உடனடிச்செய்திகள்

Latest Post

Monday, June 22, 2026

புதுச்சேரி - தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேக்கேத்தாட்டு அணையைக் கட்டாதே! புதுச்சேரி அரசே, வேடிக்கைப் பார்க்காதே! புதுச்சேரியில் சூன் 25 - கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி - தமிழ்நாட்டை பாலைவனமாக்கும்

மேக்கேத்தாட்டு அணையைக் கட்டாதே!

புதுச்சேரி அரசே, வேடிக்கைப் பார்க்காதே!

 -------------------------------------------------------------------------------------

புதுச்சேரியில் சூன் 25 - கண்டன ஆர்ப்பாட்டம்!

 ------------------------------------------------------------------------------------- 

இடம் : புதுச்சேரி அண்ணா சிலை அருகில்

காலம் : 25.06.2026 வியாழன் காலை 10.30 மணி

 

 

அன்புடையீர்!

 

காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டி, புதுச்சேரி - தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சதித் திட்டத்தில் இறங்கியுள்ள கர்நாடக அரசு!

 

மேக்கேத்தாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு, வெள்ளக் காலங்களில் வடிந்து வரும் வெள்ள நீர் கூட வராது. புதுச்சேரியின் காலைக்காலுக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது! தமிழ்நாடு - புதுச்சேரி காரைக்கால் உழவர்கள் தங்கள் மண்ணிலேயே வேளாண்மை பொய்த்துப் போய் ஏதிலியராக அலையும் அவலம் ஏற்படும்.

 

இந்நிலையில், “மேக்கேத்தாட்டு அணை எதிர்ப்பு தீர்மானம்என்று சொல்லிக் கொண்டு, மேக்கேத்தாட்டு ஆய்வுத் தீர்மானத்தை 19.06.2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்! இது கடும் கண்டனத்திற்குரியது

 

கர்நாடக அரசு மேக்கேத்தாட்டில் காவிரியின் குறுக்கே 67.16 .மி.. (டி.எம்.சி) கொள்ளளவில் புதிய அணை கட்ட அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி விசாரித்துத் தீர்ப்புக் கூற இந்திய அரசு புதிதாக மேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் (Mekathatu Tribunal) அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாகத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இத்தீர்ப்பாயம் வேண்டும் என்று வலியுறுத்திப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், தி.மு..வின் துணைப் பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், எங்கள் தி.மு.. ஆட்சி 04.03.2026 அன்றே இந்திய அரசின் நீராற்றல் துறைக்குமேக்கேத்தாட்டு அணை தொடர்பாகத் தீர்ப்பாயம் அமைத்திடக் கோரி கடிதம் எழுதியுள்ளது என்று பெருமையாகக் குறிப்பிட்டார். அதற்கு விடையளித்த .வெ.. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள், “நான் 26.05.2026 அன்றே (புதுதில்லியில்) அதிகாரிகளுடன் கலந்து பேசி, மேக்கேத்தாட்டுத் தீர்ப்பாயம் வேண்டும் என்பதைக் கூறிவிட்டேன். எனது முன்மொழிவில் இது விடுபட்டுள்ளது. அந்த முன்மொழிவில் 4ஆவது பத்திக்குப் பிறகு, மேக்கேத்தாட்டு குறித்து தீர்ப்பு வழங்க தீர்ப்பாயம் அமைக்கும் கோரிக்கையை இணைத்துக் கொள்ளுங்கள்என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பு வகிக்கும் அனைத்துக் கட்சிகளும், இந்தத் தீர்மானத்தை (திருத்தச் சேர்க்கை உட்பட) ஆதரித்து நிறைவேற்றியுள்ளது வெட்கக்கேடானது!

 

கர்நாடகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், கன்னட இனத் தீவிரவாத அமைப்புகள் அனைத்தும்தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேகத்தாட்டு அணை அரவணைப்புத் தீர்மானம் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து அமைதி காக்கின்றன.

 

காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பிலும் (05.02.2007), உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் (16.02.2018), அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள (allotted) தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வது பற்றி மட்டுமே விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. புதிய அணைகள் கர்நாடகம் உட்பட எந்த மாநிலமும் கட்டுவது பற்றி எந்த உரிமையும் அத்தீர்ப்பு வழங்கவில்லை.

 

மேக்கேத்தாட்டு அணையை முற்றிலும் எதிர்ப்பதாக இத்தனை ஆண்டுகளாகக் கூறி வந்த தி.மு.., கடந்த 04.03.2026 அன்று அந்நிலைபாட்டைக் கைவிட்டு, மேக்கேத்தாட்டு கட்டலாமா வேண்டாமா என்று விசாரித்துத் தீர்ப்பு வழங்க தீர்ப்பாயம் அமைக்கலாம் என்று குட்டிக் கரணம் போட்டதன் உள்நோக்கம் என்ன? காவிரி உரிமை மீட்கப்படும் என்று கர்ஜித்து வந்த விஜய்வெளியே சொல்லாமலேயே புதுதில்லி அதிகாரிகளுடன் மேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் பற்றி 26.05.2026 அன்றே பேசிவிட்டதாகச் சொன்ன மர்மம் என்ன?

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 19.06.2026 அன்று மேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் கோரி தீர்மானம் நிறைவேற்றியது தமிழினத்திற்கு செய்த மிகப்பேரிய துரோகம்! ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் தவறை உணர்ந்து, அந்தத் தீர்மானத்தை மறுத்துமேக்கேத்தாட்டு தீர்ப்பாயம் கோராதகாவிரி உரிமை நீர் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க  வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தும் மறு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்! புதுச்சேரி சட்டப்பேரவையும் மேக்கேத்தாட்டு அணைக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும்

 

1. புதுச்சேரி அரசே, மேக்கேத்தாட்டு அணை கூடவே கூடாது என ஒற்றை வரித் தீர்மானம் இயற்றுக

 

2. கர்நாடகத்தின் அடாவடியை முறியடிக்க, கர்நாடகப் பொருட்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தடை விதித்து பொருளியல் முடக்கத்தை அறிவித்திடுக!

 

புதுச்சேரி அண்ணா சிலை அருகே, வரும் வியாழன் (25.06.2026) அன்று காலை 10.30 மணிக்கு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. நேரு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

காவிரி காக்க - அனைவரும் வாருங்கள்!


========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
========================
பேச: 98419 49462, 94432 74002
========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
========================



Uploaded Image Uploaded Image

Tuesday, June 16, 2026

பால் குடிக்கும் பெண் குழந்தை பாலியல் படுகொலை! வெளியார் வெள்ளத்தை வெளியேற்றுக! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

பால் குடிக்கும் பெண் குழந்தை பாலியல் படுகொலை!

வெளியார் வெள்ளத்தை வெளியேற்றுக!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 

கடந்த 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுப்பேட்டையில் 2½ வயதுப் பெண் குழந்தை 19 வயது மனித விலங்கால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகி மிகுதியான இரத்தப் போக்கால் அக்குழந்தை இறந்துவிட்டது. இச்செய்தி நம் தலைக்குள் இடிபோல் விழுந்துள்ளது.

 

பெண் குழந்தையும் பீகாரி! அந்த மனிதப் பிசாசும் பீகாரி என்கிறார்கள். யாராக இருந்தாலும் அந்தச் சிறு குழந்தைக்கு நேர்ந்த சித்திரவதையும் சாவும் தாங்கிக் கொள்ள முடியாத துயரத்தை – மனப் பதைப்பைத் தருகின்றன.

 

அந்த மனிதப் பிசாசைக் கைது செய்து விட்டார்கள். அது தண்டிக்கப்படலாம் என்பவை எல்லாம் நம் மனப்பதைப்பைக் குறைக்கவில்லை!

 

பொதுவாகத் தமிழ்நாட்டில் கொலைகள் – பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், வன்முறைகள் பெருத்துவிட்டன என்றாலும், வடமாநிலத்தவர்களின் மிகை ஆக்கிரமிப்பால் தமிழ்நாட்டில் அன்றாடம் அதிகரித்து வரும் மேற்படிக் குற்றச்செயல்கள் அதிகம்! திருவள்ளூர் மாவட்டத்திலும், திருப்பூர், கோவை மாவட்டங்களிலும் வெளிமாநிலத்தவர்களின் – இந்திக்காரர்களின் குற்றச்செயல்கள் மிகமிக அதிகம்.

 

அதனால், கும்மிடிப்பூண்டி மக்கள் மேற்படிக் குழந்தையின் படுகொலைச் செய்தி வந்தவுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி, இந்திக்காரர்களை வெளியேற்றுங்கள் என்று முழக்கமிட்டார்கள். சமாதானம் பேச வந்த அரசு அதிகாரிகளிடம் வடவரை வெளியேற்றும் கோரிக்கைகளை முதன்மைக் கோரிக்கையாக வைத்தனர்.

 

எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம், வெள்ளம்போல் வெளி மாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் அன்றாடம் தமிழ்நா்டில் வந்து தங்குவது – வேலை பார்ப்பது என்பது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்; மொழி இன அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மிகை எண்ணிக்கையில் அயல் இனத்தார் வந்து, வேலை பார்ப்பது, இங்கேயே நிரந்தரமாகத் தங்குவது பல்வேறு சிக்கல்களை – குற்றச்செயல்களை – பண்புக்கேடுகளை உருவாக்கும். மண்ணின் மக்களாகிய தமிழர்களின் வாழ்வுரைிமையைப் பறிக்கும் என்றும் எச்சரித்து வருகிறது.

 

இந்தச் சிறு குழந்தை பாலியல் படுகொலை செய்யப்பட்டதைக் கணிடித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், பா.ச.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையும் மிகை எண்ணிக்கையில் வடமாநிலத்தவர் குவிய அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

 

தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவு விகிதத்திற்குப் பொருந்தாத அளவில் மிகையாக இங்கு ஒரு சதுர கிலோ மீட்டரில் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தி மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ஒரு சதுர கிலோ மீட்டரில் சராசரியாக வசிக்கும் மக்கள் தொகை அதிகம்!

 

எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி, மிகை வெள்ளமாய் வெளியார் தங்கியுள்ள பகுதிகளில் இருந்து அவர்களைத் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டு்ம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் இப்பணியைச் செய்யுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்!


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===============================

 

Uploaded Image

Thursday, May 21, 2026

மேக்கேத்தாட்டு அணை தடுக்க களத்தில் இறங்க வேண்டும் முதலமைச்சர்! - காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

மேக்கேதாட்டு அணை தடுக்க

களத்தில் இறங்க வேண்டும் முதலமைச்சர்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

 

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், இன்று (21.05.2026) முற்பகல், தஞ்சை தமிழ்த்தேசியப் பேரியக்க அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார். பொருளாளர் ஐயா த. மணிமொழியன் அவர்கள், ஐயா சாமி. கரிகாலன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ஐ.ஜே.கே. கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. ப. செகதீசன், பூதராயநல்லூர் இராமலிங்கம், ஒரத்தூர் சிவப்பிரகாசம், துரை. இரமேசு, தி. செந்தில்வேலன், திருவாரூர் ச. கலைச்செல்வம் (தமிழர் தேசியக் களம்), புண்ணியமூர்த்தி (ஆழ்துளைக்குழாய்க் கிணற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்), பூதலூர் சுந்தரவடிவேல், மன்னார்குடி இராசசேகர், தமிழ்த் தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர்  தோழர் பி. தென்னவன், தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், குடந்தை க. விடுதலைச்சுடர், திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், க. தீந்தமிழன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானம் – 1

தமிழ்நாடு முதலமைச்சர்,

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் பெற வேண்டும்!

 

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018இல் அளித்த இறுதித் தீர்ப்பின்படி ஒரு தடவை கூட கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறந்துவிடவில்லை. 2018இல் இருந்த அ.தி.மு.க. ஆட்சியோ, அதன்பிறகு 2021இல் வந்த தி.மு.க. ஆட்சியோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாத வாரியாகக் காவிரி நீரைக் கர்நாடகத்திடம் பெற்றதில்லை! அதற்குரிய முயற்சிகளை நேர்மையாக இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை.

 

கடந்த சில ஆண்டுகளாகப் பருவந்தவறிக் கோடையில் கொட்டிய பெருமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி, வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, மேட்டூர் அணை நிரம்பியது.

 

வரும் சூன் 12 அன்று முறைப்படி மேட்டூர் அணை பாசனத்திற்குத் திறக்கப்பட வேண்டும். இவ்வாண்டு இதுவரை பருவந்தவறிய கோடை மழை பெரிதாகப் பெய்யாததால், மேட்டூர் அணைக்கு மிகை வெள்ள நீர் வரவில்லை. வெறும் 78 அடி தான் மேட்டூர் அணையில் தண்ணீர் உள்ளது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், கர்நாடக முதலமைச்சருடன் பேசி காவிரி நீர் திறக்க வலியுறுத்திப் பெற வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 27 இலட்சம் ஏக்கர் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும். 22 மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும்.

 

இந்நிலையில், கடந்த 09.05.2026 அன்று கர்நாடகத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா தலைமையில் காவிரிக் காப்புக்குழுக் கூட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 177.25 டி.எம்.சி. காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் தர வேண்டும் என்று அளித்த தீர்ப்பை மாற்றி, மேலும் குறைத்துத் தீர்ப்பளிக்க மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் போட வேண்டுமென்று கன்னட விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பயிர் காக்க மனித உயிர் காக்க விரைந்து செயல்பட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு, 2018 தீர்ப்பை செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

 

தீர்மானம் – 2

மேக்கேதாட்டு அணை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை!

 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே, 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேலும் ஒரு எல்லைப்புற அணையாக மேக்கேதாட்டு அணை கட்ட வேலைகள் தொடங்கி உள்ளது. இந்திய நீர்வளத்துறை, காவிரி மேலாண்மை ஆணையம் முதலியவை மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஒன்பதாயிரம் கோடி மதிப்பீட்டிலான அந்த அணையின் தொடக்க நிலைப் பணிகளுக்கு ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கி, வேலைகள் நடந்து கொண்டுள்ளன.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிறப்பு வல்லுநர் குழு அமைத்து, கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட சட்ட விரோதமாக நடைபெறும் வேலைகளைக் கண்டறிந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, மேக்கேதாட்டு அணை முயற்சிகளுக்குத் தடை ஆணை கோர வேண்டும்.

 

தீர்மானம் – 3

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக சிப்காட் கூடாது!

 

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது, 2019இல் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்ற உழவர்களின் போராட்டங்களைக் கணக்கில் கொண்டு, அங்கு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது, அதைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கி சட்டம் இயற்றினார். ஆனால், கடந்த மு.க. ஸ்டாலினது தி.மு.க. ஆட்சி தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி பகுதியிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொற்கை – உம்பளச்சேரி பகுதியிலும், சிப்காட் பெருந்தொழில் குவிப்பு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்தது. உழவர்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பை மு.க. ஸ்டாலின் ஆட்சி சட்டை செய்யவில்லை.

 

வெளிநாடுகள் மற்றும் வடநாடு முதலியவற்றிலிருந்து பெரும் பெரும் தொழில் நிறுவனங்களைக் காவிரி டெல்டாப் பகுதிகளுக்கு அழைத்து வரும் சட்ட விரோத வேலைகளில் முரட்டுத்தனமாக ஈடுபட்டார் மு.க. ஸ்டாலின். அவர் அண்மையில் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

 

அன்புகூர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தாங்கள், இச்சிக்கலில் தனிக் கவனம் செலுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் சிப்காட் தொழில் பெருக்கத் திட்டங்களைக் கைவிட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இது தொடர வழிவகை செய்யுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு தங்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் – 4

நடுநிலை தவறிய ஹல்தரை நீக்குக!

 

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர் நடுநிலை தவறி – அந்த ஆணையத்தை கர்நாடகத்திற்குச் சாதகமாக நடத்தி வருகிறார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முடிவு செய்த ஆணைகளில் எதையும் கர்நாடக அரசு செயல்படுத்தியதில்லை. அதைக் கண்டு கொள்ளவே மாட்டார் ஹல்தர். முடிவு செய்த ஆணைகளை நிறைவேற்றப் படுவதற்காக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில்லை!

 

அது மட்டுமின்றி, சட்டவிரோதமான மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கும், குறுக்கு வழியில் பெரும்பான்மை அடிப்படையில் மேலாண்மை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் ஹல்தர்.

 

எனவே, தொடர்ந்து – திட்டமிட்டு நடுநிலை தவறி – கர்நாடகத்தின் துணை மன்றம் போல், காவிரி மேலாண்மை ஆணையத்தை நடத்தி வரும் ஹல்தரை அப்பதவியிலிருந்து நீக்கி, நடுநிலை உள்ள புதிய தலைவர் ஒருவரை மேற்படி ஆணையத்திற்கு இந்திய அரசு அமர்த்த வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழுக் கேட்டுக் கொள்கிறது! 

 

========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
========================
பேச: 98419 49462, 94432 74002
========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
========================

Uploaded Image

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT