உடனடிச்செய்திகள்

Latest Post

Friday, December 12, 2025

இந்தியத் தேர்தல் ஆணையமே! வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! 2025 திசம்பர் 16 அன்று ஒரே நாளில் - சென்னை மற்றும் திருச்சியில்மாபெரும் தமிழர் ஆர்ப்பாட்டம்!

இந்தியத் தேர்தல் ஆணையமே!

வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே!

சிறப்புத் தீவிர சீராய்வை உடனே நிறுத்து!

தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே!

2025 திசம்பர் 16 அன்று ஒரே நாளில்...

சென்னை மற்றும் திருச்சியில்

மாபெரும் தமிழர் ஆர்ப்பாட்டம்!

காலம் : தி.பி. 2058 கார்த்திகை 30 - 16.12.2025 செவ்வாய் காலை 10.30 மணிக்கு
 
அன்புடையீர்!

வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை
வழங்காதே!, சிறப்புத் தீவிர சீராய்வை உடனே நிறுத்து!, தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே! ஆகிய முழக்கங்களோடு, வரும் 2025 திசம்பர் 16 அன்று ஒரே நாளில், சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையிலும், திருச்சியில் காதி கிராப்ட் (தொடர்வண்டி சந்திப்பு) அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையிலும், மாபெரும் தமிழர் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

உலகத் தமிழர்களின் தாயகம் எனப் போற்றப்படும்
தமிழ்நாட்டிலேயே, தமிழர்கள் அகதிகளாகமாறும்ஆபத்தின் விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, தொழில் – வணிகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, நிலம் போன்ற உடைமைகள் பிடுங்கப்பட்டு, இறுதியாக வாக்குரிமையும் பறிக்கப்படும் ஆபத்து நம்மை நெருங்கி விட்டது!

இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு
வாக்குரிமையை மறுத்துவிட்டு, வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டில் குடியேறியுள்ள பீகாரிகள் உள்ளிட்ட இந்திக்காரர்களுக்கு வாக்குரிமை வழங்கி, அவர்களை தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்களாக மாற்றும் சதித் திட்டத்தை, இந்தியத் தேர்தல் ஆணையம் "சிறப்புத் தீவிர சீராய்வு" (Special Intensive Revision – SIR) என்ற திட்டத்தின் வழியே செய்து கொண்டிருக்கிறது.

வரும்
2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும் இந்த சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டம் (SIR), செயற்கையான முறையில் இந்திக்காரர்கள் உள்ளிட்ட அயல் மாநில வாக்காளர்களை தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவுகிறது. அதன்வழியே,தமிழ்நாட்டு அரசியலில் செயற்கையான குறுக்கீட்டையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

பீகாரில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி 42
இலட்சம் பேரும், அரியானாவில் 25 இலட்சம் பேரும் நம் கண் முன்னேயே வாக்காளர் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அரியானாவின் 10 வாக்குச்சாவடிகளில், பிரேசிலை சேர்ந்த ஒரு நடிகையின் ஒரே புகைப்படத்தைக் கொண்டு போலியான முறையில் 22 வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட செய்தி, தேர்தல் ஆணையம் எந்தளவிற்கு சீரழிந்து கிடக்கிறது என்பதை முகத்தில் அடித்தாற்போல் உணர்த்தியது.

இசுலாமியர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், நலிந்த பிரிவினர் என பீகாரிலும், அரியானாவிலும் தகுதியான வாக்காளர்களை நீக்கியதன் மூலம் பா.ச.க.வுக்கு பணியாற்றிய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டிலோ இலட்சக்கணக்கான தமிழர்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பீகாரிகள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதன் வழியாக அதே பணியை செய்து கொண்டிருக்கிறது.

வேலைக்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் சென்ற வாக்காளர்களை பட்டியலில் இணைப்பது இந்த சீராய்வுத் திட்டத்தின்நோக்கமாக(Point No: 7, Election Commission of India Order No: 23/ERS/2025 dated 24.06.2025) இந்தியத் தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது. இதன் வழியாக, இந்த "சிறப்புத் தீவிர சீராய்வு" (Special Intensive Revision – SIR) திட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்காக தமிழ்நாட்டில் குடியேறியவர்களை தமிழ்நாட்டுப் பட்டியலில் இணைப்பதையே நிறைவேற்றப் போகிறது.

தமிழ்நாடு – இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (https://www.elections.tn.gov.in), சீராய்வு படிவத்தை எப்படி நிரப்புவது எனக் குறிப்பிடுவதற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விளக்க ஆவணத்தில் (காண்க: https://www.elections.tn.gov.in/SIR2026/SIR_EF_ENGLISH.pdf) தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் ஒருவர் இணைந்திடத் தேவையான 13 ஆவணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில்
13ஆவது ஆவணம் - பீகாரின் 2025ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல்!அதாவது, பீகாரி ஒருவர் தனது சொந்த மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அவர் அதை சுட்டிக்காட்டி அங்கிருக்கும் பட்டியலிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு, தமிழ்நாட்டு பட்டியலில் தன்னை சேர்த்துக் கொள்ள விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடு வெளிப்படையாக ஏற்படுத்தித் தரப்படுகிறது.

தமிழ்நாட்டில் பீகாரிகள் மட்டுமின்றி, உ.பி., அரியானா, ம.பி.,
சார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இந்தி மாநிலங்களைச் சேர்ந்த சற்றொப்ப 1 கோடிக்கும் மேற்பட்டோர் குடியேறியுள்ள நிலையில், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டால், தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாக அவர்கள் வலுப் பெறுவார்கள். தமிழ்நாட்டையே நிரந்தர வசிப்படமாகக் கொண்டு இங்கேயே நிலைபெற அவர்கள் அதிகாரம் பெறுவார்கள்.

அதன்பிறகு, அரசு நிர்வாகம், கல்வி, வேலை வாய்ப்புத் தேர்வு அனைத்திலும் இந்தியைத் திணிப்பது தீவிரமாக நடக்கும்.
ஏற்கெனவே உள்ள ஆங்கிலத்தோடு, இந்தியும் சேர்ந்து கொண்டு தமிழர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி விடும்!

தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டுமெனில், தேர்தல் ஆணையம் கொடுக்கும் SIR படிவத்தை உடனே நிரப்பித் தர வேண்டுமாம்.
அதிலோ, 2002ஆம் ஆண்டு வாக்களித்த விவரங்களையோ, அவரது இல்லத்தினர் வாக்களித்த விவரங்களையோ இணையதளத்தில் பெயரைப் போட்டுப் பார்த்து, நாமே தேடித் தர வேண்டுமாம். தேர்தல் அலுவலர்கள் செய்ய வேண்டிய அலுவலகப் பணிகளை, வாக்காளரே செய்ய வேண்டும் என நிர்பந்தித்து, வாக்காளர்கள் அதை சரியாக நிரப்பித் தரவில்லை என்ற போலிக் காரணத்தைக் கூறி, தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது தான் இதன்வழியே நடக்கப் போகிறது.

"சிறப்புத் தீவிர சீராய்வு" திட்டத்தை
எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் ஆளும் தி.மு.க.வோ, அத்திட்டத்தை நிறைவேற்ற தனது மாநில அரசு அதிகாரிகளை வழங்க மாட்டோம் என உறதியாக நின்று அறிவிக்காமல், அத்திட்டத்தை நிறைவேற்றும் களப்பணியாளனாக நின்று கொண்டு, பா..கவுக்கு அடிமை சேகவம் புரிகிறது. அ.தி.மு.க.வோ நேரடியாகவே பா.ச.க. அடிமையாக சீரழிந்து கிடக்கிறது.

பா.
.க.வுக்கு தொடர்ந்து பெரும்பான்மைத் தமிழர்கள் வாக்களிக்க மறுக்கும் நிலையில், இந்திக்காரர்களைத் தமிழ்நாட்டு வாக்காளர்களாக்கி, தமிழ்நாட்டிற்குள்ளேயே பா.ச.க.வுக்கான வாக்கு வங்கியை உருவாக்கிடவே இத்திட்டத்தை முனைப்போடு செயல்படுத்துகிறார்கள். அசாம், திரிபுரா, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மண்ணின் மக்களை விட அதிகளவில் இந்திக்காரர்களைப் படிப்படியாகத் திட்டமிட்டுக் குடியமர்த்தி, செயற்கையான வாக்கு வங்கியை உருவாக்கியதன் வழியே,அங்கெல்லாம் பா.ச.க. – காங்கிரசு போன்ற இந்தித் தலைமை கொண்ட கட்சிகளின் ஆட்சி இப்போது நடக்கிறது.

ஆரியத்துவாபா..க.வுக்கு அடிமை வேலை புரியும் திராவிடக் கட்சிகள், ஏற்கெனவே தமிழ்நாட்டில் இந்திக்காரர்களுக்கு வாக்காளர் அட்டை – குடும்ப அட்டை – ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கி, இந்திய அரசின் தமிழின அழிப்புத் திட்டத்திற்கு துணை போனவைதாம்! இப்போதும் கூட, தமிழர்களை ஏமாற்றுவதற்காக பா.ச.க. எதிர்ப்பு வேடம் போடும் தி.மு.க. போன்ற கட்சிகள், மழைக்காலத்தில் இத்திட்டத்தை நடத்தலாமா என சொத்தைக் காரணத்தைக் கூறிக் கொண்டிருக்கிறதே தவிர, தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து இந்திக்காரர்களிடம் தரப் போகிறார்கள் என்ற உண்மையான காரணத்தை வெளிப்படையாக எடுத்துக் கூறும் துணிவற்றக் கோழைகளாகவே இருக்கின்றனர். எனவே, இந்தத் திராவிடக் கட்சிகளை நம்பி ஒரு பயனும் இல்லை!

எனவே, தமிழர்கள் விழிப்போடு இத்திட்டத்தை
எதிர்த்துக் களம் கண்டு, பேரெழுச்சியை உருவாக்க வேண்டுமென என அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

கோரிக்கைகள்!
 
இந்தியத் தேர்தல் ஆணையமே!

1. சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை உடனே நிறுத்து!

2. வெளி மாநிலத்தவர்க்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டை
வழங்காதே!

தமிழ்நாடு அரசே!

3.
வெளிமாநிலத்தவர்க்கு குடும்ப அட்டை – ஆதார் அட்டை வழங்காதே!

மொழிவழி
மாநிலம்உருவான1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளி மாநிலத்தவரை வெளியேற்று!

4. நாகாலாந்து, மிசோரம்,
அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூரில் உள்ளதைப் போல் தமிழ்நாட்டிற்குள் வெளிமாநிலத்தவர் உள்நுழைந்திட, உள்நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Line Permit – ILP) முறையைக் கொண்டு வா!

5. தமிழர்களுக்கே தமிழ்நாட்டு
வேலைகளை உறுதி செய்திட உடனே சட்டமியற்று!


சென்னையிலும், திருச்சியிலும் நடைபெறும் இப்போராட்டங்களில், தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! வாருங்கள் தமிழர்களே!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Sunday, December 7, 2025

வேளாண்மை காக்க ஓ.என்.ஜி.சியை எதிர்த்துப்போராடிய பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!அநீதித் தீர்ப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

வேளாண்மை காக்க ஓ.என்.ஜி.சியை எதிர்த்துப் போராடிய பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!

அநீதித் தீர்ப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாகப் பெட்ரோலியக் கிணறுகள் தோண்டக் கூடாது, மீத்தேன் எடுக்கக் கூடாது, காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று இயற்கை வேளாண்மை அறிஞர் ஐயா கோ. நம்மாழ்வார் அவர்கள் தொடங்கி வைத்த போராட்டத்தின் தொடர்ச்சியாகக் கடந்த 2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வட்டம் – விக்கிரபாண்டியம் கிராமத்தில் புதிதாகத் தோண்டப்பட்ட பெட்ரோலியக் கிணற்றை எதிர்த்து அவ்வூரில் போராட்டம் நடத்தியதற்காகத் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் திரு. பி.ஆர். பாண்டியன் அவர்களுக்கும், அவ்வூரின் முன்னாள் ஊராட்சித் தலைவர் திரு. செல்வராசு அவர்களுக்கும், 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் தண்டத் தொகையும் விதித்து, திருவாரூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம் நேற்று (06.12.2025) தீர்ப்பு வழங்கியிருப்பது அநீதியாகும்.

 

இப்போராட்டம் காவிரி வேளாண் மண்டலத்தை – பாதுகாத்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுரிமைக் காப்பு நோக்கம் கொண்ட, பொது நலப் போராட்டம் ஆகும். இப்படிப்பட்ட போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடந்தன. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சிறைக்கும் அனுப்பப்பட்டனர். இன்றும் அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடக்கின்றன.

 

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மக்களின் போராட்ட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், திருவாரூர் மாவட்ட சிறப்பு அமர்வு மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், ஓ.என்.ஜி.சி. தரப்பு சாட்டிய குற்றச்சாட்டுகளை அப்படியே ஏற்று அனுமதியின்றி கூடியதற்கு 3 ஆண்டுகள், அனுமதியின்றி ஓ.என்.ஜி.சி. வளாகத்தில் நுழைந்ததற்கு 2 ஆண்டுகள், கொலை மிரட்டல் விடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டுகள், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்கு 5 ஆண்டுகள் என மொத்தம் 13 ஆண்டுகள் தொடர் சிறைத் தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.   

 

பல ஆண்டுகளாக டெல்டாவில் நடந்து வந்த மீத்தேன் எதிர்ப்பு – ஐட்ரோகார்பன் எதிர்ப்பு – புதிதாகப் பெட்ரோலியக் கிணறு தோண்ட எதிர்ப்பு எனப் பல போராட்டங்கள் பல அமைப்புகளால் நடத்தப்பட்டன. பல வழக்குகளில் காவல்துறை, விக்கிரபாண்டியம் வழக்கில் போடப்பட்ட  தண்டனைப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டது. ஆனால், எந்த நீதிமன்றமும் திருவாரூர் மாவட்ட சிறப்பு அமர்வு மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் போல் இப்படிக் கொடூரமான தண்டனைகள் வழங்கவில்லை.

 

இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. சார்பில் வாதிட்ட வழக்கறிஞரின் வாத வேண்டுகோள்களை திருவாரூர் மாவட்ட சிறப்பு அமர்வு மகிளா நீதிமன்ற நீதிபதி அப்படியே ஏற்று, அதைத் தீர்ப்பாக்கி விட்டார் போல் தெரிகிறது. இத்தீர்ப்பு தமிழ்நாட்டின் நீதித்துறையின் பெருமையில் கரும்புள்ளியாகும்.

 

நீதிமன்றமே நீதியைப் பலியிடக் கூடாது. இந்தியாவில் மிச்சம் மீதியாக இருப்பது நீதித்துறை தன்னாட்சிதான். அதற்கும் ஆபத்து வரக்கூடாது. இதுபற்றி சட்டத்துறை வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் – மனித உரிமைச் சிந்தனையாளர்கள் விவாதிப்பது நல்லது. எதிர்காலத்தில் நீதித்துறையில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாமல், நடுநிலையோடு நீதிநெறி நிலைநாட்டப்பட வேண்டும்.


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

==============================



Friday, December 5, 2025

கார்த்திகை தீபத்தை இந்து – முசுலிம்கலகமாக மாற்றுகிறது பா.ச.க.!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் – தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

கார்த்திகை தீபத்தை இந்து – முசுலிம்

கலகமாக மாற்றுகிறது பா.ச.க.!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் –

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்

ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

 

திருப்பரங்குன்றம்  மலையில் கடந்த ஆண்டு வரை வழக்கமாகக் கார்த்திகை தீபம் ஏற்றி வந்த உச்சிப் பிள்யைார் கோயில் பகுதியைக் கைவிட்டு, அந்த மலையில் உள்ள இசுலாமியத் தர்கா அருகில் இவ்வாண்டு 03.12.2025 அன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான பா.ச.க., இந்து முன்னணி உள்ளிட்டவை போராட்டம் நடத்தி வருகின்றன. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், அவசர ஆணைகள் பிறப்பித்து, உடனே தர்கா அருகில் தீபம் ஏற்றுங்கள் என்று கட்டளை இடுகிறார்.

 

இந்த திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் ஏற்றும் சிக்கலை அப்பகுதி பக்தர்கள் யாரும் உருவாக்கவில்லை. இன்று (05.12.2025) இந்துத்துவா அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் நடத்திய கடையடைப்பில் யாருமே கலந்து கொள்ளாததே இதற்கு சான்று! ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்கள் திட்டமிட்டு உருவாக்கியதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலமான 1800களில் இருந்து திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதுதான் கோயிலில் இருந்து பார்த்தால் அனைவருக்கும் தெரியும் இடமாகும். மாறாக, இந்துத்துவா அமைப்பினர் கூறும் தீபத்தூண் என்பது, விளக்கு ஏதுமில்லாத காலத்தில் சாதாரண காலத்தில் விளக்கு எரிய வைக்கப் பயன்பட்ட இடமாகும் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இப்போது, வழக்கத்திற்கு மாறாக, தர்கா அருகிலுள்ள தீபத்தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவாவாதிகள் திடீரென்று வாதிடுகிறார்கள்.

 

இவ்வாறான வாதம் வைக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலும், ஒரு விடை கேட்கிறேன். திருமலை நாயக்கர் ஆட்சியின் படைத் தலைவர் இராமப்பையன் என்பவர்தாம் பழனிமலை முருகன் கோயில் பூசாரிகளாக இருந்த தமிழ் இனப் பண்டாரங்களை நீக்கிவிட்டு, தெலுங்கு பிராமணர்களை அர்ச்சகர்களாக அமர்த்தினார். அதிலிருந்துதான் பழனி முருகன் கோயிலில் பிராமணர்கள் அர்ச்சகர்களாகவும், தமிழர்கள் கருவறையைத் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள்.

 

இந்த அநீதியைச் சரி செய்ய தமிழர் தாயகமான தமிழ்நாட்டில், தமிழ்க் கடவுளான பழனி மலை முருகன் கருவறையில் பழையபடி தமிழ்ப் பண்டார வகுப்பினர் பூசகர்களாக – அர்ச்சகர்களாகச் செயல்பட ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்கள், அரசின் அனுமதியைக் கோருமா?

 

அவ்வளவு ஏன், தமிழ்நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் தமிழர்கள் பூசகர்களாகவும், தமிழ் அர்ச்சனை மொழியாகவும் இருந்தது. மீண்டும் இத்திருக்கோயில்களில் தகுதியுள்ள அனைத்துச் சாதியாரும் ஏற்கெனவே உள்ள சட்டப்படி அர்ச்சகர்கள் ஆவதை பா.ச.க. பரிவாரங்கள் ஏற்றுக் கொள்ளுமா?

 

நாங்கள் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், தமிழ்நாட்டு அனைத்துத் திருக்கோயில்களிலும் தமிழ் கருவறை அர்ச்சனை மொழியாக்கப்பட வேண்டும் என்றும், தகுதியுள்ள அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க உள்ள அரசாணையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், போராடி வருகிறோம். ஆனால், மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் – இரட்டை வேட அரசு, ஆரிய ஆன்மிகத்திற்கு அடிபணிந்து, தமிழ் அர்ச்சனை – தமிழர் அர்ச்சகர் என்ற சட்டப்பூர்வ இரண்டு நீதிகளையும் மறுத்து, ஆரியத்தோடு "ஆமாம் சாமி" போட்டு வருகிறது. அர்ஜூன் சம்பத் போன்ற இந்துத்துவாவாதிகளை அழைத்து முதல் வரிசையில் அமர வைத்து, அரசு சார்பில் முருகன் மாநாடு நடத்துகிறது.

 

இப்போது திருப்பரங்குன்றத்தில் கூட, அங்கிருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்து விடுதலும், அங்கு இறைச்சிகளை சமைத்து உண்ணுதலும் மத நல்லிணக்கத்தோடு, மிக இயல்பாக ஆண்டாண்டு காலமாக நடந்தேறி வந்த நிலையில், திடீரென கடந்த 2025 பிப்ரவரியில் காவல்துறையினர் ஆடு, கோழியினைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்த பிறகுதான், இந்துத்துவா அமைப்பினர் அந்தச் சிக்கலுக்குள் நுழைந்தனர். தி.மு.க. அரசின் நடவடிக்கையால் ஊக்கம் பெற்ற இந்துத்துவா அமைப்பினர், இப்போது இச்சிக்கலில் இன்னும் தலையிட்டு, அடாவடி செய்ய நுழைந்துள்ளனர்.

 

இப்போதாவது, இந்து – முசுலிம் கலவரம் வரக் கூடாது என்ற நோக்கத்தில், தர்கா அருகே தீபம் ஏற்றத் தடை போட்டதற்கு தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுகள்!

 

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இந்தப் பதவிக்கு வருமுன் பா.ச.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் இருந்தவர். ஆனால், அவர் நீதிபதி பதவிக்கு வந்த பின் நடுநிலையோடு, செயல்பட வேண்டியது நீதி தேவதையின் கட்டளை! அதை நீதிபதி சுவாமிநாதன் மீறக் கூடாது. வலுக்கட்டாயமாக 04.12.2025 இரவு 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்றுங்கள் என்று கட்டளையிட்டு, அதற்குப் பாதுகாவலர்களாக இந்திய அரசுக் காவல்துறையை இறக்கிவிட்டது, நீதிக்குப் புறம்பானது மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசிடம் மிச்சம் மீதி உள்ள சட்டம் ஒழுங்கு காப்பு அதிகாரத்தையும் பிடுங்கி இந்திய அரசிடம் ஒப்படைக்கும் அடாவடி செயலாகும். நீதிமன்ற அவமதிப்பு என இப்போது கூறும், இதே ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், தமிழில் குடமுழுக்கு நடத்திட அவர் பணியாற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பலமுறை தீர்ப்பளித்தும்கூட, இதே திருப்பரங்குன்றத்தில் நடந்த குடமுழுக்கில் அதை திராவிட மாடல் அரசு நிறைவேற்றவில்லையே, அது நீதிமன்ற அவமதிப்பாகுமே எனக் கேள்வி கேட்டாரா? கேட்கவில்லை!

 

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றுவதுதான் கார்த்திகை தீபம் என்பதே மக்களின் நம்பிக்கை! கார்த்திகை நட்சத்திரம் 3.12.2025 அன்று இரவுடன் முடிந்து விட்டது. கார்த்திகை நட்சத்திரம் இல்லாத 4.12.2025 இரவு தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்றுங்கள் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கட்டளையிடுவது, நீதி நெறியா? ஆன்மிக ஒழுக்கமா? ஜி.ஆர். சுவாமிநாதன் சிந்திக்க வேண்டும்.

 

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவுடன் வேறு வழியில்லாமல் இவ்வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (09.12.2025) ஒத்தி வைத்துள்ளார் ஜி.ஆர். சுவாமிநாதன்!

 

முருக வழிபாடு செய்யும் இந்துத் தமிழர்களும், அல்லா வழிபாடு செய்யும் முசுலிம் தமிழர்களும் மேற்படி இருமதத் தீவிரவாத அமைப்புகளின் தூண்டுதலுக்குப் பலியாகாமல் – ஒரு தமிழ்த் தாய் வயிற்றுத் தமிழர்களாய், அவரவர் வழிபாடு அவரவர் உரிமை என்ற பக்குவத்தோடு, இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

============================== 

Thursday, November 20, 2025

ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம் காட்ட வேண்டிய உச்ச நீதிமன்றம் இருட்டில் தள்ளிவிட்டது! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம் காட்ட வேண்டிய

உச்ச நீதிமன்றம் இருட்டில் தள்ளிவிட்டது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படாத சில பகுதிகளின் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய உச்ச நீதிமன்றம், மீண்டும் இருளுக்குள் தள்ளி விட்டது!

 

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்பு குறித்து, கடந்த 2025 ஏப்ரலில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா – ஆர். மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பின் மீது, குடியரசுத் தலைவர் வழியாக இந்திய அரசு எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆயம் இன்று (20.11.2025) வழங்கிய கருத்துரை, இதுவரை இருந்த தெளிவுகளையும் குழப்பி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே தள்ளிவிட்டுள்ளது.

 

ஏற்கெனவே, சம்சேர் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு, மாரூராம் எதிர் இந்திய ஒன்றியம் உள்ளிட்ட அரசமைப்பு ஆயங்கள் "அமைச்சரவை முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர், அவர் அமைச்சரவைக் கருத்தின் சுருக்கெழுத்து வடிவமே தவிர தனிப்பட்ட விருப்பு அதிகாரம் எதுவும் அவருக்கு இல்லை" என்று தீர்ப்புரைத்த பின்னும், அதே அளவுக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட பி.ஆர். கவாய் ஆயம், அதற்கு நேர் எதிரான வகையில் ஆளுநருக்கு வானளாவிய மேலதிகாரத்தை மீண்டும் வழங்குகிறது. 

 

அமைச்சரவையின் சட்டப் பரிந்துரையின் மீது ஆளுநர் கால வரம்பற்று கையெழுத்திடாமல் இருக்கக் கூடாது என்று கூறிக் கொண்டே, அவருக்கு ஆறு மாதம் கால வரம்பிடுவதும் கூடாது எனக் கூறுகிறது. இதன் மூலம், இந்தியா ஒரு குடியரசு என்பதையும் இது ஒரு கூட்டாட்சி என்பதையும் கேலிக் கூத்தாகுகிறது. பர்திவாலா – மகாதேவன் அமர்வு, ஆளுநர் அமைச்சரவையின் சட்டப் பரிந்துரையின் மீது ஆறு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என காலவரம்பிடுவதை "நீதிமன்றத்தின் அத்துமீறல்" எனக் கண்டிப்பதன் வழியாக, ஆளுநரின் அத்துமீறலுக்கு கவாய் ஆயம், பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.

 

ஆறு மாதமல்ல, எந்தக் கால வரம்பையும் ஆளுநர் மீதோ, குடியரசுத் தலைவர் மீதோ விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தைத் தள்ளி வைப்பதன் வழியாக, இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கூறாகக் கூறப்படும் கூட்டாட்சி முறைமை கவிழ்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் அதிகம்போனால், "நியாயமான காலவரம்புக்குள் ஒப்புதல் அளிக்க முன்வர வேண்டும்" என்று ஆளுநரைக் கேட்டுக் கொள்ளலாமே தவிர, கால வரம்பைத் தீர்மானிக்க முடியாது எனக் கருத்துரைப்பதன் வழியாக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையே கவாய் ஆயம் பெருமளவு வெட்டிச் சுருக்கிவிட்டது!

 

அரிதான சூழலில், "முழு நீதி வழங்குவதற்காக (For doing complete Justice)" அரசமைப்பு உறுப்பு 142இன் படி உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நிர்வாக ஆணையின் அதிகாரமுடையது என்பதையே ஒன்றுமில்லாமல் ஆக்கி, இந்திய அரசின் கேள்வி முறையற்ற ஆதிக்கத்திற்கு வழி திறந்துவிட்டுள்ளது.

 

இந்திய அரசமைப்பு செயல்படத் தொடங்கிய 1950லிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநரின் மேலதிகாரம் சனநாயகத்தையே முடக்கிப் போட்டதன் விளைவாகத்தான் அவ்வப்போது, உச்ச நீதிமன்றம் தலையிட்டு  அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 142, 143, 200, 201, 361 போன்ற உறுப்புகள் மீது தெளிவுகள் வழங்கித் தீர்ப்புரைத்திருக்கின்றன. ஆனால், பி.ஆர். கவாய் ஆயத்தின் இந்தக் கருத்துரைத் தீர்ப்பு கடந்த 75 ஆண்டுகளின் சட்ட வளர்ச்சி நிலையையே கவிழ்த்துப் போட்டு, மீண்டும் 1950ஆம் ஆண்டின் நிலைக்கே திருப்பியிருக்கிறது.

 

இது உடனடியாக பர்திவாலா – மகாதேவன் தீர்ப்பை தள்ளுபடி செய்கிற மேல் முறையீட்டுத் தீர்ப்பு அல்ல என்ற போதிலும், இது கருத்துரைத் தீர்ப்புதான் என்ற நிலையிலும், இது நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்க்கர் ஆகிய ஐந்து நீதிபதிகளின் ஒத்தக் கருத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற கருத்துரை என்பதால், விரைவான எதிர்காலத்தில் தமிழ்நாடு ஆளுநர் வழக்குத் தீர்ப்பு உள்ளிட்ட இதற்கு முந்தைய தீர்ப்புகள் அனைத்தையும் வருங்கால வழக்குகளில் இரத்து செய்வதற்கு வழிகாட்டும் வலுவுள்ளது.

 

"இந்தியாவை முழுக் கூட்டரசாக்குக!" என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது!

 

இந்தியாவை முழுக் கூட்டரசாக திருத்தியமைப்பதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும், கூட்டரசு முறைமையின் மீதும் தேசிய இன உரிமைகள் மீதும் அக்கறையுள்ள கட்சிகளும் இயக்கங்களும் உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய தேவையையே பி.ஆர். கவாய் ஆயத்தின் கருத்துரைத் தீர்ப்பு முன்னிறுத்துகிறது.

 

தமிழ்நாடு அரசும், இன உரிமையில் அக்கறையுள்ளோரும் கூட்டரசுக் கோரிக்கையை நோக்கி, உடனடியாக அணிதிரள வேண்டும்!


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================


Monday, November 17, 2025

மேக்கேத்தாட்டுஅணைத் திட்ட அறிக்கைதயாரிக்கதடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு நகலைஎரித்து - தஞ்சையில் காவிரி உரிமைமீட்புக்குழுவினர் எழுச்சியுடன் போராட்டம்!

மேக்கேத்தாட்டு அணைத் திட்ட அறிக்கை

தயாரிக்க தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்

தீர்ப்பு நகலை எரித்து - தஞ்சையில் காவிரி உரிமை

மீட்புக் குழுவினர் எழுச்சியுடன் போராட்டம்!

 

தமிழ்நாட்டுக்கு வெள்ளக் காலத்தில் வரும் நீரைக் கூட தரக் கூடாது என்ற நோக்கில் கர்நாடகம் மேற்கொள்ளும் மேக்கேத்தாட்டு அணைக்கான முழுமையான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தடையில்லை என கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அத்தீர்ப்பின் நகலை எரித்து, தஞ்சையில் இன்று (17.11.2025) காலை - காவிரி உரிமை மீட்புக் குழுவினர் எழுச்சியுடன் நடத்திய போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் பங்கேற்றனர். 50 பேரைக் காவல்துறை கைது செய்தனர்.

 

தஞ்சையிலுள்ள இந்தியத் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று (நவம்பர் 17) காலை, காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. க. செகதீசன், தமிழர் தேசியக் களம் அமைப்பாளர் திரு. ஆரூர் ச. கலைசெல்வம், தோழர் இரா. மன்னை இராசசேகரன், காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு தோழர் வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு, பொறியாளர் செந்தில்வேலன், அள்ளூர் சாமி. கரிகாலன், வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா சுந்தரராசன், த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடர், பி. தென்னவன், வே.க. இலக்குவன், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, இரா.சு. முனியாண்டி, பொதுக்குழு தோழர் க. தீந்தமிழன், குடந்தை செழியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், உழவர்களும் பங்கேற்று, தீர்ப்பு நகலை முழக்கங்களுடன் கொளுத்தினர்.

 

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

 

========================

செய்தித் தொடர்பகம்,

காவிரி உரிமை மீட்புக் குழு

==========================

பேச: 98419 49462, 94432 74002

==========================

Fb.com/KaveriUrimai

#SaveMotherCauvery

www.kaveriurimai.com

==========================

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT