Saturday, August 28, 2010
தஞ்சை பெரிய கோவிலுக்குள் ஆழ்குழாய் கிணறு வெட்டத் தடை!
Friday, August 27, 2010
காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு - த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!
காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு!
த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!
ஈரோடு, 27.08.2010.
கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக தோழர்கள் இயக்குநர் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் மீது பிரிவினை தடைசட்டத்தி்ன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு கைதாயினர்.
அவர்களை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் திரண்டு நின்று உணர்ச்சிப் பிழம்பாக வரவேற்பளித்தனர்.
அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அணியைச் சேர்ந்த சிலர், காங்கிரஸ் கொடி கட்டிய மகிழுந்தில் கூட்டத்தினருக்கு இடையே நுழைந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த மகிழுந்துகளை அடித்து நொறுக்கினர்.
இப்பிரச்சினை தொடர்பாக த.தே.பொ.க. ஈரோடு நகரச் செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர் தோழர் மோகன்ராசு, சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த புலிப்பாண்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் இன்று(27.08.2010), தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நம் தோழர்கள் மீது குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப் படாததால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் மற்றும் அவரது இளம் வழக்கறிஞர்கள் கட்டணம் ஏதுமின்றி முன்னிலையாகி வலுவாக வழக்காடினர்.
Wednesday, August 11, 2010
தி.மு.க. குண்டர்களை கைது செய் - பெ.மணியரசன் கண்டன அறிக்கை!
தி.மு.க. குண்டர்களை கைது செய்!
த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை!
சென்னை, 11.08.2010.
செம்மொழி மாநாட்டை விமர்சித்து கட்டுரை வந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் மாத இதழின் விளம்பரச் சுவரொட்டிகளை 10.08.2010 அன்று இரவு 11 மணியளவில் சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் க.அருணபாரதி, கௌரி பாலா, நாகராசு ஆகியோரை தி.மு.க.வைச் சேர்ந்த குண்டர்கள் 6 பேர் கடுமையாக தாக்கி அவர்கள் கொண்டு சென்ற மிதிவண்டியையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.
மாற்று கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க.வின் ஏதேச்சாதிகார வன்முறைகளின் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாக இத்தாக்குதல் நடந்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவா;களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க.வினரின் இந்த வன்முறையைக் கண்டித்து கண்டன இயக்கம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்!
Sunday, August 8, 2010
NEWS: ஒரு கிலோ அரிசி ரூ.100! அதிர்ச்சித் தகவல்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXGPdZOT5Ic0XB3CGmvHY2_tNPdrTd_EN_xkEnzdpfeppUyqyWIYC66cAvyROjA3zHrJ2-31o8ukSX7qGJhxbyXxts1HzqdT88K5azenHFJ-SGtMvRmQhiaGMPIqgQQCFyMWvCSb4xihU/s320/16.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxmwXQ3i1fndQMicGGYknl38osz5ihDgt4jFlU0oCoOdm1MHitnTfx0CcloSNyHTROjOvP1oEHhS6qPscclpcYdaTOWByaW1gUZ7DYuhknbbNnOGS0Zl8Kdf6t1PHmjtVTB-8X1dFeayg/s320/16a.jpg)
Thursday, August 5, 2010
தமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம் - தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை!
தமிழகத்தை உணவுப்பஞ்சம் நெருங்குவதற்குள் நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் பேசினார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று (05.08.2010) காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் இந்திய, தமிழக அரசுகளைக் கண்டித்து நடந்த இவ்வாப்பாட்டத்திற்கு தமிழக உழவா முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் பேசியதாவது:
இதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும். அதனால், இப்போதே நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாட்டு உழவர்களின் குரலை எதிரொலித்த இவ்வார்ப்பாட்டத்தில், திரளான உழவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.