உடனடிச்செய்திகள்

Thursday, June 26, 2014

குடந்தை மலையாள ஆலூக்காஸ் தாக்கப்பட்ட வழக்கு: குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!



முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து, கேரளாவில் தமிழர்களை தாக்கிய மளையாளிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் மாதம், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை முற்றுகையிட்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தியது.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 07-11-2011 அன்று நடைபெற்ற மளையாள நிறுவனம் ஜோஸ் ஆலுக்காஸ் மறியல் போராட்டத்தின் போது, அக்கடை அடித்து நொறுக்கப்பட்டதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாள தோழர் க.விடுதலைச்சுடர், தோழர்கள் ரவி (எ) செழியன், ம.முரளி, சிலம்பரசன், சம்புகன் ஆகியோரைக் காவல்துறை கைது செய்தது.

தோழர்கள் மீது பல கொடும்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை திருச்சி நடுவண் சிறையில் அடைத்தது. பின்னர், பிணையில் வெளிவந்த தோழர்கள் வழக்கை நடத்தி வந்தனர்.

கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைப்பெற்று வந்த இவ்வழக்கை, வழக்கறிஞர்கள் இரா.சங்கர் மற்றும் சி.சங்கர் ஆகியோரும், தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் த.தே.பொ.க வழக்கறிஞர் தோழர் கரிகாலன் ஆகியோரும் தோழர்களுகாக நேர்நின்று வாதாடினர். பின்னர், இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கின் தீர்ப்பை இன்று (26-06-2014) காலை வழங்கிய நீதிபதி வ. பத்பநாபன், வழக்கிலிருந்து தோழர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக அறிவித்தார்.

விடுதலையான தோழர்கள் அனைவருக்கும், நீதிமன்றத்தில் த.தே.பொ.க. சார்பில் வரவேற்பும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் வழக்கறிஞர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.

தோழர்களுக்கு நாமும் பாராட்டுத் தெரிவிப்போம்!

பேச: தோழர் விடுதலைச்சுடர், 9443704375

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT