உடனடிச்செய்திகள்

Thursday, April 19, 2018

இன்று மதியம் - சென்னையில் தொடங்குகிறது நீட் தேர்வு நிரந்தர விலக்கு - மாநாடு!

இன்று மதியம் - சென்னையில் தொடங்குகிறது நீட் தேர்வு நிரந்தர விலக்கு - மாநாடு!
உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க, தமிழ்நாடு - புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் - இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான நீட் தேர்வு நிரந்தர விலக்க மாநாடு, இன்று (19.04.2018) சென்னையில் நடைபெறுகின்றது. 

சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி - இயக்கத் தலைவர்கள் பங்கேற்று வெவ்வேறு அமர்வுகளில் நீட் தேர்வு குறித்த கருத்துரை வழங்குகின்றனர். மாநாட்டை, இயக்குநர் வ. கௌதமன் ஒருங்கிணைக்கிறார். 

நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கின்றனர். அனைவரும் வருக! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT