உடனடிச்செய்திகள்

Sunday, April 14, 2019

பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் தமிழர்களுக்குத் தடை! வடவர்க்கே வேலை! திருச்சி, பொன்மலை பணிமனையில் த.தே.பே. நடத்தும் தமிழர் மறியல் போராட்டம்!

பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் தமிழர்களுக்குத் தடை! வடவர்க்கே வேலை! திருச்சி, பொன்மலை பணிமனையில் த.தே.பே. நடத்தும் தமிழர் மறியல் போராட்டம்!
#TamilnaduJobsForTamils

தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் அளவில் வெளி மாநிலத்தவர்கள் குடியேறிக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் - அலுவலகங்கள் - தொழிற்சாலைகள் அனைத்திலும் இந்திக்காரர்களை இந்திய அரசு திட்டமிட்ட முறையில் பணியமர்த்தி வருகின்றது.

அண்மையில் திருச்சி பொன்மலையில் தென்னகத் தொடர்வண்டித் துறையில் பழகுநர் பணியிடங்களுக்காக எடுக்கப்பட்ட 1765 பேரில் 1,600 பேர் வடமாநிலத்தவர் ஆவர். அவர்களில் 300 பேர், திருச்சி பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் பணியில் சேர்ந்துள்ளனர்.

இவர்களை வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தி, வரும் தி.பி. 2050 சித்திரை 20 - 3.5.2019 வெள்ளி காலை 11 மணிக்கு, திருச்சி, பொன்மலை பணிமனை (ஒர்க்சாப்) முன்பு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில், தமிழர் மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.

தொடர்வண்டித்துறை (இரயில்வே) நிர்வாகமே!
பொன்மலைப் பணிமனையில் புகுத்தப்பட்டுள்ள வெளியாரை வெளியேற்று! புதிதாகப் புகுந்துள்ள 300 பழகுநர் (அப்ரண்டீஸ்) அனைவரையும் வெளியேற்று! அந்த வேலைகளைத் தமிழர்களுக்குக் கொடு!

இந்திய அரசே!
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 10 விழுக்காட்டிற்கு மேல் பணியில் உள்ள வெளிமாநிலத்தார் அனைவரையும் வெளியேற்று! 90 விழுக்காடு வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்கு! தமிழர் தாயகமான தமிழ்நாட்டை அயல் இனத்தார் மண்டலம் ஆக்காதே!

உனது சதித்திட்டத்தைத் தகர்ப்போம்! தமிழர் தாயகம் காப்போம்!

தமிழ்நாடு அரசே! 
தமிழர்களுக்குரிய வேலைகளை அயலார் பறிக்கத் துணைப்போவதேன்? தமிழ்நாட்டை அயலார் மண்டலமாக்கும் தில்லியின் சதியை அனுமதிப்பதேன்? மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கு கர்நாடகம், குசராத், மராட்டியம், சதீசுகட் மாநிலங்களில் 
உள்ளது போல் தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற மறுப்பதேன்?

தமிழ்நாட்டு ஆளுங்கட்சி - ஆண்டகட்சித் தலைவர்களே!
உங்கள் பணி தமிழர்களைக் காப்பதா? தில்லிக்குக் கங்காணி வேலை பார்ப்பதா?

தமிழர்களே,
உங்கள் உரிமைத் தாயகம் அயலார் மண்டலமாவதை அறிந்தீர்களா? ஒரு கோடித் தமிழ் இளையோர் வேலை இன்றி 
வீதிகளில் அலைவதை உணர்ந்தீர்களா? “அறிந்தோம்; உணர்ந்தோம்” என்பது உங்கள் விடையானால் வாய்ப்புள்ளோர் மறியலுக்கு வாருங்கள்; வாய்ப்பில்லாதோர் இச்செய்தியைப் பரப்புங்கள்!

#TamilnaduJobsForTamils

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT