உடனடிச்செய்திகள்

Monday, June 17, 2013

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாடடம்!

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் இன்று(17.06.2013) தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில், காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாநகர மாவட்டச் செயலாளர் திரு. மு.பூமிநாதன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்க மாநில பொருளாளர் திரு. மு.ரெ.மாணிக்கம், தோழர் பரிதி(தமிழ் தமிழர் இயக்கம்), திரு. கோ.செய்யது இப்ராகிம்(எஸ்.டி.பி.ஐ.), தோழர் கதிர்நிலவன்(தமிழ்த் தேசியக் குடியரசு இயக்கம்), திரு. வெற்றிச்செல்வன் (புரட்சிக்கவிஞர் பேரவை), தோழர் குமரசன் (த.பெ.தி.க), தோழர் முகில் அரசன்(தமிழ்ப்புலிகள்), தோழர் மணி தாபா (தமிழ்நாடு மக்கள் கட்சி), தோழர் மில்ட்டன் (தமிழ்நாடு மாணவர் இயக்கம்), திரு. பொன்மாறன்(தமிழ்க் காப்புக் கழகம்), தமிழியம் இதழாசிரியர் திரு. தமிழ்மகன், மக்கள் உரிமைப் பேரவை வழக்குரைஞர் சு.அருணாச்சலம், சமநீதி வழக்குரைஞர் சங்கம் திரு. இராசேந்திரன், அனைத்துக் கல்லூரி மாணவர் இயக்கம் திரு. முகிலன், தோழர் செல்வம் (ஆதித்தமிழர் பேரவை), மகளிர் ஆயம் அமைப்புக்குழுத் தோழர் மேரி, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சென்னை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன் தலைமையேற்றார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. ஆனூர் செகதீசன் தொடக்கவுரையாற்ற, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்நாடு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, சேவ் தமிழஸ் இயக்க் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தோழர் தியாகு(த.தே.வி.இ.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். புலவர் பா.இறையெழிலன் நன்றி கூறினார். இவ்வார்ப்பாட்டத்தில் திரளான மகளிரும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். தஞ்சை தஞ்சாவூர் பனகல் கட்டிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில், 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாவரம் திரு. சி.முருகேசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, ம.தி.மு.க. பொருளாளர் திரு. துரை.சிங்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழக அமைப்பாளர் திரு. அரங்க குணசேகரன், திரு. ம.இரவிச்சந்திரன்(தமிழக வாழ்வுரிமைக் கட்சி), மனித நேய மக்கள் கட்சி திரு. ஜெ.ஜெலந்தர், தாளாண்மை உழவர் இயக்கம் திரு. கோ.திருநாவுக்கரசு, முனைவர் இளமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கிருட்டிணகிரி கிருட்டிணகிரி பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா எதிரில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. வேலுமணி, ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு. சந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஓசூர் நகரச் செயலாளர் தோழர் முருகப்பெருமாள், தந்தை பெரியார் தி.க. மாவட்ட அமைப்பாளர் தோழர் ருத்ரன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் மாவட்டச் செயலாளர் தோழர் ஒப்புரவன். தமிழர் தேசிய இயக்கம் மாவட்டச் செயலாளர் தோழர் முருகேசன், தமிழ உழவர் முன்னணி இராயக்கோட்டைக் கிளைச் செயலாளர் தோழர் தூருவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருவள்ளூர் திருவள்ளூர் தொடர்வண்டி நிலையம் அண்ணா சிலை அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு அதியமான் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் கஜேந்திரன், திரு. குமரி நம்பி(சுதேசி இயக்கம்), திரு. ஆ.இராஜா திருநாவுக்கரசு (தமிழின உணர்வாளர் கூட்டமைப்பு), தோழர் மு.பெ.முத்தமிழ்மணி(தமிழர் தேசிய இயக்கம்), தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் திரு. வீரபாண்டியன், தமிழர் பேரரசுக் கட்சி வழக்கறிஞர் கணேசன், மனித உரிமைக்கான மக்கள் கூட்டம் தோழர் சு.ப.செம்பாண்டியன், புலவர் தமிழேந்தி(மா.பெ.பொ.க.), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திரு. சு.நாச்சியப்பன், மனித நேய மக்கள் பாசறை திரு. நீலக்கண்டன், தமிழ்த் தேசியக் கூட்டணி வழக்கறிஞர் பா.குப்பன், தமிழ்நாடு மக்கள் கல்விக் கூட்டமைப்பு திரு. பசுமை மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாட்டாமை கட்டிடம் முன்பு காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, உலகத் தமிழ்க் கழக சேலம் மாவட்டத் தலைவர் திரு. வை.நா.ஆடல் அரசு தலைமையேற்றார். திரு. ஆனந்தராஜ்(ம.தி.மு.க.), தமிழக எல்லைப் போராட்ட தியாகிகள் சிங்கம் திரு. ரெ.ரெத்தினம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவர் திரு. கே.சி.இளந்திரையன், உயிர்மைத் தமிழ்ச் சங்கம் திரு. சொல்லரசர், திரு காமராசு (ஆயுத எழுத்து தமிழ்ச் சங்கம்), திரு பூங்குழலி (தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம), திரு. அண்ணாதுரை (அம்பேத்கர் மக்கள் இயக்கம்), திரு. முரளி (உழைக்கும் மக்கள் முன்னணி), தோழர் தமிழியன் (புரட்கிசர மக்கள் முன்னணி), தோழர் இளமாறன்(த.ஓ.வி.இ.), திரு. சோலை இராஜா (தமிழர் முன்னேற்றக் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா வே.ஆனைமுத்து சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் அமைப்பாளர் தோழர் ச.பிந்துசாரன் நன்றியுரைத்தார். இதே போன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. தர்மபுரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி, தமிழக அரசு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளது.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT