உடனடிச்செய்திகள்

Friday, April 18, 2008

ஒகேனக்கலில் தமிழர் பேரெழுச்சி

தமிழர் மீது இனப்பகை கொண்டு காவிரியைத் தடுத்துவரும் கன்னடக் கலகக்காரர்கள், இப்பொழுது ஒகேனக்கல், ஓசூர், தென்கனிக்கோட்டை போன்ற தமிழகப் பகுதிகளைக் கர்நாடகத்துடன் இணைக்குமாறு உள் நுழைந்து

கூச்சல் போடுகிறார்கள்.
 

இரண்டு மாதங்களுக்கு முன் "கன்னட ரட்சன வேதிகே' என்ற தமிழர் எதிர்ப்பு அமைப்பு ஒகேனக்கல் அருவி வர வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி அப்பகுதியைக் கர்நாடகத்துடன் இணைக்கக் கோரியது. கடந்த மாதம் கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா ஒரு கும்பலுடன் அருவி வர வந்து கர்நாடகத்துடன் ஒகேனக்கலை இணைக்கும்படி கூச்சலிட்டார். அடுத்து பா.ஜ.க.வின் கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் உசமணி தலைமையில் 250 பேர் தொங்குபாலம் வர வந்து

கர்நாடகத்துடன் இணைக்குமாறு கூச்சலிட்டனர். சட்டவி÷ராத நோக்குடன் அத்துமீறி தமிழக எல்லைக்குள் நுழையும் கர்நாடகக் கலகக்காரர்களைத் தமிழகக் காவல் துறையினர் கைது செய்யாமல், அவர்களுக்கு வழிக்காவலாக

வந்தனர். மேலிடத்தின் வழிகாட்டல் அப்படியிருந்திருக்கிறது. ஒகேனக்கல் உரிமைப் பாதுகாப்புக்குழு அழைப்பின் பெயரில், 26.3.2008 பிற்பகல் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் பேöரழுச்சியுடன் ஒகேனக்கலில் நடந்தது. பாதுகாப்புக்குழுத்

தலைவர் திரு அதிபதி, ஒருங்கிணைப்பாளர் தோழர் ந.நஞ்சப்பன், செயலாளர் திரு. தமிழ்ச் செல்வன் ஆகியோர் தலைமை தாங்கியும் முன்னிலை வகித்தும் செல்ல, தோழர்கள் பெ.மணியரசன் (த.தே.பொ.க.), கொளத்தூர் த.செ.மணி

(பெரியார் தி.க.), தகடூர் தமிழ்ச் செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்), மந்திரி (பா.ம.க.), எம்.கோபால் (சி.பி.ஐ.), கே.முனுசாமி (காங்கிரஸ்), சம்பத் (ம.தி.மு.க.), அருண் (வி.வி.மு.), அ.தீர்த்தகிரி (தி.க.), பேரா.சின்னச்சாமி (தமிழக விவசாயிகள் சங்கம்), ரமேஷ்வர்மா (தே.மு.தி.க.), கந்தசாமி (பா.ஜ.க.), உள்ளிட்டோர் அணிவகுத்துச் செல்ல, ஆயிரக் கணக்கானோர் அவரவர் அமைப்புக் கொடியுடன் அருவி ஓசையை அமுக்கிடும் பே÷ராசையுடன் கன்னட வெறியர்களுக்கு எதிராகக் கண்டனம் முழங்கி, காவிரி ஆற்றில் இறங்கி, மணல் திட்டுவர சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓசூர் த.தே.பொ.க. தோழர்கள் ஒரு சிறு பேருந்தில்

வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT