உடனடிச்செய்திகள்

Sunday, February 18, 2018

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இன்று (17.02.2018), காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று மாலை புதுச்சேரியில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு - புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளருமான தோழர் இரா. வேல்சாமி தலைமையேற்றார்.

உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கத் தலைவர் திரு. த. இரமேசு, தமிழர் தேசிய முன்னணி புதுச்சேரி தலைவர் ஐயா இளமுருகன், தமிழ் தமிழர் இயக்கப் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேசு, யாவரும் கேளிர் அறக்கட்டளை திரு. ஏ. கேசவன், தை நிமிர்வு அன்புநிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசுக்கு எதிராகவும், தமிழர் உரிமையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT