உடனடிச்செய்திகள்

Sunday, April 29, 2012

தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிப்போம் - தமிழகமெங்கும் த.தே.பொ.க. மே நாள் நிகழ்வுகள்!

தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிப்போம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் மே நாள் வாழ்த்துச் செய்தி!

ஆண்டைகள் பூட்டிய அடிமை விலங்குகளை உடைத்தெறிந்த உழைக்கும் மக்களை மீண்டும் அடிமைப்படுத்த புதிய முறையில் சட்டதிட்டங்களை இயற்றிக் கொண்டார்கள் ஆளும் வர்க்கத்தினர். அந்தப் புதிய அடிமைத் தளைகளை அறுத்தெறிய 19ஆம் நூற்றாண்டில் பாய்ந்தெழுந்த பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி நாள் மே நாள். அதன் பிறகு மே நாள் என்பது ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் நாளாக மட்டுமின்றி ஒடுக்கபட்ட தேசிய இனங்களின் எழுச்சி நாளாகவும் ஆகிவிட்டது. இந்த மே நாளில் தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் விடுதலைக்கும் சூளுரைப்போம்!

 தமிழகமெங்கும் த.தே.பொ.க. சார்பில் மே நாள் கொடியேற்று விழாக்கள்!

உழைக்கும் மக்களுக்கு 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெற்றுத்தந்த போர்க்குணமிக்க மே நாள் போராட்டங்களை நினைவு கூறும் வகையிலும், தமிழ்த் தேச விடுதலைக்கு தமிழ்த் தேசப் பாட்டாளிகள் உறுதியேற்க வேண்டுமென வலியுறுத்தியும்  தமிழகமெங்கும் மே-1ல் கொடியேற்றி மேநாளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.


சென்னை

சென்னை த.தே.பொ.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில், காலை 9 மணியளவில் மே நாள் கொடியேற்று விழா நடைபெறுகிறது. த.தே.பொ.க. தலைவைர் தோழர் பெ.மணியரசன் கட்சியின் கொடியேற்றி மே நாள் உரை நிகழ்த்துகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழா பழ.நல்.ஆறுமுகம், தாம்பரம் கிளைச் செயலாளர் தோழா தமிழ்க்கனல் உள்ளிட்டோர் உரையாற்றுக்கின்றனர்.

 

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் காலை 9 மணியளவில் நடைபெறும் நிகழ்வில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு த.தே.பொ.க. கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். நிகழ்வுக்கு, திருத்துறைப்பூண்டி த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தனபால் தலைமையேற்கிறார்.


வேதாரணியம்

வேதாரணியம் வட்டம் கடினல்வயலில் விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெறுகின்றது. சங்கச் செயலாளர் தோழர் இரெ.தியாகராசன் நிகழ்வுக்குத் தலைமையேற்கிறார். பன்னாள் கிராமத்திலிருந்து தொடங்கும் தொழிலாளர்கள் பேரணி சற்றொப்ப 5 கிலோ மீட்டர் நடந்து கடினல்வயல் விம்கோ  உப்புத் தொழிற்சாலை வாயில் நிறைவடைகிறது. அங்கு நடைபெறும் நிகழ்வில், த.தே.பொ.க. பொதுச் செயலாளரும், தொழிலாளர் சங்கத் தலைவருமான தோழர் கி.வெங்கட்ராமன்  தொழிற்சங்கக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார்.


தஞ்சை நகரம்

தஞ்சை த.தே.பொ.க. கட்சி அலுவலகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் மே நாள் கொடியேற்று நிகழ்வைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி, கலைஞர் நகர், முனியாண்டவர் காலனி, பூக்கார லாயம், கோரிக்குளம், ரெங்கநாதபுரம், இந்திரா நகர், அண்ணா நகர் 7ஆம் தெரு, முதல் தெரு, வடக்குவாசல், தஞ்சை பழைய பேருந்து நிலையம் பழக்கடை உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக கொடியேற்ற விழாக்கள் நடைபெறுகின்ற. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, தோழர் பழ.இராசேந்திரன், நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு ஆகியோர் கொடியேற்றி வைக்கின்றனர்.


தஞ்சை ஒன்றியம்

தஞ்சை ஒன்றியம் வல்லம் கடைவீதி அண்ணா சிலை அருகில் மே நாள் கொடியேற்றுவிழா மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன் தலைமையில் நடைபெறும். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் கொடியேற்றி மே நாள் உரைநிகழ்த்துகிறார்.

 

பூதலூர் ஒன்றியம்

தஞ்சை வட்டம் பூதலூர் இரயிலடியில் காலை 8 மணியளில் நடைபெறும், மே நாள் கொடியேற்று நிகழ்வுக்கு த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்கிறார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு தோழர் ரெ.கருணாநிதி த.இ.மு. செயலாளர் தோழர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.அதனைத் தொடர்ந்து ஒன்றியத்தில் 30க்கும் மேற்ப் பட்ட கிராமங்களில் தொடச்சியாக மாலைவரை கட்சிக் கொடியும், தமிழக இளைஞர் முன்னணி கொடியும் ஏற்றப் பட்டு மே நாள் தெருமுனைக் கூட்டங்கள் நடைப் பெறும்.

 

செங்கிப்பட்டியில் மாலை 6 மணியளவில் நடைபெறும் சாணுரப்பட்டி தானிஓட்டுனர் சங்க மே நாள் கொடியேற்று நிகழ்விற்கு, சங்கச் செயலாளரும் த.இ.மு. பொறுப்பாளருமான தோழர் தட்சிணாமூர்த்தி தலைமையேற்கிறார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிர் த.பானுமதி கொடியேற்றி வைத்து, பின்னர் அங்கு த.தே.பொ.க. நடத்தும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்வில், த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கருப்பசாமி, தோழர் இரமேசு, தோழர் கு.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

மதுரை

மதுரை மாவட்டம் செல்லூர் - தாகூர் நகரில் காலை 9 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. செயலாளர் தோழர் இராசு தலைமையேற்கிறார். சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் இராசேந்திரன் த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் தோழர் மேரி,தோழர் இளமதி, தோழர் செரபினா உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

 

கோவை

கோவை பேரூர் சாலையிலுள்ள செட்டி வீதி அருகில், காலை 10 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேற்று விழாவிற்கு தலைமையேற்கும், தமிழக இளைஞர் முன்னணி  பெரியக்கடை வீதி கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கிறார். காலை 11.30 மணியளவில் எல்.ஐ.சி. குடியிருப்பு பகுதியில் நடைபெறும் மே தினக் கொடியேற்று நிகழ்விற்கு, செல்வபுரம் த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் பிறை.சுரேசு தலைமை தாங்கி, த.இ.மு. கொடியேற்றி வைக்கிறார். த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் மே நாள் உரை நிகழ்த்துவார்கள்.

 

சிதம்பரம்

சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் காலை 8.30 மணியளவில் நடக்கும் கொடியேற்று விழாவிற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் கொடியேற்றி வைக்கிறார். தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் ஆ.குபேரன் தலைமை தாங்குகிறார்.


ஈரோடு

கருங்கல்பாளையம் பச்சியம்மன கோயில் வீதியில் காலை 9 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேறறு விழா நிகழ்விற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் குமரேசன் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசையா கருத்துரை வழங்குகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன் கொடியேற்றி வைக்கிறார்.

 

பெண்ணாடம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் முருகங்குடி பகுதிகளில் நடைப் பெறும் மே நாள் கொடியேற்று விழாவில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க கொடியேற்றி மே நாள் சிறப்புரையாற்றுகிறார்.

 

ஓசூர்

ஓசூர் கடைவீதி கட்சிக் கொடியை ஏற்றிவைத்து தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து உரையாற்றுகிறார். கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் தோழர் நடவரசு தலைமையேற்கிறார்.

 

குடந்தை

குடந்தை, சுவாமிமலை ஆகிய ஊர்களில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர் த.தே.பொ.க கொடியையும், பாபநாசத்தில் தமிழக இளைஞர் முன்னணி கொடியையும் ஏற்றிவைக்கிறார்.

 

திருச்சி

துவாக்குடியில் நடைபெறும் மே நாள் கொடியேற்று விழாவிற்கு செயலாளர் தோழர் கவித்துவன் தலைமைதாங்க வழக்கறிஞர் தோழர் த.பானுமதி த.தே.பொ.க கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

 

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கடைத் தெருவில் தோழர் உச்சிராசு தலைமையிலும், திருச்செந்தூர் தேரடி அருகில் தோழர் தமிழ்த்தேசியன் தலைமையிலும் நடைபெறும் மே நாள் விழாக்களில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி த.தே.பொ.க கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

 

இம் மே நாள் விழாக்களில் த.தே.பொ.க. தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. 


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தலைமைச் செயலகம், சென்னை-17.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT