உடனடிச்செய்திகள்
Showing posts with label தாயகப் பாதுகாப்பு. Show all posts
Showing posts with label தாயகப் பாதுகாப்பு. Show all posts

Monday, August 16, 2021

ஸ்டாலின் பெருமிதமும்! சித்தராமையாவின் சீற்றமும்! - ஐயா பெ.மணியரசன் உரை!

ஸ்டாலின் பெருமிதமும்! 

சித்தராமையாவின் சீற்றமும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, August 12, 2021

தேர்தலைப் புறக்கணிப்போர் கோரிக்கை மனு கொடுக்கலாமா? ஐயா பெ. மணியரசன் உரை!

தேர்தலைப் புறக்கணிப்போர் கோரிக்கை மனு கொடுக்கலாமா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, August 10, 2021

"திமுகவின் வெள்ளை அறிக்கை இலாபமா? நஷ்டமா?" 'ழகரம்' ஊடகத்துக்கு..ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"திமுகவின் வெள்ளை அறிக்கை

 இலாபமா? நஷ்டமா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, January 27, 2021

அடுத்தடுத்து வடமாநிலத்தவரால் நடைபெறும் கொலை – கொள்ளை நிகழ்வுகள் : உள்அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit) வேண்டும்! - ஐயா கி. வெங்கட்ராமன் கோரிக்கை!



அடுத்தடுத்து வடமாநிலத்தவரால் நடைபெறும்
கொலை – கொள்ளை நிகழ்வுகள் :
உள்அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit) வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் கோரிக்கை!


தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 

சீர்காழியில், வடநாட்டு நகை அடகு வியாபாரி வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள், அவரது மனைவி மற்றும் மகளை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளனர். நகை வியாபாரி மற்றும் மருமகள்  படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தொடர்புள்ள வடமாநிலக் கொள்ளையர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, ஒருவர் காவல்துறையினரைத் தாக்கியதாகவும், அதனால் அவரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ளவர்கள் நகைகளுடன் பிடிபட்டுள்ளனர். 

கடந்த வாரம், கிருட்டிணகிரி மாவட்டம் - ஓசூரில் இயங்கி வரும் மலையாள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகள் உள்பட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற வடமாநிலக் கொள்ளையர்களை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்குத் துரத்திச் சென்று தமிழகக் காவல்துறையினர் பிடித்து வந்துள்ளனர். 

இதேபோல், சென்னையில் இயங்கிவரும் பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் இருந்து 5 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்ற வடமாநிலக் கொள்ளையர்களை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர். 

இவ்வாறு, அடுத்தடுத்து நடைபெற்று வரும் வடமாநிலக் கொள்ளையர்களின் கொள்ளை மற்றும் கொலைக் குற்றங்கள் பெரும் அச்சமூட்டுகின்றன. தமிழ்நாட்டில் குடியேறும் வடமாநிலத்தவருக்கு எவ்வித பதிவு முறையும் இல்லாததால், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்ட பல கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் குடியேறி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் உள்ளது. 

எந்த விதப் பதிவும் இல்லாததானால் தமிழ்நாடு காவல்துறையினர் பல வழக்குகளில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். தமிழ் மக்கள் தங்கள் சொந்த தாயகத்திலேயே வெளி மாநிலத்தவரால் தமக்கு பாதிப்பு ஏற்படுமென அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

எனவே, தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குடியேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாகத்  தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே குடியேறியுள்ள வெளி மாநிலத்தவரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும். 

மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வெளி மாநிலத்தவர் உள்ளே நுழைய “உள் அனுமதிச்சீட்டு முறை” (Inner Line Permit) இந்திய அரசால் செயல்படுத்தப்படுவதைப் போல், தமிழ்நாட்டிற்குள்ளும் பிற மாநிலத்தவருக்கு உள் அனுமதிச்சீட்டு முறை வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. 
 
தற்போது, வெளி மாநிலத்தவரால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குலைந்து மக்கள் அச்சப்படும் சூழல் நிலவுகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு “உள் அனுமதிச்சீட்டு முறை”யைக் கொண்டு வர வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.         


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


Monday, December 28, 2020

"தமிழ் ஆட்சிமொழி வாரம் கைவிடப்படுகிறதா?" - ஐயா பெ. மணியரசன் உரை..

"தமிழ் ஆட்சிமொழி வாரம் 

கைவிடப்படுகிறதா?"



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் உரை..



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, September 11, 2020

“தமிழக மாணவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகிறார்கள்” - “ஆதான்தமிழ்” இணைய ஊடகத்துக்கு ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!

தமிழக மாணவர்கள்  திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகிறார்கள்”


“ஆதான்தமிழ்” இணைய ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

 ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, August 20, 2020

வேலைக்கான புதிய அனைத்திந்தியத் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களைக் கழித்துக் கட்டும்! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!


வேலைக்கான புதிய அனைத்திந்தியத் தேர்வு
தமிழ்நாட்டு மாணவர்களைக் கழித்துக் கட்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!

பொழுது விடிந்தால் புதிய குண்டு ஒன்றை மக்கள் உரிமைகளின் மீது வீசுவது மோடி அரசின் கொரோனாக் காலக் கொள்கையாகிவிட்டது. அவ்வாறு நேற்று (19.08.2020) புதிய சுமையாக – வேலைக்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது.

முதற்கட்டமாகத் தொடர்வண்டித் துறை, வங்கித் துறை, நடுவண் அரசின் பணியாளர் தேர்வுத் துறை ஆகிய மூன்றுக்குமான ஊழியர் வேலைக்கு இந்திய அரசு அனைத்திந்திய முதல்நிலைத் தேர்வு முறையை அறிவித்துள்ளது.

“தேசியப் பணிசேர்ப்பு முகமை (NRA)” என்ற இந்த அமைப்பு மேற்கண்ட மூன்று துறைகளில் வேலைக்குச் சேர்வதற்கான முதல்நிலைத் தேர்வு நடத்தும். இதில் வெற்றி பெறுவோர் மட்டுமே மேற்படி மூன்று துறைகளும் தனித்தனியே நடத்தும் பணியாளர் வேலைக்கான தேர்வுகளை எழுத முடியும். இந்த இரண்டாம் நிலைத் தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுவர்.

இந்த முதல்நிலைத் தேர்வு, இந்திய அரசின் எல்லாத்துறைகளின் பணி சேர்ப்பிற்கும் மாநில அரசுகளின் பணி சேர்ப்பிற்கும் தனியார் துறைப் பணிகளுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்படும் என்றும் மோடி அரசின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முதல்நிலைத் தேர்வில் முதலில் தோல்வியுறுவோர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குத் திரும்பத் திரும்ப எழுதலாம் என்கிறது இதன் விதிமுறை!

ஒரு வேலைக்கு ஒரு தடவைத் தேர்வெழுதிய மாணவர்களை – இப்போது இரு தடவை தேர்வெழுதும்படி செய்துள்ளது மோடி அரசு! ஆனால், தேர்வை எளிமைப்படுத்தி, மாணவர்களுககு உதவும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்துள்ளது என்று நடுவண் அமைச்சர் ஜவடேகர் செய்தியாளர்களிடம் நேர்காணல் கொடுத்தார். இட்லரின் கோயபல்சு நினைவுக்கு வருகிறார்.

கூடுதலாகச் சுமத்தப்பட்டுள்ள இந்தப் புதிய அனைத்திந்தியத் தேர்வு, ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – கிராமப்புற மாணவர்களை வடிகட்டிக் கழித்துக்கட்டுவதற்கான ஏற்பாடு என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்!

இந்த புதிய அனைத்திந்திய நுழைவுத் தேர்வு இந்திய அரசின் நடுவண் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) மற்றும் என்.சி.இ.ஆர்.ட்டி. (NCERT) பாடத் திட்ட அடிப்படையில் நடத்தப்படும். தமிழ்நாடு அரசின் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இந்த வினாத்தாள்கள் இவர்களின் பாட வரம்புக்கு வெளியே உள்ளவையாக இருக்கும். எனவே, தமிழ்நாட்டு மாணவர்கள் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் இந்த வழியிலும் உண்டு.

இப்போது, இந்திய அரசு நிறுவனங்கள் நடத்துகின்ற வேலைக்கான அனைத்திந்தியத் தேர்வுகளில் மண்ணின் மக்களாகிய தமிழர்கள் எந்த அளவு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதையும், இந்திக்காரர்களும் மற்ற வெளி மாநிலத்தவர்களும் இத்தேர்வுகளில் சற்றொப்ப 95 விழுக்காட்டிற்கு மேல் தேர்வு செய்யப்படுவதையும் ஏற்கெனவே நாமறிவோம்.

புதிய அனைத்திந்திய முதல்நிலை நுழைவுத் தேர்வு வந்துவிட்டால், அந்தந்தத் துறைகள் நடத்தும் தேர்வெழுதும் தகுதியைக் கூடத் தமிழர்கள் பெற முடியாமல் வடிகட்டப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

அடுத்து, மேற்படி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டுத் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளுக்கான தேர்வெழுதத் தாராளமாக வருவார்கள்! தமிழ்நாட்டின் மாநில அரசு மற்றும் தனியார் துறைப் பணிகளும் வடவர்களுக்கே அளிக்கப்படும். தமிழ்நாட்டின் இளையோர் அகதிகளாக அலையும் அவலம் உருவாகும்!

தமிழ்நாட்டு இளையோர்க்கு வேலை மற்றும் மேல்படிப்பு படிக்க வாய்ப்புளைப் பறிப்பது மட்டுமின்றி, அவர்களின் உயிரையும் பறிக்கும் அவலம் ஏற்கெனவே அனைத்திந்திய “நீட்” தேர்வால் நடந்து கொண்டுள்ளது. அண்மையில் கோவையில் சுபஸ்ரீ என்ற மாணவி “நீட்” தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பது அபாய எச்சரிக்கை!

ஒவ்வொரு உரிமைப் பறிப்பிற்கும் தனித்தனியே கண்டனம் தெரிவித்து, அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தி ஓயந்து போவதில் பயன் இல்லை. ஒட்டுமொத்தமாக மோடி அரசு, நமது அனைத்து உரிமைகளையும் பறிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, மக்கள் குறிப்பாக இளையோர் ஒன்று திரள வேண்டும். மண்ணின் மக்கள் உரிமை மீட்பிற்கான மாபெரும் மக்கள் திரள் அறப்போர் எழுச்சிக்கு அனைவரும் அணியமாக வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, August 5, 2020

பொன்மலை இரயில்வே தொழிற்சாலையில் வட இந்தியர்களுக்கு மட்டுமே வேலை தமிழர்கள் புறக்கணிப்பு! - பெ. மணியரசன் கண்டனம்!



பொன்மலை இரயில்வே தொழிற்சாலையில்
வட இந்தியர்களுக்கு மட்டுமே வேலை
தமிழர்கள் புறக்கணிப்பு!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!



திருச்சி பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலையில், ஆர்.ஆர்.பி. மூலம் கிரேடு – 3 தொழில்நுட்பப் பணியாளர்கள் 540 பேருக்கு வேலை வழங்கிட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த 540 பேரில் சற்றொப்ப 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சியவர்கள் பெரும்பகுதி இந்திக்காரர்கள் மற்றும் ஆந்திர – கேரள மாநிலத்தவர்கள் என்றும் தெரிய வருகிறது.

ஏற்கெனவே, தொடர்வண்டித் துறையில் பழகுநர் பணி (ஆக்ட் ஆப்ரண்டிஸ்) பார்த்து, வேலை வழங்கப்படாமல் உள்ள திருச்சி மாவட்ட இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலை வாயிலில், தங்களுக்கு வேலை கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

கொடுமையான கொரோனா பொது முடக்கம் செயல்பாட்டில் இருக்கும் இந்தக் காலத்திலும், வடமாநிலங்களில் இருந்து இந்திக்காரர்களைக் கொண்டு வந்து வேலை கொடுக்கிறார்கள். தகுதியுள்ள தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள்.

திருச்சி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் தொடர்வண்டித் துறையில் பழகுநர் பணியாற்றி வேலையில்லாமல் இருப்போர் சற்றொப்ப 5,000 பேர் இருப்பர் என்று அச்சங்கத்தினர் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள தொடர்வண்டித்துறை உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அனைத்திலும் 90 விழுக்காட்டு வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 2019 மே 3 அன்று, இதே பொன்மலை தொடர்வண்டித்தொழிற்சாலை வாயிலில் இக்கோரிக்கைக்காகப் போராட்டம் நடத்தினோம்.

அப்போராட்டத்தை தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் ஆதரித்தன. அதன் விளைவாக, பழகுநர் (ஆக்ட் அப்ரண்டிஸ் – கிரேட் 4) வேலைக்கு தென்னகத் தொடர்வண்டித்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென்ற புதிய விதிமுறையை தொடர்வண்டித்துறை உருவாக்கியது. அதை வரவேற்றோம்! ஆனால், இப்போது மண்ணின் மக்களின் வயிற்றில் அடிப்பதைப் போல் வடநாட்டுக்காரர்களைக் கொண்டு வந்து வேலை கொடுத்து, தகுதியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களைப் புறக்கணிப்பது மனித நீதிக்கு எதிரானதாகும்!

தொடர்வண்டித்துறையில் பழகுநர் வேலை முடித்து, பணி மறுக்கப்பட்டோர் தங்களுக்குள் சங்கம் ஒன்றை உருவாக்கி, அதன் சார்பில் 07.08.2020 அன்று பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்தக் கொரோனா காலத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த 540 பேருக்கு அளிக்கப்பட்ட பணியமர்த்த ஆணைகளை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டுமென்று தென்னகத் தொடர்வண்டித்துறையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் தலையிட்டு – நடுவண் அரசைத் தொடர்பு கொண்டு - மேற்படி பொன்மலை தொழிற்சாலைக்கான பணித்தேர்வு ஆணையை முழுமையாக இரத்து செய்து, தகுதியுள்ள தமிழ்நாட்டு பணியாளர்களுக்கு வேலை கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக் கட்சிகளும் மக்களும் மண்ணின் மக்களுக்கான இந்த வேலை உரிமையை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT