உடனடிச்செய்திகள்

Tuesday, May 3, 2016

தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுகள்!

தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற
மே நாள் கொடியேற்ற நிகழ்வுகள்!


உழைப்பாளர் நாளான மேநாளையொட்டி, தமிழகமெங்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மேநாள் கொடியேற்ற நிகழ்வுகள் நேற்று (01.05.2016) எழுச்சியுடன் நடைபெற்றன.


பூதலூர் ஒன்றியம் 
----------------------------
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில், பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு தலைமையில் மேநாள் கொடியேற்ற நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. பூதலூர் ஒன்றியத்திலுள்ள வன்னியம்பட்டி, ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி, டி.பி. சானிடோரியம், பாலையப்பட்டி, நந்தம்பட்டி, சுருசிப்பட்டி, காதாட்டிப்பட்டி, வலம்பக்குடி, மனையேறிப்பட்டி, வெண்டையம்பட்டி, திருவிழாப்பட்டி, புதுக்குடி நரிக்குறவர் காலனி, புதுக்குடி முதன்மைச் சாலை, காமாட்சிபுரம், சமத்துவபுரம், தக்கனூர், நந்தவனப்பட்டி, முத்துவீரன்கண்டையம்பட்டி, வீரப்புடையான் பட்டி, பூதலூர், புதுப்பட்டி, செங்கிப்பட்டி, சானூரப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பேரியக்கக் கொடிகளை முன்னணிச் செயல்பாட்டாளகள் ஏற்றி வைத்தனர்.


ஆச்சாம்பட்டியில், பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கக் கொடியைத் தாங்கி அமைக்கப்பட்ட பீடத்தைத் திறந்து வைத்தார். பின்னர், சாணூரப்பட்டியில், பேரியக்க்க் கொடியை ஏற்றி வைத்து, பூதலூரில் பேரியக்க ஒன்றியக்குழு உறுப்பினர் தோழர் ச. அருள்தாசன் தலைமையில் நடைபெற்ற மேநாள் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில், பேரியக்க மாவட்டச் செயற்குழுத் தோழர் ரெ. கருணாநிதி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தெட்சிணாமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தோழர் செபஸ்டியார், இராசசசேகர் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

தஞ்சை நகரம்
---------------------
தஞ்சை நகரில் மேநாள் கொடியேற்ற நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. பேரியக்க தஞ்சை மாநகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி தலைமை தாங்கினார். புதுஆற்றுச் சாலை பேரியக்க அலுவலகம், அண்ணா நகர், முனியாண்டவர் காலனி, கோரிகுளம், கலைஞர் நகர், வடக்கு வாசல், பழைய பேருந்து நிலையம் பழக்கடை ஆகிய இடங்களில் பேரியக்கக் கொடிகளை, பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், தோழர் நா. வைகறை ஆகியோர் ஏற்றி வைத்து மேநாள் குறித்து உரையாற்றினர். 

தஞ்சை மாநகரச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இரெ. சிவராசு, நகரக்கிளைச் செயலாளர் தோழர் செந்திறல், கலைஞர் நகர் செயலாளர் தோழர் சீனிவாசன், தோழர்கள் இராமதாசு, அப்பண்ணமுத்து க.மு. இராசேந்திரன், அண்ணா காலனி இராசேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முருகன்குடி
-------------------
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வட்டம் முருகன்குடியில் நடைபெற்ற மேநாள் கொடியேற்றத்துக்கு, பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் அர. கனகசபை தலைமை தாங்கனார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கொடியேற்றி வைத்து, அங்கு நடைபெற்ற மேநாள் சிறப்புக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தோழர் இராமகிருட்டிணன் (தமிழக உழவர் முன்னணி) உள்ளிட்டோர் உரையாற்றினர்.



சென்னை
----------------
சென்னையில் பேரியக்கத் தலைமையகம் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நகரில் மேநாள் கொடியேற்ற நிகழ்வு சிறப்பற நடைபெற்றது. பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி கொடியேற்றி வைத்து, தலைமையகத்தில் நடைபெற்ற மேநாள் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார். பேரியக்க சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் நன்றி கூறினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தென்சென்னை பேரியக்கச் செயலாளர் தோழர் கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில் தோழர்கள் செழியன்,நல்ல சிவம், காளிராசு, சுரேசு, முகிலன், பாலசுப்பரமணியன் மகளிர் ஆயம் தோழர் மாதவி, நிலா உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.



திருச்சி
------------
திருச்சியில் மேநாள் கொடியேற்றம் சிறப்புற நடைபெற்றது. அண்ணா வளைவு பகுதியில் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், அரியமங்கலம் பகுதியில் மூத்தத் தோழர் இரெ.சு.மணி, விமான நிலையம் பகுதியில் தோழர் மு.வ. இரத்தினம், இராமச்சந்திரா நகர் பகுதியில் பொறியாளர் சு. செயராமன் ஆகியோர் பேரியக்கக் கொடியை ஏற்றி வைத்தனர். பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் நா. இராசாரகுநாதன், தோழர்கள் இனியன், இராசாங்கம், காட்டூர் தியாகராசன், வேங்கூர் மு. தியாகராசன், பால்ராசு, அன்புச்செல்வன், கண்ணன், வெள்ளம்மாள், கிருட்டிணமூர்த்தி உள்ளிட்டோரும், பகுதிவாழ் இன உணர்வாளர்களும் பங்கேற்றனர்.



மதுரை
------------
மதுரை செல்லூரில் நடைபெற்ற மேநாள் கொடியேற்றத்துக்கு பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு தலைமை தாங்கினார். பேரியக்கத் தோழர் தமிழ்மணி கொடியேற்றி வைத்தார். மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தோழர் இராசு ஆகியோர் மேநாள் குறித்து உரையாற்றினார். தோழர்கள் மேரி, இளமதி, அழகர், தியாகலிங்கம், கரிகாலன், தங்கப்பழனி, பாசுகர், முருகேசன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஓசூர் 
--------
கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற மேநாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, பேரியக்க ஒசூர் நகரச் செயலாளர் தோழர் முருகேசன் தலைமை தாங்கினார். ஒசூர் அசோக் லேலண்ட் (அலகு – 1) - தொழிலாளர் பாதுகாப்புப் பேரவைத் தோழர் ரோம்லட்ஸ், தோழர் மதியழகன் (அலகு - 2), தமிழக உழவர் முன்னணி தமிழகச் செயலாளர் தோழர் தூருவாசன் ஆகியோர் உரையாற்றினர். பாவலர் சங்கரராமன் மேநாள் குறித்து பாவீச்சு நிகழ்த்தினார். நிறைவில், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து நிறைவுரையாற்றினார். தோழர் முருகப்பெருமாள் நன்றி கூறினார்.


குடந்தை
--------------
குடந்தையில் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையில் மேநாள் கொடியேற்றம் நடைபெற்றது. பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.தீந்தமிழன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச. செந்தமிழன், தோழர்கள் ச.செழியன், கார்த்திக் இமயம், அருளானந்தம், ரெ.அன்பழகன், மு.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


சாமிமலை
-----------------
குடந்தை வட்டம் சாமிமலை சன்னதித் தெருவில் நடைபெற்ற மேநாள் கொடியயேற்று நிகழ்வுக்கு, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன் தலைமை தாங்கினார். பேரியக்கத் தோழர் ஆசிரியர் இராசேந்திரன் கொடியேற்றி வைத்தார். தோழர்கள் ம.புரட்சி, தண்டபானி, அருண், சிவக்குமார், மு. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தேவராயன்பேட்டை
-------------------------------
பாபநாசம் வட்டம் தேவராயன்பேட்டை மேட்டுத் தெருவில் நடைபெற்ற மேநாள் கொடியேற்றத்துக்கு, பேரியக்கத் தோழர் பிரபு தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி செயற்பாட்டாளர் தோழர் மனோகரன் கொடியேற்றி வைத்தார். தோழர்கள் சங்கர், பிரபாகரன், புண்ணியமூர்த்தி, முருகானந்தம், குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


திருத்துறைப்பூண்டி
------------------------------
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காமராசர் சிலை அருகில், மே 2 அன்று நடைபெற்ற மேநாள் கொடியேற்றம் மற்றும் மேநாள் சிறப்புக் கூட்டத்திற்கு, பேரியக்க ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை, பேரியக்க மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி, ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் தோழர் தனபால் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். தோழர் இரமேசு நன்றி கூறினார்.


தஞ்சை ஒன்றியம்
----------------------------
தஞ்சை ஒன்றியத்தில் வல்லம், வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருங்குளம், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மேநாள் கொடியேற்ற நிகழ்வுகளில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் சி. முருகையன், வல்லம் ஒன்றியச் செயற்குழு தோழர் வே. தனசேகரன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


ஈரோடு
------------
ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற மேநாள் கொடியேற்றத்துக்கு, பேரியக்க நகரச் செயலாளர் தோழர் வெ. இளங்கோவன் தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மாவீரன் கொடியேற்றி வைத்தார். பேரியக்கத் தோழர் சரவணன் மேநாள் குறித்து உரையாற்றினார்.


சிதம்பரம், தியாகராயர் நகர்(சென்னை) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேநாள் கொடியேற்ற நிகழ்வுகளுக்கு, தேர்தலைக் காரணம் காட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT