உடனடிச்செய்திகள்

Saturday, September 14, 2019

தமிழீழ மக்கள் உரிமைகளுக்காக செப் 16 அன்று சென்னையில் நடைபெறும் “எழுக தமிழ்” - தமிழர் ஒன்றுகூடல்..!

தமிழீழ மக்கள் உரிமைகளுக்காக செப் 16 அன்று சென்னையில் நடைபெறும் “எழுக தமிழ்” - தமிழர் ஒன்றுகூடல்..!

தமிழீழத்தில் நடைபெற்று வரும் சிங்களமயமாக்கலை உடனே நிறுத்த வேண்டும், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்த வேண்டும், வடக்கு - கிழக்கில் சிங்கள இராணுவமயமாக்கலை நிறுத்த வேண்டும், இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீள்குடியமர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து - தமிழீழத் தாயகத்தில் வரும் 2019 செப்டம்பர் 16 அன்று “எழுக தமிழ்” பேரணி நடைபெறவுள்ளது. அதேநாளில், வட அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்தின் முன்பும், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களும் “எழுக தமிழ்” பேரணிக்கு ஆதரவாகப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனையொட்டி, வரும் திங்களன்று (16.09.2019) காலை 10 மணியளவில் சென்னை - வள்ளுவர் கோட்டத்தில், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை” ஒருங்கிணைப்பில், பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாவலர் முழுநிலவன் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும் ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT