உடனடிச்செய்திகள்

Monday, June 22, 2026

புதுச்சேரி - தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேக்கேத்தாட்டு அணையைக் கட்டாதே! புதுச்சேரி அரசே, வேடிக்கைப் பார்க்காதே! புதுச்சேரியில் சூன் 25 - கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி - தமிழ்நாட்டை பாலைவனமாக்கும்

மேக்கேத்தாட்டு அணையைக் கட்டாதே!

புதுச்சேரி அரசே, வேடிக்கைப் பார்க்காதே!

 -------------------------------------------------------------------------------------

புதுச்சேரியில் சூன் 25 - கண்டன ஆர்ப்பாட்டம்!

 ------------------------------------------------------------------------------------- 

இடம் : புதுச்சேரி அண்ணா சிலை அருகில்

காலம் : 25.06.2026 வியாழன் காலை 10.30 மணி

 

 

அன்புடையீர்!

 

காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டி, புதுச்சேரி - தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சதித் திட்டத்தில் இறங்கியுள்ள கர்நாடக அரசு!

 

மேக்கேத்தாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு, வெள்ளக் காலங்களில் வடிந்து வரும் வெள்ள நீர் கூட வராது. புதுச்சேரியின் காலைக்காலுக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது! தமிழ்நாடு - புதுச்சேரி காரைக்கால் உழவர்கள் தங்கள் மண்ணிலேயே வேளாண்மை பொய்த்துப் போய் ஏதிலியராக அலையும் அவலம் ஏற்படும்.

 

இந்நிலையில், “மேக்கேத்தாட்டு அணை எதிர்ப்பு தீர்மானம்என்று சொல்லிக் கொண்டு, மேக்கேத்தாட்டு ஆய்வுத் தீர்மானத்தை 19.06.2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்! இது கடும் கண்டனத்திற்குரியது

 

கர்நாடக அரசு மேக்கேத்தாட்டில் காவிரியின் குறுக்கே 67.16 .மி.. (டி.எம்.சி) கொள்ளளவில் புதிய அணை கட்ட அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி விசாரித்துத் தீர்ப்புக் கூற இந்திய அரசு புதிதாக மேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் (Mekathatu Tribunal) அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாகத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இத்தீர்ப்பாயம் வேண்டும் என்று வலியுறுத்திப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், தி.மு..வின் துணைப் பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், எங்கள் தி.மு.. ஆட்சி 04.03.2026 அன்றே இந்திய அரசின் நீராற்றல் துறைக்குமேக்கேத்தாட்டு அணை தொடர்பாகத் தீர்ப்பாயம் அமைத்திடக் கோரி கடிதம் எழுதியுள்ளது என்று பெருமையாகக் குறிப்பிட்டார். அதற்கு விடையளித்த .வெ.. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள், “நான் 26.05.2026 அன்றே (புதுதில்லியில்) அதிகாரிகளுடன் கலந்து பேசி, மேக்கேத்தாட்டுத் தீர்ப்பாயம் வேண்டும் என்பதைக் கூறிவிட்டேன். எனது முன்மொழிவில் இது விடுபட்டுள்ளது. அந்த முன்மொழிவில் 4ஆவது பத்திக்குப் பிறகு, மேக்கேத்தாட்டு குறித்து தீர்ப்பு வழங்க தீர்ப்பாயம் அமைக்கும் கோரிக்கையை இணைத்துக் கொள்ளுங்கள்என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பு வகிக்கும் அனைத்துக் கட்சிகளும், இந்தத் தீர்மானத்தை (திருத்தச் சேர்க்கை உட்பட) ஆதரித்து நிறைவேற்றியுள்ளது வெட்கக்கேடானது!

 

கர்நாடகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், கன்னட இனத் தீவிரவாத அமைப்புகள் அனைத்தும்தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேகத்தாட்டு அணை அரவணைப்புத் தீர்மானம் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து அமைதி காக்கின்றன.

 

காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பிலும் (05.02.2007), உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் (16.02.2018), அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள (allotted) தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வது பற்றி மட்டுமே விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. புதிய அணைகள் கர்நாடகம் உட்பட எந்த மாநிலமும் கட்டுவது பற்றி எந்த உரிமையும் அத்தீர்ப்பு வழங்கவில்லை.

 

மேக்கேத்தாட்டு அணையை முற்றிலும் எதிர்ப்பதாக இத்தனை ஆண்டுகளாகக் கூறி வந்த தி.மு.., கடந்த 04.03.2026 அன்று அந்நிலைபாட்டைக் கைவிட்டு, மேக்கேத்தாட்டு கட்டலாமா வேண்டாமா என்று விசாரித்துத் தீர்ப்பு வழங்க தீர்ப்பாயம் அமைக்கலாம் என்று குட்டிக் கரணம் போட்டதன் உள்நோக்கம் என்ன? காவிரி உரிமை மீட்கப்படும் என்று கர்ஜித்து வந்த விஜய்வெளியே சொல்லாமலேயே புதுதில்லி அதிகாரிகளுடன் மேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் பற்றி 26.05.2026 அன்றே பேசிவிட்டதாகச் சொன்ன மர்மம் என்ன?

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 19.06.2026 அன்று மேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் கோரி தீர்மானம் நிறைவேற்றியது தமிழினத்திற்கு செய்த மிகப்பேரிய துரோகம்! ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் தவறை உணர்ந்து, அந்தத் தீர்மானத்தை மறுத்துமேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் கோராதகாவிரி உரிமை நீர் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க  வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தும் மறு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்! புதுச்சேரி சட்டப்பேரவையும் மேக்கேத்தாட்டு அணைக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும்

 

1. புதுச்சேரி அரசே, மேக்கேத்தாட்டு அணை கூடவே கூடாது என ஒற்றை வரித் தீர்மானம் இயற்றுக

 

2. கர்நாடகத்தின் அடாவடியை முறியடிக்க, கர்நாடகப் பொருட்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தடை விதித்து பொருளியல் முடக்கத்தை அறிவித்திடுக!

 

புதுச்சேரி அண்ணா சிலை அருகே, வரும் வியாழன் (25.06.2026) அன்று காலை 10.30 மணிக்கு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. நேரு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

காவிரி காக்க - அனைவரும் வாருங்கள்!


========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
========================
பேச: 98419 49462, 94432 74002
========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
========================



Uploaded Image Uploaded Image

Tuesday, June 16, 2026

பால் குடிக்கும் பெண் குழந்தை பாலியல் படுகொலை! வெளியார் வெள்ளத்தை வெளியேற்றுக! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

பால் குடிக்கும் பெண் குழந்தை பாலியல் படுகொலை!

வெளியார் வெள்ளத்தை வெளியேற்றுக!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 

கடந்த 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுப்பேட்டையில் 2½ வயதுப் பெண் குழந்தை 19 வயது மனித விலங்கால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகி மிகுதியான இரத்தப் போக்கால் அக்குழந்தை இறந்துவிட்டது. இச்செய்தி நம் தலைக்குள் இடிபோல் விழுந்துள்ளது.

 

பெண் குழந்தையும் பீகாரி! அந்த மனிதப் பிசாசும் பீகாரி என்கிறார்கள். யாராக இருந்தாலும் அந்தச் சிறு குழந்தைக்கு நேர்ந்த சித்திரவதையும் சாவும் தாங்கிக் கொள்ள முடியாத துயரத்தை – மனப் பதைப்பைத் தருகின்றன.

 

அந்த மனிதப் பிசாசைக் கைது செய்து விட்டார்கள். அது தண்டிக்கப்படலாம் என்பவை எல்லாம் நம் மனப்பதைப்பைக் குறைக்கவில்லை!

 

பொதுவாகத் தமிழ்நாட்டில் கொலைகள் – பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், வன்முறைகள் பெருத்துவிட்டன என்றாலும், வடமாநிலத்தவர்களின் மிகை ஆக்கிரமிப்பால் தமிழ்நாட்டில் அன்றாடம் அதிகரித்து வரும் மேற்படிக் குற்றச்செயல்கள் அதிகம்! திருவள்ளூர் மாவட்டத்திலும், திருப்பூர், கோவை மாவட்டங்களிலும் வெளிமாநிலத்தவர்களின் – இந்திக்காரர்களின் குற்றச்செயல்கள் மிகமிக அதிகம்.

 

அதனால், கும்மிடிப்பூண்டி மக்கள் மேற்படிக் குழந்தையின் படுகொலைச் செய்தி வந்தவுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி, இந்திக்காரர்களை வெளியேற்றுங்கள் என்று முழக்கமிட்டார்கள். சமாதானம் பேச வந்த அரசு அதிகாரிகளிடம் வடவரை வெளியேற்றும் கோரிக்கைகளை முதன்மைக் கோரிக்கையாக வைத்தனர்.

 

எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம், வெள்ளம்போல் வெளி மாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் அன்றாடம் தமிழ்நா்டில் வந்து தங்குவது – வேலை பார்ப்பது என்பது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்; மொழி இன அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மிகை எண்ணிக்கையில் அயல் இனத்தார் வந்து, வேலை பார்ப்பது, இங்கேயே நிரந்தரமாகத் தங்குவது பல்வேறு சிக்கல்களை – குற்றச்செயல்களை – பண்புக்கேடுகளை உருவாக்கும். மண்ணின் மக்களாகிய தமிழர்களின் வாழ்வுரைிமையைப் பறிக்கும் என்றும் எச்சரித்து வருகிறது.

 

இந்தச் சிறு குழந்தை பாலியல் படுகொலை செய்யப்பட்டதைக் கணிடித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், பா.ச.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையும் மிகை எண்ணிக்கையில் வடமாநிலத்தவர் குவிய அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

 

தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவு விகிதத்திற்குப் பொருந்தாத அளவில் மிகையாக இங்கு ஒரு சதுர கிலோ மீட்டரில் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தி மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ஒரு சதுர கிலோ மீட்டரில் சராசரியாக வசிக்கும் மக்கள் தொகை அதிகம்!

 

எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி, மிகை வெள்ளமாய் வெளியார் தங்கியுள்ள பகுதிகளில் இருந்து அவர்களைத் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டு்ம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் இப்பணியைச் செய்யுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்!


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===============================

 

Uploaded Image

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT