உடனடிச்செய்திகள்

Thursday, July 6, 2017

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியில் 07.07.2017 அன்று காலை.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியில் 07.07.2017 அன்று காலை.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!
கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும், திருச்சியில் வரும் வெள்ளியன்று (07.07.2017) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

திருச்சி - சிந்தாமணி அண்ணா சிலை அருகில், 07.07.2017 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இவ் ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்பினரும் தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

கதிராமங்கலத்தைக் காப்பதற்கான போராட்டம், அதோடு நின்று விடாமல், ஒட்டுமொத்தக் காவிரிப்படுகையையும் காப்பதற்கான போராட்டமாக விரிவடைய வேண்டும்.

எனவே, தமிழின உணர்வாளர்களும் சனநாயக ஆற்றல்களும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT