உடனடிச்செய்திகள்

Latest Post

Tuesday, June 16, 2026

பால் குடிக்கும் பெண் குழந்தை பாலியல் படுகொலை! வெளியார் வெள்ளத்தை வெளியேற்றுக! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

பால் குடிக்கும் பெண் குழந்தை பாலியல் படுகொலை!

வெளியார் வெள்ளத்தை வெளியேற்றுக!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 

கடந்த 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுப்பேட்டையில் 2½ வயதுப் பெண் குழந்தை 19 வயது மனித விலங்கால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகி மிகுதியான இரத்தப் போக்கால் அக்குழந்தை இறந்துவிட்டது. இச்செய்தி நம் தலைக்குள் இடிபோல் விழுந்துள்ளது.

 

பெண் குழந்தையும் பீகாரி! அந்த மனிதப் பிசாசும் பீகாரி என்கிறார்கள். யாராக இருந்தாலும் அந்தச் சிறு குழந்தைக்கு நேர்ந்த சித்திரவதையும் சாவும் தாங்கிக் கொள்ள முடியாத துயரத்தை – மனப் பதைப்பைத் தருகின்றன.

 

அந்த மனிதப் பிசாசைக் கைது செய்து விட்டார்கள். அது தண்டிக்கப்படலாம் என்பவை எல்லாம் நம் மனப்பதைப்பைக் குறைக்கவில்லை!

 

பொதுவாகத் தமிழ்நாட்டில் கொலைகள் – பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், வன்முறைகள் பெருத்துவிட்டன என்றாலும், வடமாநிலத்தவர்களின் மிகை ஆக்கிரமிப்பால் தமிழ்நாட்டில் அன்றாடம் அதிகரித்து வரும் மேற்படிக் குற்றச்செயல்கள் அதிகம்! திருவள்ளூர் மாவட்டத்திலும், திருப்பூர், கோவை மாவட்டங்களிலும் வெளிமாநிலத்தவர்களின் – இந்திக்காரர்களின் குற்றச்செயல்கள் மிகமிக அதிகம்.

 

அதனால், கும்மிடிப்பூண்டி மக்கள் மேற்படிக் குழந்தையின் படுகொலைச் செய்தி வந்தவுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி, இந்திக்காரர்களை வெளியேற்றுங்கள் என்று முழக்கமிட்டார்கள். சமாதானம் பேச வந்த அரசு அதிகாரிகளிடம் வடவரை வெளியேற்றும் கோரிக்கைகளை முதன்மைக் கோரிக்கையாக வைத்தனர்.

 

எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம், வெள்ளம்போல் வெளி மாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் அன்றாடம் தமிழ்நா்டில் வந்து தங்குவது – வேலை பார்ப்பது என்பது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்; மொழி இன அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மிகை எண்ணிக்கையில் அயல் இனத்தார் வந்து, வேலை பார்ப்பது, இங்கேயே நிரந்தரமாகத் தங்குவது பல்வேறு சிக்கல்களை – குற்றச்செயல்களை – பண்புக்கேடுகளை உருவாக்கும். மண்ணின் மக்களாகிய தமிழர்களின் வாழ்வுரைிமையைப் பறிக்கும் என்றும் எச்சரித்து வருகிறது.

 

இந்தச் சிறு குழந்தை பாலியல் படுகொலை செய்யப்பட்டதைக் கணிடித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், பா.ச.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையும் மிகை எண்ணிக்கையில் வடமாநிலத்தவர் குவிய அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

 

தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவு விகிதத்திற்குப் பொருந்தாத அளவில் மிகையாக இங்கு ஒரு சதுர கிலோ மீட்டரில் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தி மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ஒரு சதுர கிலோ மீட்டரில் சராசரியாக வசிக்கும் மக்கள் தொகை அதிகம்!

 

எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி, மிகை வெள்ளமாய் வெளியார் தங்கியுள்ள பகுதிகளில் இருந்து அவர்களைத் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டு்ம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் இப்பணியைச் செய்யுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்!


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===============================

 

Uploaded Image

Thursday, May 21, 2026

மேக்கேத்தாட்டு அணை தடுக்க களத்தில் இறங்க வேண்டும் முதலமைச்சர்! - காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

மேக்கேதாட்டு அணை தடுக்க

களத்தில் இறங்க வேண்டும் முதலமைச்சர்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

 

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், இன்று (21.05.2026) முற்பகல், தஞ்சை தமிழ்த்தேசியப் பேரியக்க அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார். பொருளாளர் ஐயா த. மணிமொழியன் அவர்கள், ஐயா சாமி. கரிகாலன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ஐ.ஜே.கே. கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. ப. செகதீசன், பூதராயநல்லூர் இராமலிங்கம், ஒரத்தூர் சிவப்பிரகாசம், துரை. இரமேசு, தி. செந்தில்வேலன், திருவாரூர் ச. கலைச்செல்வம் (தமிழர் தேசியக் களம்), புண்ணியமூர்த்தி (ஆழ்துளைக்குழாய்க் கிணற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்), பூதலூர் சுந்தரவடிவேல், மன்னார்குடி இராசசேகர், தமிழ்த் தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர்  தோழர் பி. தென்னவன், தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், குடந்தை க. விடுதலைச்சுடர், திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், க. தீந்தமிழன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானம் – 1

தமிழ்நாடு முதலமைச்சர்,

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் பெற வேண்டும்!

 

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018இல் அளித்த இறுதித் தீர்ப்பின்படி ஒரு தடவை கூட கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறந்துவிடவில்லை. 2018இல் இருந்த அ.தி.மு.க. ஆட்சியோ, அதன்பிறகு 2021இல் வந்த தி.மு.க. ஆட்சியோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாத வாரியாகக் காவிரி நீரைக் கர்நாடகத்திடம் பெற்றதில்லை! அதற்குரிய முயற்சிகளை நேர்மையாக இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை.

 

கடந்த சில ஆண்டுகளாகப் பருவந்தவறிக் கோடையில் கொட்டிய பெருமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி, வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, மேட்டூர் அணை நிரம்பியது.

 

வரும் சூன் 12 அன்று முறைப்படி மேட்டூர் அணை பாசனத்திற்குத் திறக்கப்பட வேண்டும். இவ்வாண்டு இதுவரை பருவந்தவறிய கோடை மழை பெரிதாகப் பெய்யாததால், மேட்டூர் அணைக்கு மிகை வெள்ள நீர் வரவில்லை. வெறும் 78 அடி தான் மேட்டூர் அணையில் தண்ணீர் உள்ளது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், கர்நாடக முதலமைச்சருடன் பேசி காவிரி நீர் திறக்க வலியுறுத்திப் பெற வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 27 இலட்சம் ஏக்கர் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும். 22 மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும்.

 

இந்நிலையில், கடந்த 09.05.2026 அன்று கர்நாடகத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா தலைமையில் காவிரிக் காப்புக்குழுக் கூட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 177.25 டி.எம்.சி. காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் தர வேண்டும் என்று அளித்த தீர்ப்பை மாற்றி, மேலும் குறைத்துத் தீர்ப்பளிக்க மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் போட வேண்டுமென்று கன்னட விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பயிர் காக்க மனித உயிர் காக்க விரைந்து செயல்பட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு, 2018 தீர்ப்பை செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

 

தீர்மானம் – 2

மேக்கேதாட்டு அணை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை!

 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே, 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேலும் ஒரு எல்லைப்புற அணையாக மேக்கேதாட்டு அணை கட்ட வேலைகள் தொடங்கி உள்ளது. இந்திய நீர்வளத்துறை, காவிரி மேலாண்மை ஆணையம் முதலியவை மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஒன்பதாயிரம் கோடி மதிப்பீட்டிலான அந்த அணையின் தொடக்க நிலைப் பணிகளுக்கு ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கி, வேலைகள் நடந்து கொண்டுள்ளன.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிறப்பு வல்லுநர் குழு அமைத்து, கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட சட்ட விரோதமாக நடைபெறும் வேலைகளைக் கண்டறிந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, மேக்கேதாட்டு அணை முயற்சிகளுக்குத் தடை ஆணை கோர வேண்டும்.

 

தீர்மானம் – 3

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக சிப்காட் கூடாது!

 

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது, 2019இல் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்ற உழவர்களின் போராட்டங்களைக் கணக்கில் கொண்டு, அங்கு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது, அதைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கி சட்டம் இயற்றினார். ஆனால், கடந்த மு.க. ஸ்டாலினது தி.மு.க. ஆட்சி தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி பகுதியிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொற்கை – உம்பளச்சேரி பகுதியிலும், சிப்காட் பெருந்தொழில் குவிப்பு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்தது. உழவர்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பை மு.க. ஸ்டாலின் ஆட்சி சட்டை செய்யவில்லை.

 

வெளிநாடுகள் மற்றும் வடநாடு முதலியவற்றிலிருந்து பெரும் பெரும் தொழில் நிறுவனங்களைக் காவிரி டெல்டாப் பகுதிகளுக்கு அழைத்து வரும் சட்ட விரோத வேலைகளில் முரட்டுத்தனமாக ஈடுபட்டார் மு.க. ஸ்டாலின். அவர் அண்மையில் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

 

அன்புகூர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தாங்கள், இச்சிக்கலில் தனிக் கவனம் செலுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் சிப்காட் தொழில் பெருக்கத் திட்டங்களைக் கைவிட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இது தொடர வழிவகை செய்யுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு தங்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் – 4

நடுநிலை தவறிய ஹல்தரை நீக்குக!

 

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர் நடுநிலை தவறி – அந்த ஆணையத்தை கர்நாடகத்திற்குச் சாதகமாக நடத்தி வருகிறார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முடிவு செய்த ஆணைகளில் எதையும் கர்நாடக அரசு செயல்படுத்தியதில்லை. அதைக் கண்டு கொள்ளவே மாட்டார் ஹல்தர். முடிவு செய்த ஆணைகளை நிறைவேற்றப் படுவதற்காக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில்லை!

 

அது மட்டுமின்றி, சட்டவிரோதமான மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கும், குறுக்கு வழியில் பெரும்பான்மை அடிப்படையில் மேலாண்மை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் ஹல்தர்.

 

எனவே, தொடர்ந்து – திட்டமிட்டு நடுநிலை தவறி – கர்நாடகத்தின் துணை மன்றம் போல், காவிரி மேலாண்மை ஆணையத்தை நடத்தி வரும் ஹல்தரை அப்பதவியிலிருந்து நீக்கி, நடுநிலை உள்ள புதிய தலைவர் ஒருவரை மேற்படி ஆணையத்திற்கு இந்திய அரசு அமர்த்த வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழுக் கேட்டுக் கொள்கிறது! 

 

========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
========================
பேச: 98419 49462, 94432 74002
========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
========================

Uploaded Image

Wednesday, May 20, 2026

செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப்பேசியயாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக்கேட்க வேண்டும்! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப் பேசிய

யாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக் கேட்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

 

இலங்கை நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக உள்ள யாழ்ப்பாணம் இராமநாதன் அருச்சுனன் என்ற நபர், நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை சுட்டுத்தள்ளுவேன் என்றும், இழிவுபடுத்தியும் பேசியதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

தமிழினப் பேரழிவு தமிழீழத்தில் 2009 – மே மாதம் நடந்த பின், அது குறித்து இரங்கல் கூட்டம் நடத்தவோ, கண்டனக் கூட்டம் நடத்தவோ தமிழ்நாட்டில் அனுமதியில்லை. ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் சிங்கள வெறியர்கள் படுகொலை செய்தபின், வெளிப்படையாக அழுவதற்குக் கூடத் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை! இந்திய ஏகாதிபத்தியக் காங்கிரசு – கங்காணி தி.மு.க. கூட்டணி ஆட்சி, அவ்வளவு கெடுபிடிகளைச் செய்தது.

 

ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கவோ, தலைவர் பிரபா.கரன் படத்தை வெளிப்படையாக வைக்கவோ அவர் பெயரை உச்சரிக்கவோ தமிழ்நாட்டில் அனுமதி இல்லை! அந்தக் கொடுமையை எதிர்த்து, பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைத் திரட்டி தமிழீழப் படுகொலைகளைக் கண்டித்துக் கூட்டம் நடத்தியும், வெளிப்படையாக பிரபா.கரன் படத்தை வைத்து, அவரை எங்கள் தலைவர் என வணங்கவும் நடைமுறை அனுமதியை (Defacto permission) பெற்றுத் தந்தவர் செந்தமிழன் சீமானும், அவர்கட்சி பிள்ளைகளும் ஆவர்!

 

இலங்கையில் தமிழின அழிப்பின் தலைமைக் குடும்பமான இராசபட்சே குடும்பத்தின் கொத்தடிமைதான் இந்த இராமநாதன் அருச்சுனா என்று கேள்விப்படுகிறோம். நாமல் இராசபக்சே எனது சகோதரன் என வெளிப்படையாகச் சொன்னவர் இராமநாதன் அருச்சுனா! அப்படிப்பட்ட அந்த நபரை அழைத்து தோழர் திருமாவளவன் அவர்கள் 18.05.2026 அன்று சென்னையில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தி இருப்பது மர்மமாக உள்ளது.  இதில் மறைக்கப்பட வேண்டிய மர்மம் எதுவும் இல்லை என்றால், அந்நபரை உரையாற்ற அழைத்ததற்கான காரணத்தை தோழர் திருமா வெளிப்படையாகச் சொன்னால், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வெளிச்சம் கிடைக்கும்.

 

சென்னை தலைமைச் செயலகம் வந்த இராமநாதன் அருச்சுனா தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களையும் நேரில் சந்தித்துப் பேசிவிட்டு, ஊடகங்களில் பல அவதூறுக் கருத்துகளையும் அள்ளிவீசிவிட்டுச் சென்றுள்ளார். இலங்கை திரும்பிய கையோடு, மே 18 அன்று அங்கு இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களர்கள் மனம் குளிரும்படி அண்ணன் சீமான் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டுமென்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

 

யாழ்ப்பாணத் தமிழர்கள் உட்பட – தமிழீழத் தமிழர்கள் அனைவரும் சிங்களக் கைக்கூலியாகச் செயல்படும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவை மேற்படி இழிவு பேச்சுக்காக மன்னிப்புக் கேட்கும்படி கோர வேண்டும்!

 

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

Uploaded Image

Thursday, May 7, 2026

த.வெ.க. ஆட்சி அமைக்கத் தடைபோடுகிறது பா.ச.க.வின் பாசிசம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

த.வெ.க. ஆட்சி அமைக்கத்

தடைபோடுகிறது பா.ச.க.வின் பாசிசம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-இல் ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று – தனிப்பெரும் கட்சியாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசுக் கட்சி – தனது ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு எழுத்து வடிவில் கொடுத்துள்ளது.

 

இந்நிலையில், தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு த.வெ.க. தலைவர் திரு. விஜய், நேற்று (06.05.2026) ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களில் 118 பேர் ஆதரவுக் கடிதத்தை விஜய் கொடுத்தால்தான், அவரை ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று நிபந்தனை விதித்து விஜயின் கோரிக்கையை ஆளுநர் ஏற்க மறுத்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் தற்காலிகப் பொறுப்பு ஆளுநராக உள்ள கேரள ஆளுநர் இராசேந்திர விசுவநாத் அர்லேக்கர் அவர்கள், விஜயை ஆட்சி அமைக்க மறுத்த செயல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட முழு அரசமைப்பு ஆயம் வழங்கிய எஸ்.ஆர். பொம்மை வழக்குத் தீர்ப்பிற்கும் ( S.R. Bommai vs Union Of India on 11 March, 1994 -1994 AIR 1918 ) முழுக்க முழுக்க எதிரான சட்ட விரோதச் செயலாகும்.

 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக த.வெ.க. உள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த உடனேயே,  விஜயின் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவிற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தமிழ்நாட்டின் உயர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஏவியவர் இதே ஆளுநர் அர்லேக்கர்தான்! விஜய்க்கு சிறப்புப் பாதுகாப்புப் படைப் பிரிவிவை அனுப்பியவரும் இதே ஆளுநர்தான்!

 

விஜய் முதலமைச்சராவதற்குக் காங்கிரசுக் கட்சி ஆதரவளித்து, அந்த அமைச்சரவையில் சேர்கிறது என்று நிலைமை உருவாகியவுடன், ஆளுநர் அர்லேக்கர் தன் நிலைபாட்டை அடியோடு மாற்றிக் கொண்டு, நேரு விளையாட்டரங்கை அழகுபடுத்திய அதிகாரிகளைத் திருப்பி அழைத்து விட்டார். விஜய்க்கு அனுப்பிய சிறப்புப் பாதுகாப்புப் படைப் பிரிவை திரும்ப அழைத்துக் கொண்டார். விஜய்க்குப் பதவி ஏற்பு விழா நடத்த முடியாது என்று கூறிவிட்டார்.

 

இதிலிருந்து என்ன தெரிகிறது? பாரதிய சனதாக் கட்சி இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்திய ஆட்சியை நடத்தவில்லை. தனது கட்சியின் இலாபக் கணக்கு அடிப்படையில் தான் ஆட்சி நடத்துகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டுள்ளது.

 

காங்கிரசுக் கட்சி ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால், 107 உறுப்பினர் ஆதரவுள்ள விஜய் கட்சியை ஆட்சி அமைக்க மேளதாளத்துடன் வரவேற்றிருப்பார் ஆளுநர் அர்லேக்கர்!

 

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும் இதில் – கட்சிப் பாகுபாடின்றி – “தமிழ்நாடு” என்ற தமிழர் தாயகத்தை இந்திய பா.ச.க. ஆட்சி எப்படி தனது அடிமையாக நடத்துகிறது என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

 

எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம், இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரித்ததுடன் வாக்குக் கேட்டது. எங்கள் கட்சி எப்போதும் காங்கிரசை ஆதரிக்காது. ஆனால், இந்திய பா.ச.க. ஆட்சி – தில்லி அதிகாரத்தைக் கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரான நிலையில், தமிழ்நாட்டை அடிமையாக நடத்துவதை அனுமதிக்கக் கூடாது! பா.ச.க.வின் இச்செயலை கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் கண்டிக்க வேண்டும்.

 

எஸ்.ஆர். பொம்மை வழக்கில், உச்ச நீதிமன்ற முழு அரசமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பின்படி, இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே த.வெ.க.வை அமைச்சரவை அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். த.வெ.க. தனது பெரும்பான்மையைச் சட்டப்பேரவையில் மெய்ப்பிக்க கால வரம்பு விதிக்க வேண்டும்.


================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

================================ 

Uploaded Image

Thursday, March 19, 2026

இந்திப் பேயை விரட்டி - அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

இந்திப் பேயை விரட்டி - அன்னைத் தமிழ் காக்க

தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

 

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில் தீவிரமாகிக் கொண்டு வரும் நிலையில், சென்னை பூங்கா தொடர்வண்டி நிலையத்தின் பெயர்ப் பலகையில் எழுதியிருந்த இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டத்தில் 11.03.2026 அன்று ஈடுபட்ட மே 17 இயக்கத் தம்பி சிவா திலீபன், இந்தித் திணிப்பை எதிர்த்து, அப்போது ஓடிவந்த தொடர்வண்டி முன் பாய்ந்தார். படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (18.03.2026) இரவு 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமாகிவிட்டார் என்ற செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

 

தமிழ்நாட்டை ஆக்கிரமித்து அலைக்கழித்து – தமிழை அழித்துக் கொண்டிருக்கும் இந்திப் பேயை எதிர்த்து, முதன் முதலாக 1964 சனவரி 25இல் கீழப்பழுவூர் சின்னச்சாமி தீக்குளித்து ஈகியானது முதல், 1965 சனவரி 27இல் மொழிப்போரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது – அன்றைய நாளில் கோடம்பாக்கத்தில் சிவலிங்கம் இந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்து ஈகியானது – அடுத்தடுத்து தீக்குளித்தும், நஞ்சுண்டும் மடிந்தவர்கள், இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய வெகுமக்கள் 400 பேரை காங்கிரசு ஆட்சி சுட்டுக் கொன்றது என அடுத்தடுத்து நடந்த தமிழர் ஈகங்களை மாணவப் பருவத்திலிருந்து பார்த்து வருகிறேன். அச்சம காலங்களில் மாணவனாக நானும் போராடியுள்ளேன். எனக்கு இப்போது தம்பி சிவாதிலீபன் தொடர்வண்டி முன் பாய்ந்து உயிர்நீத்தது பேரதிர்ச்சியாய்ப் பெருந்துயரமாய் உள்ளது. தமிழர்களின் உயிரீகத்திற்கு முடிவே இல்லையா?

 

இந்திப் பேய் தமிழர்களின் எத்தனை தலைமுறைகளைத்தான் விழுங்கும்? இந்தித் திணிப்பை 1938லேயே காங்கிரசு ஆட்சி அரங்கேற்றியது. அத்திணிப்பை எதிர்த்த போராட்டத்தில் சிறை சென்ற தமிழர்கள் நடராசனும், தாளமுத்துவும் சிறையிலேயே மாண்டார்கள்.

 

இந்திய அரசில் இதற்கு முன் காங்கிரசு ஆண்டபோதும், இப்போது பா.ச.க. ஆளும்போதும் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பைத் தீவிரமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

 

கடந்த 11.3.2026 அன்று சென்னை பூங்கா தொடர்வண்டி நிலையத்தில் பெயர்ப் பலகைகளில் எழுதியிருந்த இந்தி எழுத்துகளை மே 17 இயக்கத் தலைவர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் இயக்கத் தோழர்கள் தார்பூசி அழித்திருக்கிறார்கள். அவர்களில் சிவா திலீபனும் ஒருவர். அவர்தம் மனைவி மக்களோடு அப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

 

அப்போது அந்தத் தொடர்வண்டி நிலையத்தில் ஓடிவந்த தொடர்வண்டி முன்பாக, "தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழங்கிக் கொண்டே குதித்துள்ளார். படுகாயங்களுடன் சென்னை இராசீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தம்பி சிவா திலீபன் நேற்று (19.03.2026) இரவு 9.30 மணியளவில் ஈகியாகி யுள்ளார்.

 

எனக்குப் பேரதிர்ச்சி! பெருந்திகைப்பு! பாரதியாரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன:

 

"விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய்?".

 

குருதி கசியும் நெஞ்சுடன் கூறுகிறேன்:

 

ஆதிக்க இந்தியை விரட்டி அன்னைத் தமிழைக் காக்கப் போராடிய மே 17 இயக்கத் தம்பி சிவா திலீபன் அவர்கட்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!


================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

================================ 

Friday, March 6, 2026

“திராவிடப்” பாசத்தால் தமிழ்நாட்டு எல்லையை  கேரளாவிடம் பறிகொடுக்கும் தி.மு.க. அரசு! தமிழ்த்தேசியப்பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

"திராவிடப்" பாசத்தால் தமிழ்நாட்டு எல்லையை 


கேரளாவிடம் பறிகொடுக்கும் தி.மு.க. அரசு!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

 

தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தில் உள்ள தாளூரில், கேரள அரசு மலையாள மொழியில் அத்துமீறி அறிவிப்புப் பலகை வைத்துள்ளது வன்மையாகக்  கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் எல்லையைத் தங்கள் எல்லையென அத்துமீறி கேரள அரசு அறிவிப்புப் பலகை வைப்பதை, "திராவிட"ப் பாசத்தோடு தி.மு.க. தலைமையிலான தமிழ்நாட்டரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகமிக ஆபத்தானது.

 

கடந்த 2017ஆம் ஆண்டு, கேரள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தமிழ்நாட்டின் தாளூர் எல்லைக்குள் 200 மீட்டர் தூரம் அத்துமீறி நுழைந்து, அவ்விடம் வரை தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, மலையாள மொழியில் அறிவிப்புப் பலகையை வைத்தது. தமிழ்நாட்டு எல்லையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அப்பலகையை அப்போது நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைத்து அகற்றியதோடு, தமிழ்நாட்டின் எல்லைய காக்க எதிர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

 

அப்போது மக்களின் போராட்டத்தால் அகற்றப்பட்ட மலையாளப் பெயர்ப் பலகை, நேற்று (05.03.2026) மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த தமிழ்நாடு அரசின்  தமிழ்ப் பெயர்ப் பலகையை உடைத்து எறிந்துவிட்டு, கேரள அரசு மலையாள அறிவிப்புப் பலகையை அத்துமீறி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மறு்றும் பொதுமக்கள் நேற்று இரவு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

கேரள அரசு, அங்கு கேரள காவல்துறையினரைக் குவித்து, தமிழ்நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நடப்பட்ட அறிவிப்புப் பலகையைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு எல்லைப் பலகையை காக்கத் தவறிய தமிழ்நாடு காவல்துறையோ, எல்லை மீட்புக்காகப் போராடும் நாம் தமிழர் கட்சித் தோழர்களையும், பொது மக்களையும் தடுத்து நிறுத்துகின்றது. தமிழ்நாடு எல்லையைப் பாதுகாக்கத் திறனற்ற தி.மு.க. அரசு, போராடும் தமிழ் மக்களையே அடக்க முயல்கிறது.

 

ஏற்கெனவே, தமிழ்நாட்டு எல்லையில் உள்ள பல வீடுகளுக்கு கேரள அரசு, தானே முன்வந்து அத்துமீறி மின் இணைப்பு கொடுத்து வருகிறது. மேலும் தாளூர், நம்பியார்குன்னு உள்ளிட்டு தமிழ்நாட்டு எல்லைக்குள் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி கடைகள் தாராளமாக செயல்படுகன்றன. கேரளாவிலிருந்து நாடுகாணி, தாளூர், பந்தலூர், தேவர்சோலை உள்ளிட்ட தமிழ்நாட்டுப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளும், இறைச்சிக் கழிவுகளும் கேரளாவிலிருந்து கொண்டு வந்து கொட்டப்படுவதும், அதன் காரணமாக தமிழர்களுக்கு உடல்நலக் கோளாறுகளும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருவதை தமிழ்நாடு அரசு கண்டு கொள்வதில்லை!

 

அதேபோல், பல தமிழ்நாட்டுப் பகுதிளை மின்னிலக்க அளவீடு (டிஜிட்டல் சர்வே) என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியைக் கேரள எல்லைகளாகக் குறிப்பிட்டு அத்துமீறி எல்லைக்கல் நிறுவியபோதும் தமிழ்நாட்டரசு கண்டிக்கவில்லை!

 

தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டின் எல்லைகளைத் திருட்டுத் தனமாக ஆக்கிரமிக்க முயலும் கேரள கம்யூனிஸ்ட்டு அரசு, சர்வதேசியம் – கம்யூனிசம் - அனைத்துலகப் பாட்டாளிகள் ஒற்றுமை என்றெல்லாம் பேசிக் கொள்வது வெட்கக்கேடானது. கேரள அரசின் இந்த மலையாள இனவெறிப் பாசிசத்தைக் கண்டிக்காமல் அமைதி காக்கும் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்டுகளின் செயல் அவமானகரமானது!

 

கூடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, தேனி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் "KF" என்ற கேரள வனத்துறை எல்லைக் கல்லை, தமிழ்நாட்டு எல்லைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, தமிழர்களின் கண்ணகிக் கோயிலை கேரள அரசு சொந்தம் கொண்டாடுகிறது. கேரள அரசு நடத்தி வரும் டிஜிட்டல் சர்வேயை உடனே நிறுத்தி, தமிழ்நாடு – கேரள எல்லையை தமிழ்நாடு அரசு முழுவதுமாக அளக்க வேண்டும்.

 

தமிழ்நாடு அரசு இந்த நேரத்திலாவது, சிக்கலின் தீவிரத்தை உணர்ந்து, கேரள – தமிழ்நாடு எல்லையை முழுமையாக அளப்பதுடன், உடனடியாக நீலகிரி மாவட்டம் தாளூரில் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் கேரள அரசு அத்துமீறி வைத்துள்ள எல்லைப்  பலகையை அகற்றி, உடைத்து எறியப்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பலகையை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும், இதுபோன்ற எல்லை தாண்டிய அத்துமீறல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க – தமிழ்நாட்டு எல்லைகளைக் காக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

  ================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

================================ 


Monday, March 2, 2026

செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசி நிறுத்தப்பட்டது,மக்கள் இயக்கங்களுக்குக் கிடைத்த வெற்றி! தமிழ்த்தேசியப்பேரியக்கப் பொதுச் செயலாளர்தோழர்கி. வெங்கட்ராமன் அறிக்கை!

செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசி நிறுத்தப்பட்டது,

மக்கள் இயக்கங்களுக்குக் கிடைத்த வெற்றி!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தை இடைநிறுத்துவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது, அடித்தட்டு மக்களின் நலவாழ்வுக்காகவும், உணவு இறையாண்மைக்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த மக்கள் இயக்கங்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.

 

அறிவியல் ரீதியான போதிய ஆய்வுகள் இன்றியும், உள்ளூர் உணவு முறைகளைச் சிதைக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டு வரப்படுவது குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஐயங்களை எழுப்பியது.  தலசீமியா (Thalassemia) மற்றும் சிக்கிள் செல் அனீமியா (Sickle Cell Anaemia) போன்ற ரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொள்வது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என எச்சரித்தோம்.

 

பெருங்குழும நிறுவனங்களிடம் கையூட்டுப் பணம் பெறும் நோக்கில், செயற்கை அரிசியை உற்பத்தி செய்து மக்கள் நலவாழ்வை அழிக்கத் துடித்த மோடி அரசின் இத்திட்டத்தை, அவர்களை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் "திராவிட" மாடல் அரசு அப்படியே தமிழ்நாட்டில் செயல்படுத்த முனைப்பு காட்டியது.  

 

இத்திட்டத்தை எதிர்த்து 2024 ஏப்ரல் - மே மாதங்களில், பெண்ணாடம், திருச்சி, குடந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மனு அளித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை முன்னெடுத்தோம். 14.10.2023 அன்று சென்னையில் மகளிர் ஆயம் சிறப்புக் கருத்தரங்கும், மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் கருத்தரங்குகள் பேரெழுச்சியுடன் நடைபெற்றன.

 

இதனைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் ஆயம் சார்பில், அதன் பொருளாளர் தோழர் கனிமொழி மணிமாறன் செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை 2024 மே மாதம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெ. சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம் உரிய மருத்துவ மதிப்பீடின்றியே தொடரப்படுகிறதா? பெரும்பாலான ஏழை எளிய மக்களிடம் பரவலாகக் காணப்படும் இரும்புச்சத்துக் குறைபாட்டை சரி செய்வதற்கு, அவர்களது அடிப்படை உணவான அரிசியின் வழியாகத்தான் அணுக வேண்டும் என்பதற்கு ஏதும் அறிவியல் ஆய்வறிக்கை அரசிடம் உள்ளதா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், ஐ.ஐ.டி. காரக்பூர் வல்லுநர்கள் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் சேமிப்பு சூழல் போன்ற காரணிகளால் செறிவூட்டப்பட்ட அரிசியின் தரம் பாதிக்கப்படுவதும், எதிர்பார்த்த ஊட்டச்சத்து பலன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போவதையும் உறுதிசெய்துள்ளது. 

 

"கரக்பூர் ஐ.ஐ.டி. ஆய்வறிக்கையின் அடிப்படையில், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கல், இரும்புச்சத்துக் குறைபாடு சிக்கலைத் தீர்ப்பதற்கான சரியான வழியா என்ற வினாவை எழுப்பியுள்ளது. எனவே, மாற்றுத் திட்டங்கள் முடிவு செய்யும் வரை, பொது வழங்கல் துறையின் வழியாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்" என 27.02.2026 அன்று இந்திய அரசின் உணவு வழங்கல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

மகளிர் ஆயம் தொடுத்த வழக்கில், உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை இந்திய அரசு ஆய்வறிக்கை எதுவும் வழங்கவில்லை. மாறாக, அனைவருக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழியாக செயற்கையாக இரும்புச்சத்து, B 12 வைட்டமின் போன்றவற்றைத் திணிப்பது பெரும்பாலான மக்களுக்கு புதிய நோய்களை உருவாக்கி விடும் ஆபத்து இருக்கிறது என அடுக்கடுக்கான ஆய்வறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

 

எனவே, இந்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரிலான செயற்கை அரிசியை ரேசன் கடைகள் வழியாகத் திணிப்பதை – நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

உணவு என்பது வெறும் ஊட்டச்சத்து மாத்திரையல்ல, அது பண்பாடு மற்றும் பல்லுயிர்த் தன்மையோடு தொடர்புடையது. சிறுதானியங்கள், காய்கறிகள் மற்றும் உள்ளூர் பாரம்பரிய அரிசி ரகங்கள் மூலம் இயற்கையான முறையில் ஊட்டச்சத்தை உறுதிப் படுத்துவதே சரியான தீர்வாகும்.

 

எனவே, இனிவரும் காலங்களில் இயற்கை சார்ந்த மரபு வேளாண்மையில் விளைந்த அரிசி, புஞ்சை தானியங்கள் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து மலிவு விலையில் பொது வழங்கல் கடைகள் வழியாக மக்களுக்கு வழங்க வேண்டும். அதன் வழியாக உள்ளூர் வளத்தையும், உழவர்களின் வாழ்வையும், மக்களின் நலத்தையும் பாதுகாக்க முடியும். தமிழ்நாடு அரசு, இந்திய அரசிடம் இதனை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் செயல்படுத்த முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.



================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

================================ 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT