உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழர் ஒன்றுகூடல். Show all posts
Showing posts with label தமிழர் ஒன்றுகூடல். Show all posts

Saturday, September 14, 2019

தமிழீழ மக்கள் உரிமைகளுக்காக செப் 16 அன்று சென்னையில் நடைபெறும் “எழுக தமிழ்” - தமிழர் ஒன்றுகூடல்..!

தமிழீழ மக்கள் உரிமைகளுக்காக செப் 16 அன்று சென்னையில் நடைபெறும் “எழுக தமிழ்” - தமிழர் ஒன்றுகூடல்..!

தமிழீழத்தில் நடைபெற்று வரும் சிங்களமயமாக்கலை உடனே நிறுத்த வேண்டும், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்த வேண்டும், வடக்கு - கிழக்கில் சிங்கள இராணுவமயமாக்கலை நிறுத்த வேண்டும், இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீள்குடியமர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து - தமிழீழத் தாயகத்தில் வரும் 2019 செப்டம்பர் 16 அன்று “எழுக தமிழ்” பேரணி நடைபெறவுள்ளது. அதேநாளில், வட அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்தின் முன்பும், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களும் “எழுக தமிழ்” பேரணிக்கு ஆதரவாகப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனையொட்டி, வரும் திங்களன்று (16.09.2019) காலை 10 மணியளவில் சென்னை - வள்ளுவர் கோட்டத்தில், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை” ஒருங்கிணைப்பில், பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாவலர் முழுநிலவன் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும் ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, September 3, 2018

தடை நீங்கி - மதுரை உயர் நீதிமன்ற அனுமதியுடன் திருச்சியில் சனநாயகம் காத்திடும் ஒன்றுகூடல்!

தடை நீங்கி - மதுரை உயர் நீதிமன்ற அனுமதியுடன் திருச்சியில் சனநாயகம் காத்திட தமிழர் ஒன்றுகூடல்!!
தமிழ்நாட்டில் சனநாயக மறுப்புச் சூழல் நிலவி வரும் நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் “சனநாயகம் காத்திட தமிழர் ஒன்று கூடல்” என்ற தலைப்பில், வரும் 09.09.2018 - ஞாயிறு அன்று மாலை திருச்சியில் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.
 
கடந்த சூலை மாதம் நடத்தப்படவிருந்த இப்பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுகுறித்து முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, உயர் நீதிமன்றம் கூட்டத்திற்கான தடையை நீக்கி அனுமதி வழங்கி ஆணையிட்டது.
 
இதனையடுத்து, தடை நீங்கி - வரும் 09.09.2018 - ஞாயிறு மாலை 6 மணியளவில் திருச்சி உறையூர் குறத்தெருவில் இப்பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகர் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமை தாங்குகிறார். தோழர் வே.க. இலட்சுமணன் வரவேற்கிறார். பெண்ணாடம் திருவள்ளுவர் தப்பாட்டக் கலைக்குழுவினரின் எழுச்சிமிகு கலை நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
 
தமிழர் தேசிய முன்னணி துணைத் தலைவர் வழக்கறிஞர் த. பானுமதி, நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் பெரியார் சரவணன், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை, பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இரா. பிரபு, சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் அ. இரவிக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். தோழர் வே.பூ. இராமராசு நன்றி கூறுகிறார்.
 
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT