உடனடிச்செய்திகள்

Monday, January 4, 2016

தமிழ்நாடு அரசே! 24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக!


தமிழ்நாடு அரசே! 24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக!


செய்தியாளர் சந்திப்பில் - தமிழர் எழுவர் கூட்டியக்கம் - கோரிக்கை முன்வைப்பு!


இந்திய அமைதிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பி, ஆயிரக்கணக்கான தமிழீழ மக்கள் கொல்லப்படக் காரணமாக விளங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் - சாந்தன் - முருகன் - நளினி - இராபர்ட் பயஸ் - இரவிச்சந்திரன் - ஜெயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களையும், சனவரி 17 அன்று தொடங்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு, இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161-இன்படி தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டுமென “தமிழர் எழுவர் விடுதலைக் கூட்டியக்கம்” கோரிக்கை வைத்துள்ளது.

அண்மையில் கடந்த 02.12.2015 அன்று வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பு விதி 161ன் படி மாநில அரசு விடுதலை செய்தால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெளிவுபடுத்து விட்டது என்பதையும் கூட்டியக்கம் எடுத்துக் கூறியது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “தமிழர் எழுவர் விடுதலைக் கூட்டியக்கம்” சார்பில், இன்று (04.01.2015) காலை, சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வை, திரு. வேல்முருகன் ஒருங்கிணைத்தார்.

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் தோழர் வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. தெகலான் பாகவி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. வியனரசு, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு, இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசே!

24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக!


இதே போல் நீண்ட நாள் சிறையில் வாழும் சிறையாளிகளையும் விடுதலை செய்க!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT