உடனடிச்செய்திகள்

Thursday, June 17, 2010

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!


ஈழத்தமிழ் இனத்தை உருக்குலைக்கும் இந்திய இலங்கை ஒப்பந்தங்களை நீக்கக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நாளை (18.06.2010) வெள்ளிக்கிழமை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வார்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களை இக்கட்சியின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். அவ்வார்ப்பாட்டத்திற்கு ரெ.கருணாநிதி தலைமை தாங்குகிறார். தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு முன்னிலை வகிக்கிறார். செங்கிப்பட்டியில் 18.06.2010 அன்று மாலை 4 மணியளவில் இவ்வார்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தஞ்சை நகரம், ரயிலடியி்ல் 18.06.2010 அன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. நகரச் செயலாளர் முனியாண்டி தலைமை தாங்குகிறார். தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை கண்டன உரையாற்றுகிறார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் காலை 10 மணிளவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. கிளைச் செயலாளர் சிவ.அருளமுதன் தலைமை தாங்குகிறார். பெண்ணாடத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தற்கு பெரியார் செல்வம் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகிக்கிறார். இவ்விரு இடங்களிலும், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாலை 4 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, வழக்கறிஞர் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

திருத்துறைப்புண்டி கடைத்தெருவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

மதுரை ஜான்சி ராணி புங்கா அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் ரெ.இராசு தலைமை தாங்குகிறார். திருச்செந்தூர் குறும்புரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமை தாங்குகிறார்.

இதே போல், தமிழகமெங்கும் நடைபெறுகின்ற இவ்வார்ப்பாட்டங்களில் திரளான தமிழ் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராகத் தம் உணர்வுகளைப் பதிவு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT