பேரவை பொதுச் செயலாளர் பு.சந்திரபோஸ், முல்லைப் பெரியாற்று அணையின் முன்னாள் செயற் பொறியாளர் சி.சுதந்திர அமல்ராஜ், தமிழர் தேசிய இயக்கம் மதுரை மாநகரச் செயலாளர் வெ.ந.கணேசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மதுரை மாநகரச் செயலாளர் கதிர் நிலவன், தமிழப் புலிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் நாகை திருவள்ளுவன். மகளிர் ஆயம் மதுரை அமைப்பாளர் மேரி உள்ளிட்டோர் இந்திய அரசைக் கண்டித்து கண்டன உரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக் குழு உறுப்பினர் அ.ஆனந்தன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்க்கு நன்றி கூறினார்.

Thursday, September 17, 2009

இந்திய அரசைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரையில் ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட
ஒப்புதல் அளித்த இந்திய அரசைக் கண்டித்து
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரையில் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, 15.09.09.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிதாக அணை கட்ட கேரள அரசுக்கு இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்திருக்கிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது;
தமிழகத்தின் சட்டப்படியான உரிமையை சட்டத்திற்குப் புறம்பான வழியில் பறிப்பதாகும். இந்திய அரசின் இச்செயலைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

2006-ம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இப்பொழுதுள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது; முதற்கட்டமாக 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம். சிற்றணையில் வலுப்படுத்தும் பணிகள் சிலவற்றைச் செய்தபின் முழு அளவான 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம் என்று ஆணையிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்த கேரள அரசு முரட்டுத்தனமாக மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த இந்திய அரசு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை.

இப்பொழுதுள்ள அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்குத் தடை கோரித் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கேரள அரசு முல்லைப்பெரியாற்றில் புதிய அணைகட்ட வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளலாம் என இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய ஆட்சியாளர்களே இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் உடைப்பதாக உள்ளது.

நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு.ஜெயராம் ரமேஷ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். நடுவண் அரசின் முக்கியத்துறைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே உயர் அதிகாரிகளாக உள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தமிழக உரிமைகளுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.

காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர், ஈழத்தமிழர் உள்ளிட்ட எல்லாச் சிக்கல்களிலும் இந்திய ஆட்சியாளர்களும், இந்திய அரசின் உயர் பதவிகளில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்கள் என்பதைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களும் புரிந்துகொண்டுள்ளார்கள்.

இந்தியாவுக்குள் உள்ள ஒரு மாநில மக்களை எதிரிகள் போல் இந்திய ஆட்சியாளர்களும், கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கருதுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

செயல்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணைகட்டுவது என்பது, முற்றிலுமாக முல்லைப்பெரியாறு உரிமையைத் தமிழகத்திற்கு இலல் hமல் செய்வதற்கான சூழ்ச்சித் திட்டம் தவிர வேறு அல்ல.

வெள்ளையர் ஆட்சியில் 999 ஆண்டுகளுக்கு முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் தமிழகத்திற்கு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதற்காகவே புதிய அணை என்று கேரள அரசு வலை விரிக்கிறது.

பழைய அணையை இடித்தபின், 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் பழைய அணைக்குத்தானே தவிர புதிய அணைக்கு இல்லை என்று கேரள அரசு கைவிரித்துவிடும். புதிய அணையும் உடனடியாகக் கட்டாது.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்குப் பாசன நீர் இல்லாமல் போகும் குடிநீரே இல்லாமல் போகும். தண்ணீர் வரத்தின்றி வைகை அணை முற்றிலும் வற்றி விடும்.

எனவே இந்திய அரசு உடனடியாக, கேரளத்திற்குக் கொடுத்துள்ள ஒப்புதலை இரத்துச்செய்து, செயல்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி 145 அடி தண்ணீர் தேக்க ஆணை இடவேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டும்.

முல்லைப்பெரியாற்றில் இப்பொழுதுள்ள அணையை இடிக்க வகை செய்யும் சூழ்ச்சித்திட்டமான புதிய அணைகட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த இந்திய அரசை எதிர்த்து மதுரையில் 30.09.2009 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Monday, September 7, 2009

தமிழகத்தில் 85 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில்
85 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்

சென்னை, 06.09.09

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திலும் 1956 மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு முன்பிருந்து தமிழகத்தைத் தங்கள் தாயகமாகக் கொண்டு வசிப்பவர்களின் வாரிசுகளுக்கு 85 விழுக்காடு வேலை வாய்ப்பு ஒதுக்க வேண்டும்.
‘மண்ணின் மக்களுக்கே வேலை’ என்ற முழக்கத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பல ஆண்டுகளாக எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்கோரிக்கையை ஓர் அளவில் ஏற்கும் வகையில் இந்திய அரசின் ஊழியர் தேர்வு ஆணையத் தலைவர் திரு. என்.கே.இரவி அண்மையில் (03.09.09) சென்னையில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் அண்மைக்காலமாக மிகமிகக் குறைவாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள் என்ற உண்மையை திரு. இரவி தமது உரை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக வடநாட்டைச் சேர்ந்த இந்திக்காரர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் போன்ற மற்ற அயல் மாநிலங்களைச் சேர்த்தவர்களே தமிழ்நாட்டில் செயல்படும் வருமானவரி அலுவலகங்கள், உற்பத்தி வரி அலுவலகங்கள், தொடர் வண்டித்துறை, பி.எச்.சி.எல். நிறுவனம் போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்க்கப்பட்;டுள்ளனர். இந்த அநீதியைக் கண்டித்தும் தமிழர்களுக்கு 85 விழுக்காடு வேலைக்கு இந்நிறுவனங்களில் ஒதுக்கீடு கோரியும் 2008 மே 20-ஆம் நாள் திருச்சி பி.எச்.இ.எல். ஆலைமுன் த.தே.பொ.க. மறியல் போராட்டம் நடத்தியது.

இப்பொழுது இந்திய அரசின் ஊழியர் தேர்வாணையத் தலைவரே உரிய விகிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் உள்;ர் மக்கள் வேலையில் இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளதானது, நிலைமையின் மோசத்தை உணர்த்துகிறது. தேர்வாணையத் தலைவர் 50 முதல் 75 விழுக்காடு வரை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்;ர் மக்களுக்கான வேலை வாய்ப்பை ஒதுக்கீடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

மண்ணின் மக்களுக்குக் குறைந்தது 85 விழுக்காடாவது வேலை வாய்ப்பை ஒதுக்கீடு செய்வது தான் நீதியாகும். அவ்வாறு ஆணையிடுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஊழியர் தேர்வாணயத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

நாள் : 06.09.09
இடம் : சென்னை

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT