உடனடிச்செய்திகள்

Friday, September 27, 2013

இசுலாமியரை இனப்படுகொலை செய்த நரேந்திரமோடியே தமிழகத்திற்குள் நுழையாதே! சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட தோழர்கள் கைது!

இசுலாமியர்களை இனப்படுகொலை செய்யத் துணை நின்ற குசராத் முதல்வரும், பாரதிய சனதாக் கட்சி இந்தியப் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 26.09.2013 வியாழன் அன்று சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

மே பதினேழு இயக்கம் சார்பில், பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையேற்றார். மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் டேவிட் பெரியார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறை கைது செய்தது
.
த.தே.பொ.க. சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், த.இ.மு. சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், பல்லாவரம் செயலாளர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கலந்து கொண்டு கைதாயினர்.

பல்லாவரம் ஆதித்தனார் திருமண நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட தோழர்கள் அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
P1120274
P1120281
P1120288
P1120299
P1120304
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT